ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?

+17
சங்கர்.ப
ஈகரைச்செல்வி
சரவணன்
Preethika Chandrakumar
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
sino
ஸ்ரீஜா
அதி
ranhasan
சதாசிவம்
அருண்
பிஜிராமன்
கார்த்திக்
உமா
ayyamperumal
21 posters

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sat Jun 20, 2015 4:15 pm

இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian Sat Jun 20, 2015 4:32 pm

M.Jagadeesan wrote:இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !
[You must be registered and logged in to see this link.]

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே .

சிவகாமியின் சபதமோ ?
சிவகாமி -மகேந்திரபல்லவன் சம்பந்தப்பட்டதோ .
சிவகாமியின் சபதம் படித்ததில்லை .
காதில் விழுந்த சங்கதி என நினைவு கூறுகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Sat Jun 20, 2015 6:43 pm



முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!

-
விளக்கம்:
-
தேன் ஒலிக்கும் செங்கழுநீர்ப் பூக்களையும்
முதிராத இளைஞர்களின் ஆருயிரும் திருகிக்
கூந்தலிலே செருகும் இளம்பெண்களே,
செம்பொன் கபாடம் (கதவை) திறவுங்கள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Preethika Chandrakumar Sat Jun 20, 2015 6:49 pm

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 103459460 சூப்பருங்க
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Sat Jun 20, 2015 6:49 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !
[You must be registered and logged in to see this link.]

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே .

சிவகாமியின் சபதமோ ?
சிவகாமி -மகேந்திரபல்லவன் சம்பந்தப்பட்டதோ .
சிவகாமியின் சபதம் படித்ததில்லை .
காதில் விழுந்த சங்கதி என நினைவு கூறுகிறது .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
-=============
சிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமி
தன் கனவுகள் சிதைந்த பிறகு, ஏகாம்பரநாதரையே
தன் பதியாக ஏற்றுக் கொண்டு, அவர் சந்நிதியில்
ஆடுகிறாள்....
-
அப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை.
அவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும்
ஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும்
அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை;

வேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை.
மாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம்
தாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன
அபிநயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி
போலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி
என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும்
அவருக்கு நினைவு வந்தன.

சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய
சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார்.

அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச்
சென்று கொண்டிருந்த போது,

"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின்
உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by சரவணன் Sat Jun 20, 2015 6:58 pm

அருமை அருமை அய்யா.. நல்ல விளக்கம் தொடருங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Sat Jun 20, 2015 7:09 pm


[You must be registered and logged in to see this image.]
---
டல்லாஸ் :
அமரர் கல்வியின் படைப்புகளில் ஒன்றான சிவகாமியின்
சபதம் காவியத்தை, நாட்டிய நாடகமாக மதுரை
R முரளிதரன் உலகெங்கும் நடத்தி வருகிறார்.

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் மற்றும்
சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம் சார்பில், டல்லாஸிலும்,
சான் அன்டோனியோ நகரிலும் நடைபெற்றது

-
---------------
தமிழ் ஒன் இந்தியா - செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 7:23 pm

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 103459460


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sun Jun 21, 2015 9:46 pm

அய்யாசாமி ராம் அவர்களின் விடைக்கு நன்றி !

மேலும் சில தகவல்கள் .

இறைவனைத் தலைவனாகவும் ,தன்னைத் தலைவனாகவும் கொண்டு பாடும் அகத்துறைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உள்ளன . இதனை நாயகன் நாயகி பாவம் என்பார்கள் .
அந்த வகையில் அமைந்த இப்பாடல் அப்பரடிகளால் பாடப்பெற்றது . அப்பர் தேவாரத்தில் திருவாரூர் திருத் தாண்டகத்தில்  இப்பாடல் உள்ளது .  இப்பாடலைத்தான் கல்கி அவர்கள் தன்னுடைய சிவகாமியின் சபதம் சரித்திர நாவலில்  மிக அழகாகக் கையாண்டுள்ளார் . அதைத்தான் திரு ஐயாசாமி ராம் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ளார்கள் .

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே



முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் = முதலில் அவளுடைய பெயரைக் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  = அவனுடைய குணநலன்களை கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்  = அவன் இருக்கும் இடத்தை கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்  = அவன் மேல் பைத்தியமாக ஆனாள் (பிச்சி = பைத்தியம்)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்  = அம்மாவையும்
அப்பாவையும் விட்டு விலகினாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை = பழக்க வழக்கங்களை மறந்தாள்

தன்னை மறந்தாள் = தன்னையே மறந்தாள்

தன் நாமம் கெட்டாள்  = தன் பெயரையும் மறந்தாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே = அவன் பாதங்களை சரணம் அடைந்தாள்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Sun Jun 21, 2015 9:52 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum