ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1

Go down

மருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Empty மருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1

Post by spselvam Tue Aug 16, 2011 10:41 pm

நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் - பகுதி 1

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தலைசிறந்த நரம்பியல் நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் நீங்கள். அந்த அடிப்படையில், பொதுவாகப் பார்த்தால் எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் பார்த்தது, விஞ்ஞான ரீதியிலான அலோபதி மருத்துவத்தில் ஈடுபடக்கூடியவர்கள் பொதுவாக, ஆன்மிகம் அல்லது யோகம் அல்லது இறை சக்தி போன்றவற்றை முழுமையாக நம்பாதவர்களாக, முழுமையாக அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளால்தான் மனிதனைக் குணப்படுத்த முடியும் என்கின்ற எண்ணத்தில்தான் பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசமாக நீங்கள், இறை சக்தியும் மருத்துவத்தின் ஒரு அங்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு போயிருக்கிறீர்கள் என்றால், அடிப்படையில் எது உங்களை அந்த மாதிரி சிந்திக்கத் தோன்றியது. ஏனென்றால், நீங்களும் அறிவியல் பூர்வமான கல்வி கற்று, அதன் அடிப்படையில் பட்டம் பெற்று, பிறகு அதையே மருத்துவத் துறையில் பயன்படுத்தி புகழ்பெற்று வந்துள்ள நிலையில், அதையும் இதோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?
நர‌ம்‌பிய‌ல் ‌நிபுண‌ர் ‌சீ‌னிவாச‌ன்: இது ஒரு முக்கியமான கேள்வி. விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேருமா சேராதா? அல்லது விஞ்ஞானம் முடிந்தால் மெய்ஞானம்தான் என்று சொல்வார்கள். Philosophy Starts when Science Ends என்று சொல்வார்கள். ஆனால், என்னுடைய கருத்து, Philosophy Starts not when Science End. Science Blend with Philosophy என்பதே. நரம்பியல் தந்தை என்று சொன்னால் நாதன் ஹென்மேன், ஷெரிங்டன் அவருடைய முக்கியமான சீடர்கள் எல்லாருமே முதலில், மனமும் மூளையும் ஒரே ஆர்கன் என்று நினைத்து, கடைசியில் இரண்டுபட்டது என்ற முடிவிற்கு வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், மனம் என்பது மனிதனை இயக்குகின்ற ஒரு முக்கியமான கருவி. இந்த மனம் மூளையை இயக்குமேயொழிய, மூளையினால் மனதை இயக்க முடியாது. இதை விஞ்ஞானப் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால், Mind is the Function of the Brain. மைண்டுக்கு மூளையில் ஒரு வடிவம் (Structure) கிடையாது.

அப்படியென்றால் மனம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி எழுகிறது. மனம் என்றால் ஒரு சிலந்திக் கூடு போன்றது. நான் என்கின்ற எண்ணம்தான் முதல் இழை. அந்த இழைகளால் பின்னப்பட்ட சிலந்திக் கூடுதான் மனம். அந்த மனம் பல்வேறுபட்ட வகைகளில் உள்ளது. விஞ்ஞானம் இந்த மனதை என்னவென்று சொல்கிறதென்றால், அணுவைப் பிரித்து அணுவிற்குள் இருக்கும் அணுவிற்குள் போகும் அளவிற்கெல்லாம் விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது, பெளதீகத்திலும், இரசாயனத்திலும். அந்தத் தன்மையில், மேக்ராஸ்கோபிக்காக பார்க்கும் போது விஞ்ஞானம் உண்மை என்பது மாதிரி இருக்கும். மைக்ராஸ்கோபிக்கில் பார்க்கும் சமயத்தில், குவாண்ட்டம் பிசிக்ஸ் என்று வந்தால் எல்லாமே கெஸ்தான். நாம் எப்படி நினைக்கிறோமே அதைத்தான் ரிசல்ட்டாக எடுத்துக் கொள்கிறோம்.

ஏனென்றால், நாம் உணருகின்ற தன்மை. இந்த மாதிரி சமயத்தில் மருத்துவர்களுக்குதான் முக்கியமாக அவர்கள் செயலாற்றுகிற திறன், அந்த செயலாற்றுகின்ற திறனில் எவ்வளவு தூரம் இயற்கை விளையாடுகிறது என்று அவர்கள்தான் அனுபவப்பூர்வமாக அறிய முடியும். ஏனென்றால், ஒரு சில நோயாளிகள் கண்டிப்பாக வீடு சென்று சேருவார்கள் என்று நினைக்கிறோம்.
ஆனால், இறந்துவிடுகிறார்கள். ஒரு சில நோயாளிகள் உயிர் பிழைக்க வைக்க முடியாது என்று நினைக்கிறோம், அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். இதில் மருந்தைத் தவிர, வேறு ஒரு சக்தி நிச்சயமாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சொல்கிறார்கள்.

தற்பொழுது புதிதாக விஞ்ஞானத்தில் கார்ட்ஸ் பார்டிகிள் (Gods Particle) என்று சொல்கிறோம். இந்த கார்ட்‌ஸ் பார்டிகிள் கண்ணுக்குத் தெரியாது. அது மனிதனுடைய உடலிற்குள் நுழைந்து அதனுடைய எடையிலேயோ அதனுடைய பரிணாமத்திலோ வளர்ச்சி அடையாமல், ஆனால், உள் இருக்கும் ஆர்கனில் ரியாக்சன் செய்கிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. இந்த கார்ட்ஸ் பார்டிகிள் உள்ளே இருந்து வெளியே போய்விட்டால், அந்த கார்ட்ஸ் பார்டிகிள் can change human body என்று சொல்கிறார்கள். இப்படி விஞ்ஞானத்திற்கே எட்ட முடியாத ஒரு உண்மையானக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். நான் அந்தக் காலத்திலேயே சொல்வேன், எப்படி உடலிற்கு உடற்பயிற்சியோ, அதுபோல மனதிற்கு யோகமே முயற்சி என்று எழுதினேன். அந்த வழியில் வரும்போது, யோகம் என்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் மனம் தறிகெட்டுப் போகும்.

நம்முடைய சாதாரண வாழ்க்கையிலேயே நான் என்கின்ற எண்ணம்தான் மனிதனை உந்துவிக்கிறது. இதையே அறிவியலில் அவேர்னஸ் என்று சொல்கிறோம். மற்றும் கான்ஷியஸ்னஸ். இது இரண்டு சேர்ந்ததுதான். இதை விஞ்ஞானப்பூர்வமாக அறிய முடியுமா என்று நினைத்துப் பார்க்கும் சமயத்தில்தான், ஒரு கட்டுரை இருக்கிறது, எங்களுடைய இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜியில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பு வந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். நான் பார்த்ததில்லை. அவர் நரம்பியல் தந்தை பி.ராமமூர்த்தி. யோகாசனம் (Meditation) பண்ணினால் மனிதன் தன்னிச்சை தலம் (ஆர்ட்மாமிக் நர்வஸ் சிஸ்டத்தை) கையில் கொண்டு வந்து காண்பித்ததாக எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். அந்த மாதிரி யாராவது செய்கிறார்களா என்று யோசித்துப் பார்க்கும் வேளையில், நான் Guide ஆக இருக்கும் சமயத்தில் எனக்கு கீழே ஒருத்தர், மூளையினுடைய பின் பகுதியில் ஆல்ஃபா என்ற அதிர்வலை (வேவ்ஸ்) இருக்கிறது. அந்த வேவ்ஸை மெடிட்டேஷ‌னி‌ல் கொண்டு வரலாம் என்று பி.ஹெச்டி. செய்து, தற்போது பெரிய நரம்பியல் பேராசிரியராக சர்மா என்பவர் சென்னையில் இருக்கிறார்.

முக்கியமாக, மனதைப் பற்றி ஆராய மூலகாரணம் என்னுடைய மகன். அவனுடைய மூளை பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் சமயத்தில், நம்மை மீறிய சக்தி ஒன்று, அதனை நீங்கள் கடவுள் என்று சொல்லலாம், இயற்கை என்று சொல்லலாம், ஒளி வடிவமாகச் சொல்லலாம், ஒலி வடிவமாகச் சொல்லலாம் அல்லது வெற்று, வெற்றிடம் என்று கூட சொல்லலாம். எப்படிச் சொன்னாலும், பலவிதமான ஆறுகள் சமுத்திரத்தில் சென்று சேர்வது போல எல்லாமே அந்த உண்மையான கான்ஷியஸ்னஸ் என்ற பகுதிகளில் போய்ச் சேரும். இந்த கான்ஷியஸ்னஸ் போகும் விதத்தைத்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகியிருக்கிறார்கள்.
நன்றி:தமிழ் webdunia


இனியொரு விதி செய்வோம்
மருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Sமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Emptyமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Pமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Emptyமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Sமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Eமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Lமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Vமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 Aமருத்துவத்தில் இறை சக்தி நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் – பகுதி 1 M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum