புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
காதல் சுரங்கம் குறுந்தொகை
காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.
காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.
குறுந்தொகையின் சிறப்பு:
தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.
தமிழின் சிறப்பு
மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
வளரும்.........
[You must be registered and logged in to see this image.]
காதல் சுரங்கம் குறுந்தொகை
காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.
காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.
குறுந்தொகையின் சிறப்பு:
தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.
தமிழின் சிறப்பு
மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
வளரும்.........
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி தோழர்களே,
உங்கள் ஊக்கத்திர்க்கு நன்றி
உங்கள் ஊக்கத்திர்க்கு நன்றி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதலின் அறிகுறிகள்
காதல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்ற பழமொழி போல் காதல் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். இதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொல்காப்பியம் நமக்கு எடுத்து கூறுகிறது. தொல்காப்பியம் ஆண் பெண் இணைவை கற்பு நெறி, களவு நெறி என்று இருவகைப்படுத்துகிறது. கற்பு என்பது பெரியவர்கள் சம்மதத்துடன் நடை பெறுவது. களவு (ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் களவாடுவதால் களவு என்று கூறப்படுகிறது) என்பது தலைவனும் தலைவியும் தன்னுள் தானாக இணைவது. இப்படி இணையும் போது ஏற்படும் உணர்வுகளை தொல்காப்பியம் ஐந்திணை இலக்கணமாக கூறுகிறது. இப்படி காதல் வசப்படும் போது ஏற்படும் உணர்வை இந்த பாடல் வரிகள் அழகாக எடுத்துக் கூறுகிறது. இன்றைக்கும் பொருந்தும் பாடல் இது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழர் அறிவில் சிறந்தவர்கள் என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் : தொல்காப்பியம் -களவியல்
பெண்ணுக்கு (ஆண்களுக்கும்)
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப
பொருள் விளக்கம்
ஒரு ஆடவனை (பெண்ணை ) பார்க்க பார்க்க விருப்பம் எழுதல்
பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல்
என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி மெலிதல்,
தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன் (அவள்) பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள்.
ஆண்களுக்கு (பெண்களுக்கும்)
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா அ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........
மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......
பொருள் விளக்கம்
பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல்
நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல்
அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏறுபடுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)......
பேசும் போது தொட்டு பேச முயற்சி செய்தல் (ரியாக்சன் எப்படி என்று தெரிந்து கொள்ள), நீ தேவதை, ராஜா குமரி என்று பொய்யாகப் பாராட்டுதல், இடம் கிடைத்தால் தழுவுதல், பிரச்சனையை போக்குதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........
இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும்
காதலை வெளிப்படுத்துவதில்லை.
WHEN I SAW YOU I FELL IN LOVE
AND YOU SMILED BECAUSE YOU KNEW - William Shakespeare
காதலுக்கு முதல் தூது கண்கள் தான், குறுந்தொகை என்ன கூறுகிறது அடுத்த பாடலில் காண்போம்.
காதல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்ற பழமொழி போல் காதல் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். இதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொல்காப்பியம் நமக்கு எடுத்து கூறுகிறது. தொல்காப்பியம் ஆண் பெண் இணைவை கற்பு நெறி, களவு நெறி என்று இருவகைப்படுத்துகிறது. கற்பு என்பது பெரியவர்கள் சம்மதத்துடன் நடை பெறுவது. களவு (ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் களவாடுவதால் களவு என்று கூறப்படுகிறது) என்பது தலைவனும் தலைவியும் தன்னுள் தானாக இணைவது. இப்படி இணையும் போது ஏற்படும் உணர்வுகளை தொல்காப்பியம் ஐந்திணை இலக்கணமாக கூறுகிறது. இப்படி காதல் வசப்படும் போது ஏற்படும் உணர்வை இந்த பாடல் வரிகள் அழகாக எடுத்துக் கூறுகிறது. இன்றைக்கும் பொருந்தும் பாடல் இது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழர் அறிவில் சிறந்தவர்கள் என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் : தொல்காப்பியம் -களவியல்
பெண்ணுக்கு (ஆண்களுக்கும்)
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப
பொருள் விளக்கம்
ஒரு ஆடவனை (பெண்ணை ) பார்க்க பார்க்க விருப்பம் எழுதல்
பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல்
என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி மெலிதல்,
தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன் (அவள்) பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள்.
ஆண்களுக்கு (பெண்களுக்கும்)
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா அ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........
மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......
பொருள் விளக்கம்
பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல்
நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல்
அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏறுபடுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)......
பேசும் போது தொட்டு பேச முயற்சி செய்தல் (ரியாக்சன் எப்படி என்று தெரிந்து கொள்ள), நீ தேவதை, ராஜா குமரி என்று பொய்யாகப் பாராட்டுதல், இடம் கிடைத்தால் தழுவுதல், பிரச்சனையை போக்குதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........
இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும்
காதலை வெளிப்படுத்துவதில்லை.
WHEN I SAW YOU I FELL IN LOVE
AND YOU SMILED BECAUSE YOU KNEW - William Shakespeare
காதலுக்கு முதல் தூது கண்கள் தான், குறுந்தொகை என்ன கூறுகிறது அடுத்த பாடலில் காண்போம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதலியின் கண்கள்
காதலில் கண்கள் செய்யும் மாயம் ஆயிரம், சின்ன குறும் பார்வை ஆயிரம் வார்த்தைகளை விழுங்கி விடுகிறது, கோபம், சிருங்காரம் (காதல்/காமம் ), நகை (சிரிப்பு), ஆச்சரியம், பயம், அருவெறுப்பு, வீரம், கருணை, சாந்தம் என்ற நவரசங்களை மட்டும் அல்லாமல் வெட்கம், துக்கம், தவிப்பு என்று துணை ரசங்களையும் கண்கள் வெளிப்படுத்துகின்றது. மருளும் விழிக்கு மான்விழி என்றும், இமைத்து மலரும் விழிக்கு மலர் விழி என்றும், அங்கும் இங்கும் மீன் போல் தாவும் விழிக்கு கயல் விழி என்றும், இதயத்தை துளைக்கும் விழிக்கு வேல் விழி என்றும், குளிர்ந்த விழிகளை பனிவிழி என்றும், அங்கயற்கண்ணி, தாமரைக்கண்ணி என்றும், கண்களால் அருளும் விழிக்கு மீனாட்சி என்றும், அகலமான விழிகளை உடையவளை விசாலாட்சி என்றும், காதல் கொள்ளும் விழிகளை உடையவளை காமாட்சி என்றும், (மனிதர்களின் ஆசையை தன் கண்களால் நிறைவேற்றும் அருளும் பார்வை உடைய தெய்வத்தை காமாட்சி என்றும் ஆன்மீகம் பொருள் சொல்கிறது.) என்று கண்களைக் கொண்டு பல பெயர்களை அழைக்கிறோம், காதலியின் கண்ணை பார்த்து எழுதாத கவிஞனே இல்லை என்று கூறலாம்.
இப்படி ஒரு காந்தக் கண்கள் பற்றி தலைவன் கூறும் அழகான குறுந்தொகை பாடல் இது ...........
திணை : குறிஞ்சி
பாடல் 4 : பூ ஒத்து அலமரும்
பாடல் எழுதியவர் : மள்ளனார்
காதலியின் கண்களைப் பற்றி தலைவன் பாடுவது
"பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென் தோள் மா மலைப் தோள்
பரீ இ வித்திய ஏனல்
குரீ இ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே"
பொருள் விளக்கம்
பூ போல் சுழன்று, அம்பைப் போல் எல்லாரும் அறிய என்னை
துன்புறுத்துகின்றது அவள் விழிகள்,
தேன் போல் தித்திக்கும் குரல், திரண்ட தோள்கள் கொண்டு
பருந்திக் காட்டில் குருவி விரட்டும்
என் தலைவியின் குளிர்ந்த கண்கள்.
கம்ப ராமாயணத்தில் மிதிலைக் காட்சியில் அரண்மனை மாடத்தில் நின்று இருந்த சீதையின் கண்களைப் பார்த்து கம்பனும் இப்படித்தான் கூறுகிறான்........
"கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் எண்ண
மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது
குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்
பெண் கனி நின்றாள்"
பொருள் விளக்கம்
மனிதர்களை கொல்லக்கூடிய கூரான வேலும், உயிர்களை எடுக்கும் எமதர்மன் என்று கூறக்கூடிய உலகில் உள்ள கொடிய விஷயங்களை அனைத்தும் தோற்றுப் போகும் என்று கூறும் வகையில் அனைவரையும் கவரும் விழிகள் கொண்டாள் இவள், அப்படி இப்படி என்று வார்த்தைகளால் வர்ணனை செய்ய முடியாத அழகு விழிகள் இவை, பெரிய குன்றும் , கோட்டை சுவரும், உறுதியான கல்லும், பட்டுப் போன புல்லும் இவள் பார்வையில் உருகும் படி, பெண் கனியான சீதை நின்றாள்.
திருவள்ளுவர் கண் விதுப்பழிதல் (அதிகாரம் 117) என்று பத்து திருக்குறளை
கண்களுக்காக மட்டுமே செலவு செய்திருக்கிறார் என்றால் கண்களின் அருமையை
உணருங்கள்.
இப்படி கண்கள் பற்றி எழுந்த பாடல்கள் ஆயிரம்.........
ஆண்களைப் காப்பாற்ற வேண்டுமானால் பெண்களின் கண்களுக்கு மட்டும் திரை இடுங்கள். அது ஒன்று தான் அனைத்து அட்டகாசத்தையும் செய்கிறது.............அவர்களின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் ...
"கண்ணில் கடைக்கண் பார்வை கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்" - பாரதிதாசன்
ஒரு பெண் கடைக்கண் பார்வை கட்டிவிட்டால் இளைஞர்களுக்கு மண்ணில் இருக்கும் பெரிய மலையும் ஒரு சிறிய கடுகு போல் இருக்கும்.
பெண்கள் கண்ணசைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவதும், பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிஞ்சாச் போச்சு என்று கூறுவதும் இதனால் தான்.
இப்படி ஒருவர் கண்கள் ஒருவரைப் பார்க்கும் பொழுது எண்ண நிகழும், கம்பன் என்ன சொல்கிறார் என்று அடுத்த பாடலில் காண்போம்
காதல் வளரும்......
[You must be registered and logged in to see this image.]
காதலில் கண்கள் செய்யும் மாயம் ஆயிரம், சின்ன குறும் பார்வை ஆயிரம் வார்த்தைகளை விழுங்கி விடுகிறது, கோபம், சிருங்காரம் (காதல்/காமம் ), நகை (சிரிப்பு), ஆச்சரியம், பயம், அருவெறுப்பு, வீரம், கருணை, சாந்தம் என்ற நவரசங்களை மட்டும் அல்லாமல் வெட்கம், துக்கம், தவிப்பு என்று துணை ரசங்களையும் கண்கள் வெளிப்படுத்துகின்றது. மருளும் விழிக்கு மான்விழி என்றும், இமைத்து மலரும் விழிக்கு மலர் விழி என்றும், அங்கும் இங்கும் மீன் போல் தாவும் விழிக்கு கயல் விழி என்றும், இதயத்தை துளைக்கும் விழிக்கு வேல் விழி என்றும், குளிர்ந்த விழிகளை பனிவிழி என்றும், அங்கயற்கண்ணி, தாமரைக்கண்ணி என்றும், கண்களால் அருளும் விழிக்கு மீனாட்சி என்றும், அகலமான விழிகளை உடையவளை விசாலாட்சி என்றும், காதல் கொள்ளும் விழிகளை உடையவளை காமாட்சி என்றும், (மனிதர்களின் ஆசையை தன் கண்களால் நிறைவேற்றும் அருளும் பார்வை உடைய தெய்வத்தை காமாட்சி என்றும் ஆன்மீகம் பொருள் சொல்கிறது.) என்று கண்களைக் கொண்டு பல பெயர்களை அழைக்கிறோம், காதலியின் கண்ணை பார்த்து எழுதாத கவிஞனே இல்லை என்று கூறலாம்.
இப்படி ஒரு காந்தக் கண்கள் பற்றி தலைவன் கூறும் அழகான குறுந்தொகை பாடல் இது ...........
திணை : குறிஞ்சி
பாடல் 4 : பூ ஒத்து அலமரும்
பாடல் எழுதியவர் : மள்ளனார்
காதலியின் கண்களைப் பற்றி தலைவன் பாடுவது
"பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென் தோள் மா மலைப் தோள்
பரீ இ வித்திய ஏனல்
குரீ இ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே"
பொருள் விளக்கம்
பூ போல் சுழன்று, அம்பைப் போல் எல்லாரும் அறிய என்னை
துன்புறுத்துகின்றது அவள் விழிகள்,
தேன் போல் தித்திக்கும் குரல், திரண்ட தோள்கள் கொண்டு
பருந்திக் காட்டில் குருவி விரட்டும்
என் தலைவியின் குளிர்ந்த கண்கள்.
கம்ப ராமாயணத்தில் மிதிலைக் காட்சியில் அரண்மனை மாடத்தில் நின்று இருந்த சீதையின் கண்களைப் பார்த்து கம்பனும் இப்படித்தான் கூறுகிறான்........
"கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் எண்ண
மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது
குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்
பெண் கனி நின்றாள்"
பொருள் விளக்கம்
மனிதர்களை கொல்லக்கூடிய கூரான வேலும், உயிர்களை எடுக்கும் எமதர்மன் என்று கூறக்கூடிய உலகில் உள்ள கொடிய விஷயங்களை அனைத்தும் தோற்றுப் போகும் என்று கூறும் வகையில் அனைவரையும் கவரும் விழிகள் கொண்டாள் இவள், அப்படி இப்படி என்று வார்த்தைகளால் வர்ணனை செய்ய முடியாத அழகு விழிகள் இவை, பெரிய குன்றும் , கோட்டை சுவரும், உறுதியான கல்லும், பட்டுப் போன புல்லும் இவள் பார்வையில் உருகும் படி, பெண் கனியான சீதை நின்றாள்.
திருவள்ளுவர் கண் விதுப்பழிதல் (அதிகாரம் 117) என்று பத்து திருக்குறளை
கண்களுக்காக மட்டுமே செலவு செய்திருக்கிறார் என்றால் கண்களின் அருமையை
உணருங்கள்.
இப்படி கண்கள் பற்றி எழுந்த பாடல்கள் ஆயிரம்.........
ஆண்களைப் காப்பாற்ற வேண்டுமானால் பெண்களின் கண்களுக்கு மட்டும் திரை இடுங்கள். அது ஒன்று தான் அனைத்து அட்டகாசத்தையும் செய்கிறது.............அவர்களின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் ...
"கண்ணில் கடைக்கண் பார்வை கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்" - பாரதிதாசன்
ஒரு பெண் கடைக்கண் பார்வை கட்டிவிட்டால் இளைஞர்களுக்கு மண்ணில் இருக்கும் பெரிய மலையும் ஒரு சிறிய கடுகு போல் இருக்கும்.
பெண்கள் கண்ணசைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவதும், பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிஞ்சாச் போச்சு என்று கூறுவதும் இதனால் தான்.
இப்படி ஒருவர் கண்கள் ஒருவரைப் பார்க்கும் பொழுது எண்ண நிகழும், கம்பன் என்ன சொல்கிறார் என்று அடுத்த பாடலில் காண்போம்
காதல் வளரும்......
[You must be registered and logged in to see this image.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதலர் பார்வை
காதல் வரும் போது, ஒருவரின் பார்வை ஒருவரை ஈர்க்கிறது, ஆணின் பார்வையை வைத்து அவன் மனதில் என்ன இருக்கும் என்று ஊகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு, ஒரு ஆண் காதல் நோக்குடன் , வளைய வருவதும், அசட்டு சிரிப்பும் பெண்களால் சுலபமாக இனம் கண்டு கொள்ள முடிகிறது. விளையாட்டுத்தனமாக காதல் செய்யும் ஒருவன் எதையும் யோசிக்காமல் பெண்களிடம் பேச முடிகிறது, ஆனால் உண்மையில் காதல் செய்யும் ஆண்கள், பெண்களிடம் காதலை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்படுகின்றனர், எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்று எண்ணி காதலை வெளிப்படுத்த சமயம் பார்த்து, சமயம் பார்த்து பல தடவை தோல்வி அடைகின்றனர். இப்படி காதல் நோக்குடன் இருக்கும் ஆடவனுக்கு பெண்கள் சொல்லும் சம்மதம் கண்கள் மூலம் தான், பிறகு ஒரு சிறு சிரிப்பு. இது போதும், ஆண்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. காதலில் இந்த தருணம் தான் ஆயிரம் மகிழ்ச்சியை அளிக்ககூடியது.
" கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்
போதாதென்று ஒரு சின்ன சிரிப்பில், கள்ளச் சிரிப்பில் .............."
இப்படி காதல் வந்து ஒருவர் கண்ணை ஒருவர் பார்க்கும் காட்சி தான் இந்த கம்ப ராமாயணப் பாடலில் வெளிப்படுகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டு உள்ள நாராயணனும், மலர் மேல் இருக்கும் மகா லஷ்மியும் பிரிந்து மீண்டும் சந்திப்பதால் அவர்களுக்கு வார்த்தை அவசியம் இல்லை என்று கம்பர் கூறுகிறார் . முதல் பார்வையில் காதல் அனைவருக்கும் சாத்தியம் இல்லை, ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு, பூர்வ ஜன்ம தொடர்ப்பு காதலர்க்கு முதல் சந்திப்பில் ஏற்படுகிறது.
இது என்ன ? முன் வினை தொடர்ப்பு என்று கம்ப ராமாயணம் பாடலும் இதை கூறுகிறது.
காதலர் பார்வையும், காதலியின் பார்வையின் சிறப்பை கூறும் பாடல்களை காண்போம்.
இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளல்
598. எண் அரும் நலத்தினாள்
இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
அவளும் நோக்கினாள்.
பொருள் விளக்கம்
வார்த்தையில் சொல்லமுடியாத நலன்களை உடையவள், நல்ல இணையவள், கண்களால் கண்ணை கவ்வி, ஒரு கண் மற்றொரு கண்ணை உண்ண, வைத்த கண் மாறாமல், இருவரின் உணர்வும் ஒன்றிட இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
மருங்கு இலா நங்கையும்,
வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு
உயிர் ஒன்று ஆயினார்,
கருங் கடல் பள்ளியில்
கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்,
பேசல் வேண்டுமோ.
பொருள் விளக்கம்
குறை இல்லாத திருமகளும், குற்றம் இல்லாத நாராயணனும் உயிர் ஒன்று, உடல் இரண்டாக ஆகினர், பாற்கடலில் பிரிந்து, பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் சந்தித்ததால் பேச இயலுமோ?
திணை -குறிஞ்சி
பாடல் 5 - தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
(பாடல் : 286)
பாடியவர் - எயிற்றியினார்
"உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறுமஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறு மறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே".
பொருள் விளக்கம்
முல்லைப் பூப்போல் வரிசையாக இருக்கும் வெண்மை பற்கள், அமிழ்தம் ஊரும் செவ்வாய், அகில், சந்தனம் மனம் கமழும் கரிய மணல் போல் உள்ள கரிய கூந்தல், உயர்ந்த மலையில் உள்ள பனிபோல் உள்ள குளிர்ச்சியை உடைய கண்களால் அவள் பார்த்த பார்வையும், அவள் செய்த கள்ளச் சிரிப்பையும் எப்படி மறக்க முடியும்? அதை எண்ணி நான் மகிழ்வேன்....
காதல் வந்து விட்டது, காதலி பார்வையில் சிக்னல் கொடுத்துவிட்டால், அடுத்து என்ன, அனைத்து மகிழ்ச்சி தான், காதலில் மகிழ்வதற்க்கு முன் நம் காதல் உண்மையா என்று எவ்வாறு அறிவது? அடுத்த வரும் குறுந்தொகைப் பாடலில் காண்போம்.
காதல் வளரும் ..............
காதல் வரும் போது, ஒருவரின் பார்வை ஒருவரை ஈர்க்கிறது, ஆணின் பார்வையை வைத்து அவன் மனதில் என்ன இருக்கும் என்று ஊகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு, ஒரு ஆண் காதல் நோக்குடன் , வளைய வருவதும், அசட்டு சிரிப்பும் பெண்களால் சுலபமாக இனம் கண்டு கொள்ள முடிகிறது. விளையாட்டுத்தனமாக காதல் செய்யும் ஒருவன் எதையும் யோசிக்காமல் பெண்களிடம் பேச முடிகிறது, ஆனால் உண்மையில் காதல் செய்யும் ஆண்கள், பெண்களிடம் காதலை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்படுகின்றனர், எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்று எண்ணி காதலை வெளிப்படுத்த சமயம் பார்த்து, சமயம் பார்த்து பல தடவை தோல்வி அடைகின்றனர். இப்படி காதல் நோக்குடன் இருக்கும் ஆடவனுக்கு பெண்கள் சொல்லும் சம்மதம் கண்கள் மூலம் தான், பிறகு ஒரு சிறு சிரிப்பு. இது போதும், ஆண்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. காதலில் இந்த தருணம் தான் ஆயிரம் மகிழ்ச்சியை அளிக்ககூடியது.
" கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்
போதாதென்று ஒரு சின்ன சிரிப்பில், கள்ளச் சிரிப்பில் .............."
இப்படி காதல் வந்து ஒருவர் கண்ணை ஒருவர் பார்க்கும் காட்சி தான் இந்த கம்ப ராமாயணப் பாடலில் வெளிப்படுகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டு உள்ள நாராயணனும், மலர் மேல் இருக்கும் மகா லஷ்மியும் பிரிந்து மீண்டும் சந்திப்பதால் அவர்களுக்கு வார்த்தை அவசியம் இல்லை என்று கம்பர் கூறுகிறார் . முதல் பார்வையில் காதல் அனைவருக்கும் சாத்தியம் இல்லை, ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு, பூர்வ ஜன்ம தொடர்ப்பு காதலர்க்கு முதல் சந்திப்பில் ஏற்படுகிறது.
இது என்ன ? முன் வினை தொடர்ப்பு என்று கம்ப ராமாயணம் பாடலும் இதை கூறுகிறது.
காதலர் பார்வையும், காதலியின் பார்வையின் சிறப்பை கூறும் பாடல்களை காண்போம்.
இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளல்
598. எண் அரும் நலத்தினாள்
இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
அவளும் நோக்கினாள்.
பொருள் விளக்கம்
வார்த்தையில் சொல்லமுடியாத நலன்களை உடையவள், நல்ல இணையவள், கண்களால் கண்ணை கவ்வி, ஒரு கண் மற்றொரு கண்ணை உண்ண, வைத்த கண் மாறாமல், இருவரின் உணர்வும் ஒன்றிட இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
மருங்கு இலா நங்கையும்,
வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு
உயிர் ஒன்று ஆயினார்,
கருங் கடல் பள்ளியில்
கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்,
பேசல் வேண்டுமோ.
பொருள் விளக்கம்
குறை இல்லாத திருமகளும், குற்றம் இல்லாத நாராயணனும் உயிர் ஒன்று, உடல் இரண்டாக ஆகினர், பாற்கடலில் பிரிந்து, பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் சந்தித்ததால் பேச இயலுமோ?
திணை -குறிஞ்சி
பாடல் 5 - தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
(பாடல் : 286)
பாடியவர் - எயிற்றியினார்
"உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறுமஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறு மறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே".
பொருள் விளக்கம்
முல்லைப் பூப்போல் வரிசையாக இருக்கும் வெண்மை பற்கள், அமிழ்தம் ஊரும் செவ்வாய், அகில், சந்தனம் மனம் கமழும் கரிய மணல் போல் உள்ள கரிய கூந்தல், உயர்ந்த மலையில் உள்ள பனிபோல் உள்ள குளிர்ச்சியை உடைய கண்களால் அவள் பார்த்த பார்வையும், அவள் செய்த கள்ளச் சிரிப்பையும் எப்படி மறக்க முடியும்? அதை எண்ணி நான் மகிழ்வேன்....
காதல் வந்து விட்டது, காதலி பார்வையில் சிக்னல் கொடுத்துவிட்டால், அடுத்து என்ன, அனைத்து மகிழ்ச்சி தான், காதலில் மகிழ்வதற்க்கு முன் நம் காதல் உண்மையா என்று எவ்வாறு அறிவது? அடுத்த வரும் குறுந்தொகைப் பாடலில் காண்போம்.
காதல் வளரும் ..............
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................
ஏ ஒத்து ------ கொடிய வேலைகளை செய்யும் வேலை (கூரான வேல்) ஒத்து தலைவியின் கண்கள் இருந்ததாக தலைவன் கூறுகிறான். 'வேவொத்து" என்பது தான் சரியான சொல். வேல் ஒத்து என்று பதம் பிரிக்க வேண்டும், இணைய தளத்தில் இருந்த பாடலைப் அப்படியே பதிந்ததால் இந்த குழப்பம், மன்னிக்கவும்
பரி இ ------"பருத்தி வயலில் இடையே வளர்ந்த" என்பது பொருள் (இடையே திணை பயிர் இருப்பதாக, அதை உண்ண வரும் குருவியை விரட்டும், என் தலைவியின் கண்கள் குளிர்ச்சியானது என்பது போல் பொருள் கொள்ள வேண்டும்)
குரி இ -----குருவி என்பது பொருள்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:பிஜிராமன் wrote:மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................
ஏ ஒத்து ------ கொடிய வேலைகளை செய்யும் வேலை (கூரான வேல்) ஒத்து தலைவியின் கண்கள் இருந்ததாக தலைவன் கூறுகிறான். 'வேவொத்து" என்பது தான் சரியான சொல். வேல் ஒத்து என்று பதம் பிரிக்க வேண்டும், இணைய தளத்தில் இருந்த பாடலைப் அப்படியே பதிந்ததால் இந்த குழப்பம், மன்னிக்கவும்
பரி இ ------"பருத்தி வயலில் இடையே வளர்ந்த" என்பது பொருள் (இடையே திணை பயிர் இருப்பதாக, அதை உண்ண வரும் குருவியை விரட்டும், என் தலைவியின் கண்கள் குளிர்ச்சியானது என்பது போல் பொருள் கொள்ள வேண்டும்)
குரி இ -----குருவி என்பது பொருள்
மிக்க நன்றி ஐயா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உண்மை காதல்
காதல் ஏற்படும் போதும் ஆண்கள் படும் அவஸ்தை அளவிலாதது, காதலியின் இரக்கத்தை பெறுவதற்காக செய்யும் வேலைகள் அதிகம். தலைவிக்கு தன் மேல் இரக்கம் ஏற்படுவதற்காக தலைவியின் தோழியைச் சந்தித்து அவளிடம் தன் நிலைமையை எடுத்து கூறும் பாடல் இது, உண்மை காதல் எது என்று இந்த பாடல் இலைமறைக்காயாக எடுத்து கூறுகிறது.
திணை -குறிஞ்சி
பாடல் 6 - தோழியை நோக்கி தலைவன், தலைவி குறித்து பாடியது(பாடல் : 32)
பாடியவர் - அள்ளூர் நன்முல்லையார்
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.
பொருள் விளக்கம்:
காலைப் பொழுதும், பகல் வேலையும், காதலர் வருந்தும் கையறு மாலையும், உலகம் உறங்கும் நடுநிசியும், உலகம் விழிக்கும் விடியற் காலைப் பொழுதுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்தால் அந்த காதல் பொய்யானது. காதலை வெளிப்படுத்த நான் மடல் ஏறினால் தலைவிக்கு அவமானம் ஏற்படும், வெளிப்படுத்தாமல் இருந்தால் எனக்கு துன்பம் ஏற்படும். நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்.
காதல் வந்தால் தலைவி படும் அவஸ்தை என்ன?, அடுத்த பாடலில் காண்போம்.
காதல் வளரும் .........
காதல் ஏற்படும் போதும் ஆண்கள் படும் அவஸ்தை அளவிலாதது, காதலியின் இரக்கத்தை பெறுவதற்காக செய்யும் வேலைகள் அதிகம். தலைவிக்கு தன் மேல் இரக்கம் ஏற்படுவதற்காக தலைவியின் தோழியைச் சந்தித்து அவளிடம் தன் நிலைமையை எடுத்து கூறும் பாடல் இது, உண்மை காதல் எது என்று இந்த பாடல் இலைமறைக்காயாக எடுத்து கூறுகிறது.
திணை -குறிஞ்சி
பாடல் 6 - தோழியை நோக்கி தலைவன், தலைவி குறித்து பாடியது(பாடல் : 32)
பாடியவர் - அள்ளூர் நன்முல்லையார்
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.
பொருள் விளக்கம்:
காலைப் பொழுதும், பகல் வேலையும், காதலர் வருந்தும் கையறு மாலையும், உலகம் உறங்கும் நடுநிசியும், உலகம் விழிக்கும் விடியற் காலைப் பொழுதுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்தால் அந்த காதல் பொய்யானது. காதலை வெளிப்படுத்த நான் மடல் ஏறினால் தலைவிக்கு அவமானம் ஏற்படும், வெளிப்படுத்தாமல் இருந்தால் எனக்கு துன்பம் ஏற்படும். நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்.
காதல் வந்தால் தலைவி படும் அவஸ்தை என்ன?, அடுத்த பாடலில் காண்போம்.
காதல் வளரும் .........
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதலியின் நிலை
காதல் வந்த போது, ஆண்களால் காதலை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் பெண்களுக்கு காதலை சுலபமாக வெளிப்படுத்த முடியவில்லை, எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்றும் , அவனாக வந்து சொல்லட்டும் என்றும் காத்திருக்கிறார்கள், இப்படி காத்திருக்கும் காலத்தில் அவன் நினைவுகள் தான் முழுக்க இருக்கும், அவனை சுற்றி வளைய வருவார்கள், பட்டும் படாதும், சம்பந்தம் இல்லாமலும் பேசுவார்கள், பெண்கள் செய்யும் இந்த குழப்பத்தை, சைகைகள் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை, எத்தனை புத்திசாலியான ஆண்களும் பெண்களிடம் வாங்கும் பட்டம் முட்டாள், மர மண்டை என்பதுதான்.....
இப்படி தவிக்கும் காதலி கூறும் பாடல் இது,
திணை -குறிஞ்சி
பாடல் 7- தலைவி தலைவன் குறித்து பாடியது (பாடல் : 74)
பாடியவர் - பெயர் தெரியவில்லை, ஆதலால் பாட்டில் உள்ள வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் "விட்டகுதிரையார்"
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப நம் மாண் நலம் நயத்தே ....
பொருள் விளக்கம் :
அவிழ்த்து விட்ட குதிரை பாய்வதைப் போல வானத்தை நோக்கி
மூங்கில்கள் பாயும் மலை நாடன் என் தலைவன் ....
வெயிலில் நிற்கும் காளையைப் போல், எந்த உணர்வு இல்லாமல் நான் அவனை நினைத்து வருந்துவதை அறியாமல், அவனும் என்னை நினைத்து வருந்துகிறான்........
பாடலின் சிறப்பு :
காதலை சொல்ல முடியா பெண்ணின் நிலையும், காதலிக்கும் ஆண் தன்னை நினைக்கிறான், தன்னை எண்ணி வருந்துகிறான் ஆனால் வலிய வந்து காதலை சொல்லவில்லையே என்று வருத்தப்படும் காதலியின் தவிப்பை உணர்த்தும் அழகாக பாடல் இது . "வெயிலில் நிற்கும் எருமையை போல்" என்ற நாம் இன்று கையாளும் சொல்லைப் போல் வெயிலில் நிற்கும் காளை உதாரணமாக கூறப்படுகிறது, காளை வெயிலில் நிற்கும், வருத்தப்படும், ஆனால் அதில் இருந்து விலகாது..மரம் மாதிரி ..இப்படித் தான் ஆண்களின் நிலை ..............
இப்படி காதலை கழுத்துவரை வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணின் நிலையை கூறும் "நற்றிணை" பாடல் இது
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே
பொருள் விளக்கம்:
காதல் நோய் வந்து நம்மை தாக்கும் போது, அதை வெளியில் சொல்லுவது ஆண்களுக்கு சாத்தியம் , ஆனால் நானோ என் பெண்மையின் நாணத்தால் காதலை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன், கடலில் இருந்து எடுக்கப்பட்ட பசும்பொன், கைத்திறமை உள்ள பொற்கொல்லனால் சுத்தம் செய்யும் வரை மின்னாது, அது போல் மின்னாமல், அழுக்கு படிந்த வெண்மை நிறம் கொண்ட பூக்களை உடைய புன்னை மரங்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த என் தலைவன்,
அவன் மார்பை அணைக்க துடிக்கும், அவனோடு சேரக் காத்திருக்கும் என்னை அறியவில்லை தோழி ,,,,இதை என்னவென்று கூறுவது !!!!!!!!!!
[You must be registered and logged in to see this image.]
பாடலின் சிறப்பு :
பெண்மையின் தளுக்கான குணம் இந்த பாடலில் அழகாக வெளிப்படுகிறது, உலகையே ஆண்டாலும் பெண்ணின் மென்மையான பெண்மை பெண்மை தான் .....சுத்தம் செய்யாமல் கிடப்பது முத்தின் வேலை இல்லை, கொல்லனால் சுத்தம் செய்து அது உரிய காலத்தில் தங்கத்துடன் இணைந்து ஆபரணமாக மாறும் போது தான், அந்த முத்து அழகு பெறுகிறது ....அது போல் காதலில் தவிக்கும் பெண், அந்த ஆணுடன் சேர்வது தான் அழகு .....உன் மார்பில் சாயத்துடிக்கும் என் தவிப்பை உணர்ந்து சீக்கிரம் வா தவிக்க விடாதே ...என்பது போல் காதலியின் தவிப்பை அழகாக உணர்த்தும் பாடல் இது ....
உண்மையை கூறவேண்டுமானால், பெண்கள் காமத்தை விட காதலைத் தான் அதிகம் விரும்புகிறார்கள் ....ஆஸ்தி , நகை, பொருள் என்ற விஷயங்களை விட .......அன்பான பார்வை, அரவணைக்கும் தோள்கள், ஆசையாக சாய்ந்து கொள்ள மார்பு, பெண்மையின் மென்மையை உணரும் ஆண்மையும், உண்மையும் தான் ....இது போதும் .........ஆண்களின் கைகளிலும், மார்பிலும் குழந்தையாக உலவுவார்கள் ..........
இப்படி தவிப்பது பெண்கள் மட்டுமா? ஆண்களும் தான் ..ஆணின் தவிப்பை உணர்த்தும் குறுந்தொகைப் பாடலை அடுத்துக் காண்போம் ....
காதல் வளரும் .........
காதல் வந்த போது, ஆண்களால் காதலை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் பெண்களுக்கு காதலை சுலபமாக வெளிப்படுத்த முடியவில்லை, எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்றும் , அவனாக வந்து சொல்லட்டும் என்றும் காத்திருக்கிறார்கள், இப்படி காத்திருக்கும் காலத்தில் அவன் நினைவுகள் தான் முழுக்க இருக்கும், அவனை சுற்றி வளைய வருவார்கள், பட்டும் படாதும், சம்பந்தம் இல்லாமலும் பேசுவார்கள், பெண்கள் செய்யும் இந்த குழப்பத்தை, சைகைகள் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை, எத்தனை புத்திசாலியான ஆண்களும் பெண்களிடம் வாங்கும் பட்டம் முட்டாள், மர மண்டை என்பதுதான்.....
இப்படி தவிக்கும் காதலி கூறும் பாடல் இது,
திணை -குறிஞ்சி
பாடல் 7- தலைவி தலைவன் குறித்து பாடியது (பாடல் : 74)
பாடியவர் - பெயர் தெரியவில்லை, ஆதலால் பாட்டில் உள்ள வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் "விட்டகுதிரையார்"
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப நம் மாண் நலம் நயத்தே ....
பொருள் விளக்கம் :
அவிழ்த்து விட்ட குதிரை பாய்வதைப் போல வானத்தை நோக்கி
மூங்கில்கள் பாயும் மலை நாடன் என் தலைவன் ....
வெயிலில் நிற்கும் காளையைப் போல், எந்த உணர்வு இல்லாமல் நான் அவனை நினைத்து வருந்துவதை அறியாமல், அவனும் என்னை நினைத்து வருந்துகிறான்........
பாடலின் சிறப்பு :
காதலை சொல்ல முடியா பெண்ணின் நிலையும், காதலிக்கும் ஆண் தன்னை நினைக்கிறான், தன்னை எண்ணி வருந்துகிறான் ஆனால் வலிய வந்து காதலை சொல்லவில்லையே என்று வருத்தப்படும் காதலியின் தவிப்பை உணர்த்தும் அழகாக பாடல் இது . "வெயிலில் நிற்கும் எருமையை போல்" என்ற நாம் இன்று கையாளும் சொல்லைப் போல் வெயிலில் நிற்கும் காளை உதாரணமாக கூறப்படுகிறது, காளை வெயிலில் நிற்கும், வருத்தப்படும், ஆனால் அதில் இருந்து விலகாது..மரம் மாதிரி ..இப்படித் தான் ஆண்களின் நிலை ..............
இப்படி காதலை கழுத்துவரை வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணின் நிலையை கூறும் "நற்றிணை" பாடல் இது
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே
பொருள் விளக்கம்:
காதல் நோய் வந்து நம்மை தாக்கும் போது, அதை வெளியில் சொல்லுவது ஆண்களுக்கு சாத்தியம் , ஆனால் நானோ என் பெண்மையின் நாணத்தால் காதலை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன், கடலில் இருந்து எடுக்கப்பட்ட பசும்பொன், கைத்திறமை உள்ள பொற்கொல்லனால் சுத்தம் செய்யும் வரை மின்னாது, அது போல் மின்னாமல், அழுக்கு படிந்த வெண்மை நிறம் கொண்ட பூக்களை உடைய புன்னை மரங்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த என் தலைவன்,
அவன் மார்பை அணைக்க துடிக்கும், அவனோடு சேரக் காத்திருக்கும் என்னை அறியவில்லை தோழி ,,,,இதை என்னவென்று கூறுவது !!!!!!!!!!
[You must be registered and logged in to see this image.]
பாடலின் சிறப்பு :
பெண்மையின் தளுக்கான குணம் இந்த பாடலில் அழகாக வெளிப்படுகிறது, உலகையே ஆண்டாலும் பெண்ணின் மென்மையான பெண்மை பெண்மை தான் .....சுத்தம் செய்யாமல் கிடப்பது முத்தின் வேலை இல்லை, கொல்லனால் சுத்தம் செய்து அது உரிய காலத்தில் தங்கத்துடன் இணைந்து ஆபரணமாக மாறும் போது தான், அந்த முத்து அழகு பெறுகிறது ....அது போல் காதலில் தவிக்கும் பெண், அந்த ஆணுடன் சேர்வது தான் அழகு .....உன் மார்பில் சாயத்துடிக்கும் என் தவிப்பை உணர்ந்து சீக்கிரம் வா தவிக்க விடாதே ...என்பது போல் காதலியின் தவிப்பை அழகாக உணர்த்தும் பாடல் இது ....
உண்மையை கூறவேண்டுமானால், பெண்கள் காமத்தை விட காதலைத் தான் அதிகம் விரும்புகிறார்கள் ....ஆஸ்தி , நகை, பொருள் என்ற விஷயங்களை விட .......அன்பான பார்வை, அரவணைக்கும் தோள்கள், ஆசையாக சாய்ந்து கொள்ள மார்பு, பெண்மையின் மென்மையை உணரும் ஆண்மையும், உண்மையும் தான் ....இது போதும் .........ஆண்களின் கைகளிலும், மார்பிலும் குழந்தையாக உலவுவார்கள் ..........
இப்படி தவிப்பது பெண்கள் மட்டுமா? ஆண்களும் தான் ..ஆணின் தவிப்பை உணர்த்தும் குறுந்தொகைப் பாடலை அடுத்துக் காண்போம் ....
காதல் வளரும் .........
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|