புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_m10ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 18, 2011 10:26 pm

ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது
- அனலை நிதிஸ் ச. குமாரன்


நாதியற்ற தமிழனை அழித்தால் யாரும் தட்டிக்கேட்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள். பிரித்தானியாவைச் சேர்ந்த "சானல்-4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்கிற பெட்டக நிகழ்ச்சி பலரின் மனக்கதவைத் திறக்கவைத்துள்ளது.

மே 2009-இல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் பல அடுக்கடுக்கான உண்மை நிகழ்வுகளை சானல்-4 தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் இத்தொலைக்காட்சி தனது ஊடகத் தர்மத்தை நெஞ்சில் சுமந்து தர்மத்திற்காகக் குரல் கொடுக்கிறது. இப்படியான நிறுவனங்களை உலகத் தமிழர்கள் போற்றுவதுடன், தம்மாலான ஆதரவை நல்கி இவர்களின் சேவையைப் பல மடங்காக்க ஊக்கமளிக்க வேண்டும்.

ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சானல்-4 தொலைக்காட்சி மிகத் தெட்டத்தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுடன், உலகப் பத்திரிகைகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல், வெகுவிரைவில் ஐந்து இலட்சம் பிரதிகளை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதிகள் வெளிவந்தால் நிச்சயம் சிங்கள அரசுக்கு ஆதரவளிக்கும் பல நாடுகள் தமது நிலையைப் பரிசீலிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாகத் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசு, சமீபத்தில் ஒளிபரப்பாகிய சிறிலங்காவின் கொலைக்களம் என்கிற பெட்டக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், சிறிலங்கா அரசிற்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதைப் பகிரங்கமாகவே கேட்டுள்ளார்.

நான்காம் கட்ட இறுதி யுத்தத்தின்போது சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐநாவின் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கெவின் ரூட் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன். இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. ஆஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. ஜெனீவாவிலுள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனிதவுரிமை ஆணையகத்திற்கு இந்த ஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தான் கோரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல தமிழ் மக்களை சிங்கள அரசப் படையினர் சிறைச்சாலையில் அடைத்துவைத்து பல அட்டூழியங்களை சிறைவாசிகளுக்கு செய்தது குறித்த பல சிறைவாசிகள் தற்போது விடுதலைபெற்றோ அல்லது பணத்தைக் கொடுத்தோ நாட்டை விட்டுத் தப்பித்து மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒன்றிணைத்து குறிப்பிடப்பட்டவர்களை நேரடி சாட்சிகளாக இணைத்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நீதிமன்றங்களில் வழக்குப்போட சில அமைப்புக்கள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. இப்படியாகப் பல வழிகளில் சிங்கள அரசுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சிங்கள அரச தரப்பின் தொடர் மறுதலிப்பு

தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கும் போரில் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என்று சமீப காலம்வரை கூறிவந்த சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்கள். போர் நடந்த சமயத்தில் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக இருந்தவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜயசிங்க, போரின் இறுதிக் கட்டத்தில் 5,000 பொதுமக்கள் மட்டுமே பலியாகினார்கள் என்று கூறியுள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், "படை நடவடிக்கைகள் காரணமாகப் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதே தமது கொள்கையாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

போர் முடிந்து 26 மாதங்களான பின்னர் அரசுக்கு எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இப்போதாவது தெரியுமா என்று பிபிசி பேட்டியாளர் ஸ்டிபன் சக்கர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராஜீவ் விஜயசிங்க, ஒட்டு மொத்தமாக 5000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார். இதில் பெரும்பான்மையானவர்கள் டிசம்பர் 2008-ஆம் ஆண்டுக்கும் மே 2009-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பானதும், பொறுப்பற்ற தன்மையுமான தகவல்கள்தான் இதுவரை காலமும் தொடர்ந்தும் கூறிவந்துள்ளது என்பது விஜயசிங்கவின் பேட்டியிலிருந்து தெரிகிறது. ஹிட்லரின் பிரச்சாரத் தலைவரையும் மிஞ்சுமளவு சிங்கள ஆட்சியாளர்கள் இருந்தே வந்துள்ளார்கள் என்பது எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் தெரிகிறது. இப்போதாவது உலக நாடுகள் சிங்கள அரசு தரும் அறிக்கைகளுக்கு முன்னுரிமை தரக்கூடாது என்பதே உலகத் தமிழரின் அவா.

சிறிலங்காவின் ஐநாவுக்கான தூதுவர் சானல்-4 தொலைக்காட்சியின் ஆவணங்கள் பொய் என்றும், உலக நாடுகள் குறித்த ஒளிப்படங்களை நம்பவேண்டாம் என்றும் கூறுகிறார். சிறிலங்கா அரசு தமிழ் மக்களைக் கொலை செய்யவில்லையென்றும், உலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு கட்டமாகவேதான் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் செய்ததாகவும், அதில் அதீத வெற்றியை சிறிலங்கா அரசு பெற்றதாகவும் இவர் கூறுகிறார்.

விடுதலைப்புலிகளே தமிழர்களைக் கொன்றார்கள் என்ற அப்பட்டமான பொய்யையே கூறி தனது அரசு செய்த போர்க் குற்றத்தை மறைக்க முயற்சி செய்கிறார் இவர். முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயலும் முயற்சியாகவே இவற்றின் இராஜதந்திரவழிப் பிரச்சாரம் அமைகிறது. ஆனால், உலக நாடுகள் இவரின் பேச்சை இனிமேலும் கேட்கத் தயாராக இல்லை என்பது மட்டும் உண்மை.

சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் சர்வதேச தரப்புக்கள் அனைத்துமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை, சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கி, தம்மைக் கேள்வி கேட்பவர்கள் அனைவருமே எதிரிகள் என்ற எழுதாத கோட்பாட்டினைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்துவருகிறது.

இவ்வாறான ஒரு நிலையில், போர்க்குற்ற அரசான மகிந்த ராஜபக்ச தரப்பினரின் உண்மையான முகத்தினை, சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும் சானல்-4 தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" பெட்டக நிகழ்ச்சி, உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவேதான் இவை அனைத்துமே பொய் என்கிற வாதத்தை சிங்கள அரசு முன்வைக்கிறது. ஆனால், சானல்-4 தொலைக்காட்சியோ குறித்த ஒளி நாடாக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த ஒளிநாடாக்களை ஐநா சபை கூட உண்மை என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது. இப்படியிருக்க, சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுதலிப்பதை வைத்துப்பார்க்கும்போது ஆயிரம் முறை பொய் சொல்லியாவது வெற்றி பெறலாம் என்று மனப்பால் குடிக்கிறது போலும். ஒன்றை மட்டும் சிங்கள ஆட்சியாளர்கள் உணர வேண்டும். என்னவெனில், ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லலாம். ஆனால் இவை பல எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பது மட்டும் உண்மை.

போர்க் குற்றத்திலிருந்து தப்பவே முடியாது

சிறிலங்காவின் இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இடமுண்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்த ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனினும் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "2002-ஆம் ஆண்டு ரோம் சர்வதேச சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறிலங்கா அரசாங்கம் அதில் கையெழுத்து இடவில்லை. இதில் கையெழுத்து இடாத நாடாக இருந்தாலும், ஐநாவின் பாதுகாப்பு சபையின் கோரிக்கையின்படி நெதர்லாந்தின் ஹெய்ட் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைக் கொண்டு செல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதே நிலைமையே சூடானின் ஜனாதிபதி பசீருக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், சூடானும் சிறிலங்காவைப் போன்று இந்த சாசனத்தில் கையொப்பம் இடவில்லை எனக் கூறினார்.

உலக சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளிலிருந்து எப்படியேனும் தன்னைக் காத்துக்கொள்ளலாமென்று மனப்பால் குடிக்கும் சிங்கள அரசிற்குத் தொடர்ச்சியாகப் பல இடர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. உலக மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் பல நாடுகள் தொடர்ந்தும் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதைக் கூறி வருகின்றன. தண்டனைக்குரியவர்கள் தண்டனையைப் பெறும்வரை குறித்த அமைப்பினரோ, அரசுகளோ ஓயப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. இன்னும் பல ஆதாரங்களைத் திரட்டும் வேலைகளிலேயே பல அமைப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தண்டனைக்குத் தேவையான சாட்சிகளை சிறப்பாகச் சேர்ப்பதனாலேயே சிங்களப் போர்க் குற்றவாளிகளுக்கு நிரந்தர தண்டனையைப் பெற்றுத்தர முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை வைத்தாவது தனது இராஜதந்திர காய்நகர்த்தலை செய்யலாமென்று காத்திருக்கிறார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சமீபத்தில் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை நியூயோர்க்கில் வைத்து சந்தித்தார் ரணில். அதுமட்டுமில்லாமல், புதிதாகப் பதவியேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ரணில். இந்தியாவைப் பணியவைத்து சிறிலங்காவுக்கு எதிராக இந்தியாவைத் திசைமாற்றி விடுவாரோ என்கிற மனப்பயத்தில் இருக்கிறது சிங்கள அரசு. இதனை மனதில் வைத்துத்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முனைப்புக் காட்டுகிறார் ரணில்.

ராஜபக்சாவை சந்திக்க ஜெயலலிதா ஒப்புதல் அளிக்கமாட்டார். அப்படி ஒப்புதல் அளித்தால், தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்கே தெரியும். இதை மனதில் வைத்துத்தான், ரணில் மூலமாக ஜெயலலிதாவைத் தனது கைக்குள் கொண்டுவரும் வேலைத்திட்டத்தை தீட்டியுள்ளார் மகிந்த ராஜபக்ச போலும்.

போர்க்குற்றவாளிகளைத் தப்பிக்க யார் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் நிச்சயம் போர்க்குற்றம் புரிந்தவர்கள் உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்குவது உறுதியாகிவிட்டது. கடவுளே வந்தாலும் ஈழத்தமிழருக்கெதிராக போர்க்குற்றம் புரிந்தவர்கள் தப்பவே முடியாது. தப்புவதற்காக எவ்வித முயற்சிகளை எடுத்தாலும், அவை அனைத்துமே முறியடிக்கப்பட்டு ஈழத்தமிழரின் நீதிக்கான பயணம் வெற்றி நடைபோடும் என்பது மட்டும் உண்மை. உலக மனிதவுரிமை அமைப்புகளென்றாலும் சரி, உலகத் தமிழர்கள் என்றாலும் சரி தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவிலில்லை என்பதை மனதில்வைத்து கடமை புரிவதே காலமிட்ட கட்டளை.

உயிரோசை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 10:42 pm

ஈழத்தமிழருக்கெதிராக போர்க்குற்றம் புரிந்தவர்கள் தப்பவே முடியாது. தப்புவதற்காக எவ்வித முயற்சிகளை எடுத்தாலும், அவை அனைத்துமே முறியடிக்கப்பட்டு ஈழத்தமிழரின் நீதிக்கான பயணம் வெற்றி நடைபோடும் என்பது மட்டும் உண்மை.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த கயவர்களுக்கும் காலம் தகுந்த தண்டனை வழங்கும் என்பதில் ஐயமே இல்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழத் தமிழரை அழித்தவர்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக