புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
6 Posts - 4%
prajai
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
21 Posts - 5%
prajai
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_m10ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 9:03 pm

ஒரு கல்லூரியில் என் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். உங்களின் எல்லா சான்றிதழகளையும் பார்க்க வேண்டும் என்றார்கள். என் ஜாதகம் தவிர மற்ற அனைத்தையும் எடுத்துக் கொண்டு போனேன்.

“சார், எல்லாம் வெச்சிருக்கறீங்க, ஜாதி சர்டிபிகேட் இல்லையே சார்??”

“சார், ஜாதியெல்லாம் நான் பார்க்கறதில்லை சார்”

“அது சரிதான் சார், ஆனா, அரசாங்கம் கேக்குதே?”

“சார், என் பள்ளி மற்றுச் சான்றிதழ்ல ஜாதி போட்டிருக்குதே சார், அது போதாதா?”

இப்பொழுது, பேசிக் கொண்டிருந்த கல்லூரிப் பணியாளரின் குரல் கொஞ்சம் மாறுபடுகிறது...

“இங்க பாருங்க சார், ஜாதி சர்டிபிகேட் கொண்டு வந்தா, உங்களுக்கு அட்மிஷன் கிடைக்கும், இல்லைன்னா இல்லை, அவ்வளவுதான், இடத்தை காலி பண்ணுங்க”

ஒரு சமத்துவ விரும்பியை சோதித்துப் பார்ப்பதில் சமுதாயத்திற்கு இவ்வளவு ஆனந்தமா என யோசித்து விட்டு நடையைக் கட்டினேன். இனி ஜாதி சர்டிபிகேட் வாங்குவது எப்படி என்ற ஒரு பெரிய கேள்விக்கு யார் பதிலளிப்பார்கள் என்று கிட்னியை கசக்கி சாரி, சாரி, மூளையை கசக்கி யோசித்ததற்கு கை மேல் பலன் கிட்டியது. நமது மாண்புமிகு வார்டு கவுன்சிலரை கேட்கலாம் என நினைத்து அவருக்கு தொலை பேசியதும் மிகவும் கனிவாக பதிலளித்தார்.

“ஜாதி சர்டிபிகேட் தான சார், அது ஒண்ணும் பிரச்சனையில்லை சார். நீங்க உங்க ரேசன் கார்டு காப்பி ஒண்ணு, உங்க பள்ளி சான்றிதழ் காப்பி ஒண்ணு எடுத்துட்டு, கூடவே ஒரு விண்ணப்பமும் எழுதி எடுத்துகிட்டு, கிராம நிர்வாக அலுவலர் ஆபீஸூக்கு போய், அவர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிக்கிட்டு, அப்புறமா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு, அப்பிடியே தாலூக்கா ஆபீஸுக்கு போனீங்கன்னா அங்க அப்ளிகேஷனை வாங்கி வெச்சுட்டு என்னைக்கு வரணும்னு சொல்லுவாங்க, அப்ப போய் சர்டிபிகேட் வாங்கிக்கங்க” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். இப்படி சென்னை நகரம் முழுவதையும் கிரிவலம் வந்து இந்த மூன்று மூர்த்திகள் கையொப்பம் இட்டு நான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று சொன்னால் தான் நான் மேல் படிப்பு படிக்க முடியும் என நினைத்தால் இந்த படிப்பு அவசியமாவென யோசிக்க தோன்றியது.

இருப்பினும் விதி வலியது அல்லவா? கொஞ்சம் கிரிவலம் வருவோமேவென கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்றேன். ஒரு பத்துக்கு பத்து அறைக்கு இரண்டு ஜன்னல்கள் வைத்து, ஒரு பக்கத்தில் ஒரு இரும்பு கதவில் அரதப் பழசான ஒரு பூட்டுடன், கிராம நிர்வாக அலுவலகம் என்ற பெயர்ப் பலகையை தலையில் தாங்கியவண்ணம் இருந்த அந்த அலுவலக அறையை பார்த்தாலே கிராம நிர்வாகம் எப்படி இருக்கிறதென்று சொல்லி விடலாம். காலை ஒன்பது மணிக்கும் பூட்டு தொங்கிய அலுவலகத்தை பார்த்ததும் இன்னும் விடியவில்லையோ என சந்தேகம் வர, யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து அங்கு விசாரித்ததில் “ வழக்கமா 10 மணிக்கெல்லாம் திறந்துருவாங்க சார்” என பதில் கிடைத்தது. காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்......, ஆ யாரோ பூட்டைத் திறக்கிறார்கள். ஒரு 20 வயது மதிக்கத்தக்க வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று கதவைத் திறந்து விட்டு, உள்ளே இருந்த மேஜைகளில் இருந்த காகிதங்களை ஒழுங்காக அடுக்க ஆரம்பித்தார்.

”சார், வணக்கம்” என்றேன்.

தன் வேலையில் சற்றும் கவனம் பிசகாமல் எங்கும் திரும்பாமல், எனக்கு முதுகை காண்பித்தபடியே, “வோட்டர் ஐ.டி. யெல்லாம் இங்க பாக்கறதில்லை சார், எந்த டீச்சர் வந்து உங்க வீட்ல பேர் எழ்துனாங்களோ, அங்கியே போய் பேசுங்க”

“சார் அதில்லை சார், நான் வேற விஷயத்துக்காக வந்தேன்”

“அப்ப வீ.ஓ வரங்காட்டியும் வெளீல வெயிட் பண்ணுங்க”.

இன்னும் அவரது முக தரிசனமே கிடைக்காத ஏமாற்றத்தில் நான் வெளீல வெயிட்டினேன். சிரிது நேரத்தில் ஒரு ஒல்லியான தேகத்துடன் ஒருவர் சைக்கிளில் வந்து இறங்கி, அந்த சைக்கிளை அலுவலக சுவரோரம் நிறுத்தி விட்டு, கவனமாக பூட்டினார். ஒருவேளை இவர்தான் அவரோ என ஒரு வினாடி நினைத்துவிட்டு, சே, இவரா இருக்காதுப்பா, என நினைத்துக் கொண்டு, இவர் யார் என பார்த்தால் அவர் எழுத்தராம். என்ன எழுதுவாரோ தெரியவில்லை.

அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நான் வந்த நோக்கத்தை சொன்னவுடன், என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, என் கையிலிருந்த காகிதங்களை வாங்கினார். முதல் பக்கத்தை பார்த்தவுடன் முகத்தில் அப்படி ஒரு கோபம் கொப்பளிக்க, “இது யார் எள்துனது???” என கேட்டார்.

”சார், நான் நா நானேதான் எழுதினேன்”

“உன்க்கு எள்த தெர்ஞ்சா, நீயே எள்தீர்வையா? இன்னா எள்தணும்னு உன்கு தெரிமா??, இதெல்லாம் வேலைக்காவாது, அதா அந்த பொட்டிக்கடைல, ஜாதி சர்டிபிகேட்டுக்குனு ஒரு ஃபார்ம் குடுப்பாங்க, அத்த வாங்கினு வா, நீயெல்லாம் எள்த கூடாது, அதுக்குதான் நாங்க இர்க்கறோம், தெர்தா”

நான் அந்த அதா,அந்த பொட்டிக்கடைக்கு போய் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு ஃபார்ம் வாங்கி, அதை அந்த எள்த தெரிஞ்சவரிடத்தில் கொடுத்து விட்டு அடுத்த கட்டளைக்காக கால் கடுக்க நின்றேன். என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு என் சான்றிதழ்களை கேட்டவர், ஃபார்ம்மில் என் பெயரை எழுதிவிட்டு
“இன்னா ஜாதி??” என்று கேட்டவுடன் தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு வாக்காளர் அட்டைகள் அவரது தலையில் மோதி மேஜையில் விழுந்தன. இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என அவர் நிமிர்ந்து பார்த்ததும், ரௌத்திரம் நிரம்பிய பார்வையுடன் ஒரு தாய்க்குலம்....

“நீ, இன்னா நென்ச்சுனுக்கற, இல்லா இன்னா நெனச்சுனுக்கறேன்னு கேக்கறேன்??”

”ஏம்மா, இன்னா பிரச்சனை உன்க்கு??”

“இன்னா பிரச்சனையா, பண்றதெல்லாம் பண்ணிட்டு இன்னா பிரச்சனைன்னா கேக்கற நீ, மருவாதி கெட்டுப் போயிரும், சொல்லீட்டன்” அவருக்கு வந்த கோபத்தில் மூச்சு வாங்கியது.

அட்டைகளை திருப்பி பார்த்தபடியே “ இந்தா, இன்னான்னு சொல்லு, சும்மா நீ பாட்டுக்கு பேசினே போனியானா, எனக்கு இன்னா தெர்யும்??”

”இன்னும் இன்னா தெரியணும் உனக்கு? அத்துல இன்னா பேர் போட்டுக்கற நீ ??”

”த்தாம்மா, இது உம் பேர்தான??”

“அத்தெல்லாம் எம் பேர்தான், அதுக்கு கீழ யார் பேரு போட்டுக்குது??”

“யேன், உன் ஊட்டுக்கார் பேர் போட்டுக்குது, அதுக்கு இன்னா இப்ப??”

“அத்து என் வூட்டு ஆம்பளை பேரா, உன்க்கு தெரிமா, என் வூட்டு ஆம்பள பேர் இன்னான்னு தெரிமா??’

”பின்ன இத்து யார் பேரு, இன்னா வோணும் உன்க்கு??”

“மேல எம்பேர் போட்டுனு, புருஷன் பேர்ல பக்கத்து வூட்டுக்காரன் பேர் போட்டுக்கறயே, முட்ச்சவிக்கி, நீயெல்லாம் நல்லார்ப்பயா நீ, முட்ச்சவிக்கி, என் வாய்ல நல்லா வர்து ஆமாம்”

இப்பொழுதுதான் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொண்ட அவர், “ஏம்மா, இதுக்கு நான் இன்னா பண்றது??, யாரு உங்க வூட்டாண்ட வந்து பேர் எள்தினு போனாங்களோ அவுங்க கைல் போய் கேளுமா, எங்கிட்ட இன்னா வீரங்காட்டற நீ??”

”அவுங்கள இன்னா கேக்கறது, கார்டு நீதான் குட்க்கற, அப்ப யார் பேரு எங்க எள்தீக்குதுன்னு பாக்க வேண்டா நீ, உன்கெல்லாம் கவுர்மெண்ட்ல இன்னாத்துக்கு சம்பளம் குட்க்கறாங்க??”

“த்தா, அந்த பையன் கைல ஒரு கம்ப்ளெயிண்ட் எள்தி குட்த்துட்டு போ, அப்பாலிக்கா கரெக்‌ஷன் ஆகி வந்தா வந்து வாங்கிக்க”

“த்தா, அத்த எள்தறதெல்லாம் இருக்கட்டும், இப்ப என் வூட்டு ஆம்பள என்ன சந்தேகப் பட்டுனுக்கறான், அதுக்கு இன்னான்ற??”

“அதுக்கு நான் இன்னாம்மா பண்றது, யாரோ தப்பு பண்ணாக்கா, நீ இங்க வந்து சவுண்ட் உட்டுனுக்கற, எள்துனவுங்களை போய் கேளு போ”

பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட அந்த பூட்டைத் திறந்த பையன் அந்தப் பெண்மணியை சமாதானப் படுத்தி வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போனார்.

எழுத்தர் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, என்பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதின்னு சொன்னீ........”

“ஏம்பா, அந்த சேலை குடுக்கறேன்னு சொன்னாங்களே, எங்க குடுக்கறாங்க??” என்றபடி ஒரு வயதான அம்மாள் வந்தார்.

“அம்மா, சேலை எல்லாம் இப்ப குடுக்கறதில்லைமா, மத்தியானத்துக்கு மேல வா”

“யேன், இப்ப குட்தா இன்னாவாம், கவுர்மெண்ட் குடுக்கறதை எட்து குடுக்க உன்க்கு கஷ்டமாக்குதா”

“எனக்கு வேற வேலைக்குதும்மா, நீ மத்தியானம் வாம்மா”

“எத்தினி மணிக்கு வர்றது???”

“ஒரு மூணு மணிக்கா வாம்மா, இப்ப எட்த்த காலி பண்ணு”

“அப்ப மூணு மனி வரைக்கும் என்ன குளிக்காத இர்க்க சொல்றியா, நீ எப்ப சீலை குடுக்கறது, நான் எப்ப குளிச்சுகுனு கட்றது??”

என்னை பரிதாபமாக பார்த்தவர், “சார், நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்” என சொல்லி விட்டு அந்தம்மாவுக்கு சேலையை எடுத்து கொடுத்து விட்டு, கை ரேகையை பதிவு செய்து விட்டு, வந்து மறுபடியும் “சார், நீங்க என்னா ஜாதி...........??”

இப்பொழுது கோரஸாக ஒரு மூன்று பெண்களின் குரல், “இந்த எலெக்‌ஷன் கார்டு எங்க குடுக்கறாங்க” என கேட்க, இவர் என் பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதியானாலும் சரி, இதுல நீங்களே எள்தினு வந்திருங்க சார்” என்றார்.

“சார், நீங்கதான் இதுல யாரும் எளுத கூடாதுன்னு சொன்னீங்களே???”

”அதெல்லாம், எளுத படிக்க தெரியாதவங்களுக்கு சார், பட்ச்சவங்க நீங்க என் நிலைமைய புரிஞ்சுக்கங்க சார்” என என் கையில் மொத்த காகிதங்களையும் திணித்தார்

நன்றி தராசு

ராம்


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 9:10 pm

மிகவும் அருமையான பதிவு.... அதிலும் "ஒரு சமத்துவ விரும்பியை சோதித்துப் பார்ப்பதில் சமுதாயத்திற்கு இவ்வளவு ஆனந்தமா?" இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Boxrun3
with regards ரான்ஹாசன்



ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Hஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Aஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Sஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  Aஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!  N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக