புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_m10ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி


   
   
abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Mon Aug 01, 2011 10:17 pm

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவுபடுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதீனமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.

"இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள்மீதும் நோன்பு விதியாக்கப் பட்டுள்ளது. நீங்கள் அதன்மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்" (அல் பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ, பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். "பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேகமூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படவில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
ரமழான் மாதத்தின் சிறப்பு:
'ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல்குர்ஆன் அருளப்பெற்றது. உங்களில் எவர் அம்மாத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்' (அல்பகரா 2:185) 'ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்' (புஹாரி).. இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல்குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக் கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல்குர்ஆனை படிப்பதன்மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன்வழி நடப்பதன்மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன்மூலம் அதன்பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது சிறப்பு:
'ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தாங்கள் விலங்கிடப்படுகின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி)
மூன்றாவது சிறப்பு:
'ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
நான்காவது சிறப்பு:
'ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜூம்ஆவிலிருந்து மற்றொரு ஜூம்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஐந்தாவது சிறப்பு:
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

1- நோன்பு பரிந்து பேசும்: 'நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், 'நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன், இவன் விசயத்தில் பரிந்துரைப்பாயாக'! அல் குர்ஆன் கூறும் 'நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன். எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
2- நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: 'நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதேபோன்று ஒன்றுமில்லை' எனக் கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ)
3- கணக்கின்றி கூலி வழங்கப்படும்: 'ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழுநூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி)


4- நோன்பின் கூலி சுவர்க்கம்:
'நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில்வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள். அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள்,அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டுவிடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
5- நரகத்தை விட்டு பாதுகாப்பு: 'எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்துவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

6- 'நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்)
7- முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்:
'எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

8- மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: 'வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
9- நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: 'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று- அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது- (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

10- கஸ்தூரியை விட சிறந்த வாடை: 'எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாகமிருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.
ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள் நிய்யத்தின் அவசியம்: 'எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ). பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், 'நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா' ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபிவழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். 'நமது விசயத்தில் எவர்கள் புதிய விசயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்). நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ' நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள். நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது' என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி). 'நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) 'ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிடவேண்டாம். ஒரு மிடரு த்ண்ணீரையாவது குடிப்பதைக் கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள்மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவறவிடுவது கவலையான விசயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:'எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம்வரை நன்மையில் இருக்கின்றனர்' என நபி (ஸல்) கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி) நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப் படுத்துபவர்களாவர்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதி)



ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு: 'எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
இரவுக் காலங்களில் நின்று வணங்குவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது' என கூறினார்கள். (புஹாரி) 'எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
உம்ரா செய்வது:
'எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விசயங்கள்: அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது. 'நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை) யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்' (புஹாரி)
ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை: பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும். 'எவன் பொய் சொல்வதையும், அதன்படி நடப்பதையும், விட்டுவிடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி) 'எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்டது பசியையும், தாகத்தையும்
தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

நபி (ஸல்) அல்லாஹ்வின் வழிமுறைப் படி நோன்பு நோற்று அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவோமாக!

நன்றி: முஹம்மது அஸ்கர் முஹம்மது யூசுஃப்


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 01, 2011 10:19 pm

நோன்பின் சிந்தனைகள் பகிர்ந்தமைக்கு நன்றி அபு வம்சி ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Aரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Bரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Dரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Uரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Lரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Lரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி Aரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக