Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அது வேற வாய்...இது நாற வாய்!
3 posters
Page 1 of 1
அது வேற வாய்...இது நாற வாய்!
ஒருவழியா வழக்கம்போலவே ஐயா மருத்துவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியிலேயிருந்து வெளியேறி வீர டயலாக்கா விட்டு காமெடிய ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அவருக்கு துணையா திருமாவளவனும் பொங்கியெழுந்து ஜிங்ஜாங் போடறத தொடங்கிட்டாரு. என்னவொரு கவலைன்னா இவங்கெல்லாம் தமிழ்நாட்டு ஜனங்க இன்னும் வாயில விரலை வச்சி சப்பிட்டிருப்பாங்கன்னு நெனச்சிக்கிட்டே அரசியல் நடத்துறத எப்போதான் நிறுத்துவாங்களோ தெரியலை.
உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னாடி டாஸ்மாக் கடையெல்லாம் அடிச்சி நொறுக்கிற போராட்டத்தை ஐயா அனொவ்ன்ஸ் பண்ணியிருக்காரு. நல்லவேளை சினிமா தியேட்டரை அடிச்சி நொறுக்குறதுன்னும், பொட்டிய தூக்குற போட்டி வைக்கிறதுன்னும் எந்த போராட்டத்தையும் அறிவிக்கலடா சாமின்னு சினிமாக்காரன்லாம் பெருமூச்சு விட்டுக்கலாம்! ஐயா மருத்துவரே… பண்ணுறத உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம்தான் பண்ணனும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா? ஏன் தேர்தலுக்கு முன்னாடியே அந்த வீரச்செயலை ஸ்டார்ட் பண்ணிப்பாக்கிற தில்லு இல்லையா உங்ககிட்ட?... எப்படியிருக்கும்?... சாராயமும், கறிச்சோறும் இல்லாம நான் கட்சி நடத்துறேன்னு எவனாவது சொன்னா பச்சப்புள்ளகூட பால்பாட்டில கீழே போட்டுட்டு சிரிக்காது? 21ம் நூற்றாண்டுலயும் மதுவிலக்குன்னு சொல்லி இன்னமும் காமெடி பண்றதுல வடிவேலு, விவேக், சந்தானம்னு எல்லாரும் உங்ககிட்ட லைன் கட்டி பிச்சையெடுக்கலாம்.
சரி இதுதான் இப்படின்னா இன்னைக்கு இன்னொரு பேச்சு பேசியிருக்கீங்க பாருங்க… அடேங்கப்பா அசத்திட்டீங்க போங்க! இலங்கைத் தமிழர்களை காக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் எப்பவுமே எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனா பா.ம.க.தான் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுதுன்னு சொல்லியிருக்கீங்க. சூப்பரா சொன்னீங்கய்யா நீங்க… ஆனா எனக்கொரு சின்ன டவுட்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்ற தேர்தல்ல இலங்கைத் தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சியான தி.மு.க.வோட கூட்டு வச்சிக்கிட்டீங்களே… அது எதுக்குங்கய்யா? தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சி கூட கூட்டு வச்சீங்கன்னா கூட பரவாயில்ல… ஆனா தமிழர்களை லட்சலட்சமா கொன்னு குவிக்கத் துணையாயிருந்த காங்கிரஸ் கட்சி இருந்த கூட்டணியில சேந்துக்கிட்டீங்களே… அதுக்கு பேருதான் அரசியலுங்களாய்யா?
இன்னக்கி வெக்கமே படாம மறுபடியும் இலங்கைத்தமிழர்… அது இதுன்னு பேசுறீங்களே… தமிழ்நாட்டு மக்கள் என்ன உங்க கட்சிக்காரங்கன்னு நெனச்சிக்கிட்டீங்களா… நீங்க என்ன பண்ணாலும், என்ன பேசுனாலும் ஐயா சொல்றதுதான் சரின்னு சொல்ல? நீங்க நெனச்சா தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் இருந்த கூட்டணியில சேர்ந்து எலெக்ஷன்ல நிப்பீங்க. அப்புறமா அந்த கூட்டணியிலயிருந்து வெளிய வந்துட்டு அவங்களையே குறை சொல்லுவீங்க. உங்க புள்ளைக்கு பதவி கிடைக்கனும்னா யார்கூட வேணும்னாலும் கூட்டணியை மாத்துறீங்க. அப்போ அற்ப அரசியலுக்காகவும், கட்சியை வளர்க்கவும் நீங்களும் எல்லாரையும் மாதிரி சாதாரண சாக்கடை அரசியல்தான் நடத்துறீங்கன்னு சொல்லலாமா, கூடாதுங்களாய்யா?
பயபுள்ளைக என்ன சொன்னாலும் நம்பாது போலயிருக்கே...!
ஐயா, ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனும்னு ஒரு கேள்வி என் மண்டைக்குள்ளயே குடைஞ்சிட்டு நிக்கிது. கேக்கட்டுங்களா?... இதுவரைக்கும் எத்தனை முறை தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்?... எத்தனை முறை அ.தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்?... எத்தனை முறை பல்டி அடிச்சிருக்கோம்னு உங்களுக்கே நினைவுயிருக்குமாய்யா? ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு சொல்ற ரேஞ்சுக்கு விட்டா மாசத்துக்கு ஒரு கட்சியோட கூட்டணி வைச்சிப்பீங்க போல?! கலைஞர் ஈழத்தமிழர்களைக் காக்க எதுவும் செய்யலைன்றீங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவர் கூடவே கூட்டணி வைச்சிக்கிட்டு கலைஞர்தான் தமிழினப் பாதுகாவலர்ன்றீங்க… மறுபடியும் அவர்கிட்டயிருந்து பிரிஞ்சி வந்திட்டு அவரையே குறை சொல்றீங்க… ஒருவேளை இதையெல்லாம் உங்க கிட்ட யாராவது கேட்டா ‘’அது வேற வாய்… இது நாற வாய்’’னு வடிவேல் மாதிரியே பதில் சொல்லுவீங்களோ என்னவோ தெரியலை!
அட நீங்கதான் இப்பிடின்னா… வீரத்திலகம் திருமா இருக்காரு பாருங்க… அவருதாங்க எதிர்காலத்துல உங்களுக்கு சரியான காமெடி போட்டியா இருப்பாரு போல! இலங்கைத்தமிழர்னாரு... பொதுக்கூட்டம்னாரு… மாநாடுன்னாரு… அட பரவாயில்லைய்யா இவருன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே காங்கிரஸ் கூட்டணியிலேயே சேந்துக்கிட்டு பாராளுமன்ற தேர்தல்ல நின்னு எம்.பி.யாவும் ஆயிக்கிட்டாரு. எம்.பி. பதவியையும் விடாம கெட்டியா பிடிச்சிக்கிட்டு, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில இருந்துக்கிட்டே இலங்கைத் தமிழர்களுக்காக போராடுற சீனைப் போட்டுக்கிட்டேயிருக்காரு பாருங்க… அடேங்கப்பா அடுத்த ஆஸ்கார் அநேகமா இவருக்குத்தான் கொடுக்கனும்போல!
நம்பள காமெடி பீஸா ஆக்கிருவாங்க போலயிருக்கே...!
இதுக்கெல்லாம் மேல அண்ணன் திருமா, மருத்துவரய்யா நீங்க என்ன சொன்னாலும் சரி… உடனே அதுக்கு ஜிங்ஜாங் போட்டு பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் இலங்கைத்தமிழர் விஷயத்தில் இணைந்து செயல்படும்னு இன்னமும் பேட்டி குடுத்துட்டேதான் இருக்காரு. அட இன்னமும் வீரத்தோட இன்னைக்கு இன்னொன்னு சொல்லியிருக்காரு பாருங்க… தேவைப்பட்டா இலங்கைத் தமிழர்களுக்காக அவரோட எம்.பி.பதவியையும் ராஜினாமா செய்யத்தயாராம். அப்பிடி ராஜினாமா செய்யுறதா இருந்தா எப்பவோ ராஜபக்சேவை சந்திக்க போன குழுவுல திருமாவும் போயிட்டு வெறுங்கைய வீசிட்டு வந்தாரே… அப்பவே பண்ணியிருக்கனும். அதவிட்டுட்டு இப்பவும் அதைச் சொல்லியே சீன் போட்டு அரசியல் நடத்துறதை அற்பப் புத்தின்றதா… இல்ல என்னன்றது? தி.மு.க.வை துரோகின்னு சொன்னா உங்களையெல்லாம் நம்பிக்கை துரோகின்னு சொல்றதா?
ராமதாஸ் எப்பவோ பல கூட்டணி மாறி மாறி தனக்கு கட்சியும், பதவியும், தன் மகனும்தான் முக்கியம்னு நிரூபிச்சிட்டாரு. ஆனா தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட இயக்கம் ஆரம்பிச்ச திருமாவும் இப்ப இலங்கைத்தமிழர் விஷயங்களில் தடுமாறி தனக்கு கட்சி அரசியல்தான் முக்கியம்னு நிரூபிக்க ஆரம்பிச்சிருக்காரு.
மொத்தத்துல ஒன்னு மட்டும் நல்லா தெரியுது… இலங்கை தமிழர்களும், இடிந்து போன தமிழக தமிழர்களும், தமிழினம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலேயும் தமிழக அரசியல் கட்சிகள் எதையும் நம்பாம தமக்கான போராட்டங்களை தாமே முன்னெடுப்பது மட்டுமே அவர்களின் விடுதலை மற்றும் சமஉரிமைகளை பெறுவதற்கான ஒரே வழியாகும். தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லாத இனவுணர்வு ஒற்றுமைதான், இன்னைக்கி வரைக்கும் தனித்தமிழீழம் கிடைக்காததுக்கு ஒரு முக்கிய காரணாமாகும். மக்களை மாக்களாக்கும் சாக்கடை அரசியல் ஒழிந்து நாகரீக மற்றும் தன்னலமற்ற சேவை அரசியல் வர தமிழர்கள் நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பதோ தெரியவில்லை. அதுவரை இதுபோன்ற காமெடித்தலைவர்களையும், காட்சிகளையும் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதே நமது எழுதப்படாத தலைவிதியாகும்.
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: அது வேற வாய்...இது நாற வாய்!
பய புள்ளைக பஞ்சாயத்து தேர்தல அம்மாகூட கூட்டணி வைக்க திட்டம் போடராங்களோ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: அது வேற வாய்...இது நாற வாய்!
இவங்களா எல்லாம் பெரியால நினைச்சு எதுக்குங்க பதிவு போடுறீங்க இவங்க அதுக்கு சரி பட்டு வரமாட்டாங்க..! இவர்கள் பச்சோந்திகள் சுயநல வாதிகள் மக்கள் தான் இவங்களுக்கு சரியான பாடம் புகட்டி விட்டார்கள்..!
பகிர்விற்கு நன்றி..!
பகிர்விற்கு நன்றி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண்
» தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!
» புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
» வாய் துர்நாற்றம் அகல
» ஒரு வாய் கடல்
» தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!
» புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
» வாய் துர்நாற்றம் அகல
» ஒரு வாய் கடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|