ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன்

+16
யினியவன்
மகா பிரபு
தமிழ்ப்ரியன் விஜி
கலைப்பிரியன்
மனோஜ்
பாரதிப்பிரியன்
ப்ரியா
தாமு
ரூபன்
sasikala
வித்யாசாகர்
rajakalirajan
nandhtiha
selvak
பிரகாஸ்
சிவா
20 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இராவணன் - Page 2 Empty இராவணன்

Post by சிவா Thu Sep 17, 2009 1:44 am

First topic message reminder :

இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.


இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.


இராமாயணத்தில் இராவணன்


இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்


இராவணன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by nandhtiha Thu Sep 17, 2009 8:28 pm

வணக்கம்
நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். விலை ரூ 200/-
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by rajakalirajan Sun Oct 04, 2009 10:52 pm

அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்
????
avatar
rajakalirajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 26/07/2009

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by சிவா Sun Oct 04, 2009 11:48 pm

அழிவுற்றது எனக் கருதப்படும் குமரிக்கண்டம் - மாற்றிவிட்டேன் ராஜாகாளி! இராவணன் - Page 2 678642


இராவணன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by வித்யாசாகர் Mon Oct 05, 2009 1:31 am

இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196 விடை பெறுகிறேன் சகோ..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by sasikala Fri Oct 30, 2009 1:00 pm

இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196
avatar
sasikala
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by ரூபன் Fri Oct 30, 2009 3:30 pm

இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by தாமு Fri Oct 30, 2009 4:22 pm

இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196 இராவணன் - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by ப்ரியா Thu Apr 22, 2010 4:55 pm

அருமை அற்புதம்,தேடற்கரிய செய்திக் களஞ்சியத் தொகுப்பு, நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by priyatharshi on Thu Apr 22, 2010 4:57 pm; edited 2 times in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
இராவணன் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by பாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 7:03 pm

இராவணன் வெட்டு

இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.

கோணமாமலை அமர்ந்தாரே என ஞான சம்பந்தராலும், மன்னும் திருக்கோணமலை என சேக்கிழராலும் மற்றும் அருணகிரிநாதர் உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரால் புகழ்ந்து பாடப்பட்டு அகத்திய முனிவரால் வணங்கப் பெற்றதும் குளக்கோட்ட மன்னனால் திருப்பணி செய்யப்பட்டதும் இராவணேஷசனால் வழிபட்ட பெருமைக்குரிய சிவதலமாம் திருக்கோணேஸ்வரத்தின் உற்சவ காலம் உலகத்தவரின் உற்சவ காலமாகப் போற்றப்படுகிறது.

கைலாசபுராணம், தட்ஷணகைலாசம், திருக்கோணாசல புராணம், கோணேஷர் கல்வெட்டு, திருகோணாசல வைபவம், திருப்புகழ், திருகோணமலை அந்தாதி யாழ்ப்பாண சரித்திரம், சீர்பாதகுல வரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவலிய, மச்ச புராணம் குடுமிபாமலைச் சாசனம் முதலிய எண்ணற்ற நூல்களால் இவ்வாலயத்தின் பெருமை புகழ்ந்துரைக்கப்படுகின்றது.

கோணேஸ்வரம் உன்னத நிலையில் இருந்த காலத்தில் இக் கோவிலின் அர்ச்சகராக இருந்த பண்டிதராஜர் என்னும் புலவரால் பாடப்பட்ட தட்ஷணகைலாச புராணம் என்னும் நூலில் ஆலயத்தின் தோற்றம், ஆதி வரலாறு பின்வருமாறு கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் உண்டான வாக்குவாதத்தில் ஆதிசேஷன் தனது பலத்தைக் காட்டுவதற்காக தனது ஆயிரம் படத்தினாலும் கைலங்கிரியை மறைத்து வாலினால் கைலங்கிரியின் அடிப்பாகத்தை சுற்றினான். இது கண்டு கோபங் கொண்ட வாயு பகவான் தனது பலத்தினால் கைலாசத்தின் தென் பகுதியிலுள்ள மூன்று சிகரங்களைப் பிடுங்கிக் கொண்டு விரைந்து சென்றான். சிவன் வாயு பகவானை அழைத்து அவனது வீரத்தைப் புகழ்ந்து வாழ்த்தி பிடுங்கிய சிகரங்களில் ஒன்றை ஈழத்தின் கீழ் கரையில் வைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அமைய மூன்று சிகரங்களில் நடுச்சிகரமான திருக்கோணேஸ்வரத்தை வைத்தான் என்று தட்ஷண கைலாசம் கூறுகிறது.

திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றை இலங்காநேசன் இராவணேஷ்வரனுடன் தொடர்புபடுத்திக் கூறும் ஒரு புராண வரலாறும் உண்டு. தசக்கிரீவன் தாயாரின் வேண்டுகோளுக்கு அமைய சிவலிங்கம் ஒன்றைப் பெற கைலயங்கிரி சென்றான் என்றும் சிவலிங்கத்தை கொடுத்தருளிய சிவன் இந்த சிவலிங்கத்தை பூமியில் வைத்தால் அதனை மீண்டும் எடுக்க முடியாது. பூமியில் அதனை பிரதிட்டை செய்து வைத்தால் பூமியில் அவனை வெல்லக்கூடியவர் எவருமிலர் என்று கூறியது அறிந்த தேவர்கள் தந்திரம் செய்து லிங்கத்தை பிரதிட்டை செய்யாமல் தடுத்தனர். தனது முயற்சியை கைவிடாத இராவணன் தாயின் ஆசையை நிறைவேற்ற கோணேஸ்வரம் வந்து இறைவனை வேண்டினான் என்றும் சிவலிங்கம் கிடைக்காத கோபத்தால் இராவணன் தனது வாள் கொண்டு கோணமலையை வெட்டினான் என்றும் அதுவே இராவணன் வெட்டு என்று புராண, இதிகாசங்கள் பகருகின்றன.

தட்ஷண கைலாசத்தில் கூறப்பட்டது போல் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை புண்ணிய சிறப்புக்களைக் கொண்ட கோணேஸ்வர ஆலயத்தில் நவரத்தின வீதி, மரகத வீதி, மாணிக்க வீதி, நீல ரத்தின வீதி என ஒன்பது வீதிகளையும் மாட மாளிகைகள் நவரத்தின கோபுரங்கள் மாண்புறு தீர்த்தங்களையும் கொண்ட தேவேந்திர புரமாக விளங்கியதாக அப் புராணம் கூறுகிறது. இதனை இப் புராணத்தில் வரும் பாடலால் அறிந்து கொள்ளலாம்.

வரையெல்லாம் ஆரம் ஆரம் வனமெலாம் நன்கார் நன்கார் நிறைவெல்லாம் சாலி சாலி, நிலையெலாம் கன்னல் கன்னல் தரையெலாம் நீலம் நீலம், தடமெலாம் நாறும் நாறும் கரையெலாம் அன்னம் அன்னம் கடலெலாம் ஈழம் ஈழம் இத்தகைய பெருமை கொள் கோணேஸ்வரத்தின் புகழ் கூறும் இன்னொரு நூல் கவி ராஜவரோதயன் என்பவரால் பாடப் பெற்ற கோணேஸர் சாசனம் என அழைக்கப்படும் கோணேஸர் கல்வெட்டாகும். இந் நூலில் ஆலயத்தின் கோட்டம் கோபுரம் மதில் தீர்த்தம், நிலம் என்பவற்றை அமைத்த குளக்கோட்டன் மன்னனுடைய ஆற்றலையும் அரும் பணியையும் கீர்த்தியையும் இந் நூல் கூறுகிறது. செய்யுள் நடையில் அமைந்த இந்த நூலின் முதலாவது பகுதியில் குளக்கோட்ட மன்னன் செய்த திருப்பணிகள் கூறப்பட இரண்டாவது பகுதியில் கயவாகு மன்னன் செய்த திருப்பணி எடுத்துக் கூறப்படுகிறது. இந் நூலின் காப்பு செய்யுள்களுக்கு அடுத்து வரும் செய்யுள்களில் கோணேஷர் கோட்டம், கோபுரம், மதில் மண்டபம், பாபநாசத் தீர்த்தம் என்பவற்றின் புகழும் சிறப்பும் பேசப்படுகிறது. கோயிலை புனரமைத்த குளக்கோட்டன் பாபநாசம் என்னும் மன்னுபவம் அறுக்கும் தீர்த்தத்தையும் கட்டுவித்தான் என கோணேஸ்வர் வாயில் கற்சாசனம் உறுதிப்படுத்துகிறது.

1624ஆம் ஆண்டு போர்த்துக்கீச தளபதி பெரும் புகழும் செல்வங்களும் கொண்ட கோணேஸர் ஆலயத்தை இடித்து தரை மட்டமாக்கினான். கோவில் செல்வமெல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டது. கோவிற் கற்கள் கோட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலயம் அழிக்கப்பட்டபோது சில தெய்வ விக்கிரகங்கங்களைக் காப்பாற்றி தம்பலகாமத்துக்கு எடுத்துச் சென்று அங்கே ஆதி கோணேஸ்வரர் என்ற ஆலயத்தை அமைத்தான் இரண்டாம் இராஜசிங்கன். 1950ஆம் ஆண்டு கிணறு ஒன்று ஆலய வளவினுள் தோண்டும்போது ஐந்து உருவங்களை கண்டெடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தார்கள். இதனை இன்றும் மலை உச்சியில் மரத்தின் கீழ் இருக்கும் இலிங்கத்துக்கு பூஜைகள் நடைபெறுவதை பக்தர்கள் காணலாம்.

1963ஆம் ஆண்டு திருப்பணி வேலைகள் நிறைவேற்றப்பட்டு முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1981ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த குரைகடல் ஓத நித்திலம் கொழிக்கும் என்றெல்லாம் 7ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட கோணேஷப் பெருமான் சிவராத்திரிக்கு மறுநாள் மாதுமையம்பாள் உடனுறைய ஊர்வலம் புறப்படுவார். இரவு தோறும் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் முதல் நாள் இரவு விஸ்வநாத சிவன் கோவிலிலும் இரண்டாம் நாள் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோயிலிலும் தங்கி தரிசனம் தந்து மூன்றாவது நாள் ஆலயத்துக்கு எழுந்தருளுவது வழமையாகும். ஆடி அமாவாசை தினத்தன்று சுவாமி மலையிலிருந்து எழுந்தருளி கடல் தீர்த்தம் ஆடச் செல்வார். மஹா மகத்திற்கு திருமலையில் உள்ள எல்லா ஆலயங்களிலுமிருந்து எழுந்தருளி வந்து மஹா மகத் தீர்த்தோற்சவம் நடைபெறுவது பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாகும்.

கோணேஷப் பெருமானின் வருடாந்த பிரம்மோற்சவம் பங்குனித் திங்கள் தோறும் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தியிரண்டு நாட்கள் நடைபெறும். இதில் இரதோற்சவ (தேர்த்திருவிழா) 17ஆம் நாளும் (14.04.2010) அன்றைய தினம் விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் உடனுறை மாதுமையம்பாள் சகிதம் சோமாஸ்கந்த மூர்த்தியாக இரதத்தில் ஆரோகணித்து வரும் காட்சி காண கண்கோடி வேண்டும். 18ஆம் திருவிழா (15.04.2010) பாபநாச தீர்த்தக் கிணற்றில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அடியவர்களின் பாவம் போக்கி அருள்பாலிக்கும் தீர்த்தமாகையால் பாபநாசத் தீர்த்தம் எனப்படுகிறது.

கொடி இறக்கம், பூங்காவன உற்சவம் முடிவுற்ற மறுநாள் (17.04.2010 சனிக்கிழமை) புகழ் பெற்ற தெப்ப திருவிழா நடைபெறும் இன்றைய தினம் கோவில் வாசலில் குரைகடலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஆழியிலே விசேடமாக அமைக்கப்பட்ட பீடத்திலே கோணேஷர் மாதுமை அம்பாள் உடனுறைய வீற்றிருந்து அடியவர்களுக்கு தரிசனம் கொடுத்து அருள்பாலித்து அழகுமிகு கலைகளை அடியவர்கள் புனைய நயக்கும் நாள் தெப்பத் திருவிழா எனப்படுகிறது.

நன்றி: கலைகேசரி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by மனோஜ் Thu Apr 29, 2010 8:01 pm

தலையே சுத்துது சிவா !!!
இராவணன் கதாபாத்திரமா ? அல்லது அரச வம்சத்தினனா ?


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

இராவணன் - Page 2 Empty Re: இராவணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum