ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா - 2

4 posters

Go down

 தீரா - மீரா - 2 Empty தீரா - மீரா - 2

Post by மு.வித்யாசன் Tue Jul 26, 2011 4:04 pm



சூரியனுக்கும்,நிலவுக்கும் உள்ள இடைவெளி வெளிச்சமே
காற்றுக்கும், இதத்திற்கும் உள்ள இடைவெளி ஈரமே
நெருப்புக்கும், குளுமைக்கும் உள்ள இடைவெளி உராய்வே
உணர்ச்சிக்கும், உள்ளத்திற்கும் உள்ள இடைவெளி நிகழ்வே

எல்லாவற்றுக்குமான இடைவெளியை
அளந்து வைத்திருந்தான் தீரா...

பூமி பந்தின் இறுதியில் புத்துயிர்கள் உயிர்ப்பதுண்டு
கடல் ஆழத்தின் இறுதி சொட்டும், கரைதொட ஏங்குவதுண்டு
பூவிலிருந்து வெளிப்பட்ட வாசனை காற்று மூக்கில் அமர்வதுண்டு
கானல் நீரில் எழும் தோற்றங்கள் நிஜங்களை அலங்கரிப்பதுண்டு

இல்லாதவற்றிலும் ஏதாவது ஒலிந்து கொண்டிருப்பது உண்டு
அதை தெரிந்து வைத்திருந்தாள் மீரா...

வாழ்க்கை புத்தகத்தின் முதல் அட்டை அழுகையின் ஆரம்பத்தில்
அதன் கடைசி பக்கமும் கண்ணீரின் முடிவில்
இடையில் உள்ள பக்கத்தில் தான் மாறுப்பட்ட
மன நிலைகள் பதிவாகியிருக்கிறது
நிகழ நிகழத்தான் ஒவ்வொரு எழுத்தாக அச்சிடப்படுகிறது....


மூங்கிலுக்குள் காற்று இறங்காதவரை அது வெறும் மரக்கிளையே
காற்று வந்து தங்கி விடைபெறும் போது எழுகிறது ஒலியே...

ஒரு சந்திப்பு நிகழும்போதுதான்
இன்னொரு உணர்வுகள் உசுபப்படுகிறது....

குழந்தையின் பார்வையில் பொம்மையின் சந்திப்பு மகிழ்ச்சியாய்
நோயின் பிடியில் உடலின் சந்திப்பு சோகமாய்
பிரிவின் இடைவெளியில் மறு சந்திப்பு கண்ணீராய்
இழப்பின் பின்னல், தொடர் சந்திப்பு தவிப்பாய்
அவமானத்தின் ஆழச் சந்திப்பு எழுச்சியாய்
பொறமையின் கொடூர சந்திப்பு கோபமாய்
காகிதமும் (ஆண்) கவிதையும் (பெண்) சந்திப்பு காதலாய்...

இந்த உலகத்தை திருப்பி போட்ட சந்திப்புகள் நிறையவுண்டு
அதில்....
ரத்தத்திலும், விழி யுத்தத்திலும் அரங்கேறியதே அதிகமானது !!


தீரா...
விழிகள் எனும் பாடசாலையில்
இமைகள் என்னும் பக்கத்தை திருப்பிக் கொண்டு
இரவை தொடும் தூர அந்தி மாலையில் உலாவிக் கொண்டிருந்தான்....

தொடுவானம் முழுக்க ...
பயணத்தின் பாதங்கள்
அன்று ஏனோ நதி கரையில் மையல் கொண்டது...

சலசலப்பு பேச்சாய்
பாறைகளோடு உராய்வாய்
கூழாங் கற்கள் கன்னத்தில் முத்தமாய்
மீன்களின் நடனங்களாய்
வானம் முகம் பார்க்கும் கண்ணாடியாய்
கரைகளின் காதுகளுக்கு கவிதையாய்
பூமிக்கு நெய்யப்படும் ஆடையாய்
நிலப்பகுதியில் தவழும் ஒற்றை வானவில்லாய்
வேர்களுக்குள் ஒலிந்து கொள்ளும் குழந்தையாய்
ஈரமான இதயத்தால் ரசித்து கொண்டிருந்தான் தீரா....

ஒரு மரம் எப்போதுமே இலைகள் எனும்
பற்காளால் புன்னகைத்து கொண்டே இருக்கிறது
அது ஏன் என்று தெரியுமா?

பரந்து விரிந்த கிளையில்
படுத்துறங்க பறவைகள் கூடு கட்டுவதால்
பாய்ந்து வரும் சூரியனின் பார்வையை சலித்து
மண்ணிற்கு நிழல் தருவதால்
அசுத்தம் முங்கி வரும் தென்றலை
வடிகட்டி வசந்தமாக அனுப்பவதால்
பசி யயனும் பரம்பரை நோய்க்கு
பழம் எனும் வைத்தியம் பார்ப்பதால்
விளை நிலம் ஓங்கி செழிக்க
மழைக்கு சேதி அனுப்பவதால்
களைப்பாறி வரும் மானிடர்கள்
இளைப்பாறும் இடமாக இருப்பதால்
ஒரு பொழுதும் சோர்வின்றி
ஏதும் எதிர்பாராது உழைப்பதால்
இதுஏதும் அறியாது நாம் நறுக்கும் போதும்
விரகாய், வீடாய், கட்டுமரமாய், காகிதமாய்
எல்லாமாய் மறித்து மீண்டும் பிறப்பதால் !!


அப்படி ஒரு கிழம் வயது நிரம்பிய
மரத்தின் வேர் படியில் அமர்ந்து கொண்டு
நினைவுகள் எனும் பம்பரத்தை சுழல விட்டான் தீரா.....

என்றுமில்லாதபடி....
குருவிகள் கும்மாலமிட்டன
நதி நாணம் கொண்டன
மீன்கள் ரகசியம் பேசின
மர இலைகள் இறகுகளாக பறந்தன
காற்று கிசுகிசுத்தன
வானம் இளஞ்சிவப்பு வர்ணம் வார்த்தது
பூக்கள் புது நடனமாடியது
கரைகள் கவிதை எழுதிக் கொண்டிருந்தது
நத்தைகள் வித்தைகள் செய்தது
பாறைகள் குண்டு விழிகளாக மாறியது
கொடிகள் வானத்தை தீண்ட முயன்றது
செடிகள் தலை சாய்த்து தாளமிட்டது
தவளைகள் சங்கீதம் பாடியது
மணல் மகரந்த பொடியானது
நிமிடங்கள் தாமதமாக நகர்ந்தது
தீராவின் நினைவுக்குள் நடப்பது யாவும் வசப்பட்டது...

தீடிரென ஒரு ச..ப்...த...ம்
சட்டென நதிகரையானது நி..ச...ப்...த...ம்

தீரா சுற்றும் முற்றும் பார்த்தான்...

குயிலா? மயிலா? புள்ளி மானா ?
துள்ளி வந்த சப்தம் எதுவாக இருக்கும் என்று ?

எங்கிருந்து வந்தது...
திசைகள் முழுக்க விழிகள் திமிறி திமிறி தேடியது...

சற்று நிமிடத்தில் மீண்டும் அதே சப்தம்
இம்முறை சோவிகள் வானத்திலிருந்து மலைமீது
மோதியதாய் தீரா செவிகளை துளைத்தது சிரிப்பொலி...

வில்லில் இருந்து புறப்படும் அம்பாய்
வேர் படியிலிருந்து பாய்ந்தான்...
பாதம் தரையில் இல்லை
விழிகள் இமைகளுக்குள் அடைக்கப்படவில்லை
எண்ணங்கள் நரம்புகளை மீறி வரம்புகளை கடந்தது
தூரத்தில் ஒரு வெளிச்சம்
கோவில் திருவிழா பளிச்சிட்டது...

இன்று என்ன கோலாகலம் ?
என்ன நாள் ?
பண்டிகையா?
குடமுழக்கா?
திருமணமா?
என்ன? ? ? ? ?
கேள்விகள் கேட்டபடி
நகர்ந்தான் கோவில் நோக்கி...


சோவிகளை உருட்டிய சப்தம் மீண்டும்
தீராவின் செவிகளை நனைத்தது
அது குளக்கரையில் இருந்து ஒலித்தது
தீராவின் பாதங்கள் மெல்ல திரும்பியது
முயலென பதம் பார்த்து நடந்தது...

மண்டபத்தை தாங்கி கொண்டிருந்த தூண்கள்
மறைந்த வண்ணமாய் பார்த்தான் அங்கே சில மான்கள்
சில்லென காற்றில் சட்டென வியர்த்தது தீராவின் உடல்
ரோமங்கள் முள்ளென மாறி சிலிர்த்தது
யார் அது?
அந்த மான் கூட்டத்தில்
யார் அந்த மீன் ?
மலைத் தேன்?
புது வான்?
வாசம் வீசும் மண் ?
இல்லை... இல்லை...
தேவ குலத்து பெண்..

ச்...சீ..ச்சீ... நான்னல்லா
நான இப்படி ?
இமை மூடி யோசித்து
விசிறியாய் விழி திறந்தான்...

மான் கூட்டம் மறைந்தது
மீன் மட்டுமே தீராவின் விழியில் மிதந்தது
மின்னலை பார்ப்பது என்பது கடினம்தான்
புரிந்து கொண்டான் தீரா...

மனம்...
சில நேரம் மன்னராகவும்
சில நேரம் மகானாகவும்
சில நேரம் மாமிச மலையாகவும்
சில நேரம் மனிதனாகவும்
சில நேரம் கல்லாகவும்
சில நேரம் காற்றாகவும்
சில நேரம் நதியாகவும்
சில நேரம் விதியாகவும்
சில நேரம் புவியாகவும்
சில நேரம் கவியாகவும்
சில நேரம் காதலாகவும்
மாற்றிவிடும் சக்தி கொண்டது...

திருடனிடமும், கொலைகாரனிடமும்
உள்ளிருக்கும் இதயம் ஒரே மாதிரி துடிப்பதைபோல...

இருந்தும் தொலைந்ததாய்
தொலைந்ததும் இருந்ததாய்;
உடைந்தான்,
நெளிந்தான்,
வழிந்தான்,
நனைந்தான்,
வியர்த்தான்,
விழுங்கினான்,
நடுங்கினான்,
மிதந்தான்,
சிதைந்தான்,
நைந்தான்,
நொந்தான்,
தவழ்ந்தான்,
துடித்தான்,
தானா... தானா...
என்று தவித்தான்
தனக்குள்ளே புலம்பினான்...


மனம் என்ன சொல்லுகிறது என்பதை உணரமுடியாது
கிரங்கிபோனன் தீரா...

காலம் சுற்றும் சுழற்சியின் படி தானே
நமது கால்களும் பயணிக்கும்...

அப்படிதான் தீரா தேட ஆரம்பித்தான்
தானே தொலைய...
தொலைந்து கொண்டு !!


(தொடரும்...).




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தீரா - மீரா - 2 Empty Re: தீரா - மீரா - 2

Post by உமா Tue Jul 26, 2011 4:25 pm

வித்யாசன் இதை படிக்கவே 5நிமிடம் ஆகிவிட்டது...இவ்வளவு அழகான ஒரு காதல் கவிதையை எழுத நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு இருப்பீர்கள்...உங்கள் முயர்ச்சிக்கு பாராட்டுக்கள், நன்றிகள்...

மூங்கிலுக்குள் காற்று இறங்காதவரை அது வெறும் மரக்கிளையே
காற்று வந்து தங்கி விடைபெறும் போது எழுகிறது ஒலியே...
அருமையிருக்கு அருமையிருக்கு

மனம்...
சில நேரம் மன்னராகவும்
சில நேரம் மகானாகவும்
சில நேரம் மாமிச மலையாகவும்
சில நேரம் மனிதனாகவும்
சில நேரம் கல்லாகவும்
சில நேரம் காற்றாகவும்
சில நேரம் நதியாகவும்
சில நேரம் விதியாகவும்
சில நேரம் புவியாகவும்
சில நேரம் கவியாகவும்
சில நேரம் காதலாகவும்
மாற்றிவிடும் சக்தி கொண்டது...

அருமையிருக்கு அருமையிருக்கு

உடைந்தான்,
நெளிந்தான்,
வழிந்தான்,
நனைந்தான்,
வியர்த்தான்,
விழுங்கினான்,
நடுங்கினான்,
மிதந்தான்,
சிதைந்தான்,
நைந்தான்,
நொந்தான்,
தவழ்ந்தான்,
துடித்தான்,

இத்தனை வார்தைகளுமே எங்கே கிடைத்தது ஒரே கவிதையில் பதிந்து விட்டீர்களே....
பாராட்டுவதா, பெருமை படுவதா என்றே தெரியல...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடருங்கள்,,,காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக..
சூப்பருங்க சூப்பருங்க

 தீரா - மீரா - 2 1663849q3r6s7v5ck



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 தீரா - மீரா - 2 Empty Re: தீரா - மீரா - 2

Post by kitcha Tue Jul 26, 2011 4:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், தீரா - மீரா - 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 தீரா - மீரா - 2 Empty Re: தீரா - மீரா - 2

Post by மு.வித்யாசன் Tue Jul 26, 2011 4:33 pm

உமா wrote:வித்யாசன் இதை படிக்கவே 5நிமிடம் ஆகிவிட்டது...இவ்வளவு அழகான ஒரு காதல் கவிதையை எழுத நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு இருப்பீர்கள்...உங்கள் முயர்ச்சிக்கு பாராட்டுக்கள், நன்றிகள்...

மூங்கிலுக்குள் காற்று இறங்காதவரை அது வெறும் மரக்கிளையே
காற்று வந்து தங்கி விடைபெறும் போது எழுகிறது ஒலியே...
அருமையிருக்கு அருமையிருக்கு

மனம்...
சில நேரம் மன்னராகவும்
சில நேரம் மகானாகவும்
சில நேரம் மாமிச மலையாகவும்
சில நேரம் மனிதனாகவும்
சில நேரம் கல்லாகவும்
சில நேரம் காற்றாகவும்
சில நேரம் நதியாகவும்
சில நேரம் விதியாகவும்
சில நேரம் புவியாகவும்
சில நேரம் கவியாகவும்
சில நேரம் காதலாகவும்
மாற்றிவிடும் சக்தி கொண்டது...

அருமையிருக்கு அருமையிருக்கு

உடைந்தான்,
நெளிந்தான்,
வழிந்தான்,
நனைந்தான்,
வியர்த்தான்,
விழுங்கினான்,
நடுங்கினான்,
மிதந்தான்,
சிதைந்தான்,
நைந்தான்,
நொந்தான்,
தவழ்ந்தான்,
துடித்தான்,

இத்தனை வார்தைகளுமே எங்கே கிடைத்தது ஒரே கவிதையில் பதிந்து விட்டீர்களே....
பாராட்டுவதா, பெருமை படுவதா என்றே தெரியல...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடருங்கள்,,,காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக..
சூப்பருங்க சூப்பருங்க

 தீரா - மீரா - 2 1663849q3r6s7v5ck



உங்களது உயர்வான பாராட்டுக்கு. சிறியேனின் நன்றிகள்... நன்றி

தொடந்து எழுத நானும் காத்திருக்கிறேன்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தீரா - மீரா - 2 Empty Re: தீரா - மீரா - 2

Post by இளமாறன் Wed Jul 27, 2011 11:02 pm

என்றுமில்லாதபடி....
குருவிகள் கும்மாலமிட்டன
நதி நாணம் கொண்டன
மீன்கள் ரகசியம் பேசின
மர இலைகள் இறகுகளாக பறந்தன
காற்று கிசுகிசுத்தன
வானம் இளஞ்சிவப்பு வர்ணம் வார்த்தது
பூக்கள் புது நடனமாடியது
கரைகள் கவிதை எழுதிக் கொண்டிருந்தது
நத்தைகள் வித்தைகள் செய்தது
பாறைகள் குண்டு விழிகளாக மாறியது
கொடிகள் வானத்தை தீண்ட முயன்றது
செடிகள் தலை சாய்த்து தாளமிட்டது
தவளைகள் சங்கீதம் பாடியது
மணல் மகரந்த பொடியானது
நிமிடங்கள் தாமதமாக நகர்ந்தது
தீராவின் நினைவுக்குள் நடப்பது யாவும் வசப்பட்டது...

சூப்பருங்க சூப்பருங்க தொடருங்கள் அருமையாக இருக்கிறது மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 தீரா - மீரா - 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 தீரா - மீரா - 2 Empty Re: தீரா - மீரா - 2

Post by மு.வித்யாசன் Fri Jul 29, 2011 6:05 pm

நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தீரா - மீரா - 2 Empty Re: தீரா - மீரா - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum