Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
4 posters
Page 1 of 1
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
மும்பை:இந்திய பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சியால், ஒரே மாதத்தில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த நான்கு வாரங்களில், மும்பை பங்குச் சந்தையின், குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' , 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. 2010ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, சென்ற வெள்ளியன்று 'சென்செக்ஸ்' 328 புள்ளிகள் குறைந்து 16,142 புள்ளிகளில் நிலை கொண்டது.சென்ற ஜூலை மாதம் 25ம் தேதி 'சென்செக்ஸ்' அதிகபட்சமாக 18,871 புள்ளிகள் வரை சென்றது. இதையடுத்து கடந்த 18 வர்த்தக தினங்களில் 14.5 சதவீதம், அதாவது 'சென்செக்ஸ்' 2,729 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
பங்குகளின் விலை வீழ்ச்சியால், பங்கு முதலீட்டாளர்கள், பல்வேறு நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டின் மதிப்பு, 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் குறைந்து, 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.அதாவது, இந்த 18 வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளோர், தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கும் பட்சத்தில், 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பை கண்டிருப்பர்.
சிறப்பான நிர்வாகம், வலுவான நிதியாதாரம் என பல வகைகளில், முதலீட்டிற்கு அதிக இழப்பை தராத 'புளுசிப்' நிறுவனப் பங்குகளும், இந்த வீழ்ச்சியில் தப்பவில்லை. முன்னணி 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உள்ளிட்டவை அடங்கும்.
பங்குச் சந்தையின் சரிவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீட்டை திரும்பப் பெற்றதும் ஒரு காரணமாகும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறையும் என்ற கணிப்பும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன.
கடந்த நான்கு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் 9,547 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் சந்தைகள் வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ் வாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 13 ஆயிரத்து 996 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே சமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 21 ஆயிரத்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகத்தை கொண்டிருந்த 3,286 நிறுவனப் பங்குகளில், 687 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. 971 பங்குகளின் விலை 15 -25 சதவீதம் சரிவடைந்துள்ளது. 654 நிறுவனப் பங்குகள் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 12 நிறுவனப் பங்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், எம்.டி.என்.எல், டீ.பீ. ரியாலிட்டி உள்ளிட்ட 164 நிறுவனங்களின் பங்குகள், இதுவரை காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன. இச்சந்தையில் இடம் பெற்றுள்ள 13 துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளில், 8 துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள், மிக அதிகமாக தலா 20 சதவீதம் வரை குறைந்துள்ளன. வங்கி,பொறியியல் மற்றும் மின் நிறுவனப் பங்குகள் விலை 15 -20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 2008ம் ஆண்டு சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. இந்த பாதிப்பு 10 மாதங்கள் வரை நீடித்தது. தற்போதைய பாதிப்பும் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவான பாதிப்பு என்ற போதிலும், மதிப்பின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சிதான் என, இத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 'சென்செக்ஸ்' 64 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு, 21 லட்சத்து 39 ஆயிரத்து 602 கோடி ரூபாய் குறைந்து போனது. ஒட்டு மொத்த சந்தை மதிப்பு 48 லட்சத்து 18 ஆயிரத்து 97 கோடி ரூபாயில் இருந்து 26 லட்சத்து 78 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி,'சென்செக்ஸ்' 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி வரையிலான காலத்தில், சந்தை மதிப்பு 78 லட்சத்து 8 ஆயிரத்து 67 கோடி ரூபாயில் இருந்து 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஆக, இதுவரை முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 18 லட்சத்து 78 ஆயிரத்து 818 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த நான்கு வாரங்களில், மும்பை பங்குச் சந்தையின், குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' , 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. 2010ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, சென்ற வெள்ளியன்று 'சென்செக்ஸ்' 328 புள்ளிகள் குறைந்து 16,142 புள்ளிகளில் நிலை கொண்டது.சென்ற ஜூலை மாதம் 25ம் தேதி 'சென்செக்ஸ்' அதிகபட்சமாக 18,871 புள்ளிகள் வரை சென்றது. இதையடுத்து கடந்த 18 வர்த்தக தினங்களில் 14.5 சதவீதம், அதாவது 'சென்செக்ஸ்' 2,729 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
பங்குகளின் விலை வீழ்ச்சியால், பங்கு முதலீட்டாளர்கள், பல்வேறு நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டின் மதிப்பு, 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் குறைந்து, 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.அதாவது, இந்த 18 வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளோர், தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கும் பட்சத்தில், 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பை கண்டிருப்பர்.
சிறப்பான நிர்வாகம், வலுவான நிதியாதாரம் என பல வகைகளில், முதலீட்டிற்கு அதிக இழப்பை தராத 'புளுசிப்' நிறுவனப் பங்குகளும், இந்த வீழ்ச்சியில் தப்பவில்லை. முன்னணி 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உள்ளிட்டவை அடங்கும்.
பங்குச் சந்தையின் சரிவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீட்டை திரும்பப் பெற்றதும் ஒரு காரணமாகும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறையும் என்ற கணிப்பும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன.
கடந்த நான்கு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் 9,547 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் சந்தைகள் வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ் வாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 13 ஆயிரத்து 996 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே சமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 21 ஆயிரத்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகத்தை கொண்டிருந்த 3,286 நிறுவனப் பங்குகளில், 687 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. 971 பங்குகளின் விலை 15 -25 சதவீதம் சரிவடைந்துள்ளது. 654 நிறுவனப் பங்குகள் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 12 நிறுவனப் பங்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், எம்.டி.என்.எல், டீ.பீ. ரியாலிட்டி உள்ளிட்ட 164 நிறுவனங்களின் பங்குகள், இதுவரை காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன. இச்சந்தையில் இடம் பெற்றுள்ள 13 துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளில், 8 துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள், மிக அதிகமாக தலா 20 சதவீதம் வரை குறைந்துள்ளன. வங்கி,பொறியியல் மற்றும் மின் நிறுவனப் பங்குகள் விலை 15 -20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 2008ம் ஆண்டு சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. இந்த பாதிப்பு 10 மாதங்கள் வரை நீடித்தது. தற்போதைய பாதிப்பும் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவான பாதிப்பு என்ற போதிலும், மதிப்பின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சிதான் என, இத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 'சென்செக்ஸ்' 64 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு, 21 லட்சத்து 39 ஆயிரத்து 602 கோடி ரூபாய் குறைந்து போனது. ஒட்டு மொத்த சந்தை மதிப்பு 48 லட்சத்து 18 ஆயிரத்து 97 கோடி ரூபாயில் இருந்து 26 லட்சத்து 78 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி,'சென்செக்ஸ்' 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி வரையிலான காலத்தில், சந்தை மதிப்பு 78 லட்சத்து 8 ஆயிரத்து 67 கோடி ரூபாயில் இருந்து 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஆக, இதுவரை முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 18 லட்சத்து 78 ஆயிரத்து 818 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
படிக்கவே பயமாக இருக்கே, இது எங்க போயி முடியும்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
இந்தியா தனது சுயத்தை இழந்து பன்னாட்டு நிறுவனங்களின் வால் பிடிக்கும் வேலையை ஆரம்பித்த போதே யோசித்திருக்கணும், இப்போ குத்துதே குடையுதேண்ணா எப்படி??????
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
நல்ல வீழ்ச்சி அடையட்டும் அப்பாவாது விலைவாசி குறையுதா என்று பார்ப்போம்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு!
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» யூரோ மதிப்பு பெரும் சரிவு... இந்திய ஐடி துறை பாதிப்பு
» இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» யூரோ மதிப்பு பெரும் சரிவு... இந்திய ஐடி துறை பாதிப்பு
» இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|