Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?
4 posters
Page 1 of 1
ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?
கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களாகிறது. கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை. தமிழின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலை தயாரித்தால் கமல் நடித்த மூன்று படங்களேனும் அதில் இடம்பெறும். நடிகன் ஒரு முகம். திரைக்கதையாசிரியர் இன்னொரு முகம். தேவர் மகனின் திரைக்கதை தமிழின் ஆகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. இயக்குனராக ஹேராம், விருமாண்டி. பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என்று உதிரி முகங்கள் பல.
சினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம்.
யார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.
இன்று கமல் ரசிகன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன? அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா?
உறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.
அன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெரிய துயரம்? நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது?
கமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.
ஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ரஜினியே இவரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவாஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ரஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயாரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவாஜியோ, எந்திரனோ அல்ல.
நடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம்.
இயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம்பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது? இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.
பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யாரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது?
சிவாஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவாஜி ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதைக் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது?
கமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.
நன்றி - வெப் துனியா
சினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம்.
யார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.
இன்று கமல் ரசிகன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன? அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா?
உறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.
அன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெரிய துயரம்? நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது?
கமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.
ஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ரஜினியே இவரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவாஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ரஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயாரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவாஜியோ, எந்திரனோ அல்ல.
நடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம்.
இயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம்பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது? இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.
பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யாரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது?
சிவாஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவாஜி ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதைக் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது?
கமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.
நன்றி - வெப் துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?
உண்மை தான் இது எல்லோர் மனதிலும் உள்ள ஒரு பேராசை தான். சரியான நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது கட்டுரையாக,
சட்டென்று கிளப்பி கியரைப்போட்டால் ஒரு அன்பே சிவம் ஒரு ஹேராம் விருமாண்டி அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன ....
தாகமாய் இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பாக்க ஆசையா யிருக்கு கமல் தாங்க...
ஒரு ரசிகனின் ஆசையை சரியான நேரத்தில் சரியான படைப்பைத் தந்து பூர்த்தி செய்வது ஒரு திறமையான கலைஞனின் கடமையல்லவா....
சட்டென்று கிளப்பி கியரைப்போட்டால் ஒரு அன்பே சிவம் ஒரு ஹேராம் விருமாண்டி அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன ....
தாகமாய் இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பாக்க ஆசையா யிருக்கு கமல் தாங்க...
ஒரு ரசிகனின் ஆசையை சரியான நேரத்தில் சரியான படைப்பைத் தந்து பூர்த்தி செய்வது ஒரு திறமையான கலைஞனின் கடமையல்லவா....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?
கமலுக்கு நடிப்பு கூடவே பிறந்ததாகும் அவர் ரசிகர்களை திருப்தி படுத்துவார்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையா அஞ்சான்?
» ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
» கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
» சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில்
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா விஜய்?
» ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
» கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
» சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில்
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா விஜய்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|