Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
+7
ரேவதி
உமா
ஸ்ரீஜா
ரபீக்
கே. பாலா
ஜாஹீதாபானு
rameshnaga
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
ஈகரைத் தோழர்களுக்கு ரமேஷ்நாகா - வின் அன்பு வணக்கங்கள்.
ஈகரைக் கவிதைப் போட்டி -4-இல் நானும் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் செய்த ஒரு தவறால், போட்டியின் விதி முறைகளுக்கு முரணானவனாகி,
போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
நான் எனது கவிதைகளை இ-மெயிலில் அனுப்பும் பொது அதை பிடிஎஃப் கோப்பில் அனுப்பி விட்டேன்.
இது குறித்து வந்த எச்சரிக்கையையும் நான் பார்க்கத் தவறி விட்டேன்.அதனால் என்னால்
கவிதைப் போட்டி-4-இல் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ஒரு போட்டியில் கலந்து கொள்பவனுக்கு எத்தனை கவனம் வேண்டும் என்பதை நமது ஈகரைத் தோழர்கள் அனைவரும் அறிய வேண்டும்
என்பதனாலேயே இது குறித்து இப்போது எழுதுகிறேன்.
என்றாலும், நான் நம் ஈகரைத் தோழர்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இப்போது பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தலைப்பு : அரசியல்:
********************
கவிதையின் பெயர்: எரிந்து போகும் வைரங்கள்:
****************************************
யாருக்குப் பாவம் செய்தேன்? - ஒற்றை எறும்புக்கும் தீங்கறியேன்;
மா தவத்துப் பிள்ளை இங்கே நானிருக்கப் போனதென்ன?
கூன் விழுந்த காலத்திலே-தோள் கொடுக்கப் பிள்ளை பெற்றேன்;
பட்ட மரம் நானிருக்கப் பச்சை மரம் படுத்ததென்ன?
நாலெழுத்துப் படிக்க வைத்தேன்-நானறியா நாகரீகம் சொல்லி வைத்தேன்.
ஐந்தறிவு அரசியலில் அவன் ஆயுள் முடிந்ததென்ன?
கொள்கை இல்லா அரசியலில் கொள்ளை போனது என் இதயம்.
அட!- உப்புக்கல்லு அரசாள என் வைரம் எரிந்ததென்ன?
வாய்மையில்லா அரசியலில்-
தலைவனுக்குத் துன்பமென்று தீக்குளித்த என் மகனே!
உன் உடம்பு வேகும் முன்னே என் உயிர் எரிந்து போனதையா!
ஐயா!-
செத்த உன் பேரைச் சொல்லி நிதி சேர்ப்பான் உன் தலைவன்;
நீதி கேட்டு வாசல் வரை.. நடை நடப்பான் உன் தோழன்.
நீ வளர்ந்த கருப்பையின் பொங்கி வரும் கண்ணீரை ...
யார் துடைப்பார் சொல்லுமையா!?
வார்த்தைகளால் ஏமாற்றி..ஏழைகளின் வாழ்க்கையினை விற்று விடும்
அரசியலைத் தடை செய்வோம்..
இனி ஊமைகளே அரசாளும் விதி செய்வோம்.
இது செய்தால்-
நெருப்பின் பசியாற இந்த ஏழை மகன் இறுதியாவான்.
தலைப்பு: சமுதாயம்:
***********************
கவிதையின் பெயர்: கரிக்கும் மழை நீர்:
***************************************
அலைந்து திரிகிறேன் நமது தெருக்களில்
நமக்கான முகவரியற்று.
ஊழல் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாய்
இன்றைய நாளின் புதிய பக்கங்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"-இல் துவங்கி
"இரவிலே வாங்கினோம்! இன்னம் விடியவே இல்லை!"-யைக்
கடந்து கொண்டிருக்கிறது காலம்.
"கண்ணீரால் காத்தது"- கருகி விட
அறுவடைகள் அடை காக்கப் படுகிறது..
மீண்டும், மீண்டும் அரசர்களாவோரின் களஞ்சியத்தில்.
பாட்டன்..பூட்டன் தியாகங்கள்
பரிசளிப்பு..அரசு வேலை..அலைக்கழித்தலோடு நின்று விட..
எலிகள் நரிகளாகி விட்டன..இன்றைய கால கட்டத்தில்.
இனி யாரும் சொல்ல எதுவுமில்லை...
நமது வானத்தில் மழை நீர் கரிக்கத் துவங்கி..
வெகு நாட்களாகி விட்டது.
*****************************************************
தலைப்பு : காதல்:
கவிதையின் பெயர்: நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்:
*********************************
என்னை மன்னித்து விடு! பெண்ணே!
உன் இமைச் சிறையை உடைத்து..உன் இதயச் சிம்மாசனத்தில்
நான் அமர்ந்ததாலும்..
உன் கன்னங்களில் உருண்டு விழும் கண்ணீரின் வெப்பமாய்
நான் இருந்ததாலும்.
உனக்கும் எனக்கும்தான் எத்தனை வேறுபாடு?
என்னை மட்டுமே அறிந்த நீ!
வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு..
நடக்கும் பிணங்களாய்..இருக்கும் மக்களை சுமக்கும் நான்.
நான் உன்னையும் நேசிக்கிறேன்..
நமது தேசத்தைப் போலவே.!
நீயும் என்னை நேசித்தத்தில்..
எனக்கு மட்டும் வேதனை கலந்த மகிழ்ச்சி.
"மகிழ்ச்சி"- எனது ஆண்மையை உனது தீராக் காதலால் கௌரவப் படுத்தியதால்.
"வேதனை"- நமது தேசத்தின் நாளைய சூரியனை நசுக்க நினைக்கும்...
எதிரிகளோடு போராடும் என்னை..நீ நேசிப்பதால்.
நாளை-
நம் தேசத்தில்..நமது சூரியன் உதிக்கையில்..
நமது சுவாசம் மட்டுமே எங்கும் தென்றலாய் வீசுகையில்..
எனது காதலின் மாலைகளும்..உனது கழுத்தில் மட்டுமே விழும்.
அதுவரை-
நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்..
நம் காதலை.
*********************************************************
ஈகரைக் கவிதைப் போட்டி -4-இல் நானும் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் செய்த ஒரு தவறால், போட்டியின் விதி முறைகளுக்கு முரணானவனாகி,
போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
நான் எனது கவிதைகளை இ-மெயிலில் அனுப்பும் பொது அதை பிடிஎஃப் கோப்பில் அனுப்பி விட்டேன்.
இது குறித்து வந்த எச்சரிக்கையையும் நான் பார்க்கத் தவறி விட்டேன்.அதனால் என்னால்
கவிதைப் போட்டி-4-இல் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ஒரு போட்டியில் கலந்து கொள்பவனுக்கு எத்தனை கவனம் வேண்டும் என்பதை நமது ஈகரைத் தோழர்கள் அனைவரும் அறிய வேண்டும்
என்பதனாலேயே இது குறித்து இப்போது எழுதுகிறேன்.
என்றாலும், நான் நம் ஈகரைத் தோழர்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இப்போது பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தலைப்பு : அரசியல்:
********************
கவிதையின் பெயர்: எரிந்து போகும் வைரங்கள்:
****************************************
யாருக்குப் பாவம் செய்தேன்? - ஒற்றை எறும்புக்கும் தீங்கறியேன்;
மா தவத்துப் பிள்ளை இங்கே நானிருக்கப் போனதென்ன?
கூன் விழுந்த காலத்திலே-தோள் கொடுக்கப் பிள்ளை பெற்றேன்;
பட்ட மரம் நானிருக்கப் பச்சை மரம் படுத்ததென்ன?
நாலெழுத்துப் படிக்க வைத்தேன்-நானறியா நாகரீகம் சொல்லி வைத்தேன்.
ஐந்தறிவு அரசியலில் அவன் ஆயுள் முடிந்ததென்ன?
கொள்கை இல்லா அரசியலில் கொள்ளை போனது என் இதயம்.
அட!- உப்புக்கல்லு அரசாள என் வைரம் எரிந்ததென்ன?
வாய்மையில்லா அரசியலில்-
தலைவனுக்குத் துன்பமென்று தீக்குளித்த என் மகனே!
உன் உடம்பு வேகும் முன்னே என் உயிர் எரிந்து போனதையா!
ஐயா!-
செத்த உன் பேரைச் சொல்லி நிதி சேர்ப்பான் உன் தலைவன்;
நீதி கேட்டு வாசல் வரை.. நடை நடப்பான் உன் தோழன்.
நீ வளர்ந்த கருப்பையின் பொங்கி வரும் கண்ணீரை ...
யார் துடைப்பார் சொல்லுமையா!?
வார்த்தைகளால் ஏமாற்றி..ஏழைகளின் வாழ்க்கையினை விற்று விடும்
அரசியலைத் தடை செய்வோம்..
இனி ஊமைகளே அரசாளும் விதி செய்வோம்.
இது செய்தால்-
நெருப்பின் பசியாற இந்த ஏழை மகன் இறுதியாவான்.
தலைப்பு: சமுதாயம்:
***********************
கவிதையின் பெயர்: கரிக்கும் மழை நீர்:
***************************************
அலைந்து திரிகிறேன் நமது தெருக்களில்
நமக்கான முகவரியற்று.
ஊழல் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாய்
இன்றைய நாளின் புதிய பக்கங்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"-இல் துவங்கி
"இரவிலே வாங்கினோம்! இன்னம் விடியவே இல்லை!"-யைக்
கடந்து கொண்டிருக்கிறது காலம்.
"கண்ணீரால் காத்தது"- கருகி விட
அறுவடைகள் அடை காக்கப் படுகிறது..
மீண்டும், மீண்டும் அரசர்களாவோரின் களஞ்சியத்தில்.
பாட்டன்..பூட்டன் தியாகங்கள்
பரிசளிப்பு..அரசு வேலை..அலைக்கழித்தலோடு நின்று விட..
எலிகள் நரிகளாகி விட்டன..இன்றைய கால கட்டத்தில்.
இனி யாரும் சொல்ல எதுவுமில்லை...
நமது வானத்தில் மழை நீர் கரிக்கத் துவங்கி..
வெகு நாட்களாகி விட்டது.
*****************************************************
தலைப்பு : காதல்:
கவிதையின் பெயர்: நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்:
*********************************
என்னை மன்னித்து விடு! பெண்ணே!
உன் இமைச் சிறையை உடைத்து..உன் இதயச் சிம்மாசனத்தில்
நான் அமர்ந்ததாலும்..
உன் கன்னங்களில் உருண்டு விழும் கண்ணீரின் வெப்பமாய்
நான் இருந்ததாலும்.
உனக்கும் எனக்கும்தான் எத்தனை வேறுபாடு?
என்னை மட்டுமே அறிந்த நீ!
வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு..
நடக்கும் பிணங்களாய்..இருக்கும் மக்களை சுமக்கும் நான்.
நான் உன்னையும் நேசிக்கிறேன்..
நமது தேசத்தைப் போலவே.!
நீயும் என்னை நேசித்தத்தில்..
எனக்கு மட்டும் வேதனை கலந்த மகிழ்ச்சி.
"மகிழ்ச்சி"- எனது ஆண்மையை உனது தீராக் காதலால் கௌரவப் படுத்தியதால்.
"வேதனை"- நமது தேசத்தின் நாளைய சூரியனை நசுக்க நினைக்கும்...
எதிரிகளோடு போராடும் என்னை..நீ நேசிப்பதால்.
நாளை-
நம் தேசத்தில்..நமது சூரியன் உதிக்கையில்..
நமது சுவாசம் மட்டுமே எங்கும் தென்றலாய் வீசுகையில்..
எனது காதலின் மாலைகளும்..உனது கழுத்தில் மட்டுமே விழும்.
அதுவரை-
நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்..
நம் காதலை.
*********************************************************
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா உங்கள் கவிதை போட்டியில் இடம் பெறவில்லை என்று
. அடுத்து கவனமாக இருங்கள் உங்கள் கவிதை அழகு , அருமை சூப்பர்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பரிசு பெரும் தகுதிஉடையது தான் நீங்கள் கவனமாக இருந்திருந்தால் ..!
better luck next time!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
அதுதான் இப்போது நாங்கள் படித்து விட்டோமே !!!!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
மிக மிக அருமையான கவிதைகள் அண்ணா .......... இத்தகைய கவிதை பரிசு பெற இயலாமல் போனது வருத்ததிர்க்கு உரியது ..............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
இவ்வளவு அழகான, சிந்தனை நிறைந்த கவிதைகளை எழுதி வீணாக்கி விட்டீர்கள்... எனக்கு கோவம் தான் வருகிறது... இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
ரொம்ப ரொம்ப நன்றி! ஜாகீதா பானு, கே.பாலா. ரபீக்,
ஸ்ரீ ஜா, உமா.
அன்புடன் ரமேஷ்.
ஸ்ரீ ஜா, உமா.
அன்புடன் ரமேஷ்.
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
ஏன் இப்படி பண்ணிடிங்க அண்ணா
அடுத்த தடவையாவது பரிசுடன் வாங்க
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அடுத்த தடவையாவது பரிசுடன் வாங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
சற்றே கவனக்குறைவு மிக நலல் வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து வேதனை மிஞ்சுகிறது. இனி கவனமாக இருங்கள் ரமேஷ்.. என்னை அணுகி இருக்கலாம் நான் வழிகாட்டி இருப்பேன்.. இனி அடுத்த போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துகள் ..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருணாநிதி
» விஜயலட்சுமி.. நான் செய்த மிகப் பெரிய தவறு-சீமான்
» தவறு செய்த காதலன்
» பிரபாகரன் செய்த மாபெரும் தவறு!
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» விஜயலட்சுமி.. நான் செய்த மிகப் பெரிய தவறு-சீமான்
» தவறு செய்த காதலன்
» பிரபாகரன் செய்த மாபெரும் தவறு!
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|