Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஒரு ராசி இல்லாத ராஜா!
+3
மகா பிரபு
அருண்வினோ
ரஞ்சித்
7 posters
Page 1 of 1
நான் ஒரு ராசி இல்லாத ராஜா!
’நான் ஒரு ராசி இல்லாத ராஜா’ என்ற இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன்தான்.
அவர் ராசியில்லாதவரா.... ராசியானவரா என்பதை பார்க்கும் முன்பு, தயாநிதியின் இந்த நிலைக்கு காரணம் யார்?
ஒரு தாத்தா... உடனே... அந்த தாத்தா கலைஞர் கருணாநிதி என்று நினைக்காதீர்கள்.
தாத்தா என்றால், வயதானவர். அவர் தாதாவும் கூட... தாதா என்றதும் ஏதோ பேட்டை வஸ்தாது... பிஸ்தா என்று நினைக்காதீர்கள்.
தாதா என்றால் தொழில்துறையில் தாதா என்று அழைக்கப்படுவர். இன்னுமா தெரியவில்லை.
அவர் பெயர் ரத்தன் டாட்டா. கிட்டத்தட்ட தயாநிதி மாறனின் வயதை வைத்து பார்த்தால் ரத்தன் டாட்டா தாத்தா போன்றவர். அந்த டாட்டாவை போட்டு பார்த்து, இன்று டப்பா டான்ஸாடிக் கொண்டிருக்கிறார் தயாநிதி.
தயாநிதியை சொல்லி குற்றமில்லை. அவருக்கு அந்த இடத்தை கொடுத்த கலைஞரைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். டாட்டாவை எதிர்க்க
வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அவருக்கும் இவருக்கும் பரம்பரை பகையா? அல்லது பாகம் பிரிக்கும் பங்காளிச் சண்டையா?அல்லது தயாநிதியை சந்தித்து, தொலைத்தொடர்புத்துறையில் இருந்து ரவுடி மாமூல் தரும்படி டாட்டா கேட்டாரா?
டாட்டா யார்? பரம்பரை பணக்காரன். அதுவும் மூன்று நான்கு தலைமுறைகளாக பணத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தொழில் துறையில் டாட்டா குடும்பம் ஈடுபட்டு வருகிறது. தயாநிதி மட்டுமல்ல.... இந்தியாவில் 1950க்கு மேல் பிறந்த எல்லாருடைய தந்தையும், தன் மகனை பார்த்து.... நீ கேட்டதெல்லாம் வாங்கித்தர நீ ஒன்னும் டாட்டா-பிர்லா குடும்பத்தில் பிறக்கலை’ என்ற டயலாக்கை கேட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பேமிலி அது.
பத்தாயிரம் கோடி ரூபாயை தொழில் மூலம் சேர்க்க, அந்த நிறுவனம் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டது.... டி.வி.எஸ். குழுமம் இன்று இத்தனை கோடிகள் கொண்ட நிறுவனமாக மாறியது எப்படி? மலையாள மனோரமா பத்திரிகையின் வளர்ச்சி எப்படி? சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எப்படி இத்தனை வளர்ச்சி கண்டது. அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் கிளைகள் இன்று 70க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறதே எப்படி? இதெல்லாம் ஒரு நாளில் அல்லது ஒரு வருடத்தில் நடந்த சாகசமா? இந்த குழுமங்கள் எல்லாமே குறைந்து முப்பது வருடங்களாக தொழிலில் இறங்கி மேலே வந்தவை?
10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் என்ற பெயரை பெற டாட்டா குடும்பத்தின் உழைப்பு என்ன? அவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ.வும்.... எம்.பி.யுமாகி அமைச்சர்களாக வலம் வந்து பணத்தை லவட்டிக் கொண்டவர்களா?
பத்து வருடங்களில் கலாநிதியும் தயாநிதியும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 20 முதல் 30க்குள் வரும் அளவுக்கு எப்படி முடிந்தது? அந்த வேகம் தான் 70 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் தொழில் துறையில் தாதாவாக இருக்கும் டாட்டா குடும்பத்துடன் மோத வைத்தது?
அதுவும் டி.டி.எச். என்ற தொழில்நுட்பம் மூலம் டிவி சேனல்களை காட்டும் தொழிலில்
தமிழ்நாட்டில் டாட்டாவின் நிறுவனம் கால் பதிக்கக் கூடாது.... அப்படி கால் பதித்தால், அதில் பங்கு வேண்டும் என்று மிரட்டுவதற்கு தயாநிதிக்கு என்ன துணிச்சல்?
டாட்டாவை தயாநிதி மிரட்டினார் என்று செய்தி வந்த போதே கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும். பேராண்டி....உனக்கு அனுபவம் பத்தாது. நானே இங்க இருக்கற தொழிலதிபர்களை மிரட்டினது கிடையாது என்று அறிவுரை கூறி தயாநிதியை தலையில் தட்டிவைத்திருந்தால்... இந்த அவமானம் வந்திருக்குமா?
தயாநிதி யார்? முரசொலி மாறனின் மகன். முரசொலி மாறன் யார்? கருணாநிதியின் அக்காள் மகன். முரசொலி மாறனுக்கு முகவரி யார் கருணாநிதி. முரசொலி மாறனின் வளர்ச்சிக்கு காரணம் யார் கருணாநிதி. முரசொலி மாறன், மத்தியில் அமைச்சராக இருந்ததற்கு காரணம் யார் கருணாநிதி.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி சன் டிவி என்ற தொழிலை தொடங்க காரணம் யார் கருணாநிதி. அதற்கு வங்கியில் இருந்து 6 கோடி ரூபாய் கடனுதவி வாங்கிக் கொடுத்தது யார் கருணாநிதி. அதையும் எப்படி வாங்கிக் கொடுத்தார் தி.மு.க.வின் சொத்துக்களை வங்கியில் கேரண்டி கொடுத்து?
இப்படி வளர்ந்த மாறனின் மகன்கள், தாத்தாவின் மார் மீதே முட்டினார்களே? பேரன்கள் மீது தாத்தா வைத்த பாசம் மோசமாகிவிட்டதே. பதிலுக்கு அவர்கள் காட்டிய பாசமும் விசுவாசமும் என்ன? குடும்பத்தில் யார் பெரியவர் என்ற மோதலில் ஸ்டாலினையும் அழகிரியையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே இந்த பேரன்கள்?
கருணாநிதியின் பாசம் கண்ணை மறைத்தது. கடைசியில் பாசத்தால்... இன்று கட்சியே மறையத் தொடங்கிவிட்டதே?
கருணாநிதியின் சுயநலத்தால் கட்சியும் இன்று கலகலத்துவிட்டது. குடும்பமும் பொல பொலவென உதிர்கிறது.
சரி... அது போகட்டும். தயாநிதிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஏன் ராசி இல்லை.ராசி என்றால், ஏதோ ஜோதிட ரீதியாக சொல்லும் அர்த்தம் இல்லை. ராசி என்பது, அதற்கான பக்குவம் வரவில்லை என்பதுதான் அதன் உண்மையான கருத்து.
ஒரு தொழில் செய்ய வேண்டும். அதை தெரிந்து செய்ய வேண்டும். அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை நெளிவு சுளிவுகளை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான், அத்தொழிலில் இருக்கும் நன்மை தீமைகள் தெரிய முடியும்.
இதெல்லாம் எதுவுமே அறிந்துக் கொள்ளாமல், தங்கள் குடும்ப அதிகாரத்தின் மூலம் தொழில் நடத்தி வந்தவர் தயாநிதி!
முதலில் அவர் நடத்திய தொழில் என்ன? எச்.எப்.ஓ. என்ற டிஸ்கொத்தே டான்ஸ் தொழிலை, அருணா இன் ஓட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். டிஸ்கொத்தே டான்ஸூக்கு வரும் கூட்டம் யார்? காசு கொழுத்தக் குடும்பமும், கட்டப்பஞ்சாய்த்து செய்து, அதில் வரும் காசை அடாவடியாக செலவழிக்கும் கும்பலும் தான் டிஸ்கொத்தேவுக்கு வரும்.
அந்த கும்பலை டான்ஸ் ஆடும் போது அடக்கி ஆள பவுன்சர்கள் என்ற தடியர்கள் கூட்டத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்களை வைத்துக் கொண்டு தொழில் செய்துக் கொண்டிருந்தார். அதாவது பத்து அடியாட்களை வைத்து தொழில் நடத்தும் எண்ணம் படைத்தவருக்கு, என்ன மனோபாவம் இருக்கும் என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழில் தொடங்கினாலும், அடியாட்களை வைத்து அடக்கியாள வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பின்னர், சுமங்கலி கேபிள் விஷன் என்ற தொழிலில், கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அமர்ந்தார். அங்கேயும் உருட்டல், மிரட்டல் பணிகளே பரிணாமித்தது.
இந்த நேரத்தில் தான், அவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு மத்திய அமைச்சராக்கும் யோகம் அடித்தது. அடிப்படையில், தயாநிதிக்கு அந்தப் பதவியை தக்க வைத்துக் கொண்டு, 50 வருடம் அரசியல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால்................. எப்படி நடந்திருப்பார்?
சிவசங்கரனை மிரட்டி அவரது கம்பெனியை விற்க வைத்திருக்கமாட்டார்?
பின்னர் அவரையே கைது செய்து சிறையில் அடைக்க துடித்திருக்க மாட்டார்?
கேபிள் டிவி தொழிலில் வந்த சிட்டி கேபிள், ஹாத்வே குழுமங்களின் கேபிள்களை அறுக்கும்படி உத்தரவிட்டிருக்கமாட்டார்?
டாட்டாவை எதிர்த்திருக்கமாட்டார்?
அழகிரியுடன் மோதியிருக்க மாட்டார்?
தாத்தா கருணாநிதியை எதிர்த்து பேட்டி கொடுத்திருக்கமாட்டார்?
-இப்படி எத்தனையோ மாட்டார்........ என்று வாசகங்கள் வரும்.
முதலில், 2004ம் ஆண்டில் 36 வயதில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்த போது, அவருக்கு இருந்த பக்குவம் போதாது. வயது... பணம்.... அதிகாரம்... இதெல்லாம் அவரை ஆட்டிப்படைத்துவிட்டது. 2004ம் ஆண்டு பதவிக்கு வந்த அவர், 2007ம் ஆண்டு பதவியை இழந்தார். அடுத்து எப்படியோ, குடும்பம் ஒன்று சேர்ந்து 2009ம் ஆண்டு மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். 2011ம் ஆண்டு பதவி போனது.
முதல் முறை மூன்று வருடங்களும், இரண்டாவது முறை இரண்டு வருடங்களுமே அவரால் மத்திய அமைச்சராக முடிந்தது.
ஸ்பெக்டரம் ஊழல் விவகாரத்தில் ராசாவை சிக்க வைக்க செக் வைத்தவரே தயாநிதி தான் என்ற குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினராலே வைக்கப்படுகிறது. அதே பூதம் தன்னையே தாக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருந்தால்.... இன்று இந்த நிலை வந்திருக்குமா?
அதாவது இங்கே மீண்டும் ஒரு முறை பழைய பாடலை நினைவு கூற வேண்டியிருக்கிறது.
“நான் ஒரு ராசியில்லா ராஜா” என்ற பாடல் அல்ல அது.
தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் குடும்ப நிழலில் வளர்ந்ததால், கஷ்ட நஷ்டங்களையும் அறியாமல் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்றவர் தயாநிதி. இந்த உயரத்தை அடைய டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் ஆகியோர் கடந்து வந்த பாதை என்ன என்பதை ஒரு நாள் அவர் சிந்தித்துப் பார்த்திருந்தால்....
இதோ அந்த பாடல்...
ஆற்றங்கரையின் மரமும்..
அரசறிய வீற்றிருந்தார் வாழ்வும்...
விழுமன்றோ!
அவர் ராசியில்லாதவரா.... ராசியானவரா என்பதை பார்க்கும் முன்பு, தயாநிதியின் இந்த நிலைக்கு காரணம் யார்?
ஒரு தாத்தா... உடனே... அந்த தாத்தா கலைஞர் கருணாநிதி என்று நினைக்காதீர்கள்.
தாத்தா என்றால், வயதானவர். அவர் தாதாவும் கூட... தாதா என்றதும் ஏதோ பேட்டை வஸ்தாது... பிஸ்தா என்று நினைக்காதீர்கள்.
தாதா என்றால் தொழில்துறையில் தாதா என்று அழைக்கப்படுவர். இன்னுமா தெரியவில்லை.
அவர் பெயர் ரத்தன் டாட்டா. கிட்டத்தட்ட தயாநிதி மாறனின் வயதை வைத்து பார்த்தால் ரத்தன் டாட்டா தாத்தா போன்றவர். அந்த டாட்டாவை போட்டு பார்த்து, இன்று டப்பா டான்ஸாடிக் கொண்டிருக்கிறார் தயாநிதி.
தயாநிதியை சொல்லி குற்றமில்லை. அவருக்கு அந்த இடத்தை கொடுத்த கலைஞரைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். டாட்டாவை எதிர்க்க
வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அவருக்கும் இவருக்கும் பரம்பரை பகையா? அல்லது பாகம் பிரிக்கும் பங்காளிச் சண்டையா?அல்லது தயாநிதியை சந்தித்து, தொலைத்தொடர்புத்துறையில் இருந்து ரவுடி மாமூல் தரும்படி டாட்டா கேட்டாரா?
டாட்டா யார்? பரம்பரை பணக்காரன். அதுவும் மூன்று நான்கு தலைமுறைகளாக பணத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தொழில் துறையில் டாட்டா குடும்பம் ஈடுபட்டு வருகிறது. தயாநிதி மட்டுமல்ல.... இந்தியாவில் 1950க்கு மேல் பிறந்த எல்லாருடைய தந்தையும், தன் மகனை பார்த்து.... நீ கேட்டதெல்லாம் வாங்கித்தர நீ ஒன்னும் டாட்டா-பிர்லா குடும்பத்தில் பிறக்கலை’ என்ற டயலாக்கை கேட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பேமிலி அது.
பத்தாயிரம் கோடி ரூபாயை தொழில் மூலம் சேர்க்க, அந்த நிறுவனம் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டது.... டி.வி.எஸ். குழுமம் இன்று இத்தனை கோடிகள் கொண்ட நிறுவனமாக மாறியது எப்படி? மலையாள மனோரமா பத்திரிகையின் வளர்ச்சி எப்படி? சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எப்படி இத்தனை வளர்ச்சி கண்டது. அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் கிளைகள் இன்று 70க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறதே எப்படி? இதெல்லாம் ஒரு நாளில் அல்லது ஒரு வருடத்தில் நடந்த சாகசமா? இந்த குழுமங்கள் எல்லாமே குறைந்து முப்பது வருடங்களாக தொழிலில் இறங்கி மேலே வந்தவை?
10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் என்ற பெயரை பெற டாட்டா குடும்பத்தின் உழைப்பு என்ன? அவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ.வும்.... எம்.பி.யுமாகி அமைச்சர்களாக வலம் வந்து பணத்தை லவட்டிக் கொண்டவர்களா?
பத்து வருடங்களில் கலாநிதியும் தயாநிதியும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 20 முதல் 30க்குள் வரும் அளவுக்கு எப்படி முடிந்தது? அந்த வேகம் தான் 70 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் தொழில் துறையில் தாதாவாக இருக்கும் டாட்டா குடும்பத்துடன் மோத வைத்தது?
அதுவும் டி.டி.எச். என்ற தொழில்நுட்பம் மூலம் டிவி சேனல்களை காட்டும் தொழிலில்
தமிழ்நாட்டில் டாட்டாவின் நிறுவனம் கால் பதிக்கக் கூடாது.... அப்படி கால் பதித்தால், அதில் பங்கு வேண்டும் என்று மிரட்டுவதற்கு தயாநிதிக்கு என்ன துணிச்சல்?
டாட்டாவை தயாநிதி மிரட்டினார் என்று செய்தி வந்த போதே கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும். பேராண்டி....உனக்கு அனுபவம் பத்தாது. நானே இங்க இருக்கற தொழிலதிபர்களை மிரட்டினது கிடையாது என்று அறிவுரை கூறி தயாநிதியை தலையில் தட்டிவைத்திருந்தால்... இந்த அவமானம் வந்திருக்குமா?
தயாநிதி யார்? முரசொலி மாறனின் மகன். முரசொலி மாறன் யார்? கருணாநிதியின் அக்காள் மகன். முரசொலி மாறனுக்கு முகவரி யார் கருணாநிதி. முரசொலி மாறனின் வளர்ச்சிக்கு காரணம் யார் கருணாநிதி. முரசொலி மாறன், மத்தியில் அமைச்சராக இருந்ததற்கு காரணம் யார் கருணாநிதி.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி சன் டிவி என்ற தொழிலை தொடங்க காரணம் யார் கருணாநிதி. அதற்கு வங்கியில் இருந்து 6 கோடி ரூபாய் கடனுதவி வாங்கிக் கொடுத்தது யார் கருணாநிதி. அதையும் எப்படி வாங்கிக் கொடுத்தார் தி.மு.க.வின் சொத்துக்களை வங்கியில் கேரண்டி கொடுத்து?
இப்படி வளர்ந்த மாறனின் மகன்கள், தாத்தாவின் மார் மீதே முட்டினார்களே? பேரன்கள் மீது தாத்தா வைத்த பாசம் மோசமாகிவிட்டதே. பதிலுக்கு அவர்கள் காட்டிய பாசமும் விசுவாசமும் என்ன? குடும்பத்தில் யார் பெரியவர் என்ற மோதலில் ஸ்டாலினையும் அழகிரியையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே இந்த பேரன்கள்?
கருணாநிதியின் பாசம் கண்ணை மறைத்தது. கடைசியில் பாசத்தால்... இன்று கட்சியே மறையத் தொடங்கிவிட்டதே?
கருணாநிதியின் சுயநலத்தால் கட்சியும் இன்று கலகலத்துவிட்டது. குடும்பமும் பொல பொலவென உதிர்கிறது.
சரி... அது போகட்டும். தயாநிதிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஏன் ராசி இல்லை.ராசி என்றால், ஏதோ ஜோதிட ரீதியாக சொல்லும் அர்த்தம் இல்லை. ராசி என்பது, அதற்கான பக்குவம் வரவில்லை என்பதுதான் அதன் உண்மையான கருத்து.
ஒரு தொழில் செய்ய வேண்டும். அதை தெரிந்து செய்ய வேண்டும். அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை நெளிவு சுளிவுகளை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான், அத்தொழிலில் இருக்கும் நன்மை தீமைகள் தெரிய முடியும்.
இதெல்லாம் எதுவுமே அறிந்துக் கொள்ளாமல், தங்கள் குடும்ப அதிகாரத்தின் மூலம் தொழில் நடத்தி வந்தவர் தயாநிதி!
முதலில் அவர் நடத்திய தொழில் என்ன? எச்.எப்.ஓ. என்ற டிஸ்கொத்தே டான்ஸ் தொழிலை, அருணா இன் ஓட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். டிஸ்கொத்தே டான்ஸூக்கு வரும் கூட்டம் யார்? காசு கொழுத்தக் குடும்பமும், கட்டப்பஞ்சாய்த்து செய்து, அதில் வரும் காசை அடாவடியாக செலவழிக்கும் கும்பலும் தான் டிஸ்கொத்தேவுக்கு வரும்.
அந்த கும்பலை டான்ஸ் ஆடும் போது அடக்கி ஆள பவுன்சர்கள் என்ற தடியர்கள் கூட்டத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்களை வைத்துக் கொண்டு தொழில் செய்துக் கொண்டிருந்தார். அதாவது பத்து அடியாட்களை வைத்து தொழில் நடத்தும் எண்ணம் படைத்தவருக்கு, என்ன மனோபாவம் இருக்கும் என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழில் தொடங்கினாலும், அடியாட்களை வைத்து அடக்கியாள வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பின்னர், சுமங்கலி கேபிள் விஷன் என்ற தொழிலில், கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அமர்ந்தார். அங்கேயும் உருட்டல், மிரட்டல் பணிகளே பரிணாமித்தது.
இந்த நேரத்தில் தான், அவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு மத்திய அமைச்சராக்கும் யோகம் அடித்தது. அடிப்படையில், தயாநிதிக்கு அந்தப் பதவியை தக்க வைத்துக் கொண்டு, 50 வருடம் அரசியல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால்................. எப்படி நடந்திருப்பார்?
சிவசங்கரனை மிரட்டி அவரது கம்பெனியை விற்க வைத்திருக்கமாட்டார்?
பின்னர் அவரையே கைது செய்து சிறையில் அடைக்க துடித்திருக்க மாட்டார்?
கேபிள் டிவி தொழிலில் வந்த சிட்டி கேபிள், ஹாத்வே குழுமங்களின் கேபிள்களை அறுக்கும்படி உத்தரவிட்டிருக்கமாட்டார்?
டாட்டாவை எதிர்த்திருக்கமாட்டார்?
அழகிரியுடன் மோதியிருக்க மாட்டார்?
தாத்தா கருணாநிதியை எதிர்த்து பேட்டி கொடுத்திருக்கமாட்டார்?
-இப்படி எத்தனையோ மாட்டார்........ என்று வாசகங்கள் வரும்.
முதலில், 2004ம் ஆண்டில் 36 வயதில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்த போது, அவருக்கு இருந்த பக்குவம் போதாது. வயது... பணம்.... அதிகாரம்... இதெல்லாம் அவரை ஆட்டிப்படைத்துவிட்டது. 2004ம் ஆண்டு பதவிக்கு வந்த அவர், 2007ம் ஆண்டு பதவியை இழந்தார். அடுத்து எப்படியோ, குடும்பம் ஒன்று சேர்ந்து 2009ம் ஆண்டு மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். 2011ம் ஆண்டு பதவி போனது.
முதல் முறை மூன்று வருடங்களும், இரண்டாவது முறை இரண்டு வருடங்களுமே அவரால் மத்திய அமைச்சராக முடிந்தது.
ஸ்பெக்டரம் ஊழல் விவகாரத்தில் ராசாவை சிக்க வைக்க செக் வைத்தவரே தயாநிதி தான் என்ற குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினராலே வைக்கப்படுகிறது. அதே பூதம் தன்னையே தாக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருந்தால்.... இன்று இந்த நிலை வந்திருக்குமா?
அதாவது இங்கே மீண்டும் ஒரு முறை பழைய பாடலை நினைவு கூற வேண்டியிருக்கிறது.
“நான் ஒரு ராசியில்லா ராஜா” என்ற பாடல் அல்ல அது.
தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் குடும்ப நிழலில் வளர்ந்ததால், கஷ்ட நஷ்டங்களையும் அறியாமல் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்றவர் தயாநிதி. இந்த உயரத்தை அடைய டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் ஆகியோர் கடந்து வந்த பாதை என்ன என்பதை ஒரு நாள் அவர் சிந்தித்துப் பார்த்திருந்தால்....
இதோ அந்த பாடல்...
ஆற்றங்கரையின் மரமும்..
அரசறிய வீற்றிருந்தார் வாழ்வும்...
விழுமன்றோ!
Guest- Guest
Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!
அருமையான பதிவு...
நல்லது கெட்டதை பகுத்து தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...
நல்லது கெட்டதை பகுத்து தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!
அருமையான பதிவு...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
sathishkumar2991- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
Similar topics
» ராசி இல்லாத நடிகையானார் பூனம் பஜ்வா
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» வணக்கம் நான் ராஜா
» நீ இல்லாத நான்!
» நான் இல்லாத என் வீடு
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» வணக்கம் நான் ராஜா
» நீ இல்லாத நான்!
» நான் இல்லாத என் வீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|