ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்

2 posters

Go down

 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Empty பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்

Post by சிவா Sun Jul 31, 2011 7:57 am

 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Mic65-31

மஇகா தலைவர் ஜி. பழனிவேல் பிரதமர் இலாகாவில் முழு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார். இதன் வழி இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அக்கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளது.

இன்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் மஇகாவின் 65 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.

“அமைச்சரவையில் இரண்டு இந்தியர்கள் இருந்த துன் ரசாக்கின் காலத்திற்கு திரும்பிச் செல்கிறேன்.

“பழனிவேல் விரைவில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்”, என்று 4,000 பேராளர்களும் பார்வையாளர்களும் எழுப்பிய நீண்ட மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் நஜிப் கூறினார்.

பேரரசர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

“விரைவில் (பதவிப் பிரமாணம்). பேரரசர் திரும்பி வருவதற்காக காத்திருக்கிறோம், அநேகமாக அடுத்த வாரத்தில். பேரரசரிடமிருந்து அதற்கான தேதியைப் பெறுவோம்”, என்றாரவர்.

நஜிப்பின் அமைச்சரவையில் இருக்கும் இன்னொரு இந்தியர் கட்சியின் துணைத் தலைவரான மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்.

பாரிசான் கூட்டணி அமைச்சரவையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு மட்டுமே இருந்தார்.


இரண்டு துணை அமைச்சர்களுக்கு பதிலாக ஓர் அமைச்சர் பதவி….



நான்கு தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனிவேல் 2008 ஆண்டில் அவரது உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். இப்போது செனட்டராக இருக்கிறார்.

செனட்டராக நியமிக்கப்பட்ட அவர், தோட்டத் தொழில் மற்றும் பொருள்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஒரு கூடுதல் முழு அமைச்சர் பதவிக்காக இரண்டு துணை அமைச்சர் பதவிகளை மஇகா விட்டுக்கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

கட்சியில் ஏற்பட்ட பதவிப் போராட்டத்தைத் தொடர்ந்து மஇகாவில் இணைந்துக் கொண்ட பிபிபியின் முன்னாள் தலைவர் டி. முருகையா துணை அமைச்சராக இருந்தார். அவரது செனட்டர் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவுற்றது.

இந்தியர்களின் ஆதரவுக்காக இரு துணை அமைச்சர் பதவிகளை விட்டுக்கொடுத்து ஒரு முழு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தை மஇகாவுடன் செய்துகொள்ள அரசாங்கம் விரும்பியது என்ற நஜிப்பின் செய்தி அவரது உரையின் இறுதிக் கட்டத்தில் கூறப்பட்டது.

“நான் நீங்கள் கூறியதை தெளிவாக கேட்டேன்”, (பழனிவேல் அவரது உரையில் அரசாங்கம் இந்தியர்களின் பிரச்னையைத் தீர்த்தால், இந்தியர்கள் பிஎன்னை ஆதரிப்பர் என்று உறுதியளித்தார்) என்று நஜிப் கூறினார்.


பிஎஸ்எம்மிடம் மன்னிப்பு கோருதலா?…


மஇகா “ஒரு முழு அமைச்சர் பதவிக்காக இரு துணை அமைச்சர் பதவிகளை பண்டமற்று செய்கிறது”, என்ற அவரது அறிவிப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த பிரதமர் நஜிப் அதனை உறுதிப்படுத்தினார்.

பழனிவேலுக்கு வழங்கப்படும் அமைச்சு பின்னர் அறிவிக்கப்படும் என்றாரவர்.

இது அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான அறிகுறியா என்ற கேள்வியை பிரதமர் தட்டிக்கழித்து விட்டார்.

இந்த அறிவிப்பு திடீர் என்று நடத்தப்படலாம் என்று கருதப்படும் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கையாளும் தந்திரமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர், “இல்லை, இல்லை, இல்லை…இது (சமூகத் தலைவர்களுக்கு) கூடுதல் பொறுப்பு வழங்குவதன் மூலம் இந்திய சமூகத்தின் பங்களிப்பைப் பாராட்டுவதாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு உடனடியாக் எதிர்விணை தெரிவித்த பழனிவேல், “இந்த திடீர் அறிவிப்பால் தாம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக” கூறினார்.

“நான் இதைச் தேடிச் செல்லவில்லை…மஇகாவும் இந்தியர்களும் கேட்டிருந்தனர். ஆனால் பிரதமரிடம் (இந்த வேலை) கேட்டதே இல்லை.

“பல ஆண்டுகளுக்குப் பின்னர் சமூகம் விரும்பிதைப் பெற்றுள்ளது. இது வரலாற்றுப்பூர்வமான நடவடிக்கையாகும்”, என்று பழனிவேல் கூறினார்.

ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக அல்லது ஒரு துணை அமைச்சராக இருந்த போதும் தாம் எப்போதுமே “ஒரு முழு அமைச்சரைப்போல் வேலை” செய்ததாகவும் அவ்வாறே தொடர்ந்து கடுமையாக உழைக்கப்போவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அவசரக் காலச் சட்டத்தின் கீழ் 28 நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சோசலிசக் கட்சியின் தலைவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எழுப்பட்ட கேள்விக்கு நஜிப் பதில் கூற மறுத்து விட்டார்.

“இதரப் பிரச்னைகளை எழுப்பாதீர்கள்” என்று அவர் செய்தியாளர்களைக் கடிந்து கொண்டார்.

மலேசியாஇன்று


 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Empty Re: பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்

Post by சிவா Mon Aug 01, 2011 1:02 pm

மக்கள் கருத்து: இரண்டு இந்திய அமைச்சர்கள், மகிழ்ச்சி அடைவதற்குக் காரணம் ஏதுமில்லை

“அம்னோ அமைச்சரவையில் ஆயிரம் இந்தியர்கள் அமைச்சர்களாக இருப்பதைக் காட்டிலும் நீதிக்காகப் போராடும் அம்பிகா ஸ்ரீனிவாசன் போன்ற ஒர் உண்மையான மனிதருடைய மதிப்பு மிகவும் உயர்ந்தது.”


நஜிப்: பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுவார்

என்எக்ஸ்: எல்லா அமைச்சர்களும் மலாய்க்காரர்களாக இருந்தால் கூட மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். உதவி தேவைப்படும் எந்தக் குடிமகனுக்கும் உதவி வழங்குகிற நியாயமான, ஊழல் இல்லாத அரசாங்கமும் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற அரசு தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய நியாயமான சுதந்திரமான தேர்தல்களை நடத்தும் அரசாங்கமுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமாகும்.

நமது அரசியல்வாதிகளுடைய விவேகத்திற்கு அந்த உண்மை எட்டவில்லை எனத் தோன்றுகிறது. மலேசியாவில் எல்லா இனங்களும் ஒன்றையொன்று மதிக்கின்றன, நேசிக்கின்றன. நாம் நமது பல்வகைத் தன்மையில் மகிழ்ச்சி அடைகிறோம். அரசியல்வாதிகள், தங்களது உயிர்வாழ்வுக்காக குறுகிய நோக்கத்துடன் “இன அடிப்படையில் பிரித்தாளுவதில்” மகிழ்ச்சி அடைகின்றனர்.

மெட்ரிக்ஸ்லின்: இன்றைய சிறந்த நகைச்சுவை இது தான்- “துன் ரசாக் காலத்துக்கு மீண்டும் செல்கிறோம்”. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் இரண்டு அமைச்சர்கள். அதில் ஆராவரம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

அமைச்சரவையில் பத்து இந்திய அமைச்சர்கள் இருந்தால் என்ன? சாதாரண இந்தியனுக்கு அதனால் என்ன வேறுபாடு ஏற்படப் போகிறது? மசீசவுக்கு அவர்கள் 20 அமைச்சர்களைக் கொடுத்தால் என்னவாகும்? அதனால் சீனர்கள் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்து விடப் போகிறதா?

பிஎன் கடைப்பிடித்து வரும் மலிவான இனவாத தந்திரங்களை மக்கள் ஏற்கனவே உணர்ந்து விட்டனர். உங்கள் அமைச்சரவையில் 100 இந்தியர்கள், சீனர்கள், கடாஸான்கள், டயாக்குகள் இருந்தாலும் அதனை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. இறுதியில் அவர்கள் எல்லோருமே அம்னோவுக்கு அடிவருடிகள்தானே.

அம்னோ அமைச்சரவையில் ஆயிரம் இந்தியர்கள் அமைச்சர்களாக இருப்பதைக் காட்டிலும் நீதிக்காகப் போராடும் அம்பிகா ஸ்ரீனிவாசன் போன்ற ஒர் உண்மையான மனிதருடைய மதிப்பு மிகவும் உயர்ந்தது.

டூட்: ஜி பழனிவே அல்லது எந்த ஒரு மஇகா தலைவரும் முழு அல்லது அரை அல்லது முக்கால் அமைச்சராக்கப்படுவதை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. பெர்சே 2.0, அவசரக் காலச் சட்ட அறுவர் மீது நஜிப் நடந்து கொண்ட முறை குறித்து ஆத்திரமடைந்துள்ள மலேசியர்களை அந்த அறிவிப்பு சாந்தப்படுத்தும் என அவர் எண்ணுகிறாரா?

ஸ்விபெண்டர்: நஜிப் மஇகா இந்தியர்களிடம் சொல்வது இது தான், பழனிவேல் முழு அமைச்சராக நியமிக்கப்படுவதின் மூலம் “நான் உங்கள் முதுகை சொறிந்து விடுகிறேன். நீங்கள் எனக்கு நிச்சயம் சொறிந்து விட வேண்டும். இது வெறும் தந்திரம்தான். இந்தியர்கள் 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால்- என இந்தியர்களுக்கு விடுக்கப்படும் மருட்டலும் ஆகும்.

உண்மையில் நமது அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு நல்ல விளவுகளைக் கொண்டு வந்தால் போதும் யாரும் அவர்களுடைய தோல் நிறத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. இன அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.

விஜய்47: இந்தியர்கள் ஒரு போதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய இப்போதைய சூழ்நிலைக்கு அவர்களே காரணம். ஒரு வேளை துங்கு அப்துல் ரஹ்மான் தவிர்த்த மற்ற எல்லாப் பிரதமர்களும் வழங்கிய பொய் வாக்குறுதிகளே அவர்களுடைய வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றன. என்றாலும் அவர்கள் பிஎன்னுக்கு வாக்களித்தார்கள்

அதிகாரத்தில் உள்ள யாராவது ஒருவர் பொய் வாக்குறுதி அளித்தால் போதும் அவர்களைக் கவர்ந்து விடலாம். ஆனால் அந்த வாக்குறுதிகள் ஒரு போதும் நிறைவேற்றப்பட மாட்டா.

இது போன்ற வாக்குறுதிகள் உங்களுக்கு மில்லியன் முறைகள் வழங்கப்பட்டிருக்கும். அந்த பிஎஸ்எம் அறுவருடைய விடுதலைக்கு மஇகா செல்வாக்குத்தான் காரணம் என நீங்கள் நம்புகின்றீர்களா?

பிஆர் ரசிகர்கள்: நாளைய தலைப்புச் செய்தி “இந்தியர்கள் ஆதரவு பிஎன்னுக்கு திரும்பி விட்டதாக பழனிவேல் கூறுகிறார்” என இருக்கும். மஇகா தொடர்ந்து கனவு காணலாம்.

நான் ஒர் இந்தியன், நாங்கள் பெர்சேயை ஆதரிக்கிறோம். பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். எனது நண்பர்களும் குடும்பத்தினரும் இவ்வளவு நாள் வரை மஇகாவுக்குத்தான் வாக்களித்து வந்தோம். ஆனால் 2008க்குப் பின்னர் அது மாறி விட்டது.


 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Empty Re: பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 01, 2011 2:03 pm

ஆயிரம் இந்திய அமைச்சர்கள் வந்தாலும், எங்கள் இனத்தின் குறைபாடுகளை தீர்க்கப் போவதில்லை, முடிந்த வரை எங்களை ஏமாற்றி ஏப்பமிடத்தான் பார்ப்பார்கள். இனியும் இந்த ம.இ.கா வை நம்பி இந்த இந்திய சமுதாயம் ஏமாறாமல் இருந்தால், எதிர்காலம் சிறப்பாக, மிகச் சிறப்பாக அமையும். ஐந்து கிலோ அரிசிக்கும் 50ரிங்கிட்டிற்கும் அடங்கி அடுத்த ஐந்தாண்டுகளை தொலைக்கும் சமுதாயமாகத்தானே இருக்கிறது இந்த இழிஞ்சவாய் சமுதாயம். திருந்துவார்களா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்  Empty Re: பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» PTR பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு
» பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார்.
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
»  கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum