புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
44 Posts - 41%
heezulia
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
5 Posts - 5%
prajai
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
21 Posts - 5%
prajai
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாட்டு நடப்பு! Poll_c10நாட்டு நடப்பு! Poll_m10நாட்டு நடப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு நடப்பு!


   
   
avatar
mgopalak
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Postmgopalak Wed Sep 16, 2009 3:03 pm

நாட்டு நடப்பு!


கொட்டகுடி : நம்ம சும்மாயிருந்திட்டா வேஸ்ட்!

கொஞ்சம் வித்தியாசமான தொழில் பூங்கா. ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், தேயிலை, காபிக்கொட்டை, மிளகாய், மல்லி போன்ற சமையல் பொருட்களுக்கான தொழில் பூங்கா.

இவைகளுக்கான ஆலைகள், தொழில்நுட்ப ஆய்வகங்கள், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்கள், குளிரூட்டப்படும் களஞ்சியங்கள் என செயல் படும் இந்த தொழிற்பூங்காவிற்கு சிவகங்கை மாவட்டம் கொட்டகுடியில் 72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது மத்திய அரசின் "ஸ்பைசல் போர்டு'. 100 கோடி செலவாகும் என்றார்கள். 10 கோடி ஒதுக்கினார்கள். அமைச்சர் ப.சி. அடிக்கல் நாட்டினார். ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது. அடிக்கல்லோடு நின்றுவிட்டது அத்தனை பணிகளும்.

ஸ்பைசல் போர்டின் முக்கிய அதிகாரிகள் அத்தனைபேரும் மலையாளிகள். கொச்சியிலுள்ள அந்த அதிகாரிகள் கொட்டகுடியைப் பற்றியோ, தமிழக வளர்ச்சி பற்றியோ ஏன் கவலைப்பட வேண்டும்?





சுருளிப்பட்டி : திட்டம் போட்டு...!

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ரேஷன் கடைக்கு வந்த வட்ட வழங்கல் டீம், போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து ""இனிமேல் இந்த 200 குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கொடுக்காதே'' என்று கேன்சல் செய்துவிட்டுப் போனார்கள்.

மறுமாதம் அதே கடைக்கு செக்கிங் வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. கேன்சல் செய்த 200 கார்டுகளுக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கார்டுகளில் "மீண்டும் குடிமைப் பொருட்கள் வழங்கவும்' என்று எழுதி முத்திரை குத்தி, வட்ட வழங்கல் அலுவலர் இளங்கோவனின் கையெழுத்துப் போடப்பட்டிருந்தது.

200 கார்டுதாரர்களிடமும் தலா 500 ரூபாயைக் கறந்துகொண்டு "வட்ட வழங்கல் அதிகாரி'யின் கையெழுத்தையும் முத்திரையையும் போர்ஜரியாகப் போட்ட லோக்கல் ஃபிராடு மணிகண்டனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது.




திருச்சி : நிம்மதி என் வாழ்வில் இனியேது?

திருச்சி மாநகருக்குள் 80 டாஸ்மாக் பார்கள் உள்ளன. இந்த பார்களுக்கான புதிய ஏலம் கடந்த வாரம் நடந்தது. இதில் 27 பார்கள் அ.தி.மு.க. அனுதாபியான மகாலிங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. மரியம்பிச்சை மா.செ.யாக இருந்தபோது டாஸ்மாக் பார் அசோசியேஷன் தலைவராக நியமிக்கப்பட்டவர் இந்த மகாலிங்கம்.

டெபுடி மேயரின் சிபாரிசால்தான் இப்போது இத்தனை பார்கள் கிடைத்தனவாம். பார் ஏலத்தில் கலந்துகொள்ள மகாலிங்கத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று மேலிடம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று மண்டையில் உள்ளதை பிய்த்துக் கொண்டிருக்கிறாராம் டாஸ்மாக் எம்.டி.

"கடந்த ஆண்டில் பார் நடத்தி நிலுவைத்தொகை பாக்கி உள்ளவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது' என்பது டாஸ்மாக் விதி. மகாலிங்கத்திற்கு 4 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறதாம்.





திருவண்ணாமலை : கலகத்தில் பிறப்பதுதான் நீதி!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குள், தன் ஆட்களோடு புகுந் தார் மாஜி சேர்மன் அ.தி.மு.க. பவுன்குமார். ""எங்க பெரியவர் ராமகிருஷ்ண னுக்கு ஏண்டா சரியா வைத்தியம் பார்க்கலை. எவண்டா இங்கே டாக்டர்?''

பணியில் இருந்த டாக்டர் விருத்தகிரி அகப்பட்டார். பவுன்குமார் அடித்த அடியில் டாக்டரின் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. டாக்டரை அடித்து பேஷன்ட் ஆக்கியதோடு நிற்காமல், ஆஸ்பிடலையும் யுத்தம் நடந்த ஏரியாவாக்கிவிட்டுப் பறந்தது பவுன்குமார் படை.

""டாக்டரின் மண்டையை உடைத்தவரை கைது செய்யும் வரை வேலை செய்யமாட்டோம்'' -மருத்துவர்களும் ஊழியர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், மாஜி சேர்மன் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து, விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

2008 மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு அவசர சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது.





மதுரை : எதுக்காக கண்ணே எதுக்காக!

விலை எகிறிக்கொண்டிருக்கும் ஒரு உலோகத்தின் பெயர் கொண்ட மதுரை ஹைகோர்ட் மூத்த வக்கீலய்யா, கோர்ட் துப்புரவுப் பெண்மணியை தன் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குப் போனார். வக்கீலய்யாவின் கார் குலுங்குவதைக் கண்ட 4 தடியர்கள் காரை ரவுண்ட் கட்டினார்கள். இன்பத்தில் தங்களுக்கும் பங்கு கேட்டு அடம் பிடித்தார்கள். பிரச்சனை பெரிதானது. ஸ்பாட்டில் ஆஜரானார் அண்ணா நகர் காவல்நிலைய எஸ்.ஐ.ஸ்ரீதரன்.

""எல்லோரும் கிளம்புங்க ஸ்டேஷனுக்கு'' -எஸ்.ஐ. தன் கடமையை செய்ய... பதறிப்போன வக்கீலய்யா... மதுரை வி.வி.ஐ.பி.யின் எஸ்கார்ட் ஒருவருக்கு போன் செய்தார். பிறகு? பிறகென்ன... வெறும் கையும் வீசின கையுமாக ஸ்டேஷனுக்கு திரும்பிப் போனார் எஸ்.ஐ. 55 வயது வக்கீலய்யா அவசர தலைகுனிவோடு காரில் ஏறி பறந்தார்... தன் இல்லீகல் கேஸோடு.




கும்பகோணம் : உயிர் விட்டுவிட்டால்...

கும்பகோணம் அருகிலுள்ள கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜேந்திரனை ஒரு மினி பஸ் அடித்து தூக்கியெறிந்தது. பேச்சு மூச்சற்றுக் கிடந்த பால் வியாபாரியை "சுகம் ' மருத்துவமனையில் சேர்த்தார்கள். 4 நாள் சிகிச்சைக்குப் பின், அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

தஞ்சைக்குப் போன வேகத்தில் கும்பகோணத்திற்கு திரும்பி வந்தது ஆம்புலன்ஸ். "செத்து 2 நாளாச்சு' என்று தஞ்சை ஆஸ்பிடல்ல சொல்றாங்க. 2 நாள் பிணத்துக்கு வைத்தியம் பார்த்து பணம் பிடுங்குனீங்களா? நியாயம் வேண்டும்'' -ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பால் வியாபாரியின் வட்டாரம். இறுதியில் 65 ஆயிரத்துக்கான காசோலையை கொடுத்து பிரச்சனையை முடித்துக்கொண்டிருக்கிறது சுகம் நிர்வாகம்.

சுகம் டாக்டர் பாலசுப்பிரமணியமோ... ""இதுக்கு மேல செலவு செய்ய பணமில்லை என்று நோயாளியை உயிரோடு கொண்டு சென்றவர்கள், 2 மணி நேரத்தில் திரும்பி வந்து மிரட்டி பணம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் ஆஸ்பிடலைப் பிடிக்காதவர்களின் சதி இது'' என்கிறார்.

போலீஸ் ரகசிய விசாரணை நடத்துகிறது.




கம்பம் : பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது!

யானைகளைக் குறி பார்த்துச் சுடுவதில் கெட்டிக்காரர் ஈஸ்வரன். தி.மு.க. பிரமுகரும் கம்பம் யூனியன் மாஜி சேர்மன் உமாதேவியின் கணவ ருமான குல்லப்ப கவுண்டன்பட்டி ஈஸ்வரனுக்கு யானை வேட்டையும், மரங் களை வெட்டிக் கடத்துவதும்தான் 15 வருட தொழில்.

விநாயகர் சதுர்த்தி அன்று கம்பம்-கூடலூர் வனப்பகுதிக்கு உட்பட்ட வண்ணாத்திப் பாறைக்கு அருகில் உள்ள மாவடிக் காட்டுக்கு 5 நண்பர் களுடன் வேட்டைக்குப் போனார் ஈஸ்வரன். குறிபார்த்துதான் சுட்டார். குறி தவறிவிட்டது. தன்னைச் சுட்ட ஈஸ்வரனை விரட்டி, தும்பிக்கையால் தூக்கிப் போட்டு காலால் ஒரு மிதி... குற்றுயிராய் கிடந்த ஈஸ்வரனை லோயர் கேம்ப் வரை தூக்கிச்சென்றும் வேட்டை நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை.

""யானை வேட்டையால் எங்கள் குடும்பத் தலைவர் சாகவில்லை. ஹார்ட் அட்டாக்கில் செத்தார்'' என்கிறது ஈஸ்வரன் குடும்பம். ஈஸ்வரனின் வேட்டை நண்பர்களை கைது செய்து கேரள வனத்துறையிடம் ஒப்படைத்து "உங்க காட்லதான் வேட்டையாடினார்கள்' என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டது தமிழக வனத்துறை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக