Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
5 posters
Page 1 of 1
இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
சென்னை: தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு ஆடுகள் தரப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் பேருக்கு தலா நான்கு ஆடுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை விவசாயிகளுக்கு ஆடுகள்
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஏழு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.
நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 1.5 லட்சம் பேருக்கும் இலவசமாக ஆடுகள் வழங்கப்படும்.
நடப்பாண்டில் ரூ. 135 கோடி
நான்கு ஆடுகள் ரூ.10 ஆயிரம் விலையில் வழங்கப்படும். அதாவது ஒரு ஆடு ரூ.2,500 விலை; தீவனச் செலவு ரூ.500 சேர்த்து ஒரு ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் செலவிடப்படும். அதன்படி நான்கு ஆடுகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவிடப்படும். ஆடுகள் காப்பீடு செய்யப்படும். காப்பீடு, ஆடுகளை வாங்கி வருவதற்கான போக்குவரத்துச் செலவு என தனியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.500 ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளைக் கிராம அளவிலான குழு மேற்கொள்ளும். இந்தக் குழு பரிந்துரைக்கும் பயனாளிகளின் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை, கிராமங்களில் உள்ள கிராம சபைகள் செய்யும். ஏழை விவசாயக் குடும்பங்களில் உள்ள பெண்களே பயனாளிகளே இருப்பார்கள்.
விவசாயக் கூலிகளுக்கு மட்டுமே
இலவச ஆடுகளைப்பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாக இருக்க வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பசு, ஆடுகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. அரசுப் பணியில் இருக்கக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் கூட அரசுப் பணியில் இருந்திடக் கூடாது.
மாடு வாங்கினால் ஆடு கிடையாது
இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட (29 சதவீதம் பேர்) மற்றும் பழங்குடியின (1 சதவீதம்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.
இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்கள் இருப்பர். மாவட்ட அளவிலான குழுவில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) இருப்பர். பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கிராம அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் அமைப்பார். இந்த கிராம அளவிலான குழுவில் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு வார்டின் மூத்த தலைவர் உள்ளிட்டோர் இருப்பர்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் விவரங்களைக் கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரும் சரிபார்ப்பர். பயனாளிகள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளா என்கிற விவரம் கிராம நிர்வாக அலுவலரின் துணையுடன் உறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
ஒரு ஆண் ஆடு, 3 பெண் ஆடு
செம்மறி அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல் செய்யப்படும்.
ஆடுகளின் காதில் ஐடி கார்டு
இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடு என்பதைக் குறிக்கும் வகையில், கொள்முதல் செய்யப்படும் ஆடுகளின் இடது காதில் ஓட்டை போடப்படும் அல்லது கயிறு தொங்கவிடப்படும். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இந்த எண் பெரிதாக தெரியும் வகையில் புகைப்படம் எடுக்கப்படும்.
பயனாளிகள் இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு மாடு வாங்க ரூ. 232 கோடி
இதேபோல அரசின் இலவச பசுக்கள் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 பசு மாடுகள் கொள் முதல் செய்யப்படும். அதில் நடப்பாண்டில் மட்டும் ரூ. 56 கோடியில் 12,000 பசுக்கள் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு தரப்படும்.
கலப்பின ஜெர்சி பசுக்கள் இத்திட்டத்திற்காக வாங்கப்படும். இந்த மாடுகள், 5 வயதுக்கு உட்பட்டவையாக இருக்கும்.
இலவச திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெறும் விவசாயிகள் அதை நான்கு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இலவச ஆடுகள் திட்டத்துக்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அதுவே இந்தத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
thatstamizh
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
ஏத்திட்டமா இருந்தாலும் நம்மக்கள் தகுடுத்தத்தம் செய்வதில் வல்லவர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
கஜானாவில் காசு இருக்கா
ஆடு வாங்கினா மாடு கிடையாது மாடு வாங்கினா மிக்சி கிடையாது மிக்சி வாங்கினா கணினி கிடையாது இன்னும் என்ன என்ன கண்டிஷன் இருக்கோ
ஆடு வாங்கினா மாடு கிடையாது மாடு வாங்கினா மிக்சி கிடையாது மிக்சி வாங்கினா கணினி கிடையாது இன்னும் என்ன என்ன கண்டிஷன் இருக்கோ
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
இளமாறன் wrote:கஜானாவில் காசு இருக்கா
ஆடு வாங்கினா மாடு கிடையாது மாடு வாங்கினா மிக்சி கிடையாது மிக்சி வாங்கினா கணினி கிடையாது இன்னும் என்ன என்ன கண்டிஷன் இருக்கோ
அண்ணே இதெல்லாம் இப்போ கொடுக்கலேனா அடுத்து ஓட்டு கிடயாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
இந்த கண்டிஷன் எல்லாம் ஓட்டு போடும் முன் சொல்லையே
இவன்,
ச.பூவிழிராஜா
poovizhi- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011
Re: இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
யாருக்கு எதை கொடுத்தால் பயன் கிடைக்குமோ அதை வழங்குவதுதான் முறை .விதிமுறைகள் வரவேற்க தக்கது.வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எத்தனையோ கிராம புற ஏழைகள் இதன் மூலம் பயன்பெறக்கூடும்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Re: இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
Thiraviamurugan wrote:யாருக்கு எதை கொடுத்தால் பயன் கிடைக்குமோ அதை வழங்குவதுதான் முறை .விதிமுறைகள் வரவேற்க தக்கது.வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எத்தனையோ கிராம புற ஏழைகள் இதன் மூலம் பயன்பெறக்கூடும்
அவர்கள் அனைவரும் ADMK ஆளா இல்லாம இருந்தா சரிதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
» இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்: அரசு அறிவிப்பு
» தீபாவளி பண்டிகைக்காக ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
» அண்ணா பிறந்தநாளில் ஏழைகளுக்கு 4 ஆடுகள்: 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்; ஜெயலலிதா அறிவிப்பு
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
» இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்: அரசு அறிவிப்பு
» தீபாவளி பண்டிகைக்காக ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
» அண்ணா பிறந்தநாளில் ஏழைகளுக்கு 4 ஆடுகள்: 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்; ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|