ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி!

2 posters

Go down

சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Empty சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி!

Post by kitcha Fri Aug 19, 2011 12:48 pm

புதிய துறைகளில், புதிய உயரங்களை எட்டி வருகிறது இன்றைய 'இளைய பாரதம்'. அதற்கு உதாரணம், திருச்சியைச் சேர்ந்த குயின் சுராஜினி.

உலக பருவநிலை மாற்றத்தை ஆராய்வதில் ஆர்வம் கொண்ட சுராஜினி, விரைவில் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில் திருச்சி பொறியாளர் கழகத்தில் பேசிய சுராஜினி நமக்கு அளித்த பேட்டி...

உங்களின் பள்ளி நாட்கள் பற்றிக் கூறுங்கள்...

எனது பள்ளிப் பருவம் முழுவதும் திருச்சியிலேயே கழிந்தது. இங்குள்ள சாவித்திரி வித்யா சாலா இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்குப் பின், சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குள்ள சிவில் டிபார்ட்மெண்ட் 'இன்ஸ்டிட்யூட் ஆப் ரிமோட் சென்சிங்'தான் என்னை ஒரு நல்ல 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் என்ஜினீயராக' (புவி தகவலியல் பொறியாளர்) உருவாக்கியது.

எந்த வகையில் என்று கூற முடியுமா?

பருவநிலை மாற்றம் தொடர்பாக மேலும் நான் படிக்க, ஆய்வு செய்யத் தூண்டியது கிண்டி பொறியியல் கல்லூரிதான். அங்கு நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகள் எனக்குள் அதற்கான ஆர்வத் தீயை மூட்டிக்கொண்டே இருந்தன. பல்கலைக்கழக வளாகத்திலும், டெல்லி, ஐதராபாத் போன்ற வெளியூர்களிலும் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகளில் நான் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன். அதற்கு, எனது பேராசிரியர்கள் ஊக்குவித்து, உதவியாக இருந்தார்கள். கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் சொசைட்டி'யில் நான் மகளிர் இணைச் செயலாளராக இருந்தேன். 'ஸ்டூடண்ட் குவாலிட்டி கிளப்', 'ஒய்ஆர்சி' போன்ற அமைப்புகளிலும் இணைந்து செயல்பட்டேன். இவற்றின் மூலமாகத் தலைமை, ஒருங்கிணைப்புப் பண்புகளையும், மென்திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.

'ஜி.பி.எஸ்', 'ஜி.ஐ.எஸ்' பற்றி விளக்க முடியுமா?

'ஜி.பி.எஸ்.' என்பது 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' ஆகும். பூமியில் ஒரு பொருள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. 'ஜி.ஐ.எஸ்.' என்பது 'ஜியாகிராபிக் இன்பர்மேஷன் சிஸ்டம்'. புவியியல் குவித்த தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் அமைப்பாகும் இது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் ஜி.பி.எஸ்.சும், ஜி.ஐ.எஸ்.சும் முக்கியமானவை.

பொறியியல் படிப்பை முடித்ததும் அடுத்து என்ன செய்ய நினைத்தீர்கள்?

கல்வி, அது சார்ந்த சிறப்பான செயல்பாடுகள் காரணமாக எனக்கு வளாகத் தேர்வு மூலமே டி.சி.எஸ். நிறுவனத்தில் 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் சாப்ட்வேர் என்ஜினீயர்' பணிவாய்ப்பு வந்தது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் படிக்கும் வாய்ப்புகளும் வந்தன. நான் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தைத் தேர்வு செய்திருக்கிறேன்.

ஏன் அந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தீர்கள்?

ஆசியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்று அது. அம்மாதிரி ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. பி.இ. முடித்ததும், முதுநிலைப் பட்டம் பெறாமலே அங்கு ஆய்வுப் படிப்பில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. தவிர, எனக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகையாக ரூ. 70 ஆயிரமும், ரூ. 5 லட்சம் கல்விக் கட்டண விலக்கும் அளிக்க அப்பல்கலைக்கழகம் முன்வந்திருக்கிறது. இதை குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதுகிறேன். அடுத்து, பொதுவாக ஆய்வுப் பட்டப் படிப்பில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் தாங்கள்தான் ஒரு குறிப்பிட்ட பேராசிரியரை அணுகி 'கைடாக' இருக்கும்படி கேட்டுக்கொள்வார்கள். ஆனால் நான்யாங் பல்கலைக்கழக சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சியுங் சாய் ஹுங் என்னைப் பற்றி அறிந்து, தனது ஆய்வில் இணைந்துகொள்ள முடியுமா என்று என்னைத் தொடர்புகொண்டு கேட்டார். அதையும் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நீங்கள் எது குறித்து ஆய்வு செய்யவிருக்கிறீர்கள்?

மழையின் அளவு மற்றும் காலநிலை பற்றி ஆய்வு செய்ய இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மழையின் அளவு மாறுபடுகிறது. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பேன்.

ஒரு பருவநிலை மாற்ற விஞ்ஞானியாக, இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிகவும் அபாயகரமான சுற்றுச் சூழல் பிரச்சினையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

உலகின் நீர்வள ஆதாரம் சுருங்கியும், மாசுபட்டும் வருவதும், காடுகளின் பரப்பு குறைந்து வருவதும் இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிக மோசமான சுற்றுச்சூழல் அபாயங்கள். நீரை வீணாக்கும், மாசுபடுத்தும் செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் இளைய சமுதாயத்தினருக்கு நிறையவே பொறுப்பு இருக்கிறது.

இந்திய மாணவர்கள் பலரும் இங்கு படிப்பை முடித்ததும் வெளிநாடு சென்று விடுகிறார்களே... அது பற்றி?

ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பலர் அங்கு செல்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்பி வெளிநாடு செல்வோரும் இருக்கிறார்கள். ஆனால் நான் சிங்கப்பூரில் ஆய்வுப் படிப்பை முடித்ததும் இந்தியா திரும்பி இங்குதான் பணியாற்றுவேன்.

சுற்றுச்சூழல் தவிர உங்கள் பிற கல்வி ஆர்வங்கள்?

ஆங்கில மொழிப்புலமையை வளர்த்துக்கொள்வதில் நான் மிகவும் ஆவலாயிருக்கிறேன். ஜி.ஆர்.ஈ., டோபல் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். ஜப்பானிய மொழியும் அறிவேன். ஓவியம் தீட்டும் திறமை இருக்கிறது.

உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

பருவநிலை பற்றிப் படிப்பதுதான் இளவயது முதலே எனது ஆசையாக இருந்திருக்கிறது. இத்துறையில் ஆய்வுப் பட்டம் பெறுவதை முக்கியமானதாகக் கருதுகிறேன். சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, உலகைக் காப்பதில் எனது பங்கைச் செலுத்த விரும்புகிறேன்.

உங்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் யார்? யார்?

எனது பெற்றோர் (வக்கீல் ராஜேந்திரன்- பேராசிரியை சுகந்தி), திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் டாக்டர் எஸ். ராகவன் ஆகியோர் எனக்கு ஊக்கம், உறுதுணையாக உள்ளனர்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் அளவுக்கு எது உங்களை உயர்த்தியதாக நினைக்கிறீர்கள்?

சுய ஒழுங்கும், திட்டமிட்ட செயல்பாடும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதாக நினைக்கிறேன். உண்மையான முயற்சி, அறிவை வளர்த்துக்கொள்வது, மாறாத ஆர்வம், தளராத தன்னம்பிக்கை ஆகியவை எவரையும் எந்த உயரத்துக்கும் இட்டுச் செல்லும். கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு தேர்வு முடிந்தவுடன் ஜி.ஆர்.இ., டோபல் போன்ற தேர்வுகளை எழுதலாம் என்று நினைக்கக் கூடாது. மூன்றாம் ஆண்டிலேயே இத்தேர்வுகளை எழுதித் தயார் நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக அடுத்த இலக்குக்குச் செல்ல முடியும்.

பொதுவாக, எதையும் தள்ளிப்போடாமல் இன்றே, இப்போதே செய்யுங்கள். வெற்றி உங்களை வெகு நாளைக்குத் தள்ளிவைக்காது!

சாதிப்பவர் சொல்கிறார், சாதிக்க நினைப்போர் பின்பற்றலாம்!


koodal

சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Surajinijpg1090


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Empty Re: சாதனைப் பெண்கள்:உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி!

Post by அருண் Fri Aug 19, 2011 1:01 pm

சுராஜினிக்கு பாராட்டுகள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பகிர்விற்கு நன்றி கிச்சா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum