ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?

+17
சங்கர்.ப
ஈகரைச்செல்வி
சரவணன்
Preethika Chandrakumar
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
sino
ஸ்ரீஜா
அதி
ranhasan
சதாசிவம்
அருண்
பிஜிராமன்
கார்த்திக்
உமா
ayyamperumal
21 posters

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Tue Sep 15, 2015 6:11 pm

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம . ( ஊழ் - 376 )

பொருள் :
=======
எவ்வளவுதான் கட்டிக் காத்தாலும், நமக்குச் சொந்தமில்லாத பொருட்கள் நம்மிடம் தங்காது . அதேசமயத்தில் , நமக்கு உரிமையுள்ள பொருட்களை வெளியிலே கொண்டுபோய்க் கொட்டினாலும் அது நம்மைவிட்டு நீங்காது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Tue Sep 15, 2015 6:17 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
=========================

தித்திக்கும் தேனும்
...தினைமாவும் கொண்டு உன்றன்
அத்தை வருவாள்
...அழவேண்டா கண் மணியே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian Sun Oct 11, 2015 5:54 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !
[You must be registered and logged in to see this link.]

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே .

சிவகாமியின் சபதமோ ?
சிவகாமி -மகேந்திரபல்லவன் சம்பந்தப்பட்டதோ .
சிவகாமியின் சபதம் படித்ததில்லை .
காதில் விழுந்த சங்கதி என நினைவு கூறுகிறது .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
-=============
சிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமி
தன் கனவுகள் சிதைந்த பிறகு, ஏகாம்பரநாதரையே
தன் பதியாக ஏற்றுக் கொண்டு, அவர் சந்நிதியில்
ஆடுகிறாள்....
-
அப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை.
அவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும்
ஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும்
அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை;

வேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை.
மாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம்
தாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன
அபிநயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி
போலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி
என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும்
அவருக்கு நினைவு வந்தன.

சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய
சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார்.

அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச்
சென்று கொண்டிருந்த போது,

"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின்
உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.
-
[You must be registered and logged in to see this link.]

நேற்று  மாலை சிவகாமியின் சபதம் டிராமா வாணி மஹாலில் அரங்கேற்றம்  ஆனது .
மாலை 6-40 மணிக்கு ஆரம்பம் ஆனா நாடகம் இடைவெளி இல்லாமல் முடிந்த போது
10-10 .
கல்கியின் படைப்பை  சிறந்த முறையில் நாடகமாக்கி இருந்தனர் .
முக்கியமாக நான் பார்க்க விரும்பியது ,
"தலைப்பட்டால்  நங்கை தலைவன் தாளே "
எப்பிடி இந்த காட்சியை சித்தரித்து இருக்கிறார்கள் .என்று .
ரொம்பவும் அழகாக , உச்சகட்டம் என்பதற்கு ஏற்றவாறு நாடகமாக்கி இருந்தனர்

" சிவகாமி , தன் தந்தையுடன் ஏகம்பரநாதர் கோயில் வந்து , ஈஸ்வரனை வணங்கி ,
அவரை பதியாக வரித்து , தாலிக்கயிரை ,கழுத்தில் அணிந்து ,நாவுக்கரசர் பாடலை
பாடிக்கொண்டே , ஆட , ஆண்டவனும் உயிர் பெற்று எழுந்து ( சிலையின்  பக்கத்தில்
இருந்து தோன்றி ) சிவகாமியை ஆட்கொண்டு ,சிவகாமியுடன் சேர்ந்து நடனம் ஆட ,  
ரொம்பவும் மனது நிறைந்து இருந்தது .
சிவகாமியாக நடித்தவர் நடன கலைஞர் .
சிவனாக வந்தவரோ டான்ஸ் மாஸ்டர் .
அவர்கள் இருவரும் இணைந்து ஆடிய ஆட்டம் , மனதை விட்டு அகல வெகு நேரம் ஆயிற்று .

அது முடிந்த போது , ஈகரை யில் , நுனிப்புல்லில் , மேற்கொண்ட பதிவுதான் நினைவில் நின்றது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by சசி Sun Oct 11, 2015 6:23 pm

அருமை படைப்பு ஐயா, நிறைய தரம் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்த புத்தகம், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் தான் ஐயா. நீங்கள் நேரில் கண்டு களித்து விட்டீர்கள். பொறாமையாக உள்ளது.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian Sun Oct 11, 2015 6:44 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அருமை படைப்பு ஐயா, நிறைய தரம் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்த புத்தகம், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் தான் ஐயா. நீங்கள் நேரில் கண்டு களித்து விட்டீர்கள். பொறாமையாக உள்ளது.
[You must be registered and logged in to see this link.]

பொன்னியின் செல்வன் 5/6 முறை படித்துள்ளேன் . 5 வால்யும் புத்தகம் உள்ளது .
பார்த்திபன் கனவும் படித்துள்ளேன் .
ஆனால் சிவகாமியின் சபதம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .
பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது ,
பொன்னியின் செல்வன் நாடகமும் பார்க்க வேண்டும்
4 1/2 மணி நேரம் என்று கேள்விப் பட்டேன் .
டிக்கெட் விலை அதிகம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Dr.S.Soundarapandian Sun Oct 11, 2015 7:01 pm

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 3838410834 நுனிப்புல் தின்போமா  ? - Page 17 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma Mon Oct 12, 2015 12:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமை படைப்பு ஐயா, நிறைய தரம் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்த புத்தகம், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் தான் ஐயா. நீங்கள் நேரில் கண்டு களித்து விட்டீர்கள். பொறாமையாக உள்ளது.

பார்த்திபன் கனவு படத்தில் கூட இந்த பாடலை குமாரி கமலா ரொம்ப அழகாய் ஆதுவார் சசி....அந்த பாடல் கிடைத்தல் போடுகிறேன் புன்னகை

அருமையானவை கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும்......பலமுறை படித்திருக்கேன், வந்தியத்தேவனோடும் குந்தவையுடனும் வாழ்ந்ததாகவே தோன்றும் புன்னகை ......பொன்னி இன் செல்வனையும் வானதியையும் நந்தினியையும் ஆழ்வார்க்கடியானையும் யாரையுமே மறக்க முடியுமா சசி ? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma Mon Oct 12, 2015 12:46 am



இந்தப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Wed Jan 27, 2016 4:43 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
இந்தப் புலவர்களுக்கு நொச்சியிலையைப் பார்த்தால்
மயிலின் காலடி நினைவுக்கு வருகிறது என்றால்

இன்னொரு புலவருக்கு மயிலின் காலடியைப் பார்த்தால்
நொச்சியிலை நினைவுக்கு வருகிறதாம்.
-
எந்தப் பாடல் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 4:55 pm

முந்தைய இரவு, தலைவனின் வருகையை எதிர்பார்த்து
தலைவியும் தோழியும் உறங்காமல் காத்திருந்தும் தலைவன்
வரவில்லை.

மறுநாள் தோழி தலைவனை சந்திக்கிறாள். நான் வந்தேன்
ஆனால் நீங்கள் உறங்கிவிட்டீர்கள் என்று அவன் சொல்வதற்கு
இடந்தராமல் தோழி சொல்கிறாள்,

“இந்தப் பெரிய ஊரே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் நாங்கள்
நேற்றிரவு உறங்கவில்லை. எங்களுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும்
ஏழில்குன்றின் மேலுள்ள, மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக்
கொண்ட கரிய பூங்கொத்தை உடைய நொச்சியின் மெல்லிய காம்புகள்
நீலமணி போன்ற மலர்களை உதிர்க்கும் ஓசை கூட எங்களுக்குக் கேட்டது.
நீ வந்திருந்தால் எங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் “ என்று
அவன் வரவில்லை என்பதை உறுதிபடக் குறிப்பிடுகிறாள்.
-
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

(கொல்லன் அழிசி – குறுந்தொகை 138)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 17 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum