ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

+3
மகா பிரபு
அருண்வினோ
ரஞ்சித்
7 posters

Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by Guest Sat Aug 06, 2011 3:01 pm

’நான் ஒரு ராசி இல்லாத ராஜா’ என்ற இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன்தான்.
அவர் ராசியில்லாதவரா.... ராசியானவரா என்பதை பார்க்கும் முன்பு, தயாநிதியின் இந்த நிலைக்கு காரணம் யார்?
ஒரு தாத்தா... உடனே... அந்த தாத்தா கலைஞர் கருணாநிதி என்று நினைக்காதீர்கள்.
தாத்தா என்றால், வயதானவர். அவர் தாதாவும் கூட... தாதா என்றதும் ஏதோ பேட்டை வஸ்தாது... பிஸ்தா என்று நினைக்காதீர்கள்.
தாதா என்றால் தொழில்துறையில் தாதா என்று அழைக்கப்படுவர். இன்னுமா தெரியவில்லை.
அவர் பெயர் ரத்தன் டாட்டா. கிட்டத்தட்ட தயாநிதி மாறனின் வயதை வைத்து பார்த்தால் ரத்தன் டாட்டா தாத்தா போன்றவர். அந்த டாட்டாவை போட்டு பார்த்து, இன்று டப்பா டான்ஸாடிக் கொண்டிருக்கிறார் தயாநிதி.
தயாநிதியை சொல்லி குற்றமில்லை. அவருக்கு அந்த இடத்தை கொடுத்த கலைஞரைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். டாட்டாவை எதிர்க்க
வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அவருக்கும் இவருக்கும் பரம்பரை பகையா? அல்லது பாகம் பிரிக்கும் பங்காளிச் சண்டையா?அல்லது தயாநிதியை சந்தித்து, தொலைத்தொடர்புத்துறையில் இருந்து ரவுடி மாமூல் தரும்படி டாட்டா கேட்டாரா?
டாட்டா யார்? பரம்பரை பணக்காரன். அதுவும் மூன்று நான்கு தலைமுறைகளாக பணத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தொழில் துறையில் டாட்டா குடும்பம் ஈடுபட்டு வருகிறது. தயாநிதி மட்டுமல்ல.... இந்தியாவில் 1950க்கு மேல் பிறந்த எல்லாருடைய தந்தையும், தன் மகனை பார்த்து.... நீ கேட்டதெல்லாம் வாங்கித்தர நீ ஒன்னும் டாட்டா-பிர்லா குடும்பத்தில் பிறக்கலை’ என்ற டயலாக்கை கேட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பேமிலி அது.
பத்தாயிரம் கோடி ரூபாயை தொழில் மூலம் சேர்க்க, அந்த நிறுவனம் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டது.... டி.வி.எஸ். குழுமம் இன்று இத்தனை கோடிகள் கொண்ட நிறுவனமாக மாறியது எப்படி? மலையாள மனோரமா பத்திரிகையின் வளர்ச்சி எப்படி? சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எப்படி இத்தனை வளர்ச்சி கண்டது. அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் கிளைகள் இன்று 70க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறதே எப்படி? இதெல்லாம் ஒரு நாளில் அல்லது ஒரு வருடத்தில் நடந்த சாகசமா? இந்த குழுமங்கள் எல்லாமே குறைந்து முப்பது வருடங்களாக தொழிலில் இறங்கி மேலே வந்தவை?
10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் என்ற பெயரை பெற டாட்டா குடும்பத்தின் உழைப்பு என்ன? அவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ.வும்.... எம்.பி.யுமாகி அமைச்சர்களாக வலம் வந்து பணத்தை லவட்டிக் கொண்டவர்களா?
பத்து வருடங்களில் கலாநிதியும் தயாநிதியும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 20 முதல் 30க்குள் வரும் அளவுக்கு எப்படி முடிந்தது? அந்த வேகம் தான் 70 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் தொழில் துறையில் தாதாவாக இருக்கும் டாட்டா குடும்பத்துடன் மோத வைத்தது?
அதுவும் டி.டி.எச். என்ற தொழில்நுட்பம் மூலம் டிவி சேனல்களை காட்டும் தொழிலில்

தமிழ்நாட்டில் டாட்டாவின் நிறுவனம் கால் பதிக்கக் கூடாது.... அப்படி கால் பதித்தால், அதில் பங்கு வேண்டும் என்று மிரட்டுவதற்கு தயாநிதிக்கு என்ன துணிச்சல்?
டாட்டாவை தயாநிதி மிரட்டினார் என்று செய்தி வந்த போதே கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும். பேராண்டி....உனக்கு அனுபவம் பத்தாது. நானே இங்க இருக்கற தொழிலதிபர்களை மிரட்டினது கிடையாது என்று அறிவுரை கூறி தயாநிதியை தலையில் தட்டிவைத்திருந்தால்... இந்த அவமானம் வந்திருக்குமா?
தயாநிதி யார்? முரசொலி மாறனின் மகன். முரசொலி மாறன் யார்? கருணாநிதியின் அக்காள் மகன். முரசொலி மாறனுக்கு முகவரி யார் கருணாநிதி. முரசொலி மாறனின் வளர்ச்சிக்கு காரணம் யார் கருணாநிதி. முரசொலி மாறன், மத்தியில் அமைச்சராக இருந்ததற்கு காரணம் யார் கருணாநிதி.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி சன் டிவி என்ற தொழிலை தொடங்க காரணம் யார் கருணாநிதி. அதற்கு வங்கியில் இருந்து 6 கோடி ரூபாய் கடனுதவி வாங்கிக் கொடுத்தது யார் கருணாநிதி. அதையும் எப்படி வாங்கிக் கொடுத்தார் தி.மு.க.வின் சொத்துக்களை வங்கியில் கேரண்டி கொடுத்து?
இப்படி வளர்ந்த மாறனின் மகன்கள், தாத்தாவின் மார் மீதே முட்டினார்களே? பேரன்கள் மீது தாத்தா வைத்த பாசம் மோசமாகிவிட்டதே. பதிலுக்கு அவர்கள் காட்டிய பாசமும் விசுவாசமும் என்ன? குடும்பத்தில் யார் பெரியவர் என்ற மோதலில் ஸ்டாலினையும் அழகிரியையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே இந்த பேரன்கள்?
கருணாநிதியின் பாசம் கண்ணை மறைத்தது. கடைசியில் பாசத்தால்... இன்று கட்சியே மறையத் தொடங்கிவிட்டதே?
கருணாநிதியின் சுயநலத்தால் கட்சியும் இன்று கலகலத்துவிட்டது. குடும்பமும் பொல பொலவென உதிர்கிறது.
சரி... அது போகட்டும். தயாநிதிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஏன் ராசி இல்லை.ராசி என்றால், ஏதோ ஜோதிட ரீதியாக சொல்லும் அர்த்தம் இல்லை. ராசி என்பது, அதற்கான பக்குவம் வரவில்லை என்பதுதான் அதன் உண்மையான கருத்து.

ஒரு தொழில் செய்ய வேண்டும். அதை தெரிந்து செய்ய வேண்டும். அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை நெளிவு சுளிவுகளை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான், அத்தொழிலில் இருக்கும் நன்மை தீமைகள் தெரிய முடியும்.

இதெல்லாம் எதுவுமே அறிந்துக் கொள்ளாமல், தங்கள் குடும்ப அதிகாரத்தின் மூலம் தொழில் நடத்தி வந்தவர் தயாநிதி!
முதலில் அவர் நடத்திய தொழில் என்ன? எச்.எப்.ஓ. என்ற டிஸ்கொத்தே டான்ஸ் தொழிலை, அருணா இன் ஓட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். டிஸ்கொத்தே டான்ஸூக்கு வரும் கூட்டம் யார்? காசு கொழுத்தக் குடும்பமும், கட்டப்பஞ்சாய்த்து செய்து, அதில் வரும் காசை அடாவடியாக செலவழிக்கும் கும்பலும் தான் டிஸ்கொத்தேவுக்கு வரும்.
அந்த கும்பலை டான்ஸ் ஆடும் போது அடக்கி ஆள பவுன்சர்கள் என்ற தடியர்கள் கூட்டத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்களை வைத்துக் கொண்டு தொழில் செய்துக் கொண்டிருந்தார். அதாவது பத்து அடியாட்களை வைத்து தொழில் நடத்தும் எண்ணம் படைத்தவருக்கு, என்ன மனோபாவம் இருக்கும் என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழில் தொடங்கினாலும், அடியாட்களை வைத்து அடக்கியாள வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பின்னர், சுமங்கலி கேபிள் விஷன் என்ற தொழிலில், கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அமர்ந்தார். அங்கேயும் உருட்டல், மிரட்டல் பணிகளே பரிணாமித்தது.
இந்த நேரத்தில் தான், அவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு மத்திய அமைச்சராக்கும் யோகம் அடித்தது. அடிப்படையில், தயாநிதிக்கு அந்தப் பதவியை தக்க வைத்துக் கொண்டு, 50 வருடம் அரசியல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால்................. எப்படி நடந்திருப்பார்?

சிவசங்கரனை மிரட்டி அவரது கம்பெனியை விற்க வைத்திருக்கமாட்டார்?
பின்னர் அவரையே கைது செய்து சிறையில் அடைக்க துடித்திருக்க மாட்டார்?

கேபிள் டிவி தொழிலில் வந்த சிட்டி கேபிள், ஹாத்வே குழுமங்களின் கேபிள்களை அறுக்கும்படி உத்தரவிட்டிருக்கமாட்டார்?
டாட்டாவை எதிர்த்திருக்கமாட்டார்?
அழகிரியுடன் மோதியிருக்க மாட்டார்?
தாத்தா கருணாநிதியை எதிர்த்து பேட்டி கொடுத்திருக்கமாட்டார்?
-இப்படி எத்தனையோ மாட்டார்........ என்று வாசகங்கள் வரும்.
முதலில், 2004ம் ஆண்டில் 36 வயதில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்த போது, அவருக்கு இருந்த பக்குவம் போதாது. வயது... பணம்.... அதிகாரம்... இதெல்லாம் அவரை ஆட்டிப்படைத்துவிட்டது. 2004ம் ஆண்டு பதவிக்கு வந்த அவர், 2007ம் ஆண்டு பதவியை இழந்தார். அடுத்து எப்படியோ, குடும்பம் ஒன்று சேர்ந்து 2009ம் ஆண்டு மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். 2011ம் ஆண்டு பதவி போனது.
முதல் முறை மூன்று வருடங்களும், இரண்டாவது முறை இரண்டு வருடங்களுமே அவரால் மத்திய அமைச்சராக முடிந்தது.
ஸ்பெக்டரம் ஊழல் விவகாரத்தில் ராசாவை சிக்க வைக்க செக் வைத்தவரே தயாநிதி தான் என்ற குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினராலே வைக்கப்படுகிறது. அதே பூதம் தன்னையே தாக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருந்தால்.... இன்று இந்த நிலை வந்திருக்குமா?
அதாவது இங்கே மீண்டும் ஒரு முறை பழைய பாடலை நினைவு கூற வேண்டியிருக்கிறது.
“நான் ஒரு ராசியில்லா ராஜா” என்ற பாடல் அல்ல அது.
தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் குடும்ப நிழலில் வளர்ந்ததால், கஷ்ட நஷ்டங்களையும் அறியாமல் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்றவர் தயாநிதி. இந்த உயரத்தை அடைய டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் ஆகியோர் கடந்து வந்த பாதை என்ன என்பதை ஒரு நாள் அவர் சிந்தித்துப் பார்த்திருந்தால்....
இதோ அந்த பாடல்...
ஆற்றங்கரையின் மரமும்..
அரசறிய வீற்றிருந்தார் வாழ்வும்...
விழுமன்றோ!
avatar
Guest
Guest


Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by ரஞ்சித் Sat Aug 06, 2011 5:43 pm

நான் ஒரு முட்டாளுங்க நல்லா தெரிஞ்சவங்க நாலு பேறு சொன்னாங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by அருண்வினோ Sat Aug 06, 2011 5:46 pm

அருமையான பதிவு...
நல்லது கெட்டதை பகுத்து தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by மகா பிரபு Sat Aug 06, 2011 7:29 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by ரா.ரமேஷ்குமார் Sat Aug 06, 2011 8:39 pm

அருமையான‌ ப‌திவு... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by positivekarthick Sun Aug 07, 2011 6:40 am

அருமை !!!!அருமை !!! அருமையிருக்கு


நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Pநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Oநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Sநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Iநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Tநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Iநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Vநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Eநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Emptyநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Kநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Aநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Rநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Tநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Hநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Iநான் ஒரு ராசி இல்லாத ராஜா! Cநான் ஒரு ராசி இல்லாத ராஜா! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by sathishkumar2991 Sun Aug 07, 2011 6:50 am

ரசிக்கவைத்த பதிவு


சதீஷ்குமார்
நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Eegarai.net_medium
நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655 நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655 நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655 நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655 நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655 நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655 நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by balakarthik Sun Aug 07, 2011 10:11 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் ஒரு ராசி இல்லாத ராஜா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் ஒரு ராசி இல்லாத ராஜா! Empty Re: நான் ஒரு ராசி இல்லாத ராஜா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum