ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

2 posters

Go down

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Empty ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

Post by krishnaamma Thu 21 Jul 2011 - 10:30

கோவை: கோவை அருகே வனங்களில் சுள்ளிகளை பொறுக்கியும், மருந்து, உணவுப்பொருட்களை சேகரித்தும், ஆடு, மாடு மேய்த்தும் பிழைப்பு நடத்திய மலைவாழ் பெண்கள், தற்போது ஓவியர்களாக மாறி வருகின்றனர். மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இவர்களின், "வார்லி' ஓவியங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைப்பதால், "ஆர்டர்'கள் குவிகின்றன. மலைவாழ் பகுதிகளில் வசிப்பவர்கள், பெரும்பாலும் வனங்களில் கிடைக்கும் சுள்ளிகளை (விறகு) பொறுக்கியும், மருந்து, உணவுப்பொருட்களை சேகரித்துமே பிழைப்பு நடத்துகின்றனர். சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து வருமானம் ஈட்டுகின்றனர். சிலர் மட்டுமே படிப்பறிவை பெற்று, முன்னேறுகின்றனர். ஆனைகட்டி அருகே உள்ள செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் பெண்கள், வழக்கமான தொழில்களை விடுத்து, ஓவியங்களை வரைந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஆடம்பரமான மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் பிரமாண்ட காட்சிகளோ, கண்ணைக் கவரும் கலர்களோ எதுவும் இந்த ஓவியங்களில் இடம்பெறுவதில்லை. ஆனால், மலைவாழ் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில், கோடரியை கையிலேந்தி வேட்டைக்கு செல்லும் ஆண், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் பெண், சும்மாடு சுமக்கும் முதியவர், மாட்டு வண்டி, அழகிய குடில் போன்ற எளிமையான காட்சிகளே இடம் பெற்றுள்ளன. கோடு, வட்டம், அரைவட்டம், முக்கோணம், சதுரம் போன்ற கணித குறியீடுகளை பயன்படுத்தியே, முழுக்க முழுக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பது, முக்கிய அம்சம். சாதாரண மர அட்டையில் "எம்சீல், செராமிக்' உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி, இந்த, வார்லி ஓவியம் வரையப்படுகிறது. டில்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், இந்த ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, "ஆர்டர்'கள் குவிந்துள்ளன. ஒரு ஓவியத்துக்கு குறைந்தபட்சம், 100 ரூபாய் விலை கிடைக்கிறது. பயிற்சியில் தேர்ந்த இந்த மலைவாழ் ஓவியர்கள், வாரத்துக்கு, 1,000 ரூபாயாவது வருமானம் பார்க்கின்றனர். ஆனைகட்டி, சின்ன ஜம்புகண்டி பகுதியில் மலைவாழ் பெண்களுக்கு பயிற்சியளித்து வரும் "அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்' நிர்வாகிகள் கூறுகையில், "மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் ஆதி திராவிட நலத்துறையின் கீழ், ஓவியம் வரைய பயிற்சி அளிக்கப்படுகிறது. படைப்புகளை சந்தைப்படுத்த தேசம் முழுவதும் முக்கிய நகரங்களில், 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
"பேனாவே பிடிக்கத்தெரியாத, இந்த மலைவாழ் பெண்கள் தற்போது ஓவியத்தில், தூள் கிளப்புவது மகிழ்ச்சியாக உள்ளது. துவக்கத்தில் பயிற்சி முகாமுக்கு வர தயக்கம் காட்டினர்; வனத்துறையினர் அறிவுறுத்தியும், ஒருவர்கூட வரவில்லை. பின், வலுக்கட்டாயமாக காரில் உட்கார வைத்து இங்கே அழைத்து வந்து, பயிற்சி அளித்தோம். தங்களுடைய வாழ்க்கை முறையே ஓவியமாக பிரதிபலிப்பதால், தற்போது ஆர்வமுடன் பலரும் ஓவியம் வரைய பழகுகின்றனர்; பாட்டி, தாத்தாவிடம் கேட்டுக் கேட்டு பழைய சம்பவங்களை படைப்புகளாக வெளிப்படுத்துகின்றனர். சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகளிலும் ஓவியப்பயிற்சி அளிக்கப்படும்' என்றனர்.

வாழ்க்கை மீது நம்பிக்கை : மலைவாழ் மக்களின் எளிமையான ஓவியங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து ஸ்டால்களிலும் படைப்புகளை வைக்குமாறு வலியுறுத்தி, "ஆர்டர்'கள் வந்துள்ளன. இதனால், வருமானம் கிடைப்பதுடன், இவர்களின் பாரம்பரியம் மற்றும் ஓவியத்திறமையும் வெளிப்படுகிறது. "
ஆடு, மாடு மேய்க்க மட்டுமே எங்களுக்கு தெரியும். இதைவிட்டால், அருகிலுள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வோம். ஆனால், தற்போது ஓவியங்களை வரைவதால், எங்களுக்கு வருமானம் கிடைப்பது, புதிதாக உள்ளது; நம்ப முடியவில்லை. முதலில் கூச்சமாக இருந்தாலும், தற்போது கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஓவியம் வரைகிறோம். எங்களாலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது' என்கின்றனர், இந்த நவீன "ரவி வர்மா'க்கள்.
ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் : சுள்ளி சேகரிக்கும் தொழிலுக்கு இனி முற்றுப்புள்ளி புன்னகை

வார்லி பெயின்ட் உருவாகும் விதம் : கற்பனையில் தோன்றும் காட்சிகள், முதலில் ஏதாவது மர அட்டையில் பென்சிலால் வரையப்படுகின்றன. "எம்சீல்' மூலமாக செடி, கொடி, மரங்கள், விலங்குகள் மற்றும் மனித உருவங்களை தயாரித்து, அட்டையிலுள்ள குறிப்பிட்ட படங்களின் மீது ஒட்டுகின்றனர். கறுப்பு நிற ஆயில் அல்லது பேப்ரிக் பெயின்ட்டால், அட்டை முழுவதும் வர்ணம் தீட்டப்படுகிறது. பின், உருவங்களின் மீது, தேவையான கலர்களில், "கோட்டிங்' செய்யலாம் அல்லது பெயின்டிங் பவுடரை தண்ணீரில் கரைத்து, உருவங்களின் மீது சிறுதுளிகள் விட்டு, ஊதி கலர் கொண்டு வரலாம். இறுதியாக, ஒருநாள் உலர வைத்தால், அழகிய வார்லி ஓவியங்கள் ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Empty Re: ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

Post by krishnaamma Thu 21 Jul 2011 - 10:38

நல்ல செய்தி தான் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Empty Re: ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

Post by ரஞ்சித் Thu 21 Jul 2011 - 11:25

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Worli_1

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Tarapa-dance-daily-life
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Empty Re: ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

Post by krishnaamma Thu 21 Jul 2011 - 11:37

அற்புதமாக இருக்கு ரஞ்சித் புன்னகை பகிர்ந்த மைக்கு நன்றி .

நான் தேடினீன் எனக்கு கிடைக்கல நீங்க சூப்பராக போட்டு விட்டீர்கள் , நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Empty Re: ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

Post by ரஞ்சித் Thu 21 Jul 2011 - 11:41

krishnaamma wrote:அற்புதமாக இருக்கு ரஞ்சித் புன்னகை பகிர்ந்த மைக்கு நன்றி .

நான் தேடினீன் எனக்கு கிடைக்கல நீங்க சூப்பராக போட்டு விட்டீர்கள் , நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் Empty Re: ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum