புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
284 Posts - 45%
heezulia
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
19 Posts - 3%
prajai
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
7 Posts - 1%
mruthun
மக்கள் லோக்பால் மசோதா Poll_c10மக்கள் லோக்பால் மசோதா Poll_m10மக்கள் லோக்பால் மசோதா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் லோக்பால் மசோதா


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 22, 2011 12:18 pm

மக்கள் லோக்பால் மசோதா
அன்னா ஹசாரே கடுமையான ஊழல் எதிர்ப்பு சட்டம் தேவை என்பதை வற்புறுத்தி நாடுதழுவிய பிரச்சாரத்தை மேற் கொண்டு உள்ளார் .
அதுவே மக்கள் லோக்பால் சட்டம்

புரிந்து கொள்வோம் மக்கள் லோக்பால் மசோதாவை

  • மத்தியில் - மக்கள் லோக்பால் ஒவ்வொரு மாநிலத்திலும்-மக்கள் லோகாயுக்தா தோற்றுவிக்கப்படும் .
  • மக்கள் லோக்பால் மத்திய அரசுத்துறைகளுக்கும் மக்கள் லோகாயுக்தா மாநில அரசுத்துறைகளுக்கும், எதிரான ஊழல் புகார்களை ஏற்று விசாரிக்கும் .
  • அவை ஒவ்வொன்றும் 10 – உறுப்பினர்களையும், 1- தலைவரையும் கொண்டிருக்கும்.
    முற்றிலும் சுதந்திரமானது.
  • அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அதன் செயல்பாட்டில் குறுக்கிட முடியாது.
  • தேவையான நிதி ஒதுக்கப்படும்.
  • தேவைப்படும் பணியாளர்களை அரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எடுத்துக்கொள்ள அதிகாரம் கொண்டிருக்கும்


மேல்மட்ட ஊழல்கள்

தற்போதைய அமைப்பில் நிலவுவது :
  • ஊழலுக்கு சான்றுகளிருந்தாலும்
  • தண்டனை இல்லை.

முன்மொழியப்படும் அமைப்பு:
  • மக்கள் லோக்பால், மக்கள் லோகாயுக்தாவில் ஊழலுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு

கால வரம்பிற்குள்ளான விசாரணை.
  • ஒரு வருடத்திற்குள் விசாரணை முடிக்கப்படவேண்டும்.
  • தேவைப்படின் அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
  • விசாரணையில் அரசு அலுவலர் குற்றவாளி என்று முடிவானால் அவர் வேலை நீக்கம் செயப்படுவார் (அ)
    துறைசார்ந்த தண்டனை அளிக்கப்படும்

கால வரம்பிற்குட்பட்ட விசாரணை. முறை :
  • வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
  • ஒரு வருடத்தில் வழக்கு முடிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்படும்
  • வழக்கை காலவரம்பிற்குள் முடிக்க கூடுதலான நீதி மன்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை ஏற்ப்படுத்த அரசுக்கு ஆணையிடலாம்

அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பை வசூலிக்க கீழ்க்கண்ட விதிகள் இயற்றப்பபடும்.
  • வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்டவரின் சொத்துப் பரிவர்த்தனை தடை செய்யப்படும்.
  • குற்றத்தீர்ப்பு முடிவான நிலையில் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு , நீதிமன்றத்தால் கணக்கிடப்படும்.
  • குற்றம் சுமதப்பட்டவரின் சொத்திலிருந்து அது முழுக்க வசூல் செய்யப்படும்
  • தற்போதுள்ள சட்டத்தில் அம்மாதிரி விதிகள் எதுவும் இல்லை

சொத்துப் பறிமுதல்
  • அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் தங்களது அசையும் அசையா சொத்து விபரங்களை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இவை அரசின் வலைத்தளத்தில் பொது அறிவிப்பாய் வெளியிடப்படும்.
  • அரசு அதிகாரி ஒருவரிடம் அறிவிக்காப்படாத சொத்து ஏதேனும் இருப்பது தெரிய வந்தால், அது ஊழல் மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும்.
  • தேர்தலுக்குப்பின்னர், வேட்பாளர்கள் அறிவித்த சொத்து சரிபார்க்கப்படும்.
  • அறிவிக்காத சொத்து இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்

முக்கியமாக,
  • தன் ஆணையை கடைப்பிடிக்கத் தவறினால் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு கீழ்க்கண்ட அதிகாரங்கள் லோக்பால், லோகாயுக்த அமைப்புகளுக்கு இருக்கும்:
  • [**]குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
    [**]அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்

கீழ்மட்ட ஊழல்கள்
  • பொது மக்கள் லஞ்சம் கொடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
  • ஒவ்வொரு அரசுத்துறையிடமும் குடிமக்கள் சாசனம் இருக்கும்..
  • அந்த சாசனத்தில் எந்த வேலையை எவ்வளவு காலத்தில் யார் முடிக்க கடமைப்பட்டவர் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்
  • உதாரணமாக, சாசனத்தில் கீழுள்ளவாறு வரையறை செய்யப்பட்டிருக்கும் :
  • X அதிகாரி Y நாட்களில் ரேஷன் அட்டை வழங்குவார்

**********************************************************************************
சாசன விதிகள் பின்பற்றப்படாதபோது
  • துறைத்தலைவரிடம் மக்கள் முறையிடலாம்
  • அவர் பொதுமக்கள் முறையீட்டு அதிகாரி யாகவும் நியமிக்கப் பட்டிருப்பார்
  • குறையை முறையிட்ட 30 நாட்களுள் அதை அவர் தீர்த்து வைப்பார்
  • பொதுமக்கள் முறையீட்டு அதிகாரி முறையிட்டவரை திருப்தி படுத்த முடியாவிட்டால், அவர் லோக்பால் அல்லது லோகாயுக்தாவின் ஊழல் கண்காணிப்பு அதிகாரியிடம் முறையிடலாம்.
  • அந்த நிலையில் இம்முறையீடு ஊழல் கோணத்தில் சம்பந்தமுள்ளதாகக் கருதப்படும்.
  • பொதுமக்கள் முறையீட்டு அதிகாரி 30௦ நாட்களுக்குள் குறையை தீர்த்து வைக்க வேண்டும்.
  • குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அத்தொகை முறையிட்டவருக்கு இழப்பீடாக வழங்கப்படும்.
  • குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையும் தொடங்கப்படும்



மக்கள் லோக்பால், மக்கள் லோகாயுக்தா ஊழல் இல்லாதவாறு
அமைவதை உறுதிப்படுத்துவது எப்படி ?

  • தகுதிவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம்
    தேர்வு வெளிப்படையானதாகவும் பங்கேற்புடையதாகவும் இருக்கும்


கீழ்க்கண்டவர்களைக் கொண்ட தேர்வுக்குழு அவர்களைத் தேர்வு செய்யும்:
1. பிரதம மந்திரி
2. பாராளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித்தலைவர்
3. உச்ச நீதிமன்றத்தின் இரு இளநிலை நீதிபதிகள்
4. உயர் நீதிமன்றத்தின் இரு இளநிலை நீதிபதிகள்
5. கண்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் (CAG)
6. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC)
தேடுனர் குழுவால் அடையாளம் கண்டறியப்பட்ட ஒரு பட்டியலிலிருந்து மேற்கூறியவர்களை தேர்வுக்குழு நியமனம் செய்யும்

********************************************************************************************
தேடுனர் குழு கீழ்கண்ட 10 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்:
  • ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர், ஓய்வுபெற்ற கண்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் ஆகியோர்களிளிருந்து 5 உறுப்பினர்கள் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர் .
  • இந்த ஐவரும் சேர்ந்து சமூகநல அமைப்பிலிருந்து மேலும் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தேடுப்பர்.
    ஆக மொத்தம் 10 உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெறுவர்


கீழேயுள்ள CEC யும் , CAG யும் தேடுனர் குழு வுக்குத் தகுதி பெறமாட்டார்கள்:
  • தங்கள் மீது ஊழல் முறையீடு ஏதேனும் இருப்பவர்கள்
  • ஓய்வு பெற்றபின் அரசியல் கட்சி எதிலும் சேர்ந்தவர்கள்
  • அரசுப் பதவி எதிலேனும் இன்னும் இருப்பவர்கள்
  • பத்திரிகை ஆசிரியர்கள், IIT, IIM போன்ற பல சிறந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் , அறிஞர்களின் பெயர்கள் அனுப்பக்கோரிப் பெறப்படும்


அப்பெயர்கள் வலைத்தளங்களில் போடப்பட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறியும்

  • தேர்வுக்குழுவில் நிரப்பப்படவுள்ள காலி இடங்களைப்போல் 3 மடங்கு அதிக பெயர்களை தேடுனர்குழு கருத்திசைவோடு தேர்ந்தெடுக்கும்.
  • இந்தப் பெயர்ப் பட்டியலிலிருந்து தேர்வுக்குழு முடிவாக , கருத்தொற்றுமையோடு உறுப்பினர்களை தேர்வுக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கும்
  • தேர்வுக்குழு & தேடுனர் குழுக்களின் அனைத்துக்கூட்ட நடவடிக்கைகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
  • மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகள் தமக்குத் தேவைப்படும் அதிகாரிகளையும். ஊழியர்களையும் தாங்களே தேர்வு செய்து நியமனம் செய்வர்


நல்ல முறையில் செயல்படுவதினை உறுதிப்படுத்துவதன் மூலம்..
  • மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகள் வெளிப்படையாகவும், நேரிடையாகவும் மக்களுக்குப் பொறுப்பாவார்கள்.
  • ஒவ்வொரு முறையீடும் விசாரித்து அறியப்படும்.
  • விசாரணையின்றி எந்த முறையீடும் ஒதுக்கப்பட மாட்டாது .
  • இவ்வாறில்லாமல் எந்த வழக்காவது மூடப்பட்டால் அதன் எல்லா ஆவணங்களும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
  • ஒவ்வொரு மாதமும் அதன் வலைத்தளத்தில் கீழ்க்கண்டவை வெளியிடப்படும் :
  • எடுத்துக்கொள்ளப்பட்ட , முடிக்கப்பட்ட வழக்குகள்
  • மூடப்பட்ட வழக்குகளும் அதற்க்கான காரணங்களும்
  • நிலுவையிலுள்ள வழக்குகளின் பட்டியல்


கீழ்க்கண்டவை தவிர, எல்லா செயல்பாடுகளின் ஆவணங்களும் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் :
  • நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பன
  • மறைந்தொலிப்போரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பவை
  • நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழக்கின் வேகத்தைப் பாதிப்பன ( ஆனால் வழக்கு முடிவுற்றதும் இவையும் வெளிப்படையாக்கப்படும் )


மக்கள் லோக்பால்,லோகாயுக்தா அமைப்புகள் தகாத செல்வாக்கின் பாதிப்பின்மையை உறுதிப்படுத்துவதன் மூலம்..
  • பொது மக்கள் முறையீட்டு அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகளிடம் முறையிடப்படும்.
  • மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகளின் தலைவர்களும் , உறுப்பினர்களும் பதவி முடிவுக்குப்பின் தேர்தலில்போட்டியிடவோ, அரசுபதவிகளில் அமரவோ முடியாது


சரியான முறையில் நன்கு இயங்காவிடில் நீக்கப்படலாம் !
  • பொது மக்கள் முறையீட்டு அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் போன்ற அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் லோக்பால்,லோகாயுக்தா அமைப்புககளிடம் முறையிடப்படலாம்.

குற்றம் முறையிடப்பட்ட 1 மாதத்தில் விசாரணை துவங்கும்.
  • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அடுத்த ஒரு மாதத்தில் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.
  • Indian Penal Code அல்லது ஊழல தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்
  • மக்கள் லோக்பால்,லோகாயுக்தா அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்களின் மீதான குற்றச்சாட்டுகள் உச்சநீதி மன்றத்திடமோ அல்லது உயர் நீதிமன்றங்களிடமோ முறையிடப்படலாம்
  • ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஒரு பெஞ்சு, மனுவை விசாரிக்கும்.
  • விசாரணைக்குப் பின்னர் சிறப்பு விசாரணைக்குழு (SIT) அமைக்கும்படி ஆணையிடப்படலாம்.
  • சிறப்பு விசாரணைக்குழு , அதன் விசாரணைக்குப் பின்னர் 3 மாதங்களில் தனது அறிக்கையை அளிக்கும்


இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதி மன்றம் தலைவரையோ அல்லது உறுப்பினர்களையோ நீக்குமாறு ஆணையிடலாம்.
ஒப்பீடு
தற்போதைய அமைப்புமக்கள் லோக்பால்/ லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது
உச்ச/
உயர் நீதி மன்ற நீதிபதிகள்
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் அனுமதியின்றி நீதிபதிகளுக்கெதிராக FIR பதிவு செய்ய முடியாது.
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, தன் சகாக்களைப் பாதுகாக்கவே முயல்வார் என்பதும், இவ்வித அனுமதி வழங்கப்படுவது மிகவும் அரிது என்பதும் அனுபவத்தில் கண்ணட உண்மைகள்
மக்கள் லோகபாலின் கீழ் அதன் முழு பெஞ்சு, நீதிபதிகளுக்கெதிரான வழக்குகள் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கும்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி தேவைப்படாது. எனவே நீதித்துறையின் உயர் மட்டங்களில் ஊழல்கள் குறைய வாய்ப்பு ஏற்படும்
தண்டனை தண்டனையின் அளவு :
  • ஊழல் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையின் அளவு: 6 மாதங்களிலிருந்து 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை. இது போதுமானதாகாது

தண்டனையின் அளவு:
1 வருட கடுங்காவலிலிருந்து ஆயுள்தண்டனை வரை. உயர்பதவியில் இருந்தவர்களுக்கு அதிக தண்டனை
சாட்சியம் இப்போது உள்ள முறையில், ஒருவர் சட்டவிரோதமாக அரசின் ஆதாயம் ஏதும் பெற்றிருந்தால் அதை லஞ்சம் மூலம்தான் பெற்றார் என்று நிரூபிப்பது கடினம்
ஒருவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அரசின் ஆதாயம் ஏதும் பெற்றிருந்தால் அவரும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரியும் ஊழல்செய்தனர் என்று கருதப்படும்
மறைந்தொலிப்போர்
(Whistleblowers)
தற்போது ஊழலைப் பற்றி முறையிட்டாலோ, அல்லது அதை எதிர்த்து குரல் கொடுத்தாலோ அவர்கள் மிரட்டப்படுகிறார்கள், பலி ஆக்கப்படுகிறார்கள்.அல்லது கொலை கூட செய்யப்படுகிறார்கள் அவர்களுக்கு எந்தவிதப்
பாதுகாப்பும் இல்லை
அரசுக்கு உள்ளேயோ,வெளியிலோ உள்ள மறைந்தொலிப்போருக்கு கீழ்கண்ட பாதிப்புகளில் இருந்து பாதுகாப்புவழங்கப்படும்:
[list][*]தொழில் சார்ந்த பயமுறுத்தல் அல்லது பலியாக்கல்
[*]உடல் சார்ந்த பயமுறுத்தல் அல்லது பலியாக்கல்
பன்முக ஊழல் எதிர்ப்பு அமைப்புகள்
தற்பொழுது, சிபிஐ, CVC, மாநிலக் கண்காணிப்புத்
துறைபோன்ற பல்வேறு ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளன. இவையனைத்தும்
ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளாலும்,
அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்பட்டு செயலூக்கம் அற்ற நிலையிலுள்ளன
மத்தியஅரசு அளவில் -சிபிஐ, CVC மற்ற பல துறைகளைச்சார்ந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவுகள் அனைத்தும் மக்கள் லோக்பால் உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
மாநில அளவில் -காவல் துறையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, மாநில கண்காணிப்புத் துறை, மற்ற துறைகளின் கண்காணிப்புப்பிரிவுகள், தற்போது
இயங்கிவரும் லோகாயுக்தா அனைத்தும் மக்கள் லோக்பால் உடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இவ்வாறு செய்தால், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் தற்போதுள்ள சிதறுண்ட நிலை நீங்கும்.

ஆனால் இப்பொழுது சிலர் கூறுகிறார்கள் ……
  • பிரதமர் மக்கள் லோகபாலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
  • நீதித்துறை மக்கள் லோகபாலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
  • மக்கள் குறைகள் அவர்களுக்கு மிகுந்த சுமையை ஏற்ப்படுத்தும்..
  • லோக்பால் ஒரு சில பெரிய இடத்து ஊழல் வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும்.
  • மறைந்தொலிப்போர்க்கு பாதுகாப்பு வழங்கும பொறுப்பினை லோக்பாலிடம் ஒப்படைக்கக் கூடாது.
  • சிபிஐ, CVC, மற்ற துறைகளின் கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை லோக்பாலுடன் இணைக்கக்கூடாது.
    லோக்பால் ஒரு சிறிய அமைப்பாக இயங்கட்டும்.


தற்போதைய ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் இப்போதுள்ளவாறே செயலூட்டம் அற்று இயங்கட்டும்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

  • உங்கள் குரல் ஒலிக்கட்டும்
  • மௌனமாக இருக்க வேண்டாம்.
  • என்ன வேண்டும் என்பதை உங்கள் பகுதியிலுள்ள
    பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு எழுதுங்கள்…….

*********************************************************************************************

மக்கள் லோக்பால் மசோதா பற்றிய உங்கள் ஆலோசனையை வழங்கவும்…..
By email: lokpalbillcomments@gmail.com
Or By post : A-119, First Floor, Kaushambi, Ghaziabad, Uttar Pradesh: 201010

மக்கள் லோக்பால் சட்ட மசோதா பதிப்பு 2.2 ஐ கீழுள்ள வலைத்தளதிலிருந்து தரவிறக்கம் செய்யலாம் :
ww.indiaagainstcorruption.org

இன்றே இயக்கத்தில் சேர்வீர்களாக !

தவிர்ப்பழைப்பை அனுப்பிடுவீர் : 022-61550789
facebook.com/indiacor



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 22, 2011 12:23 pm

மிக விளக்கமான ஒரு பதிவிற்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 22, 2011 12:46 pm

விளக்கமான பதிவு நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக