Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
+5
இளமாறன்
balakarthik
உமா
krishnaamma
aathma
9 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
First topic message reminder :
ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.
இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…
“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.
பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.
பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.
இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.
“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.
பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.
முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.
பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.
ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.
***
* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.
“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.
** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.
மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.
***
தட்டிக்கழிக்க பல காரணங்கள்…
“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!
இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.
சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.
“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.
ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
நன்றி-தினத்தந்தி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து
என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .
மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .
ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .
பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !
ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .
நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே
பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .
பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .
ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே
ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்
எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .
ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.
இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…
“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.
பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.
பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.
இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.
“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.
பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.
முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.
பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.
ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.
***
* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.
“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.
** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.
மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.
***
தட்டிக்கழிக்க பல காரணங்கள்…
“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!
இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.
சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.
“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.
ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
நன்றி-தினத்தந்தி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து
என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .
மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .
ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .
பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !
ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .
நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே
பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .
பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .
ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே
ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்
எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
இதற்க்கு அடுத்து வந்த மாப்பிளை தலைமுறையினரிடம் இருந்து தான் பெரிய அளவில் பிரச்சினைகள் வரத் துவங்கி இருக்கின்றனர் .
இவர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நினைத்தனர் . மனித உயிராக நினைக்கவில்லை . பெண்ணுக்கு ஆடத் தெரியுமா ? பாடத்தெரியுமா ? என்பது முதற்கொண்டு பெண்ணுக்கு கிலோகணக்கில் தங்கம் , வெள்ளி சீர்வரிசை செய்யவேண்டும் . திருமணம் ஆடம்பரமாக பெண் வீட்டாரால் செய்துவைக்கப்படவேண்டும் . மாப்பிள்ளைக்கு தனியே வீடு , நிலம் , நகை , வாகனம் வாங்கி தரவேண்டும் என்பது வரை வரம்பில்லாத ஏகப்பட்ட அடக்குமுறைகளையும் அராஜகங்ககளையும் பெண் வீட்டினர் மீது அள்ளிதெளித்தனர் .
அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து , அதை தவிர அவர்கள் செய்த அவமரியாதைகளையும் பொறுத்துக் கொண்டு , தான் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தனர் பெண்ணின் பெற்றோர் .
எனவே மாப்பிள்ளை வீட்டார் கேட்டபொழுதெல்லாம் , பணத்தை வாரி இரைத்தனர் , தன் கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் பெற்றாவது மாப்பிள்ளை வீட்டாரை திருப்தி செய்தனர் .
ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் மாப்பிள்ளை வீட்டாரின் பணப் பேராசைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை . அப்பொழுதெல்லாம் அவர்கள் கடவுளைத்தான் நம்பி இருந்தனர் . எல்லாம் நம் மகள் விதி , இல்லாவிடில் இப்படியொரு கொள்ளைக்கார கும்பலிடம் அவள் சிக்குவாளா ? இனி கடவுள்தான் அவளை காப்பாற்றவேண்டும் என்று கூறிவிட்டு பெண்ணின் பெற்றோர் ஒதுங்கி கொண்டனர் . இனி எல்லாம் நாம் மகள் சமர்த்து, அவள் எப்படியாது அடிமையாக இருந்து மாமியார் வீட்டில் பிழைத்து கொள்ளட்டும் என்று நினைத்துக்கொண்டு அமைதியாக தங்கள் வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்று விட்டனர் .
மருமகள் பெண்ணோ தினமும் வார்த்தை நெருப்பில் வாட்டப்பட்டாள்
மாமியார் , கணவன் ஆகியோர் ஒரு பக்கம் கொடுமை செய்கின்றனர்
தந்தையும் தாயும் பாராமுகமாய் இருக்கின்றனர்
இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்டு
அந்த பெண்கள் பட்டபாடு இருக்கிறதே !!
அதை பற்றி எழுத வேண்டுமானால் பல புத்தகங்கள் எழுதி கொண்டே போகலாம்
சொல்லி மாளாது
பல்வேறு வகைகளில் அவள் பழி வாங்கப்பட்டாள் .
கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும் மாமியார் , மாமனார் முன் தரையில் கூட அமர கூடாது அது மரியாதை குறைச்சல் என்று கூறி பல மணி நேரம் அவர்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது .
கணவனின் தம்பி , தங்கை ஆகியோரது திருமணத்தின் போது எல்லா வேலைகளும் மருமகளே செய்யவேண்டும் ஆனால் அவளது உடன்பிறந்த தம்பி , தங்கை திருமணத்திற்கு செல்ல அவளுக்கு அனுமதி இல்லை .
தாய் பாசம் என்பது மிருகங்களிடம் கூட உண்டு .
ஆனால் மருமகள் அந்த மிருகங்களை விட கேவலமாக , தாய் பாசமே இல்லாமல் இருக்கவேண்டும் . எப்பொழுதும் மாமியார் வீடே கதி என்று கிடக்கவேண்டும் . தாய் வீட்டிற்க்கு அவள் செல்லக் கூடாது என்ற கொடுமையான கட்டுப்பாடு அவளுக்கு போடப்பட்டு இருந்தது .
கணவனை விட மனைவி சற்று அழகாக இருந்துவிட்டால் அவ்வளவுதான் !
அவள் மட்டும் தனியாக வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது , பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட செல்லக் கூடாது , ஏன் வீட்டு வாசலில் கூட நிற்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அவள் மீது திணிக்கப்பட்டன அவளது கணவனால் . காரணம் கணவனின் சந்தேகபுத்தி
கணவனை விட சற்று உயரமாக மனைவி இருந்துவிட்டாலோ , வீதியில் செல்லும் போது கணவனுடன் சரிசமமாக நடந்துவரக்கூடாது . கணவனுக்கு பின்னால் தான் நடந்துவரவேண்டும் அதுவும் எப்படி தெரியுமா ? கூனிக்குறுகி தன் உயரம் தெரியாதவாறு நடந்து வர வேண்டும் போன்ற சட்டங்கள் போடப்பட்டன கணவனால்
மனைவி ஆண் குழந்தையைத்தான் பெற்றெடுக்கவேண்டும் . பெண் குழந்தையை பெற்றால் அவள் தன் பெற்றோர் வீட்டீலேயே இருந்துவிடவேண்டியதுதான் . இனிமேல் அவள் வேண்டாம் அல்லது அப்படியே மனைவியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றாலும் அதற்கு தனியே பெண்ணின் பெற்றோர் வரதட்சிணை கொடுத்து தண்டம் அழ வேண்டும் என்று எண்ணினர் கணவன்மார்கள்
தொடரும் ----
இவர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நினைத்தனர் . மனித உயிராக நினைக்கவில்லை . பெண்ணுக்கு ஆடத் தெரியுமா ? பாடத்தெரியுமா ? என்பது முதற்கொண்டு பெண்ணுக்கு கிலோகணக்கில் தங்கம் , வெள்ளி சீர்வரிசை செய்யவேண்டும் . திருமணம் ஆடம்பரமாக பெண் வீட்டாரால் செய்துவைக்கப்படவேண்டும் . மாப்பிள்ளைக்கு தனியே வீடு , நிலம் , நகை , வாகனம் வாங்கி தரவேண்டும் என்பது வரை வரம்பில்லாத ஏகப்பட்ட அடக்குமுறைகளையும் அராஜகங்ககளையும் பெண் வீட்டினர் மீது அள்ளிதெளித்தனர் .
அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து , அதை தவிர அவர்கள் செய்த அவமரியாதைகளையும் பொறுத்துக் கொண்டு , தான் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தனர் பெண்ணின் பெற்றோர் .
எனவே மாப்பிள்ளை வீட்டார் கேட்டபொழுதெல்லாம் , பணத்தை வாரி இரைத்தனர் , தன் கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் பெற்றாவது மாப்பிள்ளை வீட்டாரை திருப்தி செய்தனர் .
ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் மாப்பிள்ளை வீட்டாரின் பணப் பேராசைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை . அப்பொழுதெல்லாம் அவர்கள் கடவுளைத்தான் நம்பி இருந்தனர் . எல்லாம் நம் மகள் விதி , இல்லாவிடில் இப்படியொரு கொள்ளைக்கார கும்பலிடம் அவள் சிக்குவாளா ? இனி கடவுள்தான் அவளை காப்பாற்றவேண்டும் என்று கூறிவிட்டு பெண்ணின் பெற்றோர் ஒதுங்கி கொண்டனர் . இனி எல்லாம் நாம் மகள் சமர்த்து, அவள் எப்படியாது அடிமையாக இருந்து மாமியார் வீட்டில் பிழைத்து கொள்ளட்டும் என்று நினைத்துக்கொண்டு அமைதியாக தங்கள் வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்று விட்டனர் .
மருமகள் பெண்ணோ தினமும் வார்த்தை நெருப்பில் வாட்டப்பட்டாள்
மாமியார் , கணவன் ஆகியோர் ஒரு பக்கம் கொடுமை செய்கின்றனர்
தந்தையும் தாயும் பாராமுகமாய் இருக்கின்றனர்
இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்டு
அந்த பெண்கள் பட்டபாடு இருக்கிறதே !!
அதை பற்றி எழுத வேண்டுமானால் பல புத்தகங்கள் எழுதி கொண்டே போகலாம்
சொல்லி மாளாது
பல்வேறு வகைகளில் அவள் பழி வாங்கப்பட்டாள் .
கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும் மாமியார் , மாமனார் முன் தரையில் கூட அமர கூடாது அது மரியாதை குறைச்சல் என்று கூறி பல மணி நேரம் அவர்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது .
கணவனின் தம்பி , தங்கை ஆகியோரது திருமணத்தின் போது எல்லா வேலைகளும் மருமகளே செய்யவேண்டும் ஆனால் அவளது உடன்பிறந்த தம்பி , தங்கை திருமணத்திற்கு செல்ல அவளுக்கு அனுமதி இல்லை .
தாய் பாசம் என்பது மிருகங்களிடம் கூட உண்டு .
ஆனால் மருமகள் அந்த மிருகங்களை விட கேவலமாக , தாய் பாசமே இல்லாமல் இருக்கவேண்டும் . எப்பொழுதும் மாமியார் வீடே கதி என்று கிடக்கவேண்டும் . தாய் வீட்டிற்க்கு அவள் செல்லக் கூடாது என்ற கொடுமையான கட்டுப்பாடு அவளுக்கு போடப்பட்டு இருந்தது .
கணவனை விட மனைவி சற்று அழகாக இருந்துவிட்டால் அவ்வளவுதான் !
அவள் மட்டும் தனியாக வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது , பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட செல்லக் கூடாது , ஏன் வீட்டு வாசலில் கூட நிற்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அவள் மீது திணிக்கப்பட்டன அவளது கணவனால் . காரணம் கணவனின் சந்தேகபுத்தி
கணவனை விட சற்று உயரமாக மனைவி இருந்துவிட்டாலோ , வீதியில் செல்லும் போது கணவனுடன் சரிசமமாக நடந்துவரக்கூடாது . கணவனுக்கு பின்னால் தான் நடந்துவரவேண்டும் அதுவும் எப்படி தெரியுமா ? கூனிக்குறுகி தன் உயரம் தெரியாதவாறு நடந்து வர வேண்டும் போன்ற சட்டங்கள் போடப்பட்டன கணவனால்
மனைவி ஆண் குழந்தையைத்தான் பெற்றெடுக்கவேண்டும் . பெண் குழந்தையை பெற்றால் அவள் தன் பெற்றோர் வீட்டீலேயே இருந்துவிடவேண்டியதுதான் . இனிமேல் அவள் வேண்டாம் அல்லது அப்படியே மனைவியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றாலும் அதற்கு தனியே பெண்ணின் பெற்றோர் வரதட்சிணை கொடுத்து தண்டம் அழ வேண்டும் என்று எண்ணினர் கணவன்மார்கள்
தொடரும் ----
Last edited by aathma on Mon Jul 25, 2011 9:06 pm; edited 2 times in total
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
உண்மை நண்பரே, ஆனால் உங்கள் கருத்துக்கள் சுமார் 10 வருடம் முந்தைய கதை, மாமியார் அல்லது மருமகள் கொடுமை பல காலம் உள்ளது, இந்த கொடுமை குறைய ஒன்று நாம் அம்மாவை கண்டிக்க வேண்டும், இல்லை மனைவியை, சொல்லுங்கள் எந்த பெண்ணை முதலில் கண்டிக்க வேண்டும் , எந்த பெண்ணுக்கு விடுதலை கிடைத்தாலும் ஆண்கள் மத்தளம் போல் இரண்டு பக்கம் அடி வாங்குவது ஒன்று புதிது அல்ல. இன்று உப்பு பெறாத காரணங்கள் கூறி மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறும் பெண்களை என்ன செய்யலாம், (முதலில் கொடுமை செய்யும் ஆண்களை கண்டித்த பிறகு தான்) அதற்கு ஒரு வழி கூறுங்கள். ஆண்களை வரதட்சணை சட்டத்தால் தண்டிக்கலாம், பெண்களை என்ன செய்யலாம், தவறு செய்பவர் ஆனாலும் பெண்ணாலும் தண்டனை என்ற ஒன்று உள்ளது அல்லவா, கூறுங்கள் இப்படி பட்ட பெண்களுக்கு பெண் வீட்டாருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும், தலைப்பை தொடங்கிய நீங்களே ஒரு நல்ல தீர்பு கூறுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
சதாசிவம் wrote:நண்பரே, தலைப்பின் உள்ள கருத்தை தவிர்த்து குடும்ப
வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனை வருகிறது என்ற விவாதம் தான் வலுக்கிறது, நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது இது வரை ஆண்கள் கொடுமை செய்தார்கள், இப்போது பெண்கள், பெண் வீட்டார் கொடுமை செய்வது என்ன தப்பு என்பது போல் உள்ளது, இனி ஒரு விதி செய்வோம் என்ற வார்த்தை, பெண் சுதந்திரத்தை பேசுகிறது, இந்த தலைப்பு கொடுமை செய்யும் பெண்கள், பெண் வீட்டார் பற்றியது, வேலைக்கு செல்லும் பெண்ணின் சம்பாதியத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருப்பதை விட பெண் வீட்டாரிடம் அதிகம் பெருகி வருகிறது, முதிர் கண்ணிகள் பெருகும் புதிய விதியை நாம் செய்வோம் என்பது போல் தான் உங்கள் கருத்துக்கள் உள்ளது.
விதி செய்வோம்
நண்பரே , நான் இன்னமும் என் கருத்தை முழுமையாக கட்டுரைகளின் வாயிலாக தெரிவித்து முடிக்கவில்லை . எனவே தயவு செய்து பொறுமையாக கட்டுரைகளை தொடர்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .
இனி ஒரு விதி செய்வோம் என்றால் முதிர்க்கண்ணிகள் பெருகவேண்டும் என்ற அர்த்தத்தில் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் ?
இரு தரப்பினரும் தங்களின் குறைகளை விடுத்து , மனிதாபிமானத்தோடு எதிர் தரப்பினரை அணுகவேண்டும் . இதற்கு ஆவண செய்ய வேண்டும் .
இருதரப்பினரும் மகிழ்ச்சியோடும் , மன நிறைவோடும் வாழ வேண்டும்
இத்தகைய விதி ஒன்றை செய்ய வேண்டும் . அதை எந்த நாளும் காக்க வேண்டும் இதுவே என் கருத்து
சண்டை சச்சரவு இல்லாத நிம்மதியான உலகம் , அதில் பேரன்புடன் மக்கள்
இதை நினைத்து பார்க்கவே எவ்வளவு நன்றாக அருமையாக இருக்கிறது
நான் இதைத்தான் எதிர்பார்க்கிறேன்
அப்படி ஒரு விடியல் நம் நாட்டில் நிகழாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறேன்
இந்த விவாதத்தின் தலைப்பு வேண்டுமானால் பெண் வீட்டாரை குறை சொல்லும் வகையில் அமைந்து இருக்கலாம் . ஆனால் தொடர்ந்து வரும் கட்டுரைகள் பெண் மற்றும் ஆண் வீட்டார் இருவரது குறைகளை எடுத்து சொல்லும் விதமாகவே அமையும் .
தற்போது ஆண் வீட்டாரின் குறைகளை சொல்கிறேன் . இனிமேல்தான் பெண் வீட்டாரைப் பற்றி சொல்லப்போகிறேன் .
என் நோக்கம் இரு வீட்டாரும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்பதே
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
சதாசிவம் wrote:உண்மை நண்பரே, ஆனால் உங்கள் கருத்துக்கள் சுமார் 10 வருடம் முந்தைய கதை, மாமியார் அல்லது மருமகள் கொடுமை பல காலம் உள்ளது, இந்த கொடுமை குறைய ஒன்று நாம் அம்மாவை கண்டிக்க வேண்டும், இல்லை மனைவியை, சொல்லுங்கள் எந்த பெண்ணை முதலில் கண்டிக்க வேண்டும் , எந்த பெண்ணுக்கு விடுதலை கிடைத்தாலும் ஆண்கள் மத்தளம் போல் இரண்டு பக்கம் அடி வாங்குவது ஒன்று புதிது அல்ல. இன்று உப்பு பெறாத காரணங்கள் கூறி மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறும் பெண்களை என்ன செய்யலாம், (முதலில் கொடுமை செய்யும் ஆண்களை கண்டித்த பிறகு தான்) அதற்கு ஒரு வழி கூறுங்கள். ஆண்களை வரதட்சணை சட்டத்தால் தண்டிக்கலாம், பெண்களை என்ன செய்யலாம், தவறு செய்பவர் ஆனாலும் பெண்ணாலும் தண்டனை என்ற ஒன்று உள்ளது அல்லவா, கூறுங்கள் இப்படி பட்ட பெண்களுக்கு பெண் வீட்டாருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும், தலைப்பை தொடங்கிய நீங்களே ஒரு நல்ல தீர்பு கூறுங்கள்.
நன்றி நண்பரே , தங்கள் கருத்துகளுக்கு
நண்பரே , நீங்கள் கூறிய கருத்தில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு .
சில கருத்தில் உடன்பாடு உண்டு .
கொடுமைகள் குறைய மாமியாரை கண்டிக்க வேண்டும் அல்லது மருமகளை கண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள் .
ஆம் உண்மைதான் . யாரையாவது கண்டிக்கத்தான் வேணும் . தவறு யார் மீது இருக்கிறதோ அவரை கண்டிக்கத்தான் வேண்டும் தயவு தாட்சண்யம் இல்லாமல் .
இங்கே ஆண் மகன் சிறந்த நீதிபதியாகத்தான் இருக்கவேண்டும் . அம்மா , மனைவி ஆகிய இருவருக்குமே பயப்படவோ , பரிவு காட்டவோ கூடாது .
இருவரையுமே தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கவேண்டும் ஆண் .
தன் பேச்சிற்கு அவர்களை அடங்கி போக செய்ய வேண்டும் . ஆனால் அந்த பேச்சு நியாயமாக இருக்கவேண்டும் .
நியாத்தை எடுத்து கூறி இருவரையும் சண்டையில் இருந்து விலக்கி குடும்பத்தில் அமைதி கொண்டுவர செய்யவேண்டும் . இதில் தான் ஒரு ஆண் தன் ஆளுமையை வழுவாக காட்ட வேண்டும் . அதை விடுத்து யாரோ யாரையோ அடித்து கொள்ளட்டும் , நம் தலைக்கு ஆபத்து வராமல் இருந்தால் சரி என்று நினைத்து பெண்களை அடித்துக்கொள்ளவிட்டு விட்டு நைசாக கழன்றுக்கொள்ள நினைப்பது கோழைத்தனம்
இவ்வாறு ஆண்கள் கோழைதனமான முடிவு எடுப்பதால்தான் , குடும்பத்தின் பிரச்சினைகளும் முடிவு இல்லாமல் போய்கொண்டே இருக்கின்றன
அதேசமயம் நீங்கள் கூறுவது போல் இந்த குடும்ப வன்முறை கொடுமைகள் யாவும் மாமியால் மருமகளுக்கு நடத்தப்படுவது மாத்திரமே அல்ல .
அதாவது பெண்ணால் மாத்திரமே இந்த பிரச்சினை ஏற்படுவது இல்லை .
மாமனார் , கொலுந்தனார் , கணவன் போன்ற ஆண்களும் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் .
நான் சில குடும்பங்களில் பார்த்து இருக்கிறேன் . மாமியார் வீட்டிற்கு வந்த மருமகளை தன் மகளாக நினைத்து அவள் மீது பாசம் காட்டுகிறார் . மருமகள் முன்கோபகாரியாக இருந்தாலும் கூட இவர் பொறுமையாக இருந்து நல்ல புத்திமதிகளை மருமகளுக்கு எடுத்து கூறுகிறார் . மருமகளும் அதை கேட்டுக்கொள்கிறார் .
சில பெண்கள் சொல்லி இருக்கின்றனர் " என் மாமியார்தான் இன்றைய எனது உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு அடிப்படை காரணம் , என் திறமைகளை இனம் கண்டு என்னை ஊக்குவித்து என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் "இவ்வாறு சில பெண்கள் கூறியிருக்கின்றனர் .
இன்னும் சிலர் கூறியிருக்கின்றனர் " நான் துன்பத்தில் துடித்துக் கொண்டு இருந்தபொழுதெல்லாம் என் நாத்தனார்தான் எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தார் . அவர் கூறிய ஆறுதல் மொழியின் துணைகொண்டே நான் துன்பங்களை கடந்து வந்தேன் . அவ்வளவு பக்கபலமாக இருந்தார் அவர் என்று பெண்கள் கூறியிருக்கின்றனர் .
எனவே குடும்ப வன்முறை கொடுமை என்றவுடன் பெண்களை நோக்கி விரல் நீதி குற்றம் சாட்டுவது தவறு .
மாமியார் , நாத்தனார் போன்ற பெண்கள் வந்த மருமகளை அனுசரித்துக் கொண்டு போக , வந்த மருமகளும் இவர்களை அனுசரித்து போக ஆனால் வீட்டில் உள்ள மாமனார் , கணவன் , கொழுந்தனார் என்ற உறவுகளின் ரூபத்தில் ஆண்களின் அடக்குமுறை அராஜகங்கள் எப்படியெல்லாம் நிகழ்கின்றன தெரியுமா ?
இந்த அடக்குமுறைகள் வெளியேதெரியாது , ஏதோ பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பது போல் குடும்ப வன்முறை கொடுமைகளுக்கு காரணம் மாமியார் , நாத்தனார் போன்ற பெண்களே காரணம் என சாயம் பூசப்படுகின்றன நம் சமூகத்தில் .
இந்த விஷயத்தில் பெண்களுக்கு எதிராக பெண்களே கொடுமை செய்கின்றனர் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி வெற்றிகரமாக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறான் ஆண் . அந்த சூழ்ச்சியில் சிக்குகின்ற பெண்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கின்றனர் அறியாமையினால்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
aathma wrote:இதற்க்கு அடுத்து வந்த மாப்பிளை தலைமுறையினரிடம் இருந்து தான் பெரிய அளவில் பிரச்சினைகள் வரத் துவங்கி இருக்கின்றனர் .
இவர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நினைத்தனர் . மனித உயிராக நினைக்கவில்லை . பெண்ணுக்கு ஆடத் தெரியுமா ? பாடத்தெரியுமா ? என்பது முதற்கொண்டு பெண்ணுக்கு கிலோகணக்கில் தங்கம் , வெள்ளி சீர்வரிசை செய்யவேண்டும் . திருமணம் ஆடம்பரமாக பெண் வீட்டாரால் செய்துவைக்கப்படவேண்டும் . மாப்பிள்ளைக்கு தனியே வீடு , நிலம் , நகை , வாகனம் வாங்கி தரவேண்டும் என்பது வரை வரம்பில்லாத ஏகப்பட்ட அடக்குமுறைகளையும் அராஜகங்ககளையும் பெண் வீட்டினார் மீது அள்ளிதெளித்தனர் .
அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து , அதை தவிர அவர்கள் செய்த அவமரியாதைகளையும் பொறுத்துக் கொண்டு , தான் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தனர் பெண்ணின் பெற்றோர் .
எனவே மாப்பிள்ளை வீட்டார் கேட்டபொழுதெல்லாம் , பணத்தை வாரி இரைத்தனர் , தன் கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் பெற்றாவது மாப்பிள்ளை வீட்டாரை திருப்தி செய்தனர் .
ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் மாப்பிள்ளை வீட்டாரின் பணப் பேராசைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை . அப்பொழுதெல்லாம் அவர்கள் கடவுளைத்தான் நம்பி இருந்தனர் . எல்லாம் நாம் மகள் வீதி , இல்லாவிடில் இப்படியொரு கொள்ளைக்கார கும்பலிடம் அவள் சிக்குவாளா ? இனி கடவுள்தான் அவளை காப்பாற்றவேண்டும் என்று கூறிவிட்டு பெண்ணின் பெற்றோர் ஒதுங்கி கொண்டனர் . இனி எல்லாம் நாம் மகள் சமர்த்து, அவள் எப்படியாது அடிமையாக இருந்து மாமியார் வீட்டில் பிழைத்து கொள்ளட்டும் என்று நினைத்துக்கொண்டு அமைதியாக தங்கள் வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்று விட்டனர் .
மருமகள் பெண்ணோ தினமும் வார்த்தை நெருப்பில் வாட்டப்பட்டாள்
மாமியார் , கணவன் ஆகியோர் ஒரு பக்கம் கொடுமை செய்கின்றனர்
தந்தையும் தாயும் பாராமுகமாய் இருக்கின்றனர்
இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்டு அந்த பெண்கள் பட்டபாடு இருக்கிறதே !!
அதை பற்றி எழுத வேண்டுமானால் பல புத்தகங்கள் எழுதி கொண்டே போகலாம்
சொல்லி மாளாது
பல்வேறு வகைகளில் அவள் பழி வாங்கப்பட்டாள் .
கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும் மாமியார் , மாமனார் முன் தரையில் கூட அமர கூடாது அது மரியாதை குறைச்சல் என்று கூறி பல மணி நேரம் அவர்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது .
கணவனின் தம்பி , தங்கை ஆகியோரது திருமணத்தின் போது எல்லா வேலைகளும் மருமகளே செய்யவேண்டும் ஆனால் அவளது உடன்பிறந்த தம்பி , தங்கை திருமணத்திற்கு செல்ல அவளுக்கு அனுமதி இல்லை .
தாய் பாசம் என்பது மிருகங்களிடம் கூட உண்டு .
ஆனால் மருமகள் அந்த மிருகங்களை விட கேவலமாக , தாய் பாசமே இல்லாமல் இருக்கவேண்டும் . எப்பொழுதும் மாமியார் வீடே கதி என்று கிடக்கவேண்டும் . தாய் வீட்டிற்க்கு அவள் செல்லக் கூடாது என்ற கொடுமையான கட்டுப்பாடு அவளுக்கு போடப்பட்டு இருந்தது .
தொடரும் ----
இனி இந்த விஷயத்திற்க்கு வருவோம் .
இவ்வாறு பல கொடுமைகளை பெண் வீட்டார் மீது திணித்த மாப்பிள்ளை தலைமுறையினர்தான் தற்பொழுது தந்தைகளாக இருக்கின்றனர்
இங்கிருந்துதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது . இதை தொடர்ந்து தற்போது மாப்பிள்ளையாக உள்ள இளைஞர்கள் , இவர்களது தவறான வழிகாட்டுதலால் திசை மாறி தவறான பாதையில் பயணிக்கின்றனர் .
முன்பெல்லாம் பெண்வீட்டார் அடிமையாகவே இருந்துவிடுவது என்று முடிவெடுத்து இருந்தனர் .
சமூக பாதுகாப்பு கருதி பெண்ணுக்கு கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் அதேபோல் மாப்பிளை வீட்டார் என்ன கொடுமை செய்தாலும் பொறுத்துக்கொள்ளலாம் இல்லாவிட்டால் நாம் பெண்ணுக்கு வாழாவெட்டி என்று இந்த சமூகம் பட்டம் கட்டி விடுமே , நம் காலத்திற்கு பிறகு நம் மகளின் கற்பிற்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே , அதற்கு பதில் மகள், மாமியார் வீட்டில் கொடுமை பட்டுக் கொண்டு வாழட்டும் அல்லது மானத்துடன் சாகட்டும் .
இவ்வாறு நினைத்தனர் பெண்ணின் பெற்றோர்
ஆனால் வருஷங்கள் செல்ல , செல்ல , தலைமுறை மாற , மாற மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் அராஜகத்திற்க்கு அளவே இல்லாமல் சென்று விட்டது. பெண்ணின் கற்புக்கான பாதுகாபிற்காகத்தான் திருமணம் செய்து மாப்பிள்ளை வீட்டாரின் அராஜகதிற்கு அடங்கி போனர் பெண் வீட்டினர் . ஆனால் அந்த பாதுகாப்பே இன்று கேள்விக்குறியாகி போனது . வீட்டில் உள்ள மற்ற ஆண்களால் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது . ( பார்வதிஷா சம்பவம் )
இதனால் பெண் வீட்டினர் மிரட்சியின் உச்சத்தில் , விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டனர்
அளவில்லாத ஆசைக்கு பெயர் பேராசை .
ஆனால் இன்றோ மாப்பிள்ளை வீட்டாரிடம் அளவில்லாத பேராசை உள்ளது .
அளவில்லாத பேராசைக்கு என்ன பெயர் கொடுப்பது ?
மாப்பிள்ளை வீட்டாரின் அளவில்லாத பேராசை கண்டு பெண்ணின் பெற்றோர் பயந்து போய் இருக்க , நான் முன்பு கூறிய, மாப்பிள்ளை வீட்டாரின் திருவிளையாடல்களை போன்ற பல கொடுமைகளை பார்த்தும் , கேட்டும் மிரண்டு போகின்றனர் பெண்ணும் , பெண்ணை பெற்றோரும் .
இவ்வாறு மிரண்டு போன பெண்ணும் பெண்ணின் பெற்றோரும் தற்பொழுது ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர் . திருமணமே நடக்கவிட்டாலும் பரவாயில்லை , இந்த அராஜக மாப்பிளை வீட்டாரிடம் சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் .
முன்பு நான் கூறிய மாப்பிள்ளை வீட்டாரின் திருவிளையாடல்களைப் பார்த்த பெண்ணும் பெண்ணை பெற்றோரும் இன்று எல்லா மாப்பிள்ளை வீட்டாரையும் சந்தேககண் கொண்டே பார்க்கின்றனர் .
தப்பித்தவறி ஒன்று இரண்டு நல்ல மாப்பிள்ளை வீட்டார் இருந்தாலும் ( அப்படி நல்லவர்கள் இன்றும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை . ஒருவேளை இருக்கலாம் இந்த பரந்த உலகில் அனைவரும் கெட்டவர்களா என்ன ? ) அவர்களையும் சந்தேகிக்கவே செய்கின்றனர் பெண் வீட்டார் . அவர்களை குறை சொல்ல முடியாது . அவர்களின் சூழ் நிலை அப்படி
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
» தோற்றுப்போகும் திருமணங்கள்
» சென்னையில் நாளைமறுநாள் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
» அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!
» 7 திருமணங்கள்
» தோற்றுப்போகும் திருமணங்கள்
» சென்னையில் நாளைமறுநாள் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
» அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!
» 7 திருமணங்கள்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|