புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
49 Posts - 60%
heezulia
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
44 Posts - 60%
heezulia
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_m10ஊர்க்குருவி பருந்தாகாது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்க்குருவி பருந்தாகாது!


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 16, 2011 5:25 pm

மக்களுக்குச் சொந்தமான நிலம், வீடு, கடை, தொழிற்சாலை போன்றவை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்யப்பட்டன. சொத்துகளின் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டோ அல்லது தாக்கப்பட்டோ தங்களின் சொத்துகளைக் கைவிட்டு வெளியேற வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். காவல் நிலையங்களில் இவை குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் செயலற்றுச் செத்துக் கிடந்தன.

இத்தகைய பட்டப்பகல் கொள்ளையில் பகிரங்கமாக ஈடுபட்டவர்கள் பேட்டைப் போக்கிரிகளும் சமூக விரோதிகளும் அல்லர். திமுக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள், ஊழல் அதிகாரிகள் மற்றும் இவர்களின் எடுபிடிகள் ஆகியோரே மக்களைச் சூறையாடினார்கள் என்பதை அறிந்தபோது தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமிருந்த மக்கள் பேரதிர்ச்சிக்கும் எல்லையில்லாத திகைப்புக்கும் உள்ளாயினர்.

அலிபாபாவும் 40 திருடர்களும் நடத்திய தீவட்டிக் கொள்ளைக் கதையைப்போல அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களைச் சூறையாடிய இந்தக் கொடுமைகள் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் நடைபெற்றன. சொத்தைப் பறிகொடுத்த பலர், முதலமைச்சர் அலுவலகத்திலேயே புகார் கொடுத்தார்கள். மேலும், பலர் பகிரங்கமாகப் போராட்டங்கள் நடத்தினார்கள்.

எடுத்துக்காட்டாக, சேலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் அடியாட்களால் தங்கள் வீடுகளை இழந்த அங்கம்மாள் காலனி மக்களின் போராட்டம், பல கட்சியினரின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்த ஏழை மக்களை அந்தக் காலனியிலேயே மீண்டும் குடியேற்றும்படி ஆணையிட்ட போதிலும், இன்றுவரை அதை நிறைவேற்ற அதிகாரவர்க்கம் முன்வரவில்லை. பத்திரிகைகளில் பக்கம்பக்கமாக அங்கம்மாள் காலனி மக்கள் பிரச்னை வெளிவந்திருக்கிறது.

அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதிக்கு இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இச்செய்தி குறித்து உளவுத்துறையின் மூலம் உண்மையான தகவல்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை அவர் உடனடியாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடக்கும் அட்டூழியங்களையும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தடுத்து நிறுத்தவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவோ இந்தத் திருவாரூர் சோழன் முன்வரவில்லை.

எல்லாவற்றையும் அனுமதித்துக்கொண்டு எதுவும் நடவாததுபோல அவர் இருந்தார். ஏனெனில், இவரின் தோழர்களின் கொள்ளைக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, இவரது குடும்பத்தினர் நடத்திய பகல் கொள்ளைகள்.

நாட்டில் நடப்பதை அறிந்துகொள்ளும் கண்ணாக விளங்கும் உளவுத்துறையின் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஜாபர் சேட் இவரின் பரிபூரண நம்பிக்கைக்கு உரியவர். அவர் அடித்த கொள்ளை குறித்து பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் அதைக் கண்டித்து முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை நகைப்புக்கு இடமான அறிக்கையாகும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய இலக்கணத்தை 6 தடவை முதலமைச்சராக இருந்தவர் வகுத்துத் தந்திருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் அந்தப் பதவியில் அமர்ந்து இவர் என்ன குப்பை கொட்டினார் என்பது அம்பலம் ஆகியுள்ளது.

ஜாபர்சேட், அரசுக்கு எந்த அளவுக்கு உண்மையாக, விசுவாசமாகப் பணியாற்ற வேண்டுமோ அந்த அளவுக்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால், இப்போது உள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணிபுரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக்கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம், அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம்தான். எனவே, உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பழிவாங்கும் அஸ்திரம் பாய்ந்து உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்னார், இனியர் என்று பாகுபாடு பார்க்காமல் நேர்மையுடன் கடமையாற்றுவதுதான் ஓர் உண்மையான அதிகாரியின் பொறுப்பாகும். தனக்கு மேலே இருப்பவர்கள் தவறான காரியத்தைச் செய்யச் சொன்னால் அதைச் செய்ய மறுத்துத் தனது கடமையை ஒழுங்காகச் சட்ட வரம்புக்குட்பட்டு ஆற்ற வேண்டியது அரசு அதிகாரிகளின் தலையாய கடமையாகும். ஆனால், மேலிடத்துக்கு விசுவாசமாக நடந்துகொண்டு தவறுகளை இழைப்பவர்களுக்குத் துணை நிற்பவர்தான் நல்ல அதிகாரி என கருணாநிதி புதிய இலக்கணம் வகுத்திருக்கிறார்.

இதுமட்டுமல்ல, சட்டத்தை மீறி மக்கள் சொத்தைச் சூறையாடி அதன் விளைவாகக் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தனது தோழர்களை நாட்டுக்காகச் சிறைசென்ற தியாகிகளைப்போல வர்ணித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென போராட்டங்களை நடத்துகிறார்.

சட்டம் தனது கடமையைச் செய்யுமென முதலமைச்சராக இருந்தபோது அடிக்கடி முழங்கிய மு. கருணாநிதி, இப்போது அதற்கு எதிராக ஆர்ப்பரிப்பது ஏன்? இவரது சகாக்கள் குற்றமற்றவர்களாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்து தாங்கள் நிரபராதிகள் என்பதை நிலைநாட்டி வெளியே வருவதுதானே முறையாகும். இத்தகைய நேர்மையான வழியைப் பின்பற்றாமல் தனது தோழர்களுக்காகப் போராடுமாறு மக்களைத் தூண்டுவது பொறுப்பற்ற செயலாகும்.

மு. கருணாநிதிக்கு அப்பழுக்கற்ற தலைமைத்துவம் இருக்குமானால், ஆட்சியில் இருந்தபோது இத்தகைய தவறு இழைத்தவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு அவரால் எடுக்க முடியாது. அதற்குரிய காரணங்கள் நாம் அறிந்ததுதான்.

இப்போது குறைந்தபட்சம் தனது சகாக்கள் இழைத்த அநீதிகளுக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பையாவது அவர் கேட்டிருக்க வேண்டும். மாறாக, தனது சகாக்களின் தவறுகளை மூடிமறைத்து அவர்களைத் தியாகிகளாகச் சித்திரிக்க முற்படுகிறார்.

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியபோது இன்று உத்தரப் பிரதேசம் என்று அழைக்கப்படும் பழைய ஐக்கிய மாகாணத்தில் சௌரிச்சாரா என்னும் ஊரில் 1922-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதியன்று தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது போலீஸ் சுட்டு சிலர் மாண்டனர். போலீஸôரிடம் இருந்த துப்பாக்கிகளிள் தோட்டாக்கள் தீர்ந்துபோனதை அறிந்த மக்கள், அவர்களை விரட்டிச் சென்றனர், தப்பி ஓடிய போலீஸôர் காவல் நிலையத்துக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டனர். ஆத்திரத்துடன் வந்த மக்கள், காவல் நிலையத்துக்குத் தீ வைத்தனர். ஒரு துணை ஆய்வாளரும், 20 காவலர்களும் தீயில் கருகி மாண்டனர்.

இச் செய்தியறிந்த காந்தியடிகள் கடும் அதிர்ச்சியடைந்தார். தனது மக்கள் தடம் மாறிச் சென்று வன்முறையில் இறங்கியதைக் கண்டிக்கும் வகையில் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியது மட்டுமல்ல, தனது துயரத்தை வெளிப்படுத்த ஐந்து நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

தேசத் தலைவர்கள் பலர் எவ்வளவோ வேண்டிக்கொண்டும் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. மக்கள் செய்த தவறைப் பகிரங்கமாகக் கண்டிக்கவும், தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் அவர் முன்வந்ததால்தான் இன்றளவும் உலகம் அவரை மதித்துப் போற்றுகிறது.

1975-ம் ஆண்டு பிரதமர் இந்திரா அறிவித்த அவசர நிலையால் நாட்டின் ஜனநாயகம் பறிக்கப்பட்டது. அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எண்ணற்றவர்கள் இரையானார்கள்.

மக்களுக்குக் கணக்கற்ற கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதன் விளைவாக 1977-ம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வியடைந்து பதவியை இழக்க நேர்ந்தது. தனது தவறை இந்திரா உணர்ந்தார்.

1979-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதியன்று சென்னை கடற்கரையில் காங்கிரஸ், திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. மு. கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பேசும்போது, ""நாங்கள் தவறு செய்து இருக்கிறோம், அதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். முன்பு நடைபெற்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடைபெறாது'' என இந்திரா மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

தனது குடும்பத்தினரும், நெருங்கிய சகாக்களும் மக்களுக்கு இழைத்த எண்ணற்ற அநீதிகளுக்காகக் கட்சித் தலைவர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டியது மு. கருணாநிதியின் கடமையாகும். ஆனால், அவர் காந்தியடிகளோ அல்லது இந்திராவோ அல்லவே. அவர் திருக்குவளை மு. கருணாநிதிதானே. ஊர்க்குருவி பருந்தாகாதே...

நன்றி: பழ. நெடுமாறன் in dinamani

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 16, 2011 7:38 pm

நல்ல பதிவு... சில பின்னோக்கிய நாட்களையும், தற்போதைய அராஜகத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டமைக்கு நன்றி...
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஊர்க்குருவி பருந்தாகாது! Boxrun3
with regards ரான்ஹாசன்



ஊர்க்குருவி பருந்தாகாது! Hஊர்க்குருவி பருந்தாகாது! Aஊர்க்குருவி பருந்தாகாது! Sஊர்க்குருவி பருந்தாகாது! Aஊர்க்குருவி பருந்தாகாது! N
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Aug 16, 2011 9:12 pm

சிந்திக்க வேண்டிய கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக