Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான்
Page 1 of 1
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான்
நியூயார்க்: "எஸ் அண்டு பி' நிறுவனம், அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீட்டைக் குறைத்ததை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் கடன் மதிப்பீடு குறியீடுகளையும் குறைக்கப் போவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீடு, உயர்நிலையான "ஏஏஏ'யில் இருந்து, "ஏஏ+' என்ற அடுத்த நிலைக்கு "எஸ் அண்டு பி' நிறுவனத்தால் குறைக்கப்பட்டதை அடுத்து, கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பின. இந்நிலையில், "எஸ் அண்டு பி' நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பான கடன் குறியீடுகள் விரைவில் குறைக்கப்படும். அதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகளின் கடன் குறியீடும் குறைக்கப்படும். கடந்த 2008க்கு முந்தைய நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிடும் போது, ஜப்பான், இந்தியா, மலேசியா, தைவான், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நிதித் திறன் குறைந்துள்ளது. அதோடு, வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வீதத்தில் இல்லை. மேலும் அவற்றின் ஏற்றுமதியும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் கடைசி பாதிப்பில் இன்னும் இந்தியா, ஜப்பான், மலேசியா, தைவான் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன. வெளிச் சந்தைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய நிதி அமைப்பைக் கொண்ட நாடுகள் விரைவில், அவற்றின் "லிக்விடிட்டி'யை இழக்க வேண்டி வரும். இது போன்ற பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான், இலங்கை, பிஜி, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படக் கூடும். இந்த நாடுகளின் அரசுகளுக்கு, அவற்றின் சொந்த வருமானத்தைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தேவைப்படுகின்றன.
அவ்விதம் அந்நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கும் பட்சத்தில், மிக மோசமான, நீண்ட கால விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது தான். தற்போது, அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதால் அதன் தாக்கம், ஆசிய சந்தைகளில் மோசமாகவே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை பலமாகவே உள்ளது. பிரச்னையை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. நாம் உள்ளூர் நுகர்வு சந்தையை ஊக்குவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் எழுந்துள்ள பிரச்னைகள், இந்தியாவில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியா நல்ல நிலைமையில் தான் உள்ளது' - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
"உலகளவில் எழுந்துள்ள இப்பிரச்னை கவலைக்குரியது. ஆனால், பீதியடைய வேண்டியதில்லை. அமெரிக்க பொருளாதாரம் பல மாதங்களாகவே தடுமாறிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. அதன் விளைவு தான், பங்குச் சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பொருளாதாரம் வீழச்சியடைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படவே செய்யும். இன்னும் அடுத்த மாதங்களில் இந்தியா, முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமாக உலகளவில் கருதப்படும்' - மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு.
"இந்தாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதம். ஆண்டு முழுவதிற்குமான வளர்ச்சி விகிதம், அதை விடவும் அதிகமாக இருக்காது. அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மந்தமான வளர்ச்சியில் தான் உள்ளது. இதனாலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளாலும் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அன்னிய முதலீடு மிதமான அளவில் குறையும்' - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன்.
"இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்ளூர் காரணிகளால் தான் இயக்கப்படுகிறது. அதனால், பங்குச் சந்தை குறுகிய காலத்தில் நிலைபெற்று விடும். மிக மோசமான விளைவு ஏற்படாது என்றாலும், என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். உலகளவில் நிதி ஸ்திரத்தன்மை குலைந்தால், அதன் எதிரொலி இந்தியாவிலும் கேட்கும்.
"எஸ் அண்டு பி'யின் நடவடிக்கை, எதிர்பார்த்த ஒன்று தான். அமெரிக்காவின் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்கனவே வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று தான். இதே பிரச்னை, ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது' - திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.
"இப்பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தில் நாட்டின் நிதிக் கொள்கை மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அமெரிக்க கடன் பிரச்னை குறித்த உலக நடப்புகளை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் இது பற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடிய காரணங்கள் இருக்கின்றன என்றாலும், அவற்றின் பாதிப்பு குறைந்த அளவிலேயே இருக்கும்' - மத்திய ரிசர்வ் வங்கி.
அந்த அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பான கடன் குறியீடுகள் விரைவில் குறைக்கப்படும். அதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகளின் கடன் குறியீடும் குறைக்கப்படும். கடந்த 2008க்கு முந்தைய நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிடும் போது, ஜப்பான், இந்தியா, மலேசியா, தைவான், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நிதித் திறன் குறைந்துள்ளது. அதோடு, வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வீதத்தில் இல்லை. மேலும் அவற்றின் ஏற்றுமதியும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் கடைசி பாதிப்பில் இன்னும் இந்தியா, ஜப்பான், மலேசியா, தைவான் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன. வெளிச் சந்தைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய நிதி அமைப்பைக் கொண்ட நாடுகள் விரைவில், அவற்றின் "லிக்விடிட்டி'யை இழக்க வேண்டி வரும். இது போன்ற பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான், இலங்கை, பிஜி, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படக் கூடும். இந்த நாடுகளின் அரசுகளுக்கு, அவற்றின் சொந்த வருமானத்தைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தேவைப்படுகின்றன.
அவ்விதம் அந்நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கும் பட்சத்தில், மிக மோசமான, நீண்ட கால விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது தான். தற்போது, அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதால் அதன் தாக்கம், ஆசிய சந்தைகளில் மோசமாகவே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை பலமாகவே உள்ளது. பிரச்னையை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. நாம் உள்ளூர் நுகர்வு சந்தையை ஊக்குவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் எழுந்துள்ள பிரச்னைகள், இந்தியாவில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியா நல்ல நிலைமையில் தான் உள்ளது' - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
"உலகளவில் எழுந்துள்ள இப்பிரச்னை கவலைக்குரியது. ஆனால், பீதியடைய வேண்டியதில்லை. அமெரிக்க பொருளாதாரம் பல மாதங்களாகவே தடுமாறிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. அதன் விளைவு தான், பங்குச் சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பொருளாதாரம் வீழச்சியடைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படவே செய்யும். இன்னும் அடுத்த மாதங்களில் இந்தியா, முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமாக உலகளவில் கருதப்படும்' - மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு.
"இந்தாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதம். ஆண்டு முழுவதிற்குமான வளர்ச்சி விகிதம், அதை விடவும் அதிகமாக இருக்காது. அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மந்தமான வளர்ச்சியில் தான் உள்ளது. இதனாலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளாலும் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அன்னிய முதலீடு மிதமான அளவில் குறையும்' - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன்.
"இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்ளூர் காரணிகளால் தான் இயக்கப்படுகிறது. அதனால், பங்குச் சந்தை குறுகிய காலத்தில் நிலைபெற்று விடும். மிக மோசமான விளைவு ஏற்படாது என்றாலும், என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். உலகளவில் நிதி ஸ்திரத்தன்மை குலைந்தால், அதன் எதிரொலி இந்தியாவிலும் கேட்கும்.
"எஸ் அண்டு பி'யின் நடவடிக்கை, எதிர்பார்த்த ஒன்று தான். அமெரிக்காவின் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்கனவே வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று தான். இதே பிரச்னை, ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது' - திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.
"இப்பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தில் நாட்டின் நிதிக் கொள்கை மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அமெரிக்க கடன் பிரச்னை குறித்த உலக நடப்புகளை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் இது பற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடிய காரணங்கள் இருக்கின்றன என்றாலும், அவற்றின் பாதிப்பு குறைந்த அளவிலேயே இருக்கும்' - மத்திய ரிசர்வ் வங்கி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான்
தினமலரில் படித்த பின்னூட்டம் : நான் ரசித்ததும் கூட
ஏற்றுமதி துறையில் இந்தியாவிற்கு பெரிய அளவில் பாதிப்பு காத்து கொண்டு இருக்கிறது.....அதாவது அமெரிக்காவின் கடன் சுமையாலும் மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள காரணத்தாலும்,அவர்கள் மற்ற நாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுபடுத்த முனைவார்கள்.....அதன் எதிரொலியாக அமெரிக்காவின் ஏற்றுமதி சந்தையில் முக்கிய முதல் மூன்று இடம் பிடித்துள்ள நாடுகளான இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டிப்பாக பாதிப்படையும்......ஆனால் இதில் இந்தியா மற்ற இரு நாடுகளின் பாதிப்புகளை விட குறைவாக இருக்கும்....காரணம் அங்கு ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் அதற்காக உலக வங்கியில் அவர்கள் வாங்கிய கடன்,மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம்......இந்தியாவை பொறுத்துவரை தங்கத்தின் கையிருப்பு அதிகமாக இருந்தாலும்,நாம் உலக வங்கியில் வாங்கிய கடன்,அதை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம்,மற்றும் நம் பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிட்ட அளவு பதிவு காணாதது போன்ற காரணிகள் நமக்கு பாதகமாக இருக்கின்றன.....விவசாய நாடான இந்தியா உணவு உற்பத்தியை பெருக்கி,நாம் தன்னிறைவு அடைந்து,பின் அதையே ஏற்றுமதி செய்தால் நமக்கு இவ்வளவு பாதிப்பு இருக்காது.....இதற்க்கு அரசின் கொள்கை மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்....நாம் நேரடி அந்நிய முதலீடை எதிர்பாராமல்,நம் உள் நாட்டு உற்பத்தியை அதிகபடுதுவது, உணவு பொருளின் இறக்குமதியை குறைக்க முயற்சி செய்வது,சில்லறை வணிகத்தை முறைபடுதுவது,அதில் அந்நிய முதலீட்டை தவிர்ப்பது,பாசன வசதியை பெருக்குவது,விவசாய திட்டத்தை முறைபடுதுவதன் மூலம் நாம் விவசாய துறையில் தன்னிறைவு அடைந்து உபரி நிதியை மற்ற திட்டத்திற்கு முதலீடு செய்யலாம்.....மென்பொருள் துறையை சார்ந்தவர்களுக்கு இதன் மூலம் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.....காரணம் பணவீக்கத்தால் உள்நாட்டு நபர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு இந்த துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்..... எல்லாவற்றிர்க்கும் மேலாக எண்ணெய் வளத்தை தவிர மற்ற அணைத்து வளமும் இந்தியாவில் கொட்டி கிடக்கின்ற போது நாம் வெளி நாட்டில் கை ஏந்துவது நமது சுதேசி கொள்கையை முற்றிலும் கைகலு வியாதால் வந்த வினை.....எண்ணைக்கும் எரிபொருளுக்கும் மாற்றாக பயோ பெட்ரோல், பயோ டீஸல் போன்றவை மற்ற நாடுகளில் அறிமுகபதபட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் அதை நம் நாடு பயன் படுத்தாதது,பெரும் ஏமாற்றமே....எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை மிகவும் பெரியது........அதை கட்டுபடுத்த இதுவரை முயற்சி ஏதும் செய்தது போல் தெரியவில்லை.....ஏற்றுமதி மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்னும் தத்துவத்தை மாற்றி,இறக்குமதியையும் குறைத்து,அவற்றை உள்நாட்டில் உற்பத்தி ஆகும் படி செய்தாலே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் தற்காத்து கொள்ள முடியும்.......
ஏற்றுமதி துறையில் இந்தியாவிற்கு பெரிய அளவில் பாதிப்பு காத்து கொண்டு இருக்கிறது.....அதாவது அமெரிக்காவின் கடன் சுமையாலும் மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள காரணத்தாலும்,அவர்கள் மற்ற நாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுபடுத்த முனைவார்கள்.....அதன் எதிரொலியாக அமெரிக்காவின் ஏற்றுமதி சந்தையில் முக்கிய முதல் மூன்று இடம் பிடித்துள்ள நாடுகளான இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டிப்பாக பாதிப்படையும்......ஆனால் இதில் இந்தியா மற்ற இரு நாடுகளின் பாதிப்புகளை விட குறைவாக இருக்கும்....காரணம் அங்கு ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் அதற்காக உலக வங்கியில் அவர்கள் வாங்கிய கடன்,மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம்......இந்தியாவை பொறுத்துவரை தங்கத்தின் கையிருப்பு அதிகமாக இருந்தாலும்,நாம் உலக வங்கியில் வாங்கிய கடன்,அதை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம்,மற்றும் நம் பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிட்ட அளவு பதிவு காணாதது போன்ற காரணிகள் நமக்கு பாதகமாக இருக்கின்றன.....விவசாய நாடான இந்தியா உணவு உற்பத்தியை பெருக்கி,நாம் தன்னிறைவு அடைந்து,பின் அதையே ஏற்றுமதி செய்தால் நமக்கு இவ்வளவு பாதிப்பு இருக்காது.....இதற்க்கு அரசின் கொள்கை மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்....நாம் நேரடி அந்நிய முதலீடை எதிர்பாராமல்,நம் உள் நாட்டு உற்பத்தியை அதிகபடுதுவது, உணவு பொருளின் இறக்குமதியை குறைக்க முயற்சி செய்வது,சில்லறை வணிகத்தை முறைபடுதுவது,அதில் அந்நிய முதலீட்டை தவிர்ப்பது,பாசன வசதியை பெருக்குவது,விவசாய திட்டத்தை முறைபடுதுவதன் மூலம் நாம் விவசாய துறையில் தன்னிறைவு அடைந்து உபரி நிதியை மற்ற திட்டத்திற்கு முதலீடு செய்யலாம்.....மென்பொருள் துறையை சார்ந்தவர்களுக்கு இதன் மூலம் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.....காரணம் பணவீக்கத்தால் உள்நாட்டு நபர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு இந்த துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்..... எல்லாவற்றிர்க்கும் மேலாக எண்ணெய் வளத்தை தவிர மற்ற அணைத்து வளமும் இந்தியாவில் கொட்டி கிடக்கின்ற போது நாம் வெளி நாட்டில் கை ஏந்துவது நமது சுதேசி கொள்கையை முற்றிலும் கைகலு வியாதால் வந்த வினை.....எண்ணைக்கும் எரிபொருளுக்கும் மாற்றாக பயோ பெட்ரோல், பயோ டீஸல் போன்றவை மற்ற நாடுகளில் அறிமுகபதபட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் அதை நம் நாடு பயன் படுத்தாதது,பெரும் ஏமாற்றமே....எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை மிகவும் பெரியது........அதை கட்டுபடுத்த இதுவரை முயற்சி ஏதும் செய்தது போல் தெரியவில்லை.....ஏற்றுமதி மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்னும் தத்துவத்தை மாற்றி,இறக்குமதியையும் குறைத்து,அவற்றை உள்நாட்டில் உற்பத்தி ஆகும் படி செய்தாலே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் தற்காத்து கொள்ள முடியும்.......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான்
உபயோகமான தகவல் உள்ள மற்றும் ஒரு பின்னூட்டம்
விஜய் ஆஸ்திரேலியா : நீங்கள் ஒருவருக்கு கடன் தருகிறிர்கள் ஆவர் எவளவு சம்பாதிக்கிறார் எவளவு சொத்து உளது என்று பார்த்து தான் கடன் தருவீர்கள் மேலும் மேலும் கடன் கேட்டால் அவரது நண்பகதன்மை மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் இது தான் கடன் மதிப்பீடு தற்போது அமெரிக்க அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி உள்ளது இதனால் அமரிக்காவின் மேல் டாலரின் மேல் நம்பகத்தன்மை குறையும் பல நாடுகளை சார்ந்தவர்கள் அமரிகவிலும் டாலரிலும் முதலிடு செய்து வருகிறார்கள் இந்திய கம்பனிகள் மற்றும் அரசு உட்பட இனி முதலிடுகள் குறையும் முதலிடு செய்தவர்கள் மற்றும் கடன் அளித்தவர்கள் திரும்ப பெற முயற்சிப்பர் ஆது மேலும் அந்நாட்டின் பணப்ற்றகுரையை ஏற்படுத்தும் ஆதனால் ஆதன் பொருளாதாரம் பதிக்கப்படும் இதனால் அமெரிக்காவை சார்ந்துள்ள கம்பனிகள் அரசுகள் தள்ளாடும் அமரிக்காவில் வாங்கும் திறன் குறையும் இதனால் இந்திய மற்றும் பல நாட்டின் அமரிக்க ஏற்றுமதி தடை படும் சராசரி தனிமனித பொது மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு உளது, நாட்டிற்கு ஏற்படும் நஷ்டம் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும் பொருளாதாரம் சரிவடையும்...
விஜய் ஆஸ்திரேலியா : நீங்கள் ஒருவருக்கு கடன் தருகிறிர்கள் ஆவர் எவளவு சம்பாதிக்கிறார் எவளவு சொத்து உளது என்று பார்த்து தான் கடன் தருவீர்கள் மேலும் மேலும் கடன் கேட்டால் அவரது நண்பகதன்மை மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் இது தான் கடன் மதிப்பீடு தற்போது அமெரிக்க அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி உள்ளது இதனால் அமரிக்காவின் மேல் டாலரின் மேல் நம்பகத்தன்மை குறையும் பல நாடுகளை சார்ந்தவர்கள் அமரிகவிலும் டாலரிலும் முதலிடு செய்து வருகிறார்கள் இந்திய கம்பனிகள் மற்றும் அரசு உட்பட இனி முதலிடுகள் குறையும் முதலிடு செய்தவர்கள் மற்றும் கடன் அளித்தவர்கள் திரும்ப பெற முயற்சிப்பர் ஆது மேலும் அந்நாட்டின் பணப்ற்றகுரையை ஏற்படுத்தும் ஆதனால் ஆதன் பொருளாதாரம் பதிக்கப்படும் இதனால் அமெரிக்காவை சார்ந்துள்ள கம்பனிகள் அரசுகள் தள்ளாடும் அமரிக்காவில் வாங்கும் திறன் குறையும் இதனால் இந்திய மற்றும் பல நாட்டின் அமரிக்க ஏற்றுமதி தடை படும் சராசரி தனிமனித பொது மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு உளது, நாட்டிற்கு ஏற்படும் நஷ்டம் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும் பொருளாதாரம் சரிவடையும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான்
என்ன ஆகப்போகிறதோ தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கடன் வட்டி விகிதம் குறைப்பு
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
» ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!
» லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
» ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!
» லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|