புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
4 Posts - 3%
prajai
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
426 Posts - 48%
heezulia
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
29 Posts - 3%
prajai
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புள்ளிகளும் கோடுகளும் Poll_c10புள்ளிகளும் கோடுகளும் Poll_m10புள்ளிகளும் கோடுகளும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளிகளும் கோடுகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 12:08 am

சைக்கிளை உருட்டியபடி மிக மெதுவாக நடந்துகொண்டிருந்தான் சாரங்கன். பாதையின் கோட்டை சற்றுவிலகி இடது புறமாக உள்ளோடி வளைந்த மண் பாதைக்குள் இறங்கிய பிறகுதான் தெரிந்தது அவனது ஊர் நெருங்கிவிட்டது. இருபுற சிமென்ட் கால்வாய்களுக்குள் நீரின் குபு..குபு இரைச்சல். இரண்டொரு நீர்ப்பறவைகள் முழுகுவதும் எழுவதுமாய்.... இன்னும் என்னென்னவோ இனங்காண முடியாத இரைச்சல்கள். அதிகாலைக் காற்று முழுவதும் முட்ட முட்டப் பனியின் சோடிப்பு, இழுத்து உள்வாங்க அவதியாகத் தும்மல் வந்தது.

புதுக்காற்று விட்டு விடுதலையாகிய சுதந்திரக்காற்றின் அற்புதமான வாசம். ஊடே ஏதோ ஒரு வாடை கருகுவது போல, தீய்வது போல மனித உடலின் புழுத்துப் போன மக்கல் வாடை. குறுக்கே நாயொன்று எதையோ நீளமாக கறுப்பாகக் கௌவியிருந்தது. நின்று நிதானமாக உற்றுப்பார்க்க மனிதனின் எரிந்து போன கால்எலும்பு. ஒரு நிமிடம் நின்றான். உறைந்தது, உறைத்தது. விரு விருவென நெஞ்சுக்குள் எதுவோ ஊர்ந்தது. நகர நகர ஊரின் அலங்கோலம் உருச்சிதைந்து, உறவுகள் சிதைந்து ஒரு கொடியைப் பிடித்திழுத்தால் ஊர் முழுவதும் சொந்தமாகியிருந்த நாட்கள் கலைந்துபோய் வெறிச்சென்ற வீதிகள் மட்டும் பின்னல் பின்னலாக ஓடிஓடி மறைந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே சிவப்பு முக்கோணத் தகடுகள் கண்ணிவெடி அபாய அறிவிப்புக்கள். சைக்கிளோடு மனமும் சேர்ந்து உருண்டு கொண்டிருந்தது. முன்னோக்கி உருள ஏதில்லா சூனியம் பின்னோக்க பின்னோக்க கனமான கவலைகள். காயங்கள், கருத்தரிப்புக்கள், கருச்சிதைவுகள், அம்மாடி...

ஒற்றைத் தூணில் ஒருபக்கச் சாரம் மட்டும் தொங்கியிருக்க மலைக்குவியலாய் கற்கள் மேடை போட்டிருந்தன. ஒரு நிமிடம் இதயம் ஓராயிரம் இரத்தச் சொட்டுகளை உதிர்த்தது. அண்ணா யப்பானில் பார்த்த வீட்டைப் படம் பிடித்துப் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு.

கற்குவியல் மேல் கவனமாக உட்கார்ந்திருந்தான். முற்றமெல்லாம் பெயர் தெரியாத அழகழகாய் பூச்சொரிந்த பூச்செடிகள் பாத்தி போட்டிருக்க, தொட்டிக்குள் தோடையும் மாவும், பப்பாசியும் இரண்டு வயதுப் பிள்ளையின் உயரத்தில் பூவும் பிஞ்சுமாக விட்டிருந்தன. மாதக்கணக்கில் யோசித்து யோசித்து அவன்தான் வீட்டுக்குப் பெயர் வைத்தான் ~~குற்றாலம்|| அம்மாவின் அருகிலிருந்து அண்ணா சொன்னது இப்போதும் கேட்கிறது. ~அம்மா இது என்ர தங்கச்சிக்கு நான் கட்டிக்குடுக்கிற கோயிலம்மா. அவளின்ர பேரை முன்னுக்குப் போடுவம்|| குற்றால்திற்கு முன்னால் திருவேணி எழுதி தினம் தினம் பிராஸோவால் தேய்த்து பளபளப் பாக்கி அழகு பார்த்தவன் அண்ணா. அண்ணா பொறியிலாளன். அவனிருக்கும் இடத்தில் கட்டாயம் சிரிப்பிருக்கும். கண்களும், உதடுகளும், கன்னங்களும் சேர்ந்து பூப்பூவாய் சிரிக்கும்.

எல்லாம் கொஞ்சக காலம். நிம்மதியும் சந்தோஷமும் கொட்டிப் பரவிய காலம். மீண்டும் வரமுடியாத நிமிடங்கள். அமைதி அடைகாத்துக் கொண்டிருந்த ஊர்தான். ஒரு நொடியில் அவிழ்ந்தது. சிதறியது. ஊர் ஓடி முடிந்தது. ஒற்றையாய் உறவுகளைத் தேடித்தேடி அலைந்ததில் சிவசம்பு மாமா, தங்கச்சியை மட்டும் அவனிடம் கொடுத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

பல்கலைக்கழகப் படிப்பில் இன்னும் ஒற்றை வருஷமும் ஓர் ஆறுமாதமும் மட்டுமே மிச்சமாயிருக்க நடந்து முடிந்த எதையும் நம்பிக் கொள்ள முடியாமல் நம்பித்தான் ஆக வேண்டிய நிலைமையில் அழக்கூடத் தெரியாமல் உறைந்தவன் தான். ஓடுகின்ற உயிர்த்துடிப்பும் தங்கைக்காய் இழுத்து அணைத்த போது வியர்வைக் கொப்பளிப்பில் உடம்பு சில்லிட்டது.

அம்மாவும் அப்பாவும் ஒன்றாக ஒரே விநாடியில் உருச்சிதைந்து போன அதே நொடிப்பொழுதில் சரிந்து விழுந்த ஏணியின் தலைப்புக்குள் அண்ணாவின் உயிரும் உணர்வுகளும் இல்லாமல் ஓடிப்போயிருக்கிறது. ஆறுமாதங்களுக்குப் பிறகு இதயக் காயம் மீண்டும் கிளறிக் கொண்டது. நிறைய வலித்தது. இருட்டு மூலைக்குள் ஊமையாக அழுதுத்தீர்த்தான்.

ஆறுவருடங்கள் மிக நீண்ட காலக்கோடுகள். அண்ணாவின் சேமிப்புக்கள். யப்பான் நாடு அண்ணாவின் இழப்பீட்டிற்காக அனுப்பிய மொத்தமான தொகை கொஞ்சம் கரைந்து போயிருந்தாலும் கணிசமான லட்சங்கள் இன்னும் இருந்தன. பத்தொன்பது வயதுத் திருவேணியின் கல்யாணத்தை மட்டும் முடித்துவிட்hல் போதும் அவனின் கால்களைக் கட்டிய தளையும் கட்டவிழ்ந்து போகும்.

சிவசம்பு மாமா முழுமூச்சாகத் திருவேணிக்காக மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார். மாமா நான் காசைப் பாக்கேல்லை. அவளுக்கு பிடிச்சிருந்தால் சரி|| கிட்டத்தட்ட ஆறு ஏழு இடங்கள் திருவேணிக்கு எதுவும் பிடிக்கவில்லை. கொஞ்சம் சலிப்பாகக் கூட இருந்தது. என்ன இவள்...அலுத்தது. கடைசியாக மாமா ~~தம்பி கவலைப்படாதை அவளின்ர மனதுக்குள்ளேயும் என்னவோ இருக்குது. விட்டுப்பிடிப்போம். இப்ப என்ன வயசே போட்டுது. பாப்பம்||.

நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. அவசர அவசரமாகக் குளித்து விட்டு வெளியே புறப்பட்டான் சாரங்கன். கோயில் வாசலில் சைக்கிளை ஸ்ராண்ட்போட்டு நிறுத்தி உள்ளே வந்தான். வெறிச்சோடிய பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வில்வ மர மணலி;ல் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தான். எவ்வளவு நேரம்இருந்திருப்பானோ விழித்தபோது இமைகள் கண்ணீரில் பிசுபிசுத்தன. இளவெய்யிலில் காஸ்கை தெரிந்தது. உதறிக்கொண்டு எழுந்தான்.



புள்ளிகளும் கோடுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 12:08 am

வீட்டுக்குள் நுழைய எங்கேயோ... எப்போதோ கேட்ட குரலின் ஜாடை... யாராயிருக்கும் ஆ...அட.. ஜீவன் இவன் எப்படி இங்க. ஜீவன் ஓடிவந்து உணர்வுகளின் கொந்தளிப்போடு அணைத்துக் கொள்ள சாரங்கன்... சின்ன கீச்சிடலோடு எழுந்த ஜீவனின் கண்ணாடிநழுவிக்கொள்ள இரண்டு கண்களிலிருந்து இடங்கள் .. ஓ.. ஜீவன்.. உனக்கு நீ... பல நிமிடம் உணர்வுகளின் பதைப்பதைப்பை, உயிர்க் கூட்டின் வதைப்பைப் பொங்கி வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்கத் தோன்றாமல் வலியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் திருவேணி.

ஜீவன் மலையின் முகட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்தவன். பல்கலைக்கழகத்தில் சாரங்கனோடு ஒன்றாகச் சேர்ந்தவன். முதலாம் வருடத்தின் இறுதி நாளன்று, செம்மை படர்ந்த மகாவலியின் புது வெள்ளப்பெருக்கில அடித்துச் செல்லப்படவிருந்த அவனை மயிர்க் கூச்செறியும் துணிச்சலோடு காப்பாற்றியவன்... பிறகு தெரியாது.. இவனைப் பற்றி எதுவும் தெரியாது.

ஜீவன் அமைதியாகச் சொன்னான். ~~சாரங்கா உனக்கு அழுவதற்காவது கண்கள் இருக்கின்றதே என்று சந்தோசப்படு. எனக்கு... அவன் உதடுகள் அழுதன. அவ்வளவுதான்.

அந்த நிமிடமே திருவேணியின் நெஞ்சுக்குள் சின்னதாக எதுவோ உடைந்தது. பொங்கியது. உலகத்தின் நிறத்தை உனக்கு நான் காட்டுகிறேன். ஜீவன் அவள் உதடுகள் மெதுவாக அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தன. ஏதோ ஒருமுடிச்சு அவிழ்ந்தது மாதிரி மனசுக்குள் ஏக சில்லிப்பு.

நாட்கள் ஒவ்வொன்றாக சிரமமாய், சிக்கலாய் உதிரஉதிர நெஞ்சு மட்டும் இறுகிக்கொண்டது. இந்தச் சாயங்காலம் பூப்பூவாக வானம் பூச்சிதறலாக உதறிக் கொண்டிருக்க இறகுகள் நனைந்து போன பறவை மிதமாகமிதந்து கொண்டிருந்தது. அவள் தன் முடிவை தனது எதிர்காலத்திற்கான ஒருபக்க அத்திவாரத்தை லேசான கண்ணீரோடு சொல்லி முடித்தாள். ஜீவன், அண்ணா, அப்பாச்சி அந்த முக்கோணத்துருவங்களிடையே மூவேறு அதிர்வுகள். ஜீவன் ஒரு நிமிடம் உறைந்தவன் தான் தள்ளிக் கொண்டு எழுந்தான். ~~சாரங்கா மன்னித்துக்கொள். நான் வருகிறேன்...|| சாரங்கன் எதுவும் தோன்றாமல் உட்கார்ந்திருக்க.. அப்பாச்சி தான் கதைத்தாள். ~~மோனை.. ஜீவன் இப்ப நீ போறதால இந்தப் பிரச்சினை இத்தோடை தீருமென்று நீ நினைச்சால் போ... ஆனால் இது நிக்கிற பிரச்சினை இல்ல மோனை... பொம்பிளையின்ர மனம் எனக்குத் தெரியும். ஒருக்கால் அது ஒருத்தனுக்குத்தான் திறக்கும்.. மூடும்..|| அப்பாச்சி எங்கோ தொலை தூரத்திற்கு நகர்வது போல இருந்தது.

~~என்ரை பரம்பரையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. பத்துத் தலைமுறை பட்டங்கட்டி ஆண்டவங்கள். எனக்குப்பாக்காத இடமில்லை. கடைசியில என்ரையப்பு எக்கேடும் கெடட்டும் எண்டு கைகழுவி விடடிட்டார். பொம்பிளை பாக்க வந்த உடையாருக்கும் எனக்கும் பதினெழு வயது வித்தியாசம் மோனை. அப்ப ஊர் சிரிச்சுது. ஆனால் என்ர அப்பு, ஆச்சியோட மல்லுக்கு நிண்டு அவரைத்தான் கட்டினன்... எனக்கென்ன குறை?

~~அதுக்கில்ல ஆச்சி அது வேற இதுவேற||

~~மோனை உதைச் சொல்லாதை. என்ரை நெஞ்சு உடையாருக்குப் பின்னால் போனது போல பொடிச்சியின்ர மனம் உனக்குப் பின்னால ஓடிட்டுது. எல்லாம் கடவுள் சங்கற்பம்||.

திருவேணிக்கு ஆச்சியை கட்டிக்கொள்ள வேண்டும் போலத் துடித்தது. சாரங்கன் சிந்தியிருந்த நீரில் மௌனமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தான். முகத்தசைகள் மட்டும் இறுகிப் போயிருக்க உணர்வுகளை அடக்க உதடுகளை அழுது;தமாகக் கடித்திருந்தான்.

வசந்தம் ஒருசுற்றுச் சுற்றி வந்தது. கலியாணத்திற்கு நாள் குறித்து ஊர்கூட்டி, நடாத்தி வைத்தது. அவன் கைவிடித்து படியிறங்கிப் போன அனுதாபத்தோடு, ஆதூரத்தோடு பார்த்தது. அவள் மட்டும் நெஞ்சு நிறைந்த பூரிப்போடு அப்பாச்சியின் கால்களைத் தொட்டாள். அழுத அண்ணாவின் கண்ணீரைச் சுண்டிவிட்டாள். ~~அழாதே இது அழுகிற காலமல்ல. அண்ணா என் வயிற்றில் பிறக்கின்ற இவனோ, இவளோ நிச்சயம் எங்கட அம்மா, அப்பா ஏன் தன்னைப் பெற்றவனின் கண்களுக்காகவும் கேள்வியாக எழுவான்||. சொல்லவில்லை சொல் முடியவில்லை. மனது மட்டும் சட்டம் போட்டு கோடிட்டது தொட்டு வைத்த புள்ளிகளெல்லாம் புதிது புதிதாக அர்த்தம் சொல்லின.



புள்ளிகளும் கோடுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 12:39 am

அண்ணா என் வயிற்றில் பிறக்கின்ற இவனோ, இவளோ நிச்சயம் எங்கட அம்மா, அப்பா ஏன் தன்னைப் பெற்றவனின் கண்களுக்காகவும் கேள்வியாக எழுவான்||.

நல்ல கதை.. இல்லை இல்லை நிஜம்மாகும் உண்மை கதை..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக