ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

4 posters

Go down

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Empty நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

Post by Guest Tue Aug 02, 2011 10:19 am

நாளிதழைப் புரட்டி
நான்கு பக்கம் பார்த்ததும்
அடி மனசைக் கடித்தது
அந்தச் செய்தி...

சிங்காரச் சென்னையிலே
நாய்களுக்காய் கண்காட்சி...
ஆஹா ஆஹா
நடிகை கையால் தொடங்கியாச்சு!

‘சுவரும் சுண்ணாம்பும்’
என்றொரு புத்தகத்தில்
உவமைக் கவிஞர் சுரதா
உண்மைக் கவிஞராகி சொன்னார்.
‘நடிகைகள் நாய்கள் வளர்ப்பதேன்?
காவல் காக்கவும்
ஆவல் தீர்க்கவும்..’

பாழாய்ப் போன மனசுக்குள்
அந்த பவள வரி பளிச்சிடவே...
மன்னித்தேன் மனசாட்சியை!

வெளிநாட்டு நாய்கள் எல்லாம்
விலை உயர்ந்த உடையணிந்து
கொலு போல வந்தது காண்...
கூட்டம்தான் குரைத்தது காண்!

மொசுமொசுன்னு முடியிருக்க...
மொழுமொழுன்னு நாக்கிருக்க...
கன்னியிளம் பெண்கள் எல்லாம்
கட்டிப் பிடித்து காட்சி தர...

ஒரு நாயின் விலை என்ன
உள்பக்கம் விசாரித்தேன்...
சில லட்சம் என்று சொன்னார்
பயமெல்லாம் விலை பார்த்தே!

ஏ.சி. காரில் வந்து
இறங்குது நாய்...
ஏதேதோ ஹெல்த் ட்ரிங்க்
குடிக்குது நாய்...
ஞாயிற்றுக் கிழமையென்றால்
நமக்கு
தெருமுனை பாய் மட்டன்...
எல்லா நாளும் இந்நாய்க்கோ
பேக்கேஜிங் மட்டன்தான்!

அடடா மனசுக்குள்

தெருநாயின் ஓசை..
தேவி தியேட்டரிலே
பேய் படம் பார்த்துவிட்டு
பின்னிரவு நேரத்திலே

எல்லீஸ் சாலையில் நடப்பேன்...
பேய் கூட காட்டாத பயத்தை
தெரு நாய் கூட்டம் காட்டும்!

கடுகடு குரைப்பொலியில்
கால்களெல்லாம் நடுநடுங்க....
உயிரைக் கைப்பிடித்து
அறை வந்தால் முழு மூச்சு...
இப்படி
தினம் தோறும் தெருநாய்கள்
தமிழ்நாட்டின் வீதிகளில்
இலவசக் கண்காட்சி

இன்றளவும் நடத்துதய்யா...
எவரேனும் பார்த்ததுண்டா?

ஆனால் நாய்களுக்காய்
ஆடம்பர கிளப் நடத்தும்
சர்வதேச நாய்களுக்காய்
அடடா ஆர்பாட்டம்...
என்னென்ன அழகூட்டம்?

சென்றமுறை இதுபோல
நாய்கட்காய் நடந்தபோது
தொடங்கிவைத்தவர்
மத்திய அமைச்சர்

அப்போது அவர் சொன்னார்
அடிக்கோடிட்டுப் படியுங்கள்!
‘நாய்கள் இறந்தால்
புதைக்க இடமில்லை.

சென்னையில் இரண்டிடத்தில்
நாய்கட்காய் சுடுகாடு’
அமைச்சரின் வாக்குறுதி
ஆஹா எப்படி காண்!

நரநாய்கள் வெறிவேட்டை
தமிழ்த் தாயை குதறுகையில்
நாடே சுடுகாடாய்
நாறியதே ஈழம்...?

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 2

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 5

அங்கே மனிதர்கள்
உடையின்றி உரிமையின்றி
உயிராயும் பிணமாயும்
அலைந்தனரே...

இன்றும் முள்வேலி
சிறையில் குலைந்தனரே...
அந்தக்
கண்ணீர்க் காட்சி
கண்ணுக்குள் தோன்றிவிட்டால்
நாய்களுக்காய் கண்காட்சி
நடத்தத் துணிவீரோ...

தமிழரெல்லாம் நாயினும்
தரம் தாழ்ந்து கிடக்கையிலே...
நாய்களுக்கு ஆடம்பரம்
நியாயமா மனிதர்களே...?

நாய்கள் உரிமையை மதிக்கிறேன்...
உங்களின்
மனித உரிமையை?

- திலீபன்

avatar
Guest
Guest


Back to top Go down

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Empty Re: நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

Post by ரேவதி Tue Aug 02, 2011 10:35 am

செருப்படி வரிகள் நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Empty Re: நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

Post by இளமாறன் Tue Aug 02, 2011 10:54 am

மேல் மட்ட மக்களின் பொழுது போக்கு இந்த நாய் கலாச்சாரம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Empty Re: நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

Post by பூஜிதா Tue Aug 02, 2011 11:01 am

உண்மையான வரிகள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Empty Re: நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

Post by balakarthik Tue Aug 02, 2011 11:13 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு? Empty Re: நாய்களுக்கும் உரிமையுண்டு... எம் மனிதர்களுக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum