ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

+14
அசுரன்
செல்ல கணேஷ்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
Aathira
பிஜிராமன்
kitcha
ரேவதி
bala23
அருண்வினோ
மகா பிரபு
பூஜிதா
சதாசிவம்
18 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]


Last edited by சதாசிவம் on Sat Aug 27, 2011 11:39 am; edited 3 times in total


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Jan 14, 2012 7:53 pm

அணிலாடும் முற்றம்

காதலர் / கணவன் அருகில் இருக்கும் போது காதலிக்கு / மனைவிக்கு வேறு உலகம் தேவையில்லை. "ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி" என்று கூறும் பழமொழியும் இதன் வழி வந்ததுதான். அப்படி என்ன ஒரு சந்தோஷம் அவர்களுக்கு, ஆணுக்கு அன்றிலிருந்து இன்று வரை வீட்டுக்கு வெளியே ஆயிரம் பணியும், பொழுதுபோக்கும் இருந்தது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, வேலை சென்றாலும் பெண்களை அன்புடன் கவனிக்கும் கணவன், காதலிக்காக காத்திருக்கும் காதலன் என்று இவர்களின் இணைப்பு, அருகாமை பெண்களுக்கு இனம் புரியாத சந்தோஷத்தை தருகிறது. வெளிநாடு வேலை செய்யும் கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று காத்திருக்கும் மனைவியும் இந்த நிலை தான். இப்படி பொருள் தேடி பிரிந்த தலைவன் இல்லாத நான் யாரும் இல்லாத வீட்டின் நிலை போல் உள்ளது என்பதை கூறும் அழகான குறுந்தொகைப் பாடல் இது.

திணை : பாலை
பாடல் 14: அணிலாடும் முற்றம் (பாடல் 41)
பாடியர் : பெயர் தெரியவில்லை, அவருக்கு வைத்த பெயர் அணிலாடு முன்றிலார்
கூற்று : தலைவனைப் பிரிந்த தலைவி பாடும் பாடல்

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பெண் தோழி அவர் அகன்ற ஞான்றே


பொருள் விளக்கம்

காதலன் அருகில் இருக்கும் போது, ஊர் முழுதும் மனிதர்கள் நிறைந்து எங்கும் மகிழ்ந்து கொண்டாடும் திருவிழா கூட்டம் நடுவில் இருப்பது போல் நான் மகிழ்ந்து இருந்தேன். அவர் இல்லாத இந்த தருணத்தில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அணில் வந்து ஆடும் நடு முற்றம் போல் கேட்பாரற்று பொலிவிழந்து கிடக்கிறேன் தோழி.

பாடலின் சிறப்பு

குறுந்தொகைப் பாடலின் சிறப்பு அதில் வரும் உவமை நயம் தான். மிகப்பெரிய சோகத்தை அழகான உதாரணத்தில் ஒரு சில வரிகளில் வடிப்பது குறுந்தொகையின் சிறப்பு. அப்படி ஒரு உதாரணம் தான் அணில் ஆடும் முற்றம். காதல் செய்யும் தருணத்தில் கல்லூரியிலோ, அலுவலகத்திலோ நம் துணை அருகில் இருக்கும் போது வேறு யார் இருந்தாலும் ஏன் இறந்தாலும் நம்மை அது சலனம் செய்வதில்லை. காதலனோ காதலியோ இல்லையென்றால் ஏதோ பாலைவனத்தில் நடுவில் உள்ளது போல் இருக்கும். அவர்களை எப்போது காண்போம் என்று மனம் துடிக்கும். அணில் மிகவும் பயந்த சுபாவம் உள்ள விலங்கு, ஒரு சிறு சலனம் கேட்டாலும் ஓடி விடும், அது தைரியமாக வந்து விளையாடும் முற்றம் என்றால் வீட்டில் ஒருவரும் இல்லை என்ற மறை பொருள் இதில் ஒளிந்துள்ளது. அது போல் தலைவன் இருக்கும் போது ஊரே உடன் அருகில் இருப்பது போல் உணர்வதும், அவன் அருகில் இல்லாத போது வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று யார் இருந்தாலும் ஒருவரும் இல்லாத வீடு போல் என் நிலை உள்ளது என்று புலம்பும் தலைவியின் சோகத்தை அழகாகக் கூறும் பாடல் இது.

தொடரும்


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon Jan 23, 2012 11:43 am

காதலித்த நாட்கள்

காதலிக்கும் நாட்கள் எத்தனை சுகமானது, நெருக்கத்திலும் சுகம், நெருடி ஊடல் கொண்டு கோபிப்பதும் சுகம். கோபித்து ஊடல் தணிந்து கூடுவதும் சுகம். இப்படி காதலிக்கும் காலங்கள் அத்தனையும் சுகமானது. ஆனால் காதலிக்கும் காலங்கள் வெகு விரைவாக சென்று விடுகிறது. காதலித்து கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும் போதே காதலிக்கும் காலங்கள் கழிந்து விடுகிறது. இப்படி விரைவாக கழிந்த காலங்களை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றின் அமைந்த பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடல் 15: மீனெறி தூண்டில் (பாடல் எண் : 54)
கூற்று : தலைவனுடன் கழித்த நாள்கள் குறித்த தலைவியின் கூற்று
பாடியவர் : பெயர் தெரியவில்லை, பாடலின் வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் மீனெறி தூண்டிலார்

யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனோடு ஆண்டு ஒழிந்தன்றே


பொருள் விளக்கம்

நானோ இங்கு இருக்கிறேன், என் நிலைமை கவண் கள் வீசுபவர் ஒலி கேட்டு பயந்து நடங்கிய காட்டு யானை சாப்பிட நினைத்து வளைத்த மூங்கில் தழைகளை கைவிட்டது போல் உள்ளது. மீனகப்பட்ட தூண்டிலை தூண்டில் எரிந்தவன் விரைவாக எடுத்து விடுவது போல் அவனுடன் சந்தோஷமாக பழகி இருந்த நாள்கள் கழிந்தன.

பாடலின் சிறப்பு

பெண்ணின் மென்மையான குணமும், அவளின் நிலையும் இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது. யானை மூங்கில் தழைகளைத் தின்ன அதை தும்பிக்கையால் வளைத்து ஒடித்து தின்னும். யாரோ வருவது கேட்டவுடன் ஒடித்த கிளையை அப்படியே விட்டுச் சென்று விடும். மரத்தில் இருந்து ஒடிக்கப்பட்ட கிளை மீண்டும் மரத்தில் ஒட்டாது, ஒரு சில நாட்களில் அந்த கிளை காய்ந்து சருகாய் மாறும். அது போல் தான் இந்த தலைவியின் நிலைமையும் தலைவனாலும் அனுபவிக்கப்பட வில்லை. மீண்டும் குடும்பத்தில் ஒட்ட மனமுமில்லை. குடும்பதிலிருந்து விலகவும் தைரியமில்லை. பாதி மரத்தில் ஒடிந்து தொங்கும் கிளை போல் இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் அந்தரத்தில் உசாலாடுகிறது தலைவியின் மனம். தலைவனுடன் கழித்த நாட்கள் வெகு விரைவாக கழிந்து விட்டதே, அவன் மீண்டும் எப்போது வருவான் என்று ஏக்கப்படும் கவலை இந்தப் பாடலில் வெளிப்படுகிறது.

காதல் வளரும்.


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Jan 28, 2012 6:18 pm

காதலன் அணைப்பு

காதலிக்கும் போது கரைகடப்பதும் ஒரு சுகம், ஆயிரம் ஒழுக்கம் பேசினாலும் ஆண் பெண் ஈர்ப்பை கடந்தவர் வெகுக் குறைவு. இப்படி ஒரு ஈர்ப்பில் காதலனும், காதலியும் தழுவிக் கொள்கின்றனர். காதலில் அன்பு, ஆர்வம் அரவணைப்பு, ஆதங்கம், ஆசை, அருள், அமைதி இப்படி கட்டி அணைக்கும் போது வெளிப்படுகிறது. ஆண் காமத்தை நோக்கி நகர்ந்தாலும், காதலை நோக்கி நகரும் தன்மை பெண்களுக்கு இயற்கையிலே உண்டு. இவர்களின் எதிர்ப்பார்பு உண்மையான காதலும், தங்களை கைக்குள் அடக்கும் ஆண்மையும், ஆசையுடன் அரவனைக்கும் அரவணைப்பும் தான். இப்படி அணைத்த காதலனின் அழகான மார்பை நினைத்து வருந்தும் தலைவியின் கூற்றில் அமைந்த பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடியவர் : மாடலூர் கிழார்.
பாடல் : என்ன இந்த நோய்
கூற்று : இரவை உணர்த்திய தோழிக்கு தலைவியின் பதில்

சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னா
ய்

பொருள் விளக்கம்

பரண் மேல் குறவன் கொளுத்திய கொள்ளி விண்மீன்களைப் போல் மினுமினுக்கும். இப்படி அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

பாடலின் சிறப்பு

வசதி குறைந்த குறவன் வீட்டில் ஒளியேற்ற தீப்பந்தம் பயன்படுத்தப்பட்டது என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது. இப்படி எரியும் பந்தத்தில் இருந்து புறப்படும் சிறு தீப்பொறிகள் சற்று தூரம் பறந்து மறைந்து விடும். இதை வானில் மின்னும் விண்மீன்களோடு ஒப்புமை செய்தது சிறப்பாகும். இப்படி மின்னும் தீப்பொறிக்கு ஆயுள் குறைவு. இது போல் மினுமினுக்கும் தலைவனின் மார்பை அணைத்த சுகமும் குறைந்த ஆயுளை உடையது. சுகமாக இருந்தது, ஆனால் விரைவில் முடிந்தது. அதனை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவனை அணைத்தால் வருத்தம் போகிறது. இது என்ன நோய் தோழி என்று தோழியிடம் புலம்பும் புலம்பல். வயிறு நிறைந்து உண்ட பின்பும் இலையில் பரிமாறும் பாயாசம் இன்னொரு கரண்டி கிடைத்தால் சுகமாக இருக்கும் என்று நமக்கு தோணும் நினைப்பை போல்.
இரவை உணர்த்திய தோழிக்கு இரவில் வரும் விண்மீன்களை உவமையாகச் சொன்னது இந்த பாடலில் உள்ள சிறப்பு,

காதல் வளரும்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by இளமாறன் Sat Jan 28, 2012 7:57 pm

அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

அழகான விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by செல்ல கணேஷ் Sun Jan 29, 2012 10:45 am

தோழமைக்கு,
மிக்க நன்றி! உங்களின் பதிவுகளுக்கு.
குறுந்தொகை போன்ற நல்ல காதல் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை. இது வெறும் வார்த்தைகள் அல்ல. காதல் தெறிப்புகள். குறுந்தொகை போன்று போதை தரும் ஒன்று இல்லை தான். மனதை காதலால் நிரப்பி கிறங்க செய்யும் விந்தை.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Jan 29, 2012 12:40 pm

இளமாறன் wrote:
அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

அழகான விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி இளமாறன் :நல்வரவு:


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Jan 29, 2012 12:46 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக்க நன்றி! உங்களின் பதிவுகளுக்கு.
குறுந்தொகை போன்ற நல்ல காதல் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை. இது வெறும் வார்த்தைகள் அல்ல. காதல் தெறிப்புகள். குறுந்தொகை போன்று போதை தரும் ஒன்று இல்லை தான். மனதை காதலால் நிரப்பி கிறங்க செய்யும் விந்தை.

மிக்க நன்றி கணேஷ்.
நன்றி நன்றி

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

ஒவ்வொரு பதிவு செய்யும் போதும் எந்த பாடலை போடுவது என்று குழம்பும் அளவுக்கு ஒவ்வொரு பாடலும் தித்திக்கும் தேன். அன்று முதல் இன்று வரை காதலும் ஒரே சாயலோடு இருப்பது இன்னொரு மகிழ்ச்சி. மனிதனின் அக உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுவதில் தமிழ் இலக்கியங்கள் சிறந்தவை. அதில் மகுடமாக இருப்பது இந்த குறுந்தொகை பாடல்கள்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அசுரன் Sun Jan 29, 2012 1:30 pm

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

என்னை மிகவும் கவர்ந்த வரிகளாக இதை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழர்கள் மிகுந்த மரியாதை, தெய்வபயம், நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அருமையான உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.. அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Jan 29, 2012 5:40 pm

அசுரன் wrote:
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

என்னை மிகவும் கவர்ந்த வரிகளாக இதை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழர்கள் மிகுந்த மரியாதை, தெய்வபயம், நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அருமையான உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.. அன்பு மலர்

நன்றி அசுரன்.
நன்றி
தமிழன் காதல், வீரம், நட்பு ஆகிய அனைத்திலும் சிறந்த நாகரீகத்தில் வாழ்ந்தான். இப்படிப் பட்ட பாடல்களைப் படிக்கும் போது நம் சமுதாயம் எவ்வளவு உயர்வான நிலையில் இருந்தது என்று அடுத்த தலைமுறைக்கு தெரியும். இதை எடுத்து செல்வது நம் கடமை.


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Feb 04, 2012 9:14 am

காதலியின் அணைப்பு

காதல் செய்யும் காலத்தில் வெகு இயல்பாக நடைபெறும் உரசல், நெருக்கும், அணைப்பு சுகமானது. பைக்கில்லில் பயணம் செய்யும் போது, விலகி அமர்ந்தாலும் நெருகி வர வைப்பது சாலையின் மேடு பள்ளங்கள் மட்டுமல்ல காதல் மனதில் எழும் ஆசையின் மேடு பள்ளங்களும் தான் காரணம். தொடுவது போல் தொட்டு, படுவது போல் பட்டு, பட்டும் படாதது போல் இருப்பதில் காதலிக்கும் பெண்கள் வல்லவர்கள். பெண்கள் தழுவதில் அவசரம் உடையவர்கள், வெகு நேரம் அணைப்பில் இல்லாமல் பெண்மையின் நாணத்தால் (ஞானத்தால்) உடனடியாக விலகி விடும் குணம் உடையவர்கள் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகிறது. இப்படி ஒரு நெருக்கத்தை அனுபவித்த தலைவன் தவிக்கும் தவிப்பு இந்தப் பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் : 17 -தலைக் குழவி ( பாடல் எண் : 132)
பாடியவர் : சிறைக்குடி ஆந்தையார்
கூற்று ; தவிக்கும் தலைவனின் பாடல்

கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே


பொருள் விளக்கம்

தழுவதில் அவசரமும், மீண்டும் பார்த்து பார்த்து ரசிக்கும் அழகையையும், குவிந்த மென்மையான மார்பகங்கள், மலர்க் கொடி போன்ற வாசனை மிகுந்த கூந்தல் உடையவளை எப்படி மறப்பேன் ? மேச்சல் நிலத்தில் மேயச் சென்ற பசுவை எதிர் நோக்கி காத்து இருக்கும் தலைக் கன்று போல் என்னை விரும்பி பார்த்து (காத்து ) இருக்கிறாள். எப்படி மறப்பேன் அவளை.........

தொடரும்.......


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 5 Empty Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum