ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை மருத்துவம்

5 posters

Go down

இயற்கை மருத்துவம் Empty இயற்கை மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 12:08 pm

நோய் ஒன்றே அதற்கு சிகிச்சை முறையும் ஒன்றே என்பது இயற்கை மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகம்.

சிகிச்சை முறைகள்:

ஆகாய சிகிச்சை - உண்ணா நோன்பு
காற்று சிகிச்சை - முறையான மூச்சுப் பயிற்சிகள்
வெப்ப சிகிச்சை - சூரிய நமஸ்காரம், மந்திரங்கள்
நீர் சிகிச்சை - குளியல்கள்
மண் சிகிச்சை - மண்கு குளியல், பட்டி, புதையல் மற்றும் பற்று


ஆறு கிரியைகள், கபாலபதி, த்ராடகம், நேர்த்தி, தெளத்தி, நெளலி, பஸ்தி.

மேற்கூறிய சகிச்சை முறைகளில் இயற்கை மருத்துவம் செய்யப்படுகிறது. யோகாசனங்களின் சிறப்பையும் தனதாக்கிக் ொள்கிறது, யோகாசனங்களில் உடல் நிலை, மூச்சு நிலை, மனநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

எளிமையானதும், பக்கவிளைவுகள் இல்லாமலும், ஏன் மருந்தே இல்லாமலும் முழுமையானதுமான, தெய்விகமான மருத்துவம் இயற்கை மருத்துவமாகும். இதில் உணவே மருந்து, மருந்தே உணவாகும். தடையே சாதனையாவதுபோல நோயே உடலைச் சுத்தி செய்யும் வழியாகக் கொள்கிறது. இச்சிறப்புகளால் ஒவ்வொருவரும் தனக்குத் தானே மருத்துவர். இயற்கையே - பஞ்ச பூதங்களே, மூன்று தோசங்ககளே, மூன்று குணங்களே, அறுசுவைகளே மருத்துவ முறைகளாகி, இவற்றைச் சமன்செய்து இணக்கம் காண்பதே எளிய, ஒப்பற்ற, சிறந்த, முழுமையான மருத்துவ முறையாகும்.

இயற்கை மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சைகள்:

வாழை இலை குளியல், மண் குளியல், சூரிய குளியல், நீர் சிகிச்சை முதலியவை இயற்கை மருத்துவத்தின் சில சிற்புக் கூறுகளாகும்.

(அ) வாழை இலை குளியல்:

இதய நோயாளிகளும், தலைவலி இருப்பவர்களும் இதனை செய்யக் கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் விரும்பினால் செய்யலாம். மற்றவர்கள் 1/2 மணி நேரம் செய்தால் போதும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பவரிகள் மாதம் ஒரு முறை செய்தால் நன்று. தோல் நோய் உடையவர்களும், உடலுழைப்பு குறைந்தவர்களும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வாழை இலை குளியல் செய்யலாம்.

செய்முறை:

இதனை காலை 10 மணிக்கு மேல் மாலை 3.00 மணிக்குள் செய்வது நலம். உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் செய்யத் தொட்ஙகவும். வயிறு காலியாக இருப்பது முக்கியம்.

வாழை இலை குளியல் செய்து கொள்பவர் முதலில் ஈரத் துணியால் தலையில் தொப்பிப் போல் அணிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீர் குடிக்கவும். பின் விரிக்கப்பட்டுள்ள வாழை இலை படுக்கையில் திறந்த வெளியில் வெய்யிலில் படுத்துக் கொண்டு உடலை வாழையிலையால் போர்த்தி இலேசாகக் கட்டி விட வேண்டும். இதற்கு மற்றொருவர் துணை வேண்டும். மூக்கிற்கு மேலே சுவாசிப்பதற்கு இலேசாக வாழையிலையில் கீறிவிட வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து கட்டை அவிழ்த்துப் பார்த்தால் நிறைய வியர்வை வடிந்து இருப்பதைக் காணலாம். இந்த இலையை மாடு சாப்பிடாமல் தூர எறிந்து விட வேண்டும். ஏனெனில், நம் வியர்வையால் வந்த நஞ்சு கால்நடைக்குத் தீங்கு விளைவிக்கும்.

நம் உடலின் சூடு சாதார ண நிலைக்கு வந்த பின் தண்ணீரில் குளித்து விடலாம். இப்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

(ஆ) மண் குளியல்:


இதனையும் காலை 10 மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் செய்வது நல்லது. வயிறு காலியாக இருப்பது முக்கியம். தண்ணீர் எவ்வளபு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பூமியிலிருந்து ஓர் அடிக்குக் கீழ் உள்ள மண்ணை யே பயன்படுத்த வேண்டும். கிளிஞ்சள், கறி, சுண்ணாம்பு சத்து உள்ள மண் பயன்படுத்த வேண்டாம். நிலத்தில் செயற்கை உரம் போடப்படுவதால் வயல்களிலுள்ள மண்ணையும் பயன்படுத்தாதீர். புற்று மண்ணையும் பூமிக்கு கீழிருந்து எடுத்த மண்ணையும் கலந்து நீரில் குழப்பி தலை முதல் பாதம் வரை பூசிக்கொள்ள வேண்டும். வெய்யிலில் மண் நன்றாக காய்ந்த பின் மண்ணை ஓரளவிற்கு துடைத்துக் கொண்டு நிழலுக்கு வந்து உடல் சாதாரண நிலைக்கு வந்த பின் குளித்து விட வேண்டும்.

இது தோல் நோய், அசுத்த இரத்தம், புலால் மற்றும் முதலியவற்றிற்கு நல்லது. இவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். மற்றவர்கள் மாதம் ஒரு முறை மண் குளியல் எடுப்பது நலம்.

மண் குளியல், வாழை இலைக் குளியல் இரண்டையும் ஒரே நாளில் செய்யக் கூடாது. மாற்றி மாற்றி செய்யலாம்.

(இ) சூரியக் குளியல்:

மாலை 3 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வெயிலில் சட்டை இல்லாமல் இருப்பது குளியலாகும். காலை வெயிலில் பித்தம் இருப்பதால் காலை வெய்யில் கூடாது. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை வாழை இலை குளியல், மண் குளியல் செய்பவர்கள் தவிர மற்றவர்கள் வெயிலில் உலாவக் கூடாது.

ஏனெனில், அப்போது காயும் வெயில் உடலில் புற்று நோயை உண்டாக்கும். சூரிய ஒளியில் விட்டமின் 'டி' இருக்கிறது. இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே.

(ஈ) நீர் சிகிச்சை:

மாலை வெயில், அருவி நீர் இளமையைக் கொடுக்கும் என்பது பழமொழி.

இடுப்புக்குளியல், முதுக தண்டு குளியல் போன்றவை செய்வதற்கென்றே குளியல் தொட்டிகள் உண்டு. அவற்றைக் கொண்டு இக்குளியலைச் செய்யலாம். நீர் சிகிச்சை தொடங்கும் முன்பு தலையில் துணியை நனைத்து கட்டிக் கொள்ள வேண்டும். நீர் அருந்த வேண்டும். சாப்பிட உணவு சீரணமாகி இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நீர் சிகிச்சை செய்யலாம்.

இயற்கை உணவுகள்:

மூலிகைச் சாறு:

காலையிலும், மாலையிலும் மூலிகைச்சாறு சாப்பிடலாம், மாதம் ஒரு நாள் சாறு சிகிச்சை அனைவரும் மேற்கொள்ளலாம், அதாலது அன்று காலை முத்ல இரவு வரையில் சாறுகளை மட்டுமே குடித்து வேறு எந்த உணவையும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்.

இதற்கு மணித் தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கேரட் கீர், வாழைத் தண்டு, இளநீர், கலியாண முருங்கை, அரசனிலை கொழுந்து, அருகன்புல், கறிவேபிபிலை, தக்காளி, பூசணி போன்றவற்றை ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தலாம்.

தக்காளியை முடிந்தால் விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். சிறுநீரகக் கோளாறு, தோல், ஆஸ்துமா நோயாளிகள் முழு இயற்கை உணவில் இருந்தால் இவற்றைப் பயன்படுத்தலாம். சமைத்த உணவு சாப்பிடுபவர்கள் இதனை நீக்கவும்.

முளைகட்டிய தானியங்கள்:

பழங்களை அப்படியே சாப்படுவது நல்லது. முடியாதவர்கள் பழச்சாறு குடிக்கலாம். எதனைச் சாப்பிட்டாலும் பல்லைச் சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில் பழங்களிலுள்ள அமிலத்தன்மை பற்களுக்கு வேதம் விளைவிக்கும்.

வெங்காயம், பீட்ரூட், கேரட், வெள்ளரி, தக்காளி, வெண்டை, கோஸ், தேங்காய் துருவல், புடலங்காய், பூசணி, கோவைக்காய் முதலியவற்றை சாலட் ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவல்:

இயற்கை உணவு சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவல் சாப்பிடலாம். முதலில் இயற்கை உணவு சாப்பிட்டு விட்டு கடைசியாக அவல் சாப்பிட வேண்டும்.

சமைத்த உணவுகள்:

இயற்கை உணவே இயற்கை நமக்களித்தது. நாவை அடக்க முடியாதவர்கள் எண்ணெய், உப்பு, மிளகாய், புளி சேர்க்காமல் கீழ்க்கண்ட உணவுகளைக் குறைவாகச் சாப்பிடலாம்.

கீரை, கீரை சூப், காய்கறி சூப், துவரம் பருப்பு தோல் சூப், இயற்கை காபி, தாமரைப் பூ, ரோஜாப் பூ, ஆவாரம் பூ கலந்த இயற்கை டீ இவற்ைற்ப் பருகலாம்.

பால்:

பால் சாப்பிடக் கூடாது. எனினும் வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் இவர்கள் வேறு உணவை ஏற்றுக் கொள்ள முடியாத உடல் நிலையில் இருந்தால் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் கலந்த பால் தரலாம். ஆனால், பாலைக் கொடுக்கின்ற ஆடு, பசு இயற்கை உணவை உண்பவையாகவும், அவற்றிற்கு யாதொரு நோய் இல்லாமலும் ஊசி போட்ட பாலாக இல்லாமலும் இருக்க வேண்டும். கோதுமை, தேங்காய், சோயா, பச்சைப் பயறு பால் நல்லது. அன்பு மலர் அன்பு மலர்

நன்றி:- ICRO


ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by kitcha Tue Aug 16, 2011 12:13 pm

பயனுள்ள தகவல்.அருமையான கட்டுரை.
அணைத்து விதமான கட்டுரைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளீர்கள்.

தேடல் தொடர வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இயற்கை மருத்துவம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by realvampire Tue Aug 16, 2011 12:17 pm

நல்ல தகவலுக்கு நன்றி..
இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 12:19 pm

kitcha wrote:பயனுள்ள தகவல்.அருமையான கட்டுரை.
அணைத்து விதமான கட்டுரைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளீர்கள்.

தேடல் தொடர வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

சித்தன் போக்கு அப்படிதான் என்னசெய்யறது இருந்தாலும் உங்களுக்காக தேடுகிறேன் சூப்பருங்க அருமையிருக்கு :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 12:20 pm

realvampire wrote:நல்ல தகவலுக்கு நன்றி..
இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944

நன்றி சக்தி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by SK Tue Aug 16, 2011 12:50 pm

பயனுள்ள தகவல்கள் பாலா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by தாமு Tue Aug 16, 2011 3:40 pm

சூப்பருங்க நல்ல தகவலுக்கு நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 4:13 pm

நன்றி எஸ்‌கே மற்றும் தாமு அண்ணாவுக்கு :வணக்கம்: நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயற்கை மருத்துவம் Empty Re: இயற்கை மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum