புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_c10ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_m10ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_c10ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_m10ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_c10ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_m10ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலின் தானாகவே போலீஸ் வேனில் ஏறியதால் பரபரப்பு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 31, 2011 3:18 pm

திருவாரூர் : சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தின் போது பள்ளி மாணவன் சாலை விபத்தில் இறந்த வழக்கில், திருவாரூர் தி.மு.க., மாவட்டச் செயலர் உட்பட ஏழு பேரை, திருவாரூர் போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். மாவட்டச் செயலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் கொரடாச்சேரியில், மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. அப்போது, பள்ளிக்கு வந்த மாணவர்களை வழிமறித்து மீண்டும் வீட்டிற்கு செல்ல, பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த அரசு பஸ் மீது, லாரி மோதி, விபத்து ஏற்பட்டது. இதில், மாணவன் விஜய் இறந்தான்; 16 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர். போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் தான், பள்ளி மாணவன் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் என, தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் பாலசந்தர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து, கொரடாச்சேரி போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், திருத்துறைப்பூண்டியில் நடக்க இருந்த மொழிப்போர் தியாகி பக்கீர் மைதீன் படத்திறப்பு விழாவில் பங்கேற்க, நேற்று காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் திருவாரூர் வழியாக, திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அப்போது, ஸ்டாலின் காரில் மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனும் பயணம் செய்தார். அதனால், திருவாரூர் போலீஸ் படை, ஆலத்தம்பாடி அருகே ஸ்டாலின் காரை வழிமறித்து, மாவட்டச் செயலரை கைது செய்கிறோம் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்தபோது, மறியலில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்.பி., விஜயன் உள்ளிட்ட தி.மு.க.,வினரும் போலீஸ் வேனில் ஏறிக்கொண்டனர். அவர்கள் திருவாரூருக்கு அழைத்து வரப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்டவர்கள் புலிவலத்தில் இருந்து போலீஸ் வேன் முன், அரசு மற்றும் போலீஸ் துறையை கடுமையாகச் சாடி கோஷம் போட்டவாறு வந்தனர். அனைவரும் நாகை பை-பாஸ் ரோடு வர்த்தகர் சங்க கட்டடத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு, தொண்டர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். திருவாரூர் தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் பாலசந்தர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, திருவாரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சில தி.மு.க.,வினரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸ் வேனில் ஏறிய ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினரை, மதியம் 2 மணிக்கு போலீசார் விடுவித்தனர். ""தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனைத் தான் கைது செய்தோமே தவிர, காரில் இருந்த முன்னாள் துணை முதல்வரை கைது செய்யவில்லை,'' என எஸ்.பி., தினகரன் கூறினார். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து எஸ்.பி., தினகரனிடம் கேட்டபோது, "பூண்டி கலைவாணனை போலீஸ் வேனில் ஏற்றினோம். அப்போது, ஸ்டாலின் உட்பட மற்ற தி.மு.க.,வினரும் வேனில் ஏறிக் கொண்டனர். நாங்களும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது. போலீசார் அவர்களை கைது செய்யவில்லை' என்றார்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 31, 2011 3:19 pm

அப்ப இது ஸ்டாலினோட ஸ்டண்ட் ஆ ? அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 31, 2011 3:22 pm

தினமலரில் படித்து ரசித்தவை :

1. 2G Spectrum கேசில் ஸ்டாலினை கைது செய்ய போலிஸ் வந்து இருந்தால் இப்படி ஓடிபோய் ஏறிக்கொள்வார? ஜாலி

2.சூப்பர் காமடி தாங்க முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.வடிவேலு தலை நகரம் படத்தில் நானு ரௌடி, நானும் ரௌடின்னு மல்லு கட்டி போலிஸ் வான்லே ஏறுவாறே , அதே போல ஸ்டாலினும் விடாப்பிடியா போலிஸ் வேனை துரத்தி புடிச்சி ஏறிட்டாரு. சிரி சிரி

3. வந்த கார் சிறிது பிரேக் பிடிக்காமல் மக்கர் செய்திருக்கும்.கூட இருந்த உடன்பிறப்புக்கள் ,மூணு மாசமா வரும்படி இல்லாததால் தொந்தரவு செஞ்சிருப்பாங்க! தேர்தலில் விட்டதயாவது திருப்பிக் கேட்டிருப்பாங்க ! அவங்க தொல்லை பொறுக்கமுடியாமல் கொஞ்ச நேரம் போலீஸ் வண்டியில் போவோம்னு தானே வலிய போய் லிப்ட் கேட்டிருப்பாரு! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? இவர் கேன்சர் ராசிக்காரர். அழிவு தானாகவே நடக்கும்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக