Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
+2
kitcha
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்திலிருந்து வாசகர் ஒருவர், நம், "டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் இது. படியுங்கள்...
டியர் ஸ்ரீ அந்துமணி,
நலம். உங்கள் நலத்திற்கு கடவுளிடம் பிரார்த்திக்கும் உங்கள் நீண்ட கால வாசகன் - ரசிகன். உங்கள் எழுத்தில் உள்ள ஒரு நிதர்சனமான உண்மை மனசுக்கு திருப்தி அளிக்கிறது. நான், என், 59வது பிறந்த நாளை, என் பிள்ளையின் அன்பால், அமெரிக்காவில் கொண்டாட வந்துள்ளேன். மனைவி, துணைவி - ஒருவரே, இரண்டு அல்ல! ஆனால், நேரத்திற்குத் தகுந்தவாறு பலவாகி, இன்று வரை, இன்முகத்துடன் என்னை பொறுத்துக் கொண்ட புண்ணியவதியுடன் கடந்த, 160 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறோம்.
இன்னும், 65 நாட்களில் தாயகம் - சென்னை வர உள்ளேன்.
கடவுளின் கிருபையால், என் மகனின் அன்பால், நாங்கள் இருவரும் இங்கு பல இடங்களைச் சுற்றிப் பார்த்து
விட்டோம்.
சென்னையில் இருக்கும் வரை, பல காரணங்களால், தமிழ், "டிவி' தொடர்களையோ, தமிழ் சினிமாக்களையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; அதில், பெரிய விருப்பமும் இல்லை. ஆனால், இங்கு அமெரிக்காவில், நாமாக
எங்கும் தனியாக செல்ல முடியாத காரணத்தால், வேண்டாம் என்றாலும் சில சமயங்களில், "டிவி'யில் தமிழ் தொடர்களையும், சினிமாவையும் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு விட்டோம்.
மனம் நொந்து விட்டது. நம் தமிழ்த் தொடர்களும், தமிழ் சினிமாவும் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே... என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மகாபாரதத்திற்கு ஒரு சகுனி தான், ராமாயணத்திற்கு ஒரு கூனி தான். ஆனால், இந்த தமிழ், "டிவி' தொடர்களில், அனேகமாக ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு கூனியாகவோ, ஒரு சகுனியாகவோ இருந்து, சூழ்ச்சி செய்கின்றனர்.
சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
- உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
- ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு.
- அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும்.
- சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
"என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடை
யிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
- "நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
- அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன்சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக்கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம்.என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
— என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?
நன்றி : வாரமலர் செய்தி
டியர் ஸ்ரீ அந்துமணி,
நலம். உங்கள் நலத்திற்கு கடவுளிடம் பிரார்த்திக்கும் உங்கள் நீண்ட கால வாசகன் - ரசிகன். உங்கள் எழுத்தில் உள்ள ஒரு நிதர்சனமான உண்மை மனசுக்கு திருப்தி அளிக்கிறது. நான், என், 59வது பிறந்த நாளை, என் பிள்ளையின் அன்பால், அமெரிக்காவில் கொண்டாட வந்துள்ளேன். மனைவி, துணைவி - ஒருவரே, இரண்டு அல்ல! ஆனால், நேரத்திற்குத் தகுந்தவாறு பலவாகி, இன்று வரை, இன்முகத்துடன் என்னை பொறுத்துக் கொண்ட புண்ணியவதியுடன் கடந்த, 160 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறோம்.
இன்னும், 65 நாட்களில் தாயகம் - சென்னை வர உள்ளேன்.
கடவுளின் கிருபையால், என் மகனின் அன்பால், நாங்கள் இருவரும் இங்கு பல இடங்களைச் சுற்றிப் பார்த்து
விட்டோம்.
சென்னையில் இருக்கும் வரை, பல காரணங்களால், தமிழ், "டிவி' தொடர்களையோ, தமிழ் சினிமாக்களையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; அதில், பெரிய விருப்பமும் இல்லை. ஆனால், இங்கு அமெரிக்காவில், நாமாக
எங்கும் தனியாக செல்ல முடியாத காரணத்தால், வேண்டாம் என்றாலும் சில சமயங்களில், "டிவி'யில் தமிழ் தொடர்களையும், சினிமாவையும் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு விட்டோம்.
மனம் நொந்து விட்டது. நம் தமிழ்த் தொடர்களும், தமிழ் சினிமாவும் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே... என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மகாபாரதத்திற்கு ஒரு சகுனி தான், ராமாயணத்திற்கு ஒரு கூனி தான். ஆனால், இந்த தமிழ், "டிவி' தொடர்களில், அனேகமாக ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு கூனியாகவோ, ஒரு சகுனியாகவோ இருந்து, சூழ்ச்சி செய்கின்றனர்.
சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
- உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
- ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு.
- அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும்.
- சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
"என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடை
யிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
- "நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
- அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன்சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக்கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம்.என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
— என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?
நன்றி : வாரமலர் செய்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
இது ரொம்ப நிஜம், எனக்கும் டிவி கும் ரொம்ப தூ..........ரம் . நான் சீரியல்கள் பார்த்ததே இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
krishnaamma wrote:இது ரொம்ப நிஜம், எனக்கும் டிவி கும் ரொம்ப தூ..........ரம் . நான் சீரியல்கள் பார்த்ததே இல்லை
நானும் தான் .......................................அம்மா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
நாங்க சௌதில இருக்கும் போது தான் இந்த சீரியல்கள் வார ஆரம்பித்தது. அங்கு சினிமா தியேட்டர் எல்லாம் கிடையாது. டிவி தான் அதிகம். அங்கு சிறியவயதிலிருந்தே சீரியல் பார்ப்பதே வேலையாய் இருந்த அந்த பையன்,(முகுந்த் ) 9 வது படிக்கும் போது இந்தியா வர அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் போது ஒப்புக்கொள்ள வில்லை. அழுகிறான்.
எப்ப லீவில் இந்தியா வந்தாலும் அவன் கல கலப்பாக இருக்க மாட்டானாம் , இவர்களும் ஊர் சுற்றுவதில் காட்டிய அக்கறையை அவன் மே காட்டவில்லை அது இப்ப நினைவில் வந்து கேட்டால், நாம் அங்கு போனால் அத்தை பெரிப்பா நம்மை கொன்னுடுவா என்றானே பார்க்கணும். எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி.
என்ன டா உளறுகிறாய் என அவன் அம்மா கேட்டா, அதுக்கு அவன் நான் தான் அந்த சீரியலை பார்த்தேனே மா, பணத்துக்காக அவா என்னை கொன்னுடுவா, நான் போக மாட்டேன் என்கிறான். அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியலை எங்களுக்கு.
பிறகு அவனை அங்கு அவன் பெரியப்பா வீட்டில் படிக்க அனுப்புவதை தவிர்த்துவிட்டு, அந்த மாமி தன் சின்ன பெண்ணை யும் அழைத்துக்கொண்டு இந்தியா வந்து தனியாய் இருந்தார். பின் கொஞ்ச கொஞ்சமாய் அவனுக்கு புரிய வைத்தார். என்றாலும் இப்பவும் அவன் கொஞ்சம் ஒதுங்கிதான் இருப்பான். இப்ப அமெரிக்காவில் இருக்கான், என்னடா இப்பவும் சீரியல் பாக்கறியா என்றால் சிரிப்பான்
அங்கு இருந்த வரை ரொம்ப பெருமையாக அந்த மாமி சொல்வா, எங்க முகுந்துக்கு ஒண்ணுமே வேண்டாம், டிவி இருந்தால் போறும்; அவனால் தொந்தரவு இல்லை என்று. ஆனால் உள்ளுக்குளே வளர்ந்த இந்த தொந்தரவு பற்றி அவருக்கு தெரியாமல் போச்சு , பாவம்.
அதனால் மக்களே, குழந்தைகளை சீரியல் பார்க்கவிடாதீர்கள் , நீங்களும் பாக்காட்டா ரொம்ப நல்லது தான். மனது 'ரிலாக்ஸ் 'ஆகத்தான் டிவி ஒழிய, அவா பிரச்சனையை நாம் வாங்க அல்ல மேலும் எந்த சீரியலை பார்த்து, நம் குழங்கைகள் என்ன கத்துக்குமோ ? ஆண் பெண் உறவுகளிலும் 'நேர்மை ' குறையுமே? அப்படிப்பட்ட டிவி நமக்கு தேவையா? அதனால் குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என்று நாம் தான் கவனிக்கணும். தேவைல்லாததை வேண்டாம் என்று சொல்லணும் ; இல்லாவிட்டால் நாம் அதற்க்கு தரும் விலை ரொம்ப அதிகம். இது என் தாழ்மையான கருத்து
எப்ப லீவில் இந்தியா வந்தாலும் அவன் கல கலப்பாக இருக்க மாட்டானாம் , இவர்களும் ஊர் சுற்றுவதில் காட்டிய அக்கறையை அவன் மே காட்டவில்லை அது இப்ப நினைவில் வந்து கேட்டால், நாம் அங்கு போனால் அத்தை பெரிப்பா நம்மை கொன்னுடுவா என்றானே பார்க்கணும். எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி.
என்ன டா உளறுகிறாய் என அவன் அம்மா கேட்டா, அதுக்கு அவன் நான் தான் அந்த சீரியலை பார்த்தேனே மா, பணத்துக்காக அவா என்னை கொன்னுடுவா, நான் போக மாட்டேன் என்கிறான். அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியலை எங்களுக்கு.
பிறகு அவனை அங்கு அவன் பெரியப்பா வீட்டில் படிக்க அனுப்புவதை தவிர்த்துவிட்டு, அந்த மாமி தன் சின்ன பெண்ணை யும் அழைத்துக்கொண்டு இந்தியா வந்து தனியாய் இருந்தார். பின் கொஞ்ச கொஞ்சமாய் அவனுக்கு புரிய வைத்தார். என்றாலும் இப்பவும் அவன் கொஞ்சம் ஒதுங்கிதான் இருப்பான். இப்ப அமெரிக்காவில் இருக்கான், என்னடா இப்பவும் சீரியல் பாக்கறியா என்றால் சிரிப்பான்
அங்கு இருந்த வரை ரொம்ப பெருமையாக அந்த மாமி சொல்வா, எங்க முகுந்துக்கு ஒண்ணுமே வேண்டாம், டிவி இருந்தால் போறும்; அவனால் தொந்தரவு இல்லை என்று. ஆனால் உள்ளுக்குளே வளர்ந்த இந்த தொந்தரவு பற்றி அவருக்கு தெரியாமல் போச்சு , பாவம்.
அதனால் மக்களே, குழந்தைகளை சீரியல் பார்க்கவிடாதீர்கள் , நீங்களும் பாக்காட்டா ரொம்ப நல்லது தான். மனது 'ரிலாக்ஸ் 'ஆகத்தான் டிவி ஒழிய, அவா பிரச்சனையை நாம் வாங்க அல்ல மேலும் எந்த சீரியலை பார்த்து, நம் குழங்கைகள் என்ன கத்துக்குமோ ? ஆண் பெண் உறவுகளிலும் 'நேர்மை ' குறையுமே? அப்படிப்பட்ட டிவி நமக்கு தேவையா? அதனால் குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என்று நாம் தான் கவனிக்கணும். தேவைல்லாததை வேண்டாம் என்று சொல்லணும் ; இல்லாவிட்டால் நாம் அதற்க்கு தரும் விலை ரொம்ப அதிகம். இது என் தாழ்மையான கருத்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
kitcha wrote:krishnaamma wrote:இது ரொம்ப நிஜம், எனக்கும் டிவி கும் ரொம்ப தூ..........ரம் . நான் சீரியல்கள் பார்த்ததே இல்லை
நானும் தான் .......................................அம்மா
நல்லது கிச்சா சமீப நாட்களாக மனநல மருத்துவமனைகளில் சமீபகாலமாக கூட்டம் ஏன் அதிகரித்துள்ளது என்று மட்டும் நாலு பேரிடம் தயவு செய்து விசாரியுங்கள். கண்டிப்பாக இந்த சீரியல்கள் தான் காரணம். டைவோர்ஸ் கும் இது தான் காரணம். ஓவர் ஈகோ , கலாசார சீரழிவு , இப்படி நிறைய சொல்லலாம்.
காரணம், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் சென்சார் கிடையாது என்ன வேணா எடுக்கலாம் எப்படி வேணாலும் காட்டலாம் நமக்கு பணம் வந்தா போரும் என்கிற எண்ணம் தான் காரணம். ஒரு பொறுப்பே இல்லை தயாரிப்பாளர்களிடம்.
என்ன தான் விடிவு? ஏதோ என்னால முடித்தது, நான் பார்க்கமாட்டேன் எங்க ஆத்திலும் யாரும் பாக்க மாட்டா. செய்திகள், சினிமா, பாட்டு, சுவாமி ப்ரோக்ராம் , அனிமல் பிளனேட் என்று பார்போம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
முழுக்க முழுக்க உண்மை கிறிஷ்ணம்மா ,
அனைத்து சீரியல்களிலும் எப்படி தப்பு செய்வது என்று தான் காற்று கொடுக்கிறார்கள்.
அனைத்து சீரியல்களிலும் எப்படி தப்பு செய்வது என்று தான் காற்று கொடுக்கிறார்கள்.
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
இதுனாலத்தான் நான் போகோ சேனலையும் ஜெடிக்ஸயும் பார்க்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
ராஜா wrote:முழுக்க முழுக்க உண்மை கிறிஷ்ணம்மா ,
அனைத்து சீரியல்களிலும் எப்படி தப்பு செய்வது என்று தான் கற்று கொடுக்கிறார்கள்.
அது தான் சோகம் ராஜா, 'everybody, everybody' அர்ஜூன் முதல்வன் படத்தில் சொல்வது போல் சொல்ல வேண்டும் போல் இருக்கு.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்
balakarthik wrote:இதுனாலத்தான் நான் போகோ சேனலையும் ஜெடிக்ஸயும் பார்க்கிறேன்
நான் டிஸ்கவரி மட்டும் தான் பார்ப்பேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» டிவி நிகழ்ச்சியால் விபரீதம்-முகம் உடல் வெந்து மாணவன் கவலைக்கிடம்
» கடவுளுக்கு எழுதிய கடிதம்.
» சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம்....
» சர்தார்ஜிகளின் அட்டகாசம்
» டிவி நிகழ்ச்சியால் விபரீதம்-முகம் உடல் வெந்து மாணவன் கவலைக்கிடம்
» கடவுளுக்கு எழுதிய கடிதம்.
» சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம்....
» சர்தார்ஜிகளின் அட்டகாசம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|