புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_lcapஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_voting_barஇடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 2:10 pm

தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு 2004, அக்டோபர் 12ம் தேதி, "செம்மொழிகள்' என்ற சிறப்பு பிரிவை துவக்கி, தமிழை "செம்மொழி' என அறிவித்தது. அதன்பின், 2007ம் ஆண்டு, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' சென்னையில் துவக்கப்பட்டது. இதற்காக 11ம் ஐந்தாண்டு திட்டத்தில், 76 கோடியே 32 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இப்புதிய நிறுவனம் சென்னை பீச் ரோட்டில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, பாலாறு இல்லத்தில் துவக்கப்பட்டது. இதன் இயக்குனராக மோகன், பொறுப்பு அலுவலராக பேராசிரியர் ராமசாமி நியமிக்கப்பட்டனர். தலைவராக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணைத் தலைவராக பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி நியமிக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு, எண்பேராயம் போன்றவை துவக்கப்பட்டது. நிறுவனம் துவக்கப்பட்டபோதே, இடவசதி போதுமானதாக இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கிண்டி அருகே கட்டடம் ஒன்றை வாடகைக்கு பார்த்தனர். அங்கு அலுவலகத்தை கொண்டு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி பெற்றனர்.
ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஒதுக்கி தருகிறேன். வேறு இடம் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதையேற்று, அலுவலகத்திற்கு இடம் பார்க்கும் பணியை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் நிறுத்தினர்.
கடந்தாண்டு(2010) ஜூலை, ஜார்ஜ் கோட்டையில், சட்டசபை கூட்டம் நடக்கும் அரங்கில், "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' துவக்கப்பட்டது. இதில் 35 ஆயிரம் நூல்கள், 2,000க்கும் மேற்பட்ட, "சிடி'க்கள் இடம் பெற்றிருந்தன. அங்கு 120 தமிழ் ஆய்வாளர்கள் அமர்ந்து, ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.
புதிய அரசு பொறுப்பேற்றதும், சட்டசபை கோட்டையிலே செயல்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த, "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும், மூன்று அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' செயல்பட்டு வந்த பாலாறு இல்லத்தின், ஒரு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் குடியேறி உள்ளார். இதனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வரிடம் பேச, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள், தங்கள் அலுவலகத்திற்காக இடம் தேடத் துவங்கியுள்ளனர். தங்கள் அலுவலகத்திற்கு 30 ஆயிரம் சதுரடி கொண்ட கட்டடம் தேவை என, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' அதிகாரிகள் கூறியதாவது:
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்திற்கு தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகள் தேவை இல்லை. எனினும், அப்போதைய முதல்வர் கருணாநிதியை மகிழ்விப்பதற்காக, அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மாறியதும், நடைமுறைப்படி, ஜெயலலிதா தலைவராக அறிவிக்கப்பட்டார். சட்டசபை அரங்கில் செயல்பட்ட, நூலகத்தை அகற்றும் போது, புத்தகங்களை கொண்டு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்வதாகவும், வேறு இடம் ஒதுக்கி தருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் சொந்த கட்டடம்:
சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக 17 ஏக்கர் நிலம், தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 2 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டடம் கட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு கட்டடம் கட்டப்பட்டால், இடம் தேடி அலையும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்


நன்றி தினமலர்

ராம்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 2:12 pm

ஒரு ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்தால்; அடுத்த ஆட்சியில் அனாதையாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடுதானே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 2:26 pm

"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' செயல்பட்டு வந்த பாலாறு இல்லத்தின், ஒரு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் குடியேறி உள்ளார்.

தமிழ் மொழி என்ன செய்தது இந்த அம்மையாருக்கு அதற்கு எதாவது உடனடித் தீர்வு செய்யலாமே.இதெல்லாம் தமிழர்களின் தலை எழுத்து.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக