Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேங்கை விமர்சனம் - பாலா
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வேங்கை விமர்சனம் - பாலா
First topic message reminder :
ஆற்காடு வீராசாமி என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மின்தடையால் திருமணமான அன்பர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. சிலர் அவர் மீது உண்மையான நன்றி கொண்டு ”அச்சம்பவத்தால்” பிறந்த குழந்தைக்கு வீராசாமி எனவும், சில பீட்டர் மாமாக்கள் Bravo God என்பதை சுருக்கி Broad எனவும் பெயரிட்டு மகிழ்ந்த சம்பவங்கள் நம் செவிப்பறையையும், ரெட்டீனாவையும் தாக்குகின்றன. மொட்டைப் பையனான எனக்கு இந்த ஊரில் அது போல வியத்தகு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வபோது சிற்சில லாபகரமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அதில் ஒன்றாக நேற்று அலுவகம் அரை நாள் விடுமுறை கண்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் காலையில் அலுவலகம் வரும்போது கண்ட போஸ்டர் நினைவுக்கு வந்தது. நல்ல, ஆறடி நீள அரிவாள் ஒன்று தனுஷை தூக்கி வைத்திருந்தது போல இருந்தது அப்போஸ்டர். இன்று அலுவலகம் விடுமுறை என்பதால்தான் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என்று பட்டாம்பூச்சி விளைவை நினைத்துக் கொண்டு, அதில் என் குருவான உலக நாயகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு யமஹா என்னும் பஞ்ச கல்யாணியை தேட்டர் நோக்கி விரட்டினேன். ரஜினிக்கு லட்சுமியைப் போல, எனக்கு பஞ்ச கல்யாணி. நான் ஆக்ஸிலேட்டரை திருகும் முறையை வைத்தே நான் தேடிப்போவது சினிமாவா, நண்பர்களா , வீடா என தெரிந்துக் கொள்ளும். அதற்கேற்ப சீறும்.
தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. தேட்டரில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் நண்பன் சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. நண்பனுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.
ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் ஈகரயிலும், இண்ட்லியும், ஃபேஸ் புக்கிலும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார். நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள் சங்கர்.
இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்
![வேங்கை விமர்சனம் - பாலா - Page 2 IMG_0464%25255B4%25255D](https://2img.net/h/lh5.ggpht.com/-gHg505rF-_c/ThXjkn1xrQI/AAAAAAAAD2A/S7FDS8UcjBQ/s1600/IMG_0464%25255B4%25255D.jpg)
இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.
மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை. சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.
சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.
ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.
ஆற்காடு வீராசாமி என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மின்தடையால் திருமணமான அன்பர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. சிலர் அவர் மீது உண்மையான நன்றி கொண்டு ”அச்சம்பவத்தால்” பிறந்த குழந்தைக்கு வீராசாமி எனவும், சில பீட்டர் மாமாக்கள் Bravo God என்பதை சுருக்கி Broad எனவும் பெயரிட்டு மகிழ்ந்த சம்பவங்கள் நம் செவிப்பறையையும், ரெட்டீனாவையும் தாக்குகின்றன. மொட்டைப் பையனான எனக்கு இந்த ஊரில் அது போல வியத்தகு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வபோது சிற்சில லாபகரமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அதில் ஒன்றாக நேற்று அலுவகம் அரை நாள் விடுமுறை கண்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் காலையில் அலுவலகம் வரும்போது கண்ட போஸ்டர் நினைவுக்கு வந்தது. நல்ல, ஆறடி நீள அரிவாள் ஒன்று தனுஷை தூக்கி வைத்திருந்தது போல இருந்தது அப்போஸ்டர். இன்று அலுவலகம் விடுமுறை என்பதால்தான் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என்று பட்டாம்பூச்சி விளைவை நினைத்துக் கொண்டு, அதில் என் குருவான உலக நாயகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு யமஹா என்னும் பஞ்ச கல்யாணியை தேட்டர் நோக்கி விரட்டினேன். ரஜினிக்கு லட்சுமியைப் போல, எனக்கு பஞ்ச கல்யாணி. நான் ஆக்ஸிலேட்டரை திருகும் முறையை வைத்தே நான் தேடிப்போவது சினிமாவா, நண்பர்களா , வீடா என தெரிந்துக் கொள்ளும். அதற்கேற்ப சீறும்.
தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. தேட்டரில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் நண்பன் சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. நண்பனுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.
ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் ஈகரயிலும், இண்ட்லியும், ஃபேஸ் புக்கிலும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார். நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள் சங்கர்.
இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்
![வேங்கை விமர்சனம் - பாலா - Page 2 IMG_0464%25255B4%25255D](https://2img.net/h/lh5.ggpht.com/-gHg505rF-_c/ThXjkn1xrQI/AAAAAAAAD2A/S7FDS8UcjBQ/s1600/IMG_0464%25255B4%25255D.jpg)
இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.
மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை. சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.
சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.
ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: வேங்கை விமர்சனம் - பாலா
kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:படம் சுமார் ரகம்
மீண்டும் விமர்சனத்தை படிக்கவும்![]()
![]()
திரைப்படத்தை ஏற்கனேவே பார்த்தாச்சு .....பார்த்தாச்சு
ரெண்டுமுறை பார்த்தால் இப்படித்தான் யாரு உங்கள அந்த அளவுக்கு ரிஸ்க்கு எடுக்கசொன்னது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: வேங்கை விமர்சனம் - பாலா
நீங்க தான்,balakarthik wrote:kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:படம் சுமார் ரகம்
மீண்டும் விமர்சனத்தை படிக்கவும்![]()
![]()
திரைப்படத்தை ஏற்கனேவே பார்த்தாச்சு .....பார்த்தாச்சு
ரெண்டுமுறை பார்த்தால் இப்படித்தான் யாரு உங்கள அந்த அளவுக்கு ரிஸ்க்கு எடுக்கசொன்னது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![வேங்கை விமர்சனம் - பாலா - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான்தான் பாலா - திரை விமர்சனம்
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» வேங்கை... தனுஷுக்கு சிக்கல் தீர்ந்தது!
» வேங்கை: கைவிட்டது சன்!!
» சிக்கலில் தனுஷின் வேங்கை!
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» வேங்கை... தனுஷுக்கு சிக்கல் தீர்ந்தது!
» வேங்கை: கைவிட்டது சன்!!
» சிக்கலில் தனுஷின் வேங்கை!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|