புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எம் தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ்ச் சான்றோர் பலர்..இவர்கள் தவிர மேல்நாட்டறிஞர்களும் தமிழின் தொன்மையாலும்;இனிமையாலும் கவரப்பட்டு; இலக்கியப்பணி புரிந்து;தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்கள்.
மேலை நாட்டிலிருந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்களில் நம் தமிழ் மொழியின் ஈர்ப்பால் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்களில் ஜி.யு.போப்,கால்டு வெல், வீரமாமுனிவர் போன்றோர் உண்டு.அதில் வீரமாமுனிவரைப் பற்றித் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இவர்களைப் பற்றி ஒரு சில எதிர்மறையான கருத்துக்களும் உண்டு.ஆனால் இவர்கள் நம் மொழிக்கு செய்த தொண்டு மிகச் சிறப்பானதாகும்.
இத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான இவர், முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.
இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு
மிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
ஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.
வியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். "கலை மலிந்த பாரதமென்பது"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.
இவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.
சில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக "அம்பலக்காடு" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
தமிழ்ப் பணி
இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார்.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும், தேவாரம், திருப்புகழ், நன்நூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதையாக இருந்தது. மக்கள் படிதறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
பிற தமிழ் படைப்புகள் தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.
1738 ல் "தொன்நூல்" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய "நிகண்டுகளை" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு"சதுரகராதி" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள "சதுரகராதியில்" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
தமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்..."தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய "சதுரகராதி" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது "தொன்நூல்" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. "தேம்பாவணி"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்." என்றார்.
ஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி "வீரமா முனிவர்" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.
தமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த "வீரமா முனிவரை" நினைத்துப் போற்றுவோம்.
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். 190pxbeschitamilliterat](https://2img.net/r/ihimizer/img641/5259/190pxbeschitamilliterat.jpg)
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Frbeschi](https://2img.net/r/ihimizer/img405/8631/frbeschi.jpg)
கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்
நன்றி.ta.wikipedia.org
and facebook
மேலை நாட்டிலிருந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்களில் நம் தமிழ் மொழியின் ஈர்ப்பால் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்களில் ஜி.யு.போப்,கால்டு வெல், வீரமாமுனிவர் போன்றோர் உண்டு.அதில் வீரமாமுனிவரைப் பற்றித் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இவர்களைப் பற்றி ஒரு சில எதிர்மறையான கருத்துக்களும் உண்டு.ஆனால் இவர்கள் நம் மொழிக்கு செய்த தொண்டு மிகச் சிறப்பானதாகும்.
இத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான இவர், முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.
இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு
மிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
ஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.
வியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். "கலை மலிந்த பாரதமென்பது"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.
இவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.
சில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக "அம்பலக்காடு" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
தமிழ்ப் பணி
இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார்.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும், தேவாரம், திருப்புகழ், நன்நூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதையாக இருந்தது. மக்கள் படிதறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
பிற தமிழ் படைப்புகள் தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.
1738 ல் "தொன்நூல்" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய "நிகண்டுகளை" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு"சதுரகராதி" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள "சதுரகராதியில்" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
தமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்..."தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய "சதுரகராதி" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது "தொன்நூல்" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. "தேம்பாவணி"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்." என்றார்.
ஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி "வீரமா முனிவர்" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.
தமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த "வீரமா முனிவரை" நினைத்துப் போற்றுவோம்.
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். 190pxbeschitamilliterat](https://2img.net/r/ihimizer/img641/5259/190pxbeschitamilliterat.jpg)
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Frbeschi](https://2img.net/r/ihimizer/img405/8631/frbeschi.jpg)
கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்
நன்றி.ta.wikipedia.org
and facebook
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha wrote:அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
வீரமாமுனிவர் பற்றி விளக்கமான பகிர்வு அளித்த கிட்சவுக்கு நன்றி ..
அவரின் புகைப்படம் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வை.பாலாஜி wrote:kitcha wrote:அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
![]()
![]()
![]()
![]()
வீரமாமுனிவர் பற்றி விளக்கமான பகிர்வு அளித்த கிட்சவுக்கு நன்றி ..
அவரின் புகைப்படம் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி ...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
மேலே ஏற்கனேவே அவருடைய இரண்டு படங்கள் (ஒன்று சிலை) உள்ளன.மீண்டும் உங்கள் பார்வைக்கு மற்றொரு படம்
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Tamil115](https://2img.net/r/ihimizer/img850/6019/tamil115.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
நன்றி நண்பரே ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்த்துக்கள் கிட்சா.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நன்றி - வை.பாலாஜி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் கிட்சா.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
balakarthik wrote:உங்களுக்கு நன்றிகள் பல கிட்சா அறிந்துகொண்டேன் அறியாதவைகளை மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 2000 பதிவுக்கு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![(கிச்சாவின்) 2000 - வது பதிவு. தமிழுக்கு தொண்டு செய்த மேல் நாட்டவர் - வீரமாமுனிவர். Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|