ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!

Go down

ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Empty ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!

Post by கண்ணன்3536 Wed Aug 17, 2011 8:21 am


Viruvirupu, Wednesday 17 August 2011, 01:30 GMT


கோவை, இந்தியா: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுபற்றி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுவே, நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் ஒரு பகுதியினர் நேற்று (செவ்வாய் கிழமை), கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் தி.க. பொதுச்செயலர் கே.ராமகிருஷ்ணன், “சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மதுரையிலும், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் தமிழ் ஈழ ஆதரவு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

கருணை மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், இம் மூவரையும் வேலூர் சிறையில் சென்று சந்தித்திருந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவர்களைச் சந்தித்தபின் கருத்து தெரிவித்த அவர், “ராஜிவ் கொலை வழக்கில், முதலில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சித்தரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் அடிப்படையில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

அந்த எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு , 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் முறையீடு செய்ததில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். தற்போது இந்த கருணை மனுக்களைதான் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். மத்திய அரசு நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.

தமிழகத்தில், 13 ஆண்டுகள் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மூவரின் உயிர்களையும் காப்பாற்ற முன் வருவார் என நம்புகின்றேன். இம்மூவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். வேலூர் மத்திய ஆண்கள் சிறை வாசலில் இருந்தவாறு இம்மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றும்படி தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியிருந்தார்.

இப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய தினசரி செய்திப் பத்திரிகை ஒன்று, இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட தமிழ் பத்திரிகையை வெளியிடும் குழுமம், அவர்கள் வெளியிடும் சகல பிரின்டட் மீடியா பிரசுரங்களிலும், சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவரும் ராஜிவ் காந்தியைக் கொலை செய்த கொலையாளிகள் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நிஜத்தில், இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது, அவர்கள் ராஜிவ் காந்தி வழக்கில் ‘கொலையாளிகள்’ என்ற அடிப்படையில் அல்ல. அந்தக் கொலைக்கான திட்டமிடலுக்கு உதவி செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது!

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போதுள்ள ஒரு தலைமுறையே, இந்தக் கொலை நடைபெற்ற காலகட்டத்துக்குப் பின்னர் பிறந்துள்ளது. அவர்கள், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்தே, இந்தக் கொலை வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் நிலை.

இப்படியான நிலையில்தான், குறிப்பிட்ட தமிழ் தினசரி பத்திரிகை, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்தான் ‘கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு வருகின்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கை, தமிழகத்தில் தற்போதுள்ள இளை தலைமுறையினருக்கு இந்த மூவரையும் பற்றிய தவறான இமேஜ் ஒன்றை ஏற்படுத்தும் பிரசார முயற்சி என்றே ஊகிக்கலாம்.

உண்மையில் ராஜிவ் காந்தி கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, யார்யார் தொடர்புடையவர்கள் என்ற விபரங்களை, விறுவிறுப்பு.காமில், ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை என்ற தொடரில் விளக்கமாகக் கொடுத்து வருகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் சிறிதாகக் கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் மற்றைய பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Empty Re: ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!

Post by கண்ணன்3536 Wed Aug 17, 2011 8:32 am

விழிப்புத்தான் வெற்றிக்கு முதல் படி .இங்கே பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோர் எந்தக்குற்றமும் அறிந்து செய்யவில்லை .சொல்லப்போனால் அவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதே உண்மை.ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் வீரச்சாவடைந்துவிட்டனர்.பொய்யான வழக்குகளை கார்த்திகேயன் புனைந்து (இவர் தான் தலைமைவிசாரணையாளர்)தேவையற்றோருக்கு தண்டனை வாங்கிகொடுத்துள்ளார்.அவருக்கு காங்கிரசு அரசு பத்ம விருது கொடுத்ததாக நினைவு.அவர மூன்றாம் நபர் போல் செயல்பட்டு நீதிக்கு சாவுமணி அடித்துள்ளார்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum