Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
+14
அசுரன்
செல்ல கணேஷ்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
Aathira
பிஜிராமன்
kitcha
ரேவதி
bala23
அருண்வினோ
மகா பிரபு
பூஜிதா
சதாசிவம்
18 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
First topic message reminder :
காதல் சுரங்கம் குறுந்தொகை
காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.
காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.
குறுந்தொகையின் சிறப்பு:
தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.
தமிழின் சிறப்பு
மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
வளரும்.........
[You must be registered and logged in to see this image.]
காதல் சுரங்கம் குறுந்தொகை
காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.
காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.
குறுந்தொகையின் சிறப்பு:
தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.
தமிழின் சிறப்பு
மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
வளரும்.........
[You must be registered and logged in to see this image.]
Last edited by சதாசிவம் on Sat Aug 27, 2011 11:39 am; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
ஐயா.........கடைசியாக பதிந்த பாடலைப் படித்தேன்......அருமையான விளக்கம்..........முல்தான் மாட்டி என்பது எனக்கு புதுமையான சொல், இதை அழகு நிலையங்களில் உபயோகிக்கின்றனரா?
நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,
மிக்க நன்றிகள் ஐயா......
நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,
மிக்க நன்றிகள் ஐயா......
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
பிஜிராமன் wrote:ஐயா.........கடைசியாக பதிந்த பாடலைப் படித்தேன்......அருமையான விளக்கம்..........முல்தான் மாட்டி என்பது எனக்கு புதுமையான சொல், இதை அழகு நிலையங்களில் உபயோகிக்கின்றனரா?
நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,
மிக்க நன்றிகள் ஐயா......![]()
![]()
![]()
நன்றி ராமன்,,,,,,
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
சம்பந்தமே இல்லதே கேள்வி கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம் தமிழில் தொல்காப்பியம் மிகச் சிறந்த ஒன்றாக கருதப் படுவது ஏன்.கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா திரு.சதாசிவம் அவர்களே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
நன்றி கிச்சா
தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.
மேலும் விவரங்களுக்கு,
[You must be registered and logged in to see this link.]
தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.
மேலும் விவரங்களுக்கு,
[You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
சதாசிவம் wrote:நன்றி கிச்சா
தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.
மேலும் விவரங்களுக்கு,
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
தொல்காப்பியதிற்கு சிறந்த விளக்கம் ஐயா.....மிக்க நன்றிகள்........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
காதலின் இணக்கம்
[You must be registered and logged in to see this image.]
காதலன் காதலி சந்திப்பு மிகவும் ரம்மியமானது, சிருங்காரச் சுவை உடையது. காதலிக்கும் போது காதலன் காதலி சந்திப்பு பல மணி நேரம் நிகழ்ந்தாலும் ஒரு சில வினாடிகளில் கழிந்தது போல் ஒரு மாயத்தோற்றத்தை நமக்கு கொடுக்கிறது. பேசப் பேச இனிக்கிறது, சீ, ரொம்ப மோசம், அப்புறம், அப்புறம் என்று ஒன்றும் இல்லை என்றாலும் நான்கு மணி நேரம் ஆனாலும் சுவையாக பேச முடிகிறது. இப்படி ஆள் இல்லாத இடத்தில் தலைவனை காண வந்த தலைவியின் தோழி, தலைவனுக்கு கூறும் பாடல், காலையில் ஆரம்பித்த உங்கள் சந்திப்பு மாலை வரை தொடர்கிறது, நேரம் ஆகிவிட்டது, பொழுது சாய்ந்து விட்டது, நீங்கள் பேசியது போதும் பிறகு பேசலாம், நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறும் அழகான பாடல். இன்று கூட காதலிக்கும் தோழியரைப் பார்த்து அவர்களின் தோழிகள் கேட்கும் கேள்வி அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ, எப்பவும் போனும் கையும்மா இருக்கிற, இது சரியில்லை. அது போல் இருக்கும் ஒரு பாவனையில் எழுந்த பாடல்.
பாடல் 11:நாரை மிதிக்கும் என் மகள்
திணை : நெய்தல் (தோழியின் கூற்று)
பாடியது : பொன்னாகனார்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே
பொருள் விளக்கம்:
கடற்கரையில் நெய்தல் மலர் கிடத்தி என் பொம்மையை வைத்து விட்டு உன்னை சந்திக்க வந்திருந்தாள் என் தலைவி, அழகிய தேரை உடைய தலைவனே, என் மகள் போல் நான் பாவிக்கும் பொம்மையின் நெற்றியை ஆரால் மீனை நன்கு உண்டு வயிறு பெருத்த நாரை மிதித்து விடும், பொழுது சாய்ந்து இருட்டி விட்டது, நான் புறப்படுகிறேன் அவளை என்னுடன் அனுப்பிவிடு.
பாடலில் சிறப்பு:
பொம்மையை தன் மகள் என்று கூறுவது, பெண்கள் பாவை பொம்மையை தங்கள் குழந்தையாக வைத்து விளையாடும் பழக்கம் இருப்பதையும், தலைவியை பொம்மையாக கருதுவதையும் இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. உவமை நயம் உள்ள வரிகள். பொம்மையை அழிக்கும் நாரை போல், பொழுது சாய்ந்ததால் தலைவியின் பெண்மையை தலைவன் அழிக்கும் முன்னர் அவளை திரும்ப அழைக்கும் தோழியின் பயத்தை வெளிப்படுத்தும் பாடல்.
காதல் வந்தால் எவ்வளவு கஷ்டம், பார்க்காமல் இருந்தாலும் கஷ்டம், பார்த்து கொஞ்சம் நேரம் பேசினாலும் கஷ்டம்.
காதல் வளரும் .........
[You must be registered and logged in to see this image.]
காதலன் காதலி சந்திப்பு மிகவும் ரம்மியமானது, சிருங்காரச் சுவை உடையது. காதலிக்கும் போது காதலன் காதலி சந்திப்பு பல மணி நேரம் நிகழ்ந்தாலும் ஒரு சில வினாடிகளில் கழிந்தது போல் ஒரு மாயத்தோற்றத்தை நமக்கு கொடுக்கிறது. பேசப் பேச இனிக்கிறது, சீ, ரொம்ப மோசம், அப்புறம், அப்புறம் என்று ஒன்றும் இல்லை என்றாலும் நான்கு மணி நேரம் ஆனாலும் சுவையாக பேச முடிகிறது. இப்படி ஆள் இல்லாத இடத்தில் தலைவனை காண வந்த தலைவியின் தோழி, தலைவனுக்கு கூறும் பாடல், காலையில் ஆரம்பித்த உங்கள் சந்திப்பு மாலை வரை தொடர்கிறது, நேரம் ஆகிவிட்டது, பொழுது சாய்ந்து விட்டது, நீங்கள் பேசியது போதும் பிறகு பேசலாம், நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறும் அழகான பாடல். இன்று கூட காதலிக்கும் தோழியரைப் பார்த்து அவர்களின் தோழிகள் கேட்கும் கேள்வி அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ, எப்பவும் போனும் கையும்மா இருக்கிற, இது சரியில்லை. அது போல் இருக்கும் ஒரு பாவனையில் எழுந்த பாடல்.
பாடல் 11:நாரை மிதிக்கும் என் மகள்
திணை : நெய்தல் (தோழியின் கூற்று)
பாடியது : பொன்னாகனார்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே
பொருள் விளக்கம்:
கடற்கரையில் நெய்தல் மலர் கிடத்தி என் பொம்மையை வைத்து விட்டு உன்னை சந்திக்க வந்திருந்தாள் என் தலைவி, அழகிய தேரை உடைய தலைவனே, என் மகள் போல் நான் பாவிக்கும் பொம்மையின் நெற்றியை ஆரால் மீனை நன்கு உண்டு வயிறு பெருத்த நாரை மிதித்து விடும், பொழுது சாய்ந்து இருட்டி விட்டது, நான் புறப்படுகிறேன் அவளை என்னுடன் அனுப்பிவிடு.
பாடலில் சிறப்பு:
பொம்மையை தன் மகள் என்று கூறுவது, பெண்கள் பாவை பொம்மையை தங்கள் குழந்தையாக வைத்து விளையாடும் பழக்கம் இருப்பதையும், தலைவியை பொம்மையாக கருதுவதையும் இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. உவமை நயம் உள்ள வரிகள். பொம்மையை அழிக்கும் நாரை போல், பொழுது சாய்ந்ததால் தலைவியின் பெண்மையை தலைவன் அழிக்கும் முன்னர் அவளை திரும்ப அழைக்கும் தோழியின் பயத்தை வெளிப்படுத்தும் பாடல்.
காதல் வந்தால் எவ்வளவு கஷ்டம், பார்க்காமல் இருந்தாலும் கஷ்டம், பார்த்து கொஞ்சம் நேரம் பேசினாலும் கஷ்டம்.
காதல் வளரும் .........
Last edited by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:34 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
காதலின் தவிப்பு
காதல் வந்தால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எத்தனை முறைப் பார்த்தாலும் எவ்வளவுத் தான் பேசினாலும் காதலிக்கும் காலங்கள் சலிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஹவர் (hour) கணக்குல பேசினாலும் அவருடைய கணக்குல பேசுவதால் சலிப்பதில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இன்று உள்ள நவீன காலச் சூழ்நிலையில் கூட ஒருவரை ஒருவர் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல, தோழியரிடம் பொய் சொல்லி, பெற்றவரிடம் பொய் சொல்லி, யாரும் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாது என்று தலையில் முக்காடு இட்டு காதலருடன் நெருக்கமாக பைக்கில் செல்வது எவ்வளவு சுகமானது. அப்பப்பா எத்தனை பெயரை சமாளிக்க வேண்டி உள்ளது.
இந்த காலத்திலே இப்படி உள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு கட்டுப்பாடு இருந்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்கவும். எந்த காலமாய் இருந்தால் என்ன ? எத்தனை பேர் தடுத்தால் என்ன? காதலர் காண்பதை யார் தடுக்க முடியும் ? காதல் சுவை எல்லாத் தடைகளையும் தாண்டும் சக்தியை தருகிறது.
இப்படி தனக்கு தடையாக இருக்கும் பெற்றவரை எண்ணி புலம்பி, தன்னை காணவரும் காதலனை காண தவிக்கும் தலைவியின் சூழலை அழகாகச் சித்தரிக்கும் பாடல் இது.
திணை - குறிஞ்சி
பாடல் 11- என்ன செய்வேன்? (பாடல் எண் : 244)
காணவரும் தலைவனை காண துடித்து தலைவி தவிக்கும் பாடல் இது.
பாடியவர் - கண்ணனார்
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.
பொருள் விளக்கம்
எல்லோரும் தூங்கும் நள்ளிரவில், யாருக்கும் பயப்படாத முரட்டு யானையைப் போல வந்திருக்கிறாய். நீ கதவை தட்டுவது என் காதில் வீழாமல் இல்லை. கேட்டேன் தலைவா. தலை கொண்டை கலைய , தோகை சரிய வேடன் வலையில் அகப்பட்டுள்ள மயில் போல மாட்டிக் கொண்டிருக்கிறேன். என் தாய் என்னை கட்டிக்கொண்டு படுத்து இருப்பதால் என்னால் எழுந்து வர முடியவில்லை. பொறுமையாய் இரு. அவளை ஏமாற்றி விட்டு வருகிறேன்.
பாடலின் சிறப்பு:
தலைவனை முரட்டு யானையாக உருவகப்படுத்துதல், அதாவது சாதாரண யானை, யானைப்பாகனின் அங்குசத்திருக்கு கட்டுப்படும் பயப்படும் . ஆனால் காதல் என்னும் மதம் ஏறியதால் தலைவன் முரட்டு யானைப் போல் எதற்கும் பயப்படாமல் நள்ளிரவில் வந்துள்ளான். மயிலின் அழகு அதன் தோகையும், அழகான கொண்டையும் தான், மயில் வேடனின் வலையில் அகப்படும் போது அதன் கொண்டையும், தோகையும் சிலிர்த்து மகிழ்ச்சியுடன் ஆட முடியாது. அது போல் பெற்றோரின் பாச வலையில் அகப்பட்டுள்ள பெண்கள் தங்களின் தலைவனுடன் கூடி சிலிர்க்கும் மகிழ்ச்சியை அடையமுடியாமல் தவிக்கும் தவிப்பை உணர்த்தும் அழகான பாடல் இது. ஆயிரம் கலாச்சாரம் மாறினாலும், ஐடி துறை வந்தாலும் காதல் காதல் தான், அது தீரா விருந்து.
காதல் வந்தால் தூக்கம் போகும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் தவிப்பு என்ன ? அடுத்த பாடலில் பார்ப்போம்.
காதல் வளரும்.....
காதல் வந்தால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எத்தனை முறைப் பார்த்தாலும் எவ்வளவுத் தான் பேசினாலும் காதலிக்கும் காலங்கள் சலிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஹவர் (hour) கணக்குல பேசினாலும் அவருடைய கணக்குல பேசுவதால் சலிப்பதில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இன்று உள்ள நவீன காலச் சூழ்நிலையில் கூட ஒருவரை ஒருவர் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல, தோழியரிடம் பொய் சொல்லி, பெற்றவரிடம் பொய் சொல்லி, யாரும் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாது என்று தலையில் முக்காடு இட்டு காதலருடன் நெருக்கமாக பைக்கில் செல்வது எவ்வளவு சுகமானது. அப்பப்பா எத்தனை பெயரை சமாளிக்க வேண்டி உள்ளது.
இந்த காலத்திலே இப்படி உள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு கட்டுப்பாடு இருந்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்கவும். எந்த காலமாய் இருந்தால் என்ன ? எத்தனை பேர் தடுத்தால் என்ன? காதலர் காண்பதை யார் தடுக்க முடியும் ? காதல் சுவை எல்லாத் தடைகளையும் தாண்டும் சக்தியை தருகிறது.
இப்படி தனக்கு தடையாக இருக்கும் பெற்றவரை எண்ணி புலம்பி, தன்னை காணவரும் காதலனை காண தவிக்கும் தலைவியின் சூழலை அழகாகச் சித்தரிக்கும் பாடல் இது.
திணை - குறிஞ்சி
பாடல் 11- என்ன செய்வேன்? (பாடல் எண் : 244)
காணவரும் தலைவனை காண துடித்து தலைவி தவிக்கும் பாடல் இது.
பாடியவர் - கண்ணனார்
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.
பொருள் விளக்கம்
எல்லோரும் தூங்கும் நள்ளிரவில், யாருக்கும் பயப்படாத முரட்டு யானையைப் போல வந்திருக்கிறாய். நீ கதவை தட்டுவது என் காதில் வீழாமல் இல்லை. கேட்டேன் தலைவா. தலை கொண்டை கலைய , தோகை சரிய வேடன் வலையில் அகப்பட்டுள்ள மயில் போல மாட்டிக் கொண்டிருக்கிறேன். என் தாய் என்னை கட்டிக்கொண்டு படுத்து இருப்பதால் என்னால் எழுந்து வர முடியவில்லை. பொறுமையாய் இரு. அவளை ஏமாற்றி விட்டு வருகிறேன்.
பாடலின் சிறப்பு:
தலைவனை முரட்டு யானையாக உருவகப்படுத்துதல், அதாவது சாதாரண யானை, யானைப்பாகனின் அங்குசத்திருக்கு கட்டுப்படும் பயப்படும் . ஆனால் காதல் என்னும் மதம் ஏறியதால் தலைவன் முரட்டு யானைப் போல் எதற்கும் பயப்படாமல் நள்ளிரவில் வந்துள்ளான். மயிலின் அழகு அதன் தோகையும், அழகான கொண்டையும் தான், மயில் வேடனின் வலையில் அகப்படும் போது அதன் கொண்டையும், தோகையும் சிலிர்த்து மகிழ்ச்சியுடன் ஆட முடியாது. அது போல் பெற்றோரின் பாச வலையில் அகப்பட்டுள்ள பெண்கள் தங்களின் தலைவனுடன் கூடி சிலிர்க்கும் மகிழ்ச்சியை அடையமுடியாமல் தவிக்கும் தவிப்பை உணர்த்தும் அழகான பாடல் இது. ஆயிரம் கலாச்சாரம் மாறினாலும், ஐடி துறை வந்தாலும் காதல் காதல் தான், அது தீரா விருந்து.
காதல் வந்தால் தூக்கம் போகும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் தவிப்பு என்ன ? அடுத்த பாடலில் பார்ப்போம்.
காதல் வளரும்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
தூக்கம் இழந்த காதலி
தூக்கம் நன்றாக இல்லையென்றால் நம் உடம்புக்கு துக்கம் வந்து விடுகிறது. அதேபோல் மனதுக்கு துக்கம் இருக்கும் போது தூக்கம் வர மறுக்கிறது. காதலின் இனிய தருணங்கள் கழிந்த பின் அடுத்த என்ன செய்யலாம் என்ற ஆலோசனை காதலனுக்கு முன், காதலிக்கு வந்து விடுகிறது. கல்யாணம் செய்து கொள்ளவும் துணிவு வரவில்லை, காதலை விடவும் துணிவு வரவில்லை. உலகளில் உள்ள ஆச்சரியங்களில் வியக்கத்தது காதல் தான். காதலிக்கும் போது விரும்பி, உருகி, நம்மை உருக்கி காதலிக்கும் தலைவிக்கு ஊரார் அறிந்தவுடன் தயக்கம் வருகிறது. காதலிக்கும் போது உள்ள துணிவு, கல்யாணத்திற்கு வருவதில்லை. அப்போது தான் வாழ்க்கையின் அனைத்து கெடுதல்களும் அவள் கண் முன்ன வருகிறது. பெண் என்னதான் பேசினாலும், யாரோ ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டி உள்ளது. ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கும் தாவும் போது, தாவும் கிளை பலம் உள்ளதா என்று ஊகிக்கும் மந்தியின் நிலை தான் பெண்ணின் மனம். முதலில் பெற்றோர், கல்யாணம் ஆனா பிறகு கணவன், பிள்ளைகள் வளர்ந்து விட்டால் பிள்ளைகள் என்று யாராவது ஒருவரின் தோள்கள் தேவைப்படுகிறது. இப்படி காதலின் அடுத்த நிலைக்கு போக நினைக்கும் தலைவியின் நிலையைத் தான் இந்த பாடல் கூறுகிறது.
அந்த காலத்தில் வீட்டில் கொல்லை புறத்தில் மாட்டுத் தொழுவம் இருக்கும். இப்படி இருக்கும் தொழுவத்தில் மாடுகள் கொசு, ஈயின் தொல்லையில் உடலை ஆட்டிக் கொண்டும், சிலிர்த்துக் கொண்டும் தூங்கும். இது இரவு முழுவதும் தொடரும். இப்படி ஆட்டும் போது கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி தொடர்ந்து ஒளித்து கொண்டு இருக்கும். கவலை இல்லாமல் இருக்கும் ஒருவர் சுலபமாக தூங்க முடியும். பக்கத்தில் பட்டாசு வெடித்தாலும் அவர்கள் தூக்கம் கலையாது. ஆனால் மனதில் கவலையும், யோசனையும் உள்ளவர்கள் தூங்கினாலும் லேசான சத்தம் கேட்டாலும், தூக்கம் கலைந்து விடும். காதல் சோகத்தில் உள்ளவர்களை கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு தூக்கமே வருவதில்லை. இப்படி தூக்கம் இல்லாமல் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் சத்தங்கள் நன்கு கேட்கிறது. இரவில் சத்தம் இடும் வாகனங்கள், கூர்க்கா கொடுக்கும் விசில் சத்தம், விடியற்காலையில் கேட்கும் கோவில் மணியோசை, மசூதியில் வரும் பாங்கு சத்தம் என்று பலதும்.
இந்த பாடலும் இப்படி தூங்காமல் தவிக்கும் தலைவிக்கு இரவில் தன் தலையை ஆட்டும் மாடுகளின் கழுத்துகளில் கட்டப்படும் மணியோசை தான் கேட்கிறது.
திணை : குறிஞ்சி
பாடல் 12: சேயரி மழைக்கன் (பாடல் 86)
தலைவனை நினைத்து தூக்கம் இல்லாமல் புலம்பும் தலைவியின் பாடல்.
பாடியவர் : வெண் கொற்றன்
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
பொருள் விளக்கம்
மேகங்களில் இருந்து உடைந்து வழிந்து துளித் துளியாக விழும் மழைத் துளி போல் கண்ணீருடன் நான் புலம்புவதை கேட்க ஆள் இருக்கிறார்களா? மழைத்துரலில் வாடைக்காற்று வீசும் பனிக்காலத்தில் ஈயின் தொந்தரவு தாங்காமல் தலையை ஆட்டும் எருது தலை அசைக்க சப்தம் கேட்கும் மணியோசையை நள்ளிரவில் தூங்காமல் கேட்டு நான் புலம்பும் புலம்பலை கேட்க ஆள் இல்லையா?
ஊரு சனம் தூங்கிடுச்சி,
ஊத காத்து அடிச்சிடுச்சி
பாவி மனம் தூங்கலையே,
அதுவும் ஏனோ தெரியலையே
என்று பாடும் சினிமா பாட்டு இந்த குறுந்தொகைப் பாடலின் சாயல் தான்.
காதல் தொல்லையில் தூக்கம் மட்டுமா போகிறது, எவரைப் பார்த்தாலும் கோவம் வருகிறது, ஓ என்று கத்தலாமா என்று தோணும். இப்படி துடிக்கும் ஒரு பாடலை அடுத்து காண்போம்.
காதல் வளரும் .......
தூக்கம் நன்றாக இல்லையென்றால் நம் உடம்புக்கு துக்கம் வந்து விடுகிறது. அதேபோல் மனதுக்கு துக்கம் இருக்கும் போது தூக்கம் வர மறுக்கிறது. காதலின் இனிய தருணங்கள் கழிந்த பின் அடுத்த என்ன செய்யலாம் என்ற ஆலோசனை காதலனுக்கு முன், காதலிக்கு வந்து விடுகிறது. கல்யாணம் செய்து கொள்ளவும் துணிவு வரவில்லை, காதலை விடவும் துணிவு வரவில்லை. உலகளில் உள்ள ஆச்சரியங்களில் வியக்கத்தது காதல் தான். காதலிக்கும் போது விரும்பி, உருகி, நம்மை உருக்கி காதலிக்கும் தலைவிக்கு ஊரார் அறிந்தவுடன் தயக்கம் வருகிறது. காதலிக்கும் போது உள்ள துணிவு, கல்யாணத்திற்கு வருவதில்லை. அப்போது தான் வாழ்க்கையின் அனைத்து கெடுதல்களும் அவள் கண் முன்ன வருகிறது. பெண் என்னதான் பேசினாலும், யாரோ ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டி உள்ளது. ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கும் தாவும் போது, தாவும் கிளை பலம் உள்ளதா என்று ஊகிக்கும் மந்தியின் நிலை தான் பெண்ணின் மனம். முதலில் பெற்றோர், கல்யாணம் ஆனா பிறகு கணவன், பிள்ளைகள் வளர்ந்து விட்டால் பிள்ளைகள் என்று யாராவது ஒருவரின் தோள்கள் தேவைப்படுகிறது. இப்படி காதலின் அடுத்த நிலைக்கு போக நினைக்கும் தலைவியின் நிலையைத் தான் இந்த பாடல் கூறுகிறது.
அந்த காலத்தில் வீட்டில் கொல்லை புறத்தில் மாட்டுத் தொழுவம் இருக்கும். இப்படி இருக்கும் தொழுவத்தில் மாடுகள் கொசு, ஈயின் தொல்லையில் உடலை ஆட்டிக் கொண்டும், சிலிர்த்துக் கொண்டும் தூங்கும். இது இரவு முழுவதும் தொடரும். இப்படி ஆட்டும் போது கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி தொடர்ந்து ஒளித்து கொண்டு இருக்கும். கவலை இல்லாமல் இருக்கும் ஒருவர் சுலபமாக தூங்க முடியும். பக்கத்தில் பட்டாசு வெடித்தாலும் அவர்கள் தூக்கம் கலையாது. ஆனால் மனதில் கவலையும், யோசனையும் உள்ளவர்கள் தூங்கினாலும் லேசான சத்தம் கேட்டாலும், தூக்கம் கலைந்து விடும். காதல் சோகத்தில் உள்ளவர்களை கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு தூக்கமே வருவதில்லை. இப்படி தூக்கம் இல்லாமல் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் சத்தங்கள் நன்கு கேட்கிறது. இரவில் சத்தம் இடும் வாகனங்கள், கூர்க்கா கொடுக்கும் விசில் சத்தம், விடியற்காலையில் கேட்கும் கோவில் மணியோசை, மசூதியில் வரும் பாங்கு சத்தம் என்று பலதும்.
இந்த பாடலும் இப்படி தூங்காமல் தவிக்கும் தலைவிக்கு இரவில் தன் தலையை ஆட்டும் மாடுகளின் கழுத்துகளில் கட்டப்படும் மணியோசை தான் கேட்கிறது.
திணை : குறிஞ்சி
பாடல் 12: சேயரி மழைக்கன் (பாடல் 86)
தலைவனை நினைத்து தூக்கம் இல்லாமல் புலம்பும் தலைவியின் பாடல்.
பாடியவர் : வெண் கொற்றன்
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
பொருள் விளக்கம்
மேகங்களில் இருந்து உடைந்து வழிந்து துளித் துளியாக விழும் மழைத் துளி போல் கண்ணீருடன் நான் புலம்புவதை கேட்க ஆள் இருக்கிறார்களா? மழைத்துரலில் வாடைக்காற்று வீசும் பனிக்காலத்தில் ஈயின் தொந்தரவு தாங்காமல் தலையை ஆட்டும் எருது தலை அசைக்க சப்தம் கேட்கும் மணியோசையை நள்ளிரவில் தூங்காமல் கேட்டு நான் புலம்பும் புலம்பலை கேட்க ஆள் இல்லையா?
ஊரு சனம் தூங்கிடுச்சி,
ஊத காத்து அடிச்சிடுச்சி
பாவி மனம் தூங்கலையே,
அதுவும் ஏனோ தெரியலையே
என்று பாடும் சினிமா பாட்டு இந்த குறுந்தொகைப் பாடலின் சாயல் தான்.
காதல் தொல்லையில் தூக்கம் மட்டுமா போகிறது, எவரைப் பார்த்தாலும் கோவம் வருகிறது, ஓ என்று கத்தலாமா என்று தோணும். இப்படி துடிக்கும் ஒரு பாடலை அடுத்து காண்போம்.
காதல் வளரும் .......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
காதலன் பிரிவு
காதல் செய்யும் போது காதலர் பிரிவு மிகவும் வருத்தம் தரக்கூடியது. காதலி காதலனைக் காண நினைக்கும் போது அவனை காண சூழ்நிலை சரியில்லாத நிலையில் அவளுடைய வருத்தம் மேலும் ஓங்குகிறது. காதலிக்கும் போது மட்டுமல்ல கணவன் காதலனாக இருக்கும் போதும் இந்த நிலை தான். பெரும்பாலான பெண்களுக்கு காதலித்தவன் கணவனாக அமைவதில்லை. கணவனாக அமைந்த ஆண் மகனோ தன்னை காதலிப்பதில்லை. இவர்கள் கடமைக்காகத் தான் வாழ்கின்றனர். இப்படி வாழும் வாழ்க்கையில் கணவனின் அல்லது மனைவியின் பிரிவோ நெருக்கமோ பெரும் துக்கத்தையோ மகிழ்ச்சியையோ தருவதில்லை. பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இன்னும் சிலருக்கு எப்படா ஆளு ஊருக்கு கிளம்புவான் என்றும், அப்பாடி ஒரு வழியா இவ கிட்ட இருந்து ஒரு சின்ன விடுதலை என்று சந்தோஷம் கொள்ளும் ஆண் மகன்களும் உண்டு. இப்படி கடமைக்காக வாழாமல் காதலுடன் வாழும் மனைவி, பொருள் தேடி அந்நிய தேசம் சென்ற தன் தலைவனின் பிரிவால் பாடும் பாடல் இது. மனைவியை உள்ளூரில் விட்டு விட்டு வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க செல்லும் கணவன் கவனிக்க வேண்டிய பாடல் இது.
திணை : பாலை
பாடல் 13 : முட்டுவேன் கொல் (பாடல் எண்: 28)
பாடியவர் : ஔவையார்
கூற்று : தலைவனின் பிரிவால் வாடும் தலைவி பாடிய பாடல்
முட்டு வேன் கொ றாக்கு வேன் கொல்
ஓரேன் யானு மோர் பெற்றி மேலிட்டு
ஆ, அ ஒல்லெனக் கூவு வேன் கொல்
அலமர லசைவளி யலைப்ப என்
உயவு நோ யறியாது துஞ்சு மூர்க்கே.
பொருள் விளக்கம்
முட்டிக்கொள்வேனா ! என்னை நானே தாக்கிக் கொள்வேனா !!
ஆ ஊ என்று அலறவா ? மெல்லிய காற்று அசைக்கும் என் காதல் (காம) நோயை அறியாது, என் உணர்வுகளை புரியாது அமைதியாக தூங்கும் இந்த ஊரைப் பார்த்து.
பாடலின் சிறப்பு
கணவனைப்/ காதலனைப் பிரிந்த பெண் படும் பாட்டை இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன், கை நிறைய பணம், வசதி, நகை என்று ஊரார் பொறாமை படும் பெண்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆழமான பாடல் இது. மாமியார், நாத்தனார், உடன் வேலைப் பார்ப்பவர்கள், அண்டை அசலார் எல்லாம், அவளுக்கென்ன அவள் கணவன் வெளிநாட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். கொடுத்து வைத்தவள் என்று ஊரார் நினைக்க, அவள் தூங்காமல் கழித்த இரவுகளை யாருக்குத் தெரியும். அந்த வேதனையை உணர்த்தும் பாடல் தான் இது. என்ன தான் தேவைக்கேற்ற வீடு, பணம், வசதி, வாய்ப்பு என்று அனைத்தும் இருந்தாலும் ஆசை அருவியாகப் பொங்கும் போதும், ஆதரவு தேடும் போதும், மனமும் உடலும் அசதியாக இருக்கும் போதும், அடிவயிறு வலிக்கும் போதும், தோள் சாய நினைக்கும் போதும் அரவனைக்கும் அன்பான கணவன் அருகில் இல்லையே என்று புலம்பும் பெண்ணின் வருத்தம் தான் இந்த பாடல்.
காதலன் அருகில் இல்லை என்றால் காதலியின் நிலை என்ன ஆகும். அதை அழகான உவமையுடன் விளக்கும் அழகிய பாடலை அடுத்துக் காண்போம்.
காதல் வளரும்.....
காதல் செய்யும் போது காதலர் பிரிவு மிகவும் வருத்தம் தரக்கூடியது. காதலி காதலனைக் காண நினைக்கும் போது அவனை காண சூழ்நிலை சரியில்லாத நிலையில் அவளுடைய வருத்தம் மேலும் ஓங்குகிறது. காதலிக்கும் போது மட்டுமல்ல கணவன் காதலனாக இருக்கும் போதும் இந்த நிலை தான். பெரும்பாலான பெண்களுக்கு காதலித்தவன் கணவனாக அமைவதில்லை. கணவனாக அமைந்த ஆண் மகனோ தன்னை காதலிப்பதில்லை. இவர்கள் கடமைக்காகத் தான் வாழ்கின்றனர். இப்படி வாழும் வாழ்க்கையில் கணவனின் அல்லது மனைவியின் பிரிவோ நெருக்கமோ பெரும் துக்கத்தையோ மகிழ்ச்சியையோ தருவதில்லை. பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இன்னும் சிலருக்கு எப்படா ஆளு ஊருக்கு கிளம்புவான் என்றும், அப்பாடி ஒரு வழியா இவ கிட்ட இருந்து ஒரு சின்ன விடுதலை என்று சந்தோஷம் கொள்ளும் ஆண் மகன்களும் உண்டு. இப்படி கடமைக்காக வாழாமல் காதலுடன் வாழும் மனைவி, பொருள் தேடி அந்நிய தேசம் சென்ற தன் தலைவனின் பிரிவால் பாடும் பாடல் இது. மனைவியை உள்ளூரில் விட்டு விட்டு வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க செல்லும் கணவன் கவனிக்க வேண்டிய பாடல் இது.
திணை : பாலை
பாடல் 13 : முட்டுவேன் கொல் (பாடல் எண்: 28)
பாடியவர் : ஔவையார்
கூற்று : தலைவனின் பிரிவால் வாடும் தலைவி பாடிய பாடல்
முட்டு வேன் கொ றாக்கு வேன் கொல்
ஓரேன் யானு மோர் பெற்றி மேலிட்டு
ஆ, அ ஒல்லெனக் கூவு வேன் கொல்
அலமர லசைவளி யலைப்ப என்
உயவு நோ யறியாது துஞ்சு மூர்க்கே.
பொருள் விளக்கம்
முட்டிக்கொள்வேனா ! என்னை நானே தாக்கிக் கொள்வேனா !!
ஆ ஊ என்று அலறவா ? மெல்லிய காற்று அசைக்கும் என் காதல் (காம) நோயை அறியாது, என் உணர்வுகளை புரியாது அமைதியாக தூங்கும் இந்த ஊரைப் பார்த்து.
பாடலின் சிறப்பு
கணவனைப்/ காதலனைப் பிரிந்த பெண் படும் பாட்டை இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன், கை நிறைய பணம், வசதி, நகை என்று ஊரார் பொறாமை படும் பெண்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆழமான பாடல் இது. மாமியார், நாத்தனார், உடன் வேலைப் பார்ப்பவர்கள், அண்டை அசலார் எல்லாம், அவளுக்கென்ன அவள் கணவன் வெளிநாட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். கொடுத்து வைத்தவள் என்று ஊரார் நினைக்க, அவள் தூங்காமல் கழித்த இரவுகளை யாருக்குத் தெரியும். அந்த வேதனையை உணர்த்தும் பாடல் தான் இது. என்ன தான் தேவைக்கேற்ற வீடு, பணம், வசதி, வாய்ப்பு என்று அனைத்தும் இருந்தாலும் ஆசை அருவியாகப் பொங்கும் போதும், ஆதரவு தேடும் போதும், மனமும் உடலும் அசதியாக இருக்கும் போதும், அடிவயிறு வலிக்கும் போதும், தோள் சாய நினைக்கும் போதும் அரவனைக்கும் அன்பான கணவன் அருகில் இல்லையே என்று புலம்பும் பெண்ணின் வருத்தம் தான் இந்த பாடல்.
காதலன் அருகில் இல்லை என்றால் காதலியின் நிலை என்ன ஆகும். அதை அழகான உவமையுடன் விளக்கும் அழகிய பாடலை அடுத்துக் காண்போம்.
காதல் வளரும்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|