புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10மனதை வெல்லும் மந்திரம்! Poll_m10மனதை வெல்லும் மந்திரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை வெல்லும் மந்திரம்!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 1:16 pm

நம்மில் பலருக்குப் பிரச்சினையாக இருப்பது, வெளிப்புறச் சூழ்நிலையோ, பொருளாதார நிலையோ அல்ல. மனம்தான். மனம் நிறைவுறாதபோது, அதை நல்ல வழியில் செலுத்தமுடியாதபோது, எவ்வளவு செல்வம் இருந்தும், வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடிவதில்லை.

உறக்கத்தில் சிந்தனையில்லை. உயர்வு, தாழ்வு, பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை, அறிவாளி, முட்டாள், நல்லவர், கெட்டவர், படித்தவர், படிக்காதவர் என்று ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், பிறரை அடையாளம் காணுவதும் விழிப்பு நிலையில்தான். உறக்கத்தின்போது மனதின் செயல்பாடு வெகுவாகக் குறைந்து விடுவதால் அமைதி ஏற்படுகின்றது. இமைக் கதவுகள் மூடிக் கொள்கின்றன. கண் விழித்தவுடன் மீண்டும் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.

அவரவரின் மனதுதான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனதை அடக்கியாளத் தெரிந்து கொள்வதே மிகவும் முக்கியமான ஒன்று. இதை அனைவரும் அறிந்து இருந்தாலும் மனதை நெறிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. மனதை அடக்கியாளும் மந்திரம் தெரியாமல்தான் பலர் கடல் அலைகளில் துரும்பைப் போலத் தவிக்கிறார்கள்.

அரசனாக இருந்த ஒருவர் தனது அரண்மனை, உற்றார், உறவினர் ஆகிய அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு காட்டுக்குச் சென்று தியானம் செய்யத் தொடங்கினார். நாளடைவில் ஞானியாக மாறி அறவாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதேசமயம் அந்தப் பகுதியில் மற்றொரு நாட்டின் அரசன் பல நாடு, நகரங்களைப் போரில் வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செலுத்தி வந்தான். அவனுக்குக் காட்டில் ஞானியாகத் தவம் செய்பவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை எழுந்தது. சொத்து, அரசாட்சி போன்ற எதுவும் இல்லாத ஒரு ஞானியை வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் அரசருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகின்றது என்று மக்கள் பேசத் தொடங்கினர்.

காட்டில் ஞானியின் தவத்தை கலைக்க அரசன் மேற்கொண்ட முயற்சிகள் எந்தவிதப் பயனையும் அளிக்கவில்லை.

"என்னுடன் போருக்கு வா! ஏன் நாடு, நகரத்தையும், உற்றார், உறவினரையும் உதறித் தள்ளிவிட்டு காட்டில் அடைக்கலம் புகுந்துள்ளாய்?'' என்று தொடங்கினான் அரசன்.

ஞானி அமைதியாகச் சூழ்நிலையை ஆராய்ந்து கருத்தில் கொண்டு அரசனைப் பார்த்து, தன்னுடைய எதிரியை வெல்ல முடியாத காரணத்தால்தான் அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்ததாகக் கூறினார்.

"உனது எதிரி என்னைவிட வலிமையானவனா?'' என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினான் அரசன்.

"ஆமாம்!'' என்று அமைதியாகக் கூறினார் ஞானி.

உடனே அரசன், அந்த எதிரி யார் என்று கூறினால் அவனைத் தன்னால் வெல்லமுடியும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறினான்.

"மனதுதான் நான் கூறும் எதிரி. அதை வெல்ல முடியாமல்தான் நான் தியானம் மேற்கொண்டுள்ளேன்'' என்றார் ஞானி.

உடனே அரசன் தனது மனதை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டான். ஒவ்வொரு முயற்சியின்போதும் மிஞ்சியது தோல்விதான். அரசன் தனக்குத் தெரிந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி மனதை அடக்கி ஆள்வதற்கு முயன்றும் தோல்வியே மிஞ்சியது. தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைதான் அரசனுக்கு ஏற்பட்டது.

காட்டுக்கு வந்த ஞானியும், நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் மனம் அவரவருடனே பயணம் செய்கிறது என்பதை உணர்ந்தார். மனதைத் தனியாகக் கழட்டி வைக்க முடியாது. மனது ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ளும் சுபாவம் கொண்டது என்பதை உணர்ந்தார். மனதைக் கொண்டுதான் மனதைத் தாண்டவேண்டும் என்று உணர்ந்து, நல்ல பழக்கங்களை மனதுக்கு அறிமுகப்படுத்திப் பின்னர் படிப்படியாக மனதை நெறிப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம் கண்டார்.


அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் எதிர்கொள்வது மனதில் ஏற்படும் போராட்டத்தையே ஆகும். தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படுவது, நடுநிலையுடன் முடிவெடுப்பது என்று அவரவரின் மனப்பாங்கின் அடிப்படையிலேயே முயற்சிகளும், செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் பிரார்த்தனை என்பதுகூட மனதில் நினைப்பதை அடைவதற்கான சடங்காகத்தான் உள்ளது.

ஒரு கப்பலில் பல பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஒரு வியாபாரியும் அக்கப்பலில் பயணம் செய்தார். ஒரு துறவியும் அதில் பயணம் செய்தார். திடீரென்று புயல் வீசத் தொடங்கியது. உடனே வியாபாரி தான் சேர்த்து வைத்த செல்வத்தை வீடு கொண்டு போய் அனுபவிக்க முடியாதே என்று மனம் வருந்தினார். ஆகவே கடவுளை நோக்கி, புயலின் சீற்றம் குறைந்து கப்பல் கரையைச் சென்றடைந்ததால் தன்னுடைய சொந்த மாளிகையைக் காணிக்கையாகத் தருவதாக வேண்டினார்.

ஆனால், அவர் அருகில் பயணம் செய்த துறவி மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளவே இல்லை. விளைவு எவ்வாறு இருந்தாலும் அதற்கு எப்படி தயாராவது என்பதிலேயே அவரது முழுக் கவனமும் இருந்தது. திடீரென்று புயல் வீசுவது நின்று கடல் அமைதியானது. அனைவரும் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். உடனே வியாபாரி மனதில் கவலை தோன்றியது. துறவியைப் போல எதுவும் வேண்டாமல் இருந்திருந்தால் மாளிகையைத் தானமாக அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்று வருந்தினார்.

வியாபாரியின் மனதில் ஒரு யோசனை எழுந்தது. தனது மாளிகையையும், அதனுடன் சேர்ந்து ஒரு பூனைக் குட்டியையும் ஏலம் விடப் போவதாக அறிவித்தார். மாளிகையின் விலை ஒரு பொற்காசு என்றும், பூனையின் விலை ஒரு லட்சம் பொற்காசுகள் என்றும் கூறினார். புதிராக இருந்தாலும், அதற்கு ஒப்புக்கொண்டு ஒருவர் மாளிகையையும், பூனைக்குட்டியையும் வாங்கிக் கொண்டார். இப்போது மாளிகையை விற்ற ஒரு பொற்காசை உண்டியலில் போட்டுவிட்டு, பூனையை விற்ற ஒரு லட்சம் பொற்காசுகளைத் தான் எடுத்துக்கொள்ள முடியும் என்று மகிழ்ச்சியடைந்தார் வியாபாரி.


இதுதான் மனம் ஒரு குரங்கு என்பதற்கு அடையாளம். அதைத் தாவ விடவும் கூடாது, தப்பி ஓட விடவும் கூடாது. மனதை நெறிப்படுத்தி, பயனுள்ள கருவியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

இளம் வயதில் எதைப் பார்த்தாலும் அதை அடைய வேண்டும் என்று மனம் அலைபாய்கிறது. ஆனால் நல்ல பழக்கவழக்கங்களை மனதில் நங்கூரமாய் நிலைப்படுத்திக்கொள்ளும்போது மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆகவே மனதை அடக்கி ஆளாமல், நெறிப்படுத்திக் கருவியாக பயன்படுத்த இளைஞர்கள் பழகிக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி:- சுரேஷ்குமார்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதை வெல்லும் மந்திரம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 1:31 pm

இளம் வயதில் எதைப் பார்த்தாலும் அதை அடைய வேண்டும் என்று மனம் அலைபாய்கிறது. ஆனால் நல்ல பழக்கவழக்கங்களை மனதில் நங்கூரமாய் நிலைப்படுத்திக்கொள்ளும்போது மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆகவே மனதை அடக்கி ஆளாமல், நெறிப்படுத்திக் கருவியாக பயன்படுத்த இளைஞர்கள் பழகிக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.



மனதை அடக்கியாளும் மந்திரம் தெரியாமல்தான் பலர் கடல் அலைகளில் துரும்பைப் போலத் தவிக்கிறார்கள்.

உண்மைதான் நண்பரே.

வாழ்வில் நிலையானது, உண்மையானது எது வென்று புரியாத வரைக்கும், இந்த உடலானது மனம் என்னும் கடலில் தத்தளிக்கும் படகு போல் அதன் திசைகளுக்கெல்லாம் போகும்.

புரிந்து விட்டால் மனதில் சீற்றம் என்பதே இல்லாமல் உடலும் ஒரே சீராக இயங்கும்.

நல்ல நல்ல பதிவுகளை தரத் தொடங்கியுள்ளீர்கள்.உங்களின் முயற்சிக்கும் பதிவிற்கும் வாழ்த்துகள், நன்றிகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதை வெல்லும் மந்திரம்! Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 1:41 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதை வெல்லும் மந்திரம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக