ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை

Go down

கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை Empty கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை

Post by கோவைசிவா Fri Sep 18, 2009 5:39 pm

கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை Tblfpnnews_91483271122

கோவை : கோவையில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதாக அரசு அறிவித்திருப்பது, கொங்கு மண்டல மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு, வருகிற ஜனவரி, பிப்ரவரியில் கோவையில் நடக்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி அறிவித்த அறிவிப்பு, தமிழறிஞர்களை மட்டுமின்றி, கொங்கு மண்டல மக்களையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.


தமிழ் ஆர்வலர்களாலும், தமிழறிஞர்களாலும் "முத்தமிழ் அறிஞர்' என்று அழைக்கப்படும் கருணாநிதி, முதல்வராக இருக்கும் போது நடத்தப்படும் முதல் உலகத் தமிழ் மாநாடு என்பதில் தி.மு.க.,வினரும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழுக்கே மரியாதை அளிக்கும் கொங்கு மண்டல மண்ணில் இதுவரை தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதில்லை. சர்வதேச அளவில் பஞ்சாலை நகராகவும், தொழில் நகரமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள கோவை மாநகரத்துக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பின்னிப் பிணைந்த தொடர்பு உண்டு. தமிழ்க் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் என்றென்றைக்கும் அங்கீகரிக்கிற பூமியாக கோவை திகழ்ந்துள்ளது. தொழில் மேம்பாடு, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் அசுர வளர்ச்சி, வெளிமாநிலத்தவரின் குடியேற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு என சில பல காரணங்களால், சமீபகாலமாக கோவையில் தமிழுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதே உண்மை.


இந்த சூழ்நிலையில், கோவை நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது, இங்குள்ள இளைய தலைமுறையிடத்தில் தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் பண்பாட்டையும் வேரூன்றச் செய்யும் என்று தமிழ் ஆர்வலர்கள் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி, இந்த மாநாடு காரணமாக கோவை நகருக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் நன்மை. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்கங்களின் தலைவர்கள், மொழி வல்லுனர்கள் கோவைக்கு வருகை தருவர். கவியரங்கம், இயல், இசை, நாடகம், திரைத்துறை நிகழ்ச்சிகள், தமிழ் மொழி ஆய்வு அரங்கங்கள் என ஊரே பல நாட்களுக்கு விழாக்கோலம் பூண்டிருக்கும்.


மாநாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பல இடங்களில் புதிதாக சாலை, பாலங்கள், விடுதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கோவை நகருக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் பலரும் பல நாட்களுக்கு இங்கேயே முகாமிடுவர். அப்போது, கோவையில் பல்வேறு பிரச்னைகளும் அவர்களுக்கு தெரியவரும். நீண்ட காலமாக உள்ள பல பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மாநாடுக்கான அறிவிப்பு வந்து விட்டாலும், நடத்த வேண்டிய நிகழ்ச்சிகள், அதற்கான இடங்கள், தீர்மானங்கள் போன்றவை குறித்து முடிவெடுக்க சிறப்புக்குழு விரைவில் அமைக்கப்படும். செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த் துறை, தமிழ் வளர்ச்சித் துறை என பல்வேறு துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இதில் இடம் பெறுவர். கோவைக்கு இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதை விட, தமிழின வரலாற்றில் கோவை நகருக்கு நிரந்தரமான பெயரும் கிடைத்து விடும். பண்டிகைக்கு பல நாட்கள் இருந்தாலும் பந்தக்கால் நடப்பட்டு விட்டதால், இனி தினந்தோறும் திருவிழாக் கொண்டாட்டம்தான்.


கோவை மேயர் வெங்கடாசலம் கூறியதாவது: இந்த அறிவிப்பை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். கோவையில் நாங்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கும்போது, இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கு நாங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தமிழுக்கே பெருமை சேர்க்கும் முதல்வர் கருணாநிதி காலத்தில் நடத்தப்படும் மாநாடு என்பதால், இந்த மாநாடுக்கு இன்னும் அதிகமான பெருமை இருக்கிறது. கோவையில் இந்த மாநாடு நடப்பதால், கோவைக்கு சரித்திரப் புகழ் கிடைக்கும். சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது உருவான அண்ணா நகர்தான், இன்றைக்கு சென்னையில் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கிறது. அதேபோல, கோவை நகரில் இந்த மாநாடு நடக்கும் இடம், எதிர்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக மாறும். அடுத்த மாநாடு, எப்போது, எங்கே, எப்படி நடக்குமென்று தெரியாது என்பதால், இந்த மாநாட்டில் பங்கேற்கும் மக்கள், கொடுத்து வைத்தவர்கள்தான். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.


எல்லா மாநாடுகளையும் மிஞ்சும்! கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பது குறித்து ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க., செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு, எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இது கோவைக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். கொங்கு மண்ணுக்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கோவைக்கு வருவார்கள் என்பது மற்றொரு பெருமிதம். இதற்கான இடங்களைத் தேர்வு செய்வது, செய்ய வேண்டிய பணிகள் குறித்து, இனிமேல்தான் விவாதிக்க வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட 8 உலகத் தமிழ் மாநாட்டையும் மிஞ்சும் வகையில் மிகப் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் இதை நடத்தி முடிப்போம். இவ்வாறு அமைச்சர் பழனிசாமி கூறினார்.


கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் கூறியதாவது: உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்துவதாக முதல்வர் அறிவித்ததற்கு, கோவை மக்களின் சார்பில், எனது நன்றியை முதல்வரிடம் தெரிவித்தேன். எல்லாரும் பாராட்டும் வகையில், மாநாட்டை நடத்துவோம் என்ற உறுதியையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறேன். இந்த மாநாட்டை நடத்துவதற்கு கோவையில் எல்லாவிதமான வசதிகளும், பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. விமான நிலையம், சர்வதேச தரத்திலான ஓட்டல்கள், அரங்கங்கள் என எல்லா வசதிகளும் இருப்பதால், முந்தைய மாநாடுகளை விட சிறப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.



பேரூர் மருதாசல அடிகள் வரவேற்பு: "தொன்மையான வரலாறும், சிறப்பான தமிழ்வழிபாடும் நடந்து வரும் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது,' என பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் கூறினார். முதல்வர் கருணாநிதி அறிவிப்பை வரவேற்று, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தெரிவித்ததாவது: தொன்மையான வரலாறும், சிறப்பான தமிழ்வழிபாடும் நடந்து வரும் கோவையில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோம், கிரேக்க நாடுகளிலிருந்து வணிகத்திற்காக வந்து சென்ற கோவை யில் உலக தமிழ்நாடு மிகவும் சிறப்புடையதாகும்.





தமிழ்வழிக்கல்வி தழைத் தோங்கிட அரசு புதிய பாடநூல், பாடதிட்டங்களை உருவாக்கி, தமிழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கட்டாய தமிழ் கல்வி கொண்டு வர வேண்டும். தொன்மை மிகுந்த, பாடல் பெற்ற திருக்கோவில்கள் ஆகியவற்றில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப் படவேண்டும். இணைய தள வழியில் பிற மொழியினரும் எளிய வழியில் தமிழ் கற்க புதுப்புது மென்பொருள்களை உருவாக்க வேண்டும்; பழமையான தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பவர்களுக்கு பாராட்டு வழங்கி உதவித்தொகை வழங்க வேண்டும்; ஒருங்கிணைந்த ஓலைச்சுவடிகள் பட்டியலை அறிவித்திட வேண்டும்.





உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் சமுதாய, சமய தாக்குதலில் இருந்து காத்திட அரசு துணை நிற்க வேண்டும். அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் இன அடிப்படையில், தகுதிகளின் அடிப்படையில் நி யமனம் செய்திட வேண்டும். உலக பிரசித்த பெற்ற தமிழ்நூல்களை உலக மொழிகளில் வெளிவரச் செய்ய அறிஞர்களைக் கொண்டு முக்கிய நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும். அரசாணைகளை கட்டாயம் தமிழில் வெளியிடச் செய்வதோடு,அர சு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும். தமிழ்வழி பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, தொன்மையான சங்ககால தமிழிசை கருவிகளின் மாதிரி அருங்காட்சியம் அ� மத்தும், தமிழிசை கலைஞர்களுக்கு விருது வழங்கியும் அரசு சிறப்பித்திட வே ண்டும். இவ்வாறு, மருதாசல அடிகள் கூறினார்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum