புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_m10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_m10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_m10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_m10மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர்


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:36 am

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்கப்போவதாகக் கூறிக்கொண்டு தமிழ்மக்களுக்கு எதிராக
மிகப்பெரிய அவலத்தை மேற்கொண்ட மகிந்த அரசினை சர்வதேச குற்ற
விசாரணைக்குட்படுத்துவதற்கு சிங்கள கட்சிகளே ஆயத்தமாகிவருவதாக கொழும்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. சிங்களக் கடும்போக்காளராக சிறிலங்காவில் கோலோச்சிக்கொண்டிருக்கும்
மகிந்த அரசின் மீது மேற்குலகம் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கு ஆயத்தமாகி
வருகின்றவேளை, பெரும்பான்மையினத்தின் கொழுத்த ஆதரவுடைய சிங்களக் கட்சிகள் பல
இணைந்து மேற்குலகின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக
அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.

அடுத்த நாடாளுமன்றத்
தேர்தலுக்கு முன்பதாக, மகிந்த அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் முன்னணி ஒன்றைக்
கட்டமைக்கும் பணியில் தென்னிலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் மும்முரமாக
ஈடுபட்டு வருகின்றனர் என்றும் -

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி,
மங்கள - சந்திரிகா தலைமையிலான புதிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன்
இணைந்து ஜே.வி.பியினரையும் இதில் சேர்த்துக்கொள்வதற்கான இரகசியப் பேச்சுக்கள்
தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் -

ஆனால், மகிந்தவைப் போர்க்குற்றவாளியாக
சர்வதேசத்திற்கு முன்பாக நிறுத்தும் பாரிய வேலைத்திட்டத்துக்கு ஜே.வி.பி தவிர்ந்த
ஏனைய கட்சிகள் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்து அதற்கான செயற்பாடுகளில்
இறங்கியிருப்பதாகவும் - செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

நாட்டை மீட்ட
தேசிய வீரனாக மகிந்த போற்றப்படுவதாகக் கூறப்படும் சிறிலங்காவின் அரசியல் களத்தில்
இந்தப் புதிய முன்னணியின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் என்ன? இந்த முன்னணியின்
அரசியல் கருத்துருவாக்கம் செயல் ரீதியாக சாத்தியமானதா?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:36 am

அதாவது, தென்னிலங்கை மக்கள் சிறிலங்கா ஆட்சி பீடத்தின் உண்மையான தோற்றத்தைக் காணத்
தொடங்கியிருக்கும் சமிக்ஞைகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தமிழ் மக்களின்
போராட்டத்தை நசுக்கி அதனை வேரோடு அறுத்தெறிந்துவிட்டால், சிறிலங்கா சுபீட்சம்
பெற்றுவிடும் என்ற சிங்கள ஆட்சியாளர்களின் வெற்றுவேட்டுக்களை இவ்வளவு காலமும்
நம்பிய சிங்கள மக்கள் தற்போது சிறிலங்காவின் உண்மையான நிலைமையை உணரத்
தொடங்கியிருக்கிறார்கள்.

போரின் உண்மை நிலைமை எதையுமே தெரியப்படுத்தாமல்
தென்னிலங்கை மக்களை ஓருவித மயக்க நிலையில் வைத்து அரசியல் நடத்திவந்த மகிந்த அரசு,
தற்போது சர்வதேச ரீதியில் தாறுமாறாக விமர்சிக்கப்படுகையில் அதன் தாற்பரியத்தை
சிங்கள மக்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். மகிந்தவின் போர் வெற்றியைக்
கொண்டாடி வீதிவீதியாக வெடி கொளுத்தி மகிழ்ந்த சிங்கள மக்கள், இன்று தமது அடுத்த
வேளை உணவுக்கான தொழில்துறை, சர்வதேசத்தினால் தண்டிக்கப்பட போகிற மகிந்தவினால்
இல்லாமல் போகப்போகிறது, சிறுபான்மையினத்தின் மீது ஈவிரக்கமற்ற முறையில் நடத்திய
போருக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் இன்று சிங்கள தேசம் முழுவதுமே
குற்றவாளிக்கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது, நாட்டின் பொருளாதாரம்
சீரழிந்து அதன் விளைவுகளை அப்பாவி மக்களாகிய தாமே அனுபவிக்கவேண்டிய நிலை
தோன்றப்போகிறது -

போன்ற பல்வேறு யதார்த்தமான அச்சநிலை சிங்கள தேசத்தில்
முளைவிடத் தொடங்கியிருக்கிறது. தனது சுயநல அரசியல் வாழ்வுக்கு மகிந்த சிங்கள
மக்களையும் பகடைக்காய்கள் ஆக்கியிருக்கிறார் என்ற கருத்து, படித்த சிங்கள மக்கள்
மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது. அவர்களில் பலர், ''விடுதலைப்புலிகளை
அழித்துவிட்டீர்கள் சரி. அடுத்தது என்ன?" என்ற கேள்வியை பகிரங்கமாகவே கேட்கத்
தொடங்கிவிட்டார்கள்.

இரண்டு பக்கமும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,
விடுதலைப்புலிகளின் கொடூரம் என்று கூறப்பட்டதை, தனியே சிங்கள ஊடகங்களில் படித்து
அரசாங்கத்தை மேன்மை தங்கிய இடத்தில் வைத்துப்போற்றிய சிங்களமக்கள், இன்று
விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடம் நிலவும்போது, அரச படைகளின் கொடூரத்தை உணரத்
தொடங்கியுள்ளனர். சிறிலங்காக் காவல்துறையினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் சிங்கள
மக்களை படுபயங்கரமாக சீற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றமை ஊடகங்கள் பேசிக் களைத்த
உண்மைகள்.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:37 am

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில், ஆளும் மகிந்த அரசோ இதைப்பற்றியெதுவும்
கவலையில்லாத ஓர் ஆட்சிக்கட்டமைப்பாக - ரோமாபுரி எரிந்த வேளை நீரோ மன்னர் பிடில்
வாசித்தது போல - தற்போதைய தனது அரசை இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆட்சிப் பீடத்தில்
வைத்திருக்கலாம் என்ற நோக்குடன் தனது அரசியலை நடத்திவருகிறது. சர்வதேசம் விதிக்கும்
நிபந்தனைகளைத் தூக்கியெறிந்துவிட்டு தனது நிகழ்ச்சிநிரலின் கீழ் நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் மகிந்த, பண்டாரநாயக்க குடும்ப அரசியலைப் போல தனது குடும்ப அரசியலை
எவ்வளவு காலமும் நீடிக்கலாம் என்பதில் முழுமூச்சாக முயற்சி செய்துவருகிறார்.


இந்த நடவடிக்கைகள் எல்லாம் சிங்கள மக்களை பெருமூச்செறிய வைத்துள்ளதுடன்
தமது எதிர்காலநிலை குறித்துச் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. போர் முடித்த
மகிந்தவின் இந்தக் கோளாறுகள் சிங்கள மக்களை இயல்பாகவே மாற்றுத்தலைமை ஒன்றை நோக்கிய
பாதையில் பயணிக்கத் தள்ளிவிடும் என்பதை சிங்கள எழுத்தாளர்களே எதிர்வுகூறத்
தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் மகிந்தவுக்கு எதிரான கூட்டணி
உருவாக்கம் சிங்கள மக்களுக்கு ஒரு மாற்றுவழியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அங்கு
உருவாக்கியிருக்கிறது. சிறிலங்கா சுதந்திர கட்சி எனப்படும் பண்டாரநாயக்கவின் சொத்து
ஆண்டாண்டு காலமாக அதிலிருக்கும் அரசியல்வாதிகளால் மக்கள் மத்தியில் சோசலிசத்தை
வளர்த்து நவநாகரீக அரசியலிலிருந்து நாட்டுமக்களை தொலைவிலேயே பேணிவந்திருக்கிறது.
ஆனால், பொருளாதாரம் எனப்படும் மாறும் உலகுக்கான உரிய மருந்தை ஐக்கிய தேசிய கட்சியே
இதுவரை சிறிலங்கா அரசியல் வரலாற்றில் - ஒப்பீட்டு ரீதியாக பார்த்தால் -
நேர்த்தியாகக் கையாண்டுவந்திருக்கிறது. இனிவரப்போகும் உலக மாற்றத்திற்கு ஏதுவாக
நாட்டின் எதிர்காலத்தைக் கொண்டுசெல்லக்கூடிய வல்லமை ஐக்கிய தேசிய கட்சியிடமே உள்ளது
தவிர, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அது கடினமான இலக்காகவே இருக்கும் என்ற கருத்து
பலமாகவே தோன்றியுள்ளது. ஆகவே, ஐக்கிய தேசிய கட்சிய அங்கம் வகிக்கும் புதிய முன்னணி
மக்கள் ஆதரவை பெறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கும் என்று கூறமுடியாது.


இந்தப் புதிய அரசியல் சூழலை, மகிந்தவுக்கு எதிரான புதிய அரசியல் முன்னணி
நேர்த்தியாக முன்னெடுப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதாவது,
உள்நாட்டில் மகிந்தவுக்கு எதிராக கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தப்
பொருளாதார விடயத்தை முன்னிலைப்படுத்தியும் -

சர்வதேசத்தின் மத்தியில்
மகிந்த தலைமையிலான அரசினை வலுவிழக்கச்செய்து அதனை அரசியலில் அஸ்தமிக்கச் செய்வதற்கு
போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தியும் இந்த புதிய அரசியல்
முன்னணி களமிறங்கியிருக்கிறது. கடந்த தடவை அரச தலைவர் தேர்தலுடன் அரசியலில் அரைவாசி
அஸ்தமித்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு மகிந்தவின் போர் வெற்றி
முற்றமுழுதாகவே மூடுவிழா செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து
மீண்டும் எழுந்துகொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசியல் அஞ்ஞாதவாசமிருந்த
சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில் எழுந்து நடப்பதற்கும் பாரிய களமாக
விரிந்துள்ள சிறிலங்காவின் புதிய முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் உள்நாட்டில்
மட்டுமல்ல வெளிநாட்டிலும் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ஈழநேசன் தமிழ் இணைய சஞ்சிகை




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக