புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_lcapநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_voting_barநுனிப்புல் தின்போமா  ? - Page 13 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2015 11:07 pm

அருமையான விளக்கங்கள் ராம் அண்ணா புன்னகை ................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 24, 2015 8:39 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
வேழ முடித்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து -



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2015 12:57 pm

பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கிய சேர, சோழ, பாண்டிய,
தொண்டை நாடு களைப் பாடிய ஔவையார்
-
[color:4f8d= #009900]
“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழவளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து” என்றார்.
-
[You must be registered and logged in to see this image.]
-
சோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக
மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம்
உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு
என்று புகழப்பெற்றது.
-
நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை
மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி
ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும்.
-
அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே
போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து
கொள்ள “ஆயக்கட்டுச் சபை” என நீர்ப்பாசனத்திற்காக
கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார்.
-
இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்
பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத்
துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2015 12:59 pm

திரு வை.கோ.அவர்களின் விளக்கம்:
-

அகிலத்து நாடுகட் கெல்லாம் ‘யானைத் தந்தத்தை’
அனுப்பிட்ட தமிழகத்து வளம் குவிந்த மலைநாடாம்
சேரநாட்டின் “வேழங்கள்” போர்களத்துப் படையாயிற்று.
அம்மலை நாட்டின் மன்னவன் செங்குட்டுவன் விண்முட்டும்
இமயத்தில் ‘கல்’லெடுத்து, பத்தினித் தெய்வத்துக்குச் சிலை
சமைத்தான். ‘வில்கொடி’ வெற்றிக் கொடியாக உயர்ந்தது!
-
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டுக் கடலில்
விளைந்த ‘முத்துகள்’ ரோமானிய பேரரசிகளின்
அணிகலனாயிற்று. அந்நாட்டு மன்னவனே ஆரியப் படை
கடந்த நெடுஞ்செழியனாக வாகை சூடினான்.
மீனக் கொடி புகழ் பரப்பிற்று.
-
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று
அப்பரடிகள் முழக்கம் செய்த மண்டபம்தான் தொண்டை
நாட்டின் அரசவையாகும். அப்பல்லவ நாட்டு வேந்தன் நரசிம்மனே
சளுக்கியப் பேரரசை வீழ்த்தி ‘வாதாபி’யைக் கொண்டான்!
கரையிலாக் கல்வியும், கலைகளும் ஓங்கியதால் சான்றோர்
நாடாயிற்று. ‘நந்திக் கொடி’ விண்ணில் எழுந்தது.
-
பெரும்படையுடன் வடதிசை சென்று ‘இமயத்தில் புலிக்கொடியை
நாட்டினான் சோழப் பெருவேந்தன் கரிகால் வளவன்.
சிங்களத் தீவினை வென்றான். அவன் ஈராயிரம் வருடங்களுக்கு
முன்னர் ‘உலகில் எங்கும் அமைக்கப் படாத தொழில் நுட்பத்தில்
‘கல்லணைகட்டினான்
-
காவிரியில்! பிற்காலச் சோழப் பேரரசு, நிலத்திலும், கடலிலும்
‘புலிக்கொடியினை’ வெற்றிக் கொடியாக்கிற்று. நாடுகள்
பலவற்றை வென்றான் மாமன்னன் இராசராசன்.
-
இந்தப் பெருமை இன்றைய இந்தியப் பூபாகத்தில் ‘வேறு’
எந்த மாநிலத்துக்கும் கிடையாது

என்ற சரித்திர உண்மையை நேரு பண்டிதரே ஒப்புக்
கொண்டாரல்லவா!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 24, 2015 1:41 pm

அய்யாசாமி ராம் அவர்களுக்கு மிக்க நன்றி ! சரியான விளக்கம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 9:45 am

மிக்க நன்றி ராம் அண்ணா, உங்கள் விளக்கங்களாலும் , ஐயாவின் இந்த திரியாலும் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது............நன்றி ஜகதீசன் ஐயா புன்னகை .................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 12:36 pm


இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================

”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:17 pm

திரு மந்திரம்.2868.

”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில்  வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது, ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

நன்றி ஸிரவன் ப்ளாக் ஸ்போட்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 2:53 pm

நுனிப்புல் தின்போமா  ? - Page 13 3838410834 நுனிப்புல் தின்போமா  ? - Page 13 3838410834
-
திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,
’சூனிய சம்பாஷணை என்று ஒரு
பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள்
(மந்திரங்கள்) உள்ளன.

எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில்
இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்க
முடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க
வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன.

சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான்
பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக்
குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது
கடினம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 3:12 pm

ayyasamy ram wrote:நுனிப்புல் தின்போமா  ? - Page 13 3838410834 நுனிப்புல் தின்போமா  ? - Page 13 3838410834
-
திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,
’சூனிய சம்பாஷணை என்று ஒரு
பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள்
(மந்திரங்கள்) உள்ளன.

எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில்
இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்க
முடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க
வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன.

சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான்
பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக்
குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது
கடினம்.
[You must be registered and logged in to see this link.]

ஆம்மாம் ராம் அண்ணா, இதோ இந்த பதிவை பாருங்கள்....ஐயாவும் அப்படித்தான் எழுதி இருக்காங்க புன்னகை ( வேறு ஒரு திரி இல் )

Namasivayam Mu wrote:திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக