ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதன்

Go down

புதன் Empty புதன்

Post by சிவா Fri Sep 18, 2009 10:43 pm


பூலோகத்தையே புள்ளியல் போட புலமை வேண்டுமா?
புதன் பகவானை வணங்குங்கள்!
கண் இமைக்கும் நேரத்தில் உன்னதமான நிலைக்கு உயர வேண்டுமா?
புதன் பகவானை வணங்குங்கள்!.


புதன் யார்?

தேவ குருவான பிரஹஸ்பதியிடம் சந்திரன் சிஷ்யனாக இருந்தான். பிரஹஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்கினாள். சந்திரனும் தாராவின் அழகில் மயங்கினான். சந்திரனுடன் இருக்கிறாள். சந்திரனை விட்டு வர மறுத்து விட்டாள். இதனால் பிரஹஸ்பதிக்கு கோபம் வந்தது. ஒரு போரே மூண்டது. தேவ குருவான பிரஹஸ்பதிக்கு சுக்ராச்சாரியார் எதிரி. அவர் சந்திரன் பக்கத்தில் துணையாக நிற்கிறார். சுக்ராச்சாரியார் அசுரர் குல குரு. அதனால் அசுரர்கள் சந்திரன் பக்கம் போரிட வந்தார்கள். தேவேந்திரன் தேவ குருவுக்கு ஆதரவாகப் போராடினான். இந்தப் பெரிய யுத்தம் தாரையின் காரணமாக நடந்ததால் "தாரகாமயம்" என்று பெயா; பெறலாயிற்று. இரு பக்கங்களிலும் பலமான ஆயுதங்களை ஏந்தி ரோஷமாக சண்டை நடந்ததால் உலகம் நாசமடைவதைத் தடுக்க பிரம்மா தலையிட்டார். அவர் சமாதானம் செய்து தாரையை சந்திரனிடமிருந்து மீட்டு பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். தாரைக்குப் பிறந்த ஒளிமயமான குழந்தையை பிரகஸ்பதியும் சந்திரனும் உரிமை கொண்டாடினார்கள். அச்சமயம் தாரை மௌனம் சாதித்தாள். அவளின் மௌனத்தைக் கண்டு ஒளிமயமான பாலகனே வெகுண்டான். தாயான தாரையைக் கடிந்துகொண்டான். இதன் பின்னரே தாரை அக்குழந்தை சந்திரனுக்குப் பிறந்தது என்று ஒப்புக் கொண்டாள். அந்தக் குழந்தையின் புத்தி சாதுர்யத்தை மெச்சிய பிரம்மன் அதற்கு "புதன்" என்று பெயரிட்டார். அப்போது உருவானவன் தான் புதன் என்கின்ற சௌம்யன். சௌம்யா என்றால் அழகானவன் என்று பொருள்.

தாரையின் கூற்றுப்படி சந்திரன் தான் தந்தை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சந்திரன் அந்தக் குழந்தையைத் தன் மனைவிகளான ரோஹிணியிடமும் கிருத்திகாவிடமும் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான். புதன் வளர்கிறான். அத்துடன் அவன் பிறப்பின் அவமானத்தால் உண்டான வேதனையும் வளர்கிறது. குருவின் பத்தினியைத் தன் மனைவியாகக் கொண்ட தந்தையின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. புதன் மகா ஞானி. மகா ஞானியான காரணத்தால் புதன் தன் பிறப்பின் களங்கத்துக்கு பிராயச்சித்தம் தேட எண்ணுகிறான். இமயமலைச் சாரலுக்குச் சென்று சரவணவனம் என்னுமிடத்தில் தவம் செய்கிறான். மகாவிஷ்ணு தோன்றி அருள் பாலிக்கிறார். திருமாலின் அருளால் சகல வேதங்களையும் கலைகளையும் கற்றார். வாணிபக் கலையில் இவரது தேர்ச்சி காரணமாகவோ என்னவோ இவரது அஷ்டோத்திரத்தில் "வாணிஜ்ய நிபுணாய" என்று அழைக்கப்படுகிறார். புதனின் பிள்ளை புரூரவஸ். பஞ்சபூதங்களில் மண் இவன். வடக்கு திசைக்குரியோன் நான்காவது வருணத்தோன் நான்கு உபாயங்களில் பேதம் இவனுடையது. பார்வைகளில் சம பார்வை பார்ப்பவன்.


ஜாதகங்களில் புதன்:


பூமியிலிருந்து 3 கோடி மைல் தூரம் உள்ள புதன் கிரகம் ஒரு ராசியில் 30 நாட்கள் சஞ்சாரம் செய்கிறான். புதன் பகவான் கன்னி ராசியில் உச்சமாகின்றார். மிதுனம் இவரது ஆட்சி விடாகும். இவர் ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆவார். ஆங்கில எண்ணில் 5க்கு அதிபதி. 5 14 23 ஆகி தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். ஜாதகத்தில் உச்சம் அல்லது ஆட்சி பெற்று சுபகிரகங்களோடு சோந்திருப்பது இவனது தசா அல்லது புத்தி நடக்கும் போது அந்த ஜாதகரை உன்னதமான நிலைக்கு உயர்த்திவிடுவான் புதன். அறிவை அளிப்பவனாதலால் புத்தி தாதா என்றும் தனம் தருவோதனாதலால் தனப்ரதன் என்றும் இவன் பாராட்டப்படுகிறான். கல்விக்கும் - அறிவுக்கும் காரகன் புதன். கல்வியில் தேர்வடைந்து பட்டங்கள் பெறுகின்ற மேதைகளையும் பேச்சாற்றல் மிக்கவர்களையும் தோற்றுவிப்பவன் புதன். கணிதம் தாக்கம் வைத்திய அறிவு எல்லாவற்றிற்குமே மூலகர்த்தா இவனே! உன்னதமான நாடக அமைப்பு உயர்ந்து நடன அமைப்பு ஆகியவைகளுக்குப் புத பலமே அடிப்படை வெளியீடு நுலாக்கம் ஆகிய தகுதிகளை அளிப்பவனும் புதனே ஆவான். இரு பொருள்படப் பேசும் திறன். பளிச்சென்ற உச்சாpப்பு நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு இவற்றிற்குப் புத பலமே காரணமாகும். ஜாதகத்தில் பாபக் கிரகத்தோடு சோந்திருந்தால் பாபக் கிரக பலனைத் தருவான் புதன். சுபகிரகத்தோடு சோந்திருந்தால் சுபக் கிரக பலனைத் தருவான். யாரோடும் சேராதிருந்தால் சுபபலனைத் தருவான். கிரகங்களில் அலி இவன் வித்தைகளில் ஜோதிடம் இவனுக்கு விசேடமானது. ஒரு ஜாதகத்தில் ஜாதகர் வாக்குவன்மை பிரசங்க ஆற்றல் பெறுவதற்கு புதன் நல்ல அம்சத்தில் இருக்க வேண்டும். தாய் மாமன் வகை உதவிகளை பெறுவதற்கும் வியாபரத்தில் திறமை புரோக்கர் ஏஜென்சி தபால்துறை வங்கித்துறை போன்றவற்றில் சிறந்த தலைமை பதவி வகிப்பதற்கு புதனே காரணமாம். விளையாட்டு ஸ்தலங்களை விரும்பி அங்கே வசிப்பதற்கும் தோட்டங்களில் நாட்டம் உண்டாகி தோட்டங்களை வளர்ப்பதற்கும் புதனே காரணமாகும்.

புதன் சரியில்லாத ஜாதகங்கள்:

உடலில் நரம்பு இவன். நரம்பு அமைப்பு முறையில் ஆதாரம் இவன். புதன் சரியில்லை என்றால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டவனாக இருப்பான். குறிப்பாக தலைவலியில் "மைக்ரான் " என்ற சொல்லக் கூடிய நோயும் கழுத்து வலியில் இன்று கழுத்துக்கு சில போ காலர் வைத்துக் கொள்கிறார்கள். அதற்கும் புதன் சரியில்லாததே காரணம். முக்கியமாக ஆண்மைக்குறைவு கணவன் மனைவி உடல் உறவில் ஆண்குறி விரைப்புத்தன்மை அற்று அலித்தன்மை உருவாகி அதன் மூலம் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்து வரை சென்று இலட்சக்கணக்கான வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குடும்பங்கள் பிரிகின்றன. இதற்கு முக்கிய காரணம் புதன் பகவான் சரியில்லாதே காரணம். மேலும் ஹோமோ செக்ஸ் என்று சொல்லக் கூடிய ஆணும் ஆணும் உடலுறவும் பெண்ணும் பெண்ணும் உடலுறவும் பாலியியல் வக்கிரங்கள் விஷரோகம் தோல் நோய் எடுப்பில்லாத தோற்றம் முகம் பொலிவு இல்லாத நிலை இவற்றுக்கும் புதன் பகவானே காரணம். ஒரு பொருளை வைத்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடல் எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் செய்வது சபை அறியாமல் பேசுவது சுவையான உணவு கிடைக்காமல் போவது போன்றவற்றிற்கு புதன் பகவான் சரியில்லாததே காரணம்.


புதன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதன் Empty Re: புதன்

Post by சிவா Fri Sep 18, 2009 10:44 pm

புதனின் ஆற்றல் பெற:

நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும். தீய குணங்களினால் உண்டான பீடைகளை நீக்கும் சக்தி புதன் தேவனுக்கு உண்டு. ஆகையால் கூட இவனை கிரக பீட காரகன் என்றும் கிரகபதி என்றும் கூறுவர்;. முத்து ஸ்வாமி தீஷிதர்; "புதமாஸ்ரயாமி" என்று பாடியுள்ளார். திருவெண் காட்டில் சந்திரபுஸ்கரணி கரையில் ஸ்ரீ பிரம்மவித்யாம்பிகா கோயிலில் வட புறத்தில் புததேவன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். புத தோஷம்; உள்ளவர்கள் திருவெண்காடு சென்று அங்குள்ள புத தேவனை வணங்கி பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும் என்பது உண்மை. புதனின் அதிதேவதையான மகாவிஷ்ணு வழிபாடு செய்வதும் சரஸ்வதிதேவி வழிபாடு செய்வதும் புதனின் அருளை பெறலாம். மதுரை திருக்கடையூர் திருவெண்காடு ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் புதன் அருள் கிட்டும். சந்திரன் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீனாட்சியம்மனை வழிபட்டால் மிகசிறப்பான பலன்களை அடைய முடியும். செவ்வாய் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வழிபட்டால் மிக சிறப்பான பலன்களை அடைய முடியும். குரு ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாமன அவதாரத்தையும் பரசுராமனை வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்களை அடைய முடியும். சினிமா தொலைக்காட்சித் துறையில் புகழ் பெற வேண்டும் என்பவர்கள் புதன் மந்திரம் ஜெபித்தால் புகழ் மட்டுமின்றி கவிபாடும் திறனும் கூடி வரும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் இருக்கிறது. ஞானி என்று சொல்லப்படும் புதன் அருள் வேண்டுபவர்கள் காசியிலுள்ள லிங்கத்திற்கு பூஜை செய்யலாம். ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிவதாலும் இரத்தினங்களில் மரகத கல் அணிவதாலும் பித்தளை பொருட்களை உபயோகப்படுத்துவதாலும் உணவு வகைகளில் உவர்ப்பு சுவைகளை விரும்பி உண்ணுவதாலும் மாதுளை போரிச்சை திராட்சை முந்திரி கேப்பை கூழ் செய்து சாப்பிடுவதாலும் பாசிப்பயறு வகைகளை உண்பதாலும் புதனின் ஆதிக்கம் பெறலாம். வாயு கிரகத்தை வழிபாடு செய்வதாலும் நாயுருவி சமித்துகளால் பூஜை செய்வதாலும் மூங்கில் மரத்துக்கு நீர் ஊற்றுவதாலும் பச்சை கற்பூரம் தூபம் போடுவதாலும் புதனின் அருள் பெறலாம். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி வடக்கு வடகிழக்கு திசைகளில் வசிக்கலாம் வீடுகள் கட்டலாம் மேலும் தொழில் அதிக பணம் ஈட்ட நினைப்பவர்கள் விந்திய மலை முதல் கங்கா நதி தீரம் வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கலாம். புதன் தோஷம் நீங்க "வங்யங்நசிமசி" என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும்.

காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வாரி வழங்கும் ஆற்றல் படைத்த புதனை இதயத்தில் இருத்தி வழிபடுவோம். நம்மை அறிவாற்றல் மிக்கவராக்க வேண்டுமென்று அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். வாழ்க வளமுடன்!


புதன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum