ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

+3
muthu86
மகா பிரபு
சிவா
7 posters

Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by சிவா Mon Jul 18, 2011 5:53 am

ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.

ராமபிரான் வானரவீரர்கள் துணையுடன் அமைக்கப்பட்டதாக கருதப்படும் சேதுவையும் (சேது என்றால் சமஸ்கிருதத்தில் அணை எனப்படும்) சீதாபிராட்டியால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமலிங்கத்தையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் சேதுபதிகள். உலகெங்கிலும் இருந்து வரும் யாத்திரிகர்களை ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை( மண்டபம்) வழியாக படகுகளில் அழைத்து சென்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தரிசனத்திற்குபின்பு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது இவர்களின் தலையாய கடமையாக இருந்து வந்தது. 1674 முதல் 1710 வரை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது மருமகன் விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார். இவர் தோணித்துறையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்து செல்லும் பொறுப்புகளை தனது இரண்டு மகள்களான சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார்களின் கணவரான தண்டபாணியிடம் ஒப்படைத்திருந்தார்.

பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 9 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தண்டபாணி யாத்திரிகர்களிடம் தலா ஒரு பணம் (தற்போதைய மதிப்பு 96 காசு) கட்டணமாக வசூலித்து வந்தார். இமயமலையிலிருந்து நடந்து வந்த பைராகியிடம் (நிர்வாண சாமியார்) பணம் கொடுத்தால்தான் படகில் ஏற்றுவேன் என்று தகராறு செய்தார். இதனால் விரக்தியடைந்த பைராகி, ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்று அங்கிருந்த மன்னனிடம்” இறைவனை தரிசிக்க விடாத நீயும் ஒரு அரசனா? என தூற்றினார். கட்டணம் வசூல் செய்யும் தகவல் விஜயரகுநாத சேதுபதிக்கு தெரியவர அதை மாறுவேடத்தில் சென்று உறுதி செய்தார்.

தனது இரண்டு மகள்களையும் அழைத்து விஷயத்தை கூறாமல் “அம்மா சிவதுரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரலாம் என கேட்க, அவர்களோ “சிரச்சேதம் (தலைமை துண்டித்தல்) செய்வதுதான் சரியான தண்டனை’ என்றனர்.மன்னரோ “மிக வேண்டியவராக இருந்தால்’ என்ன செய்வது என கேட்க “யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்’ என மகள்கள் கூறினர்.இதன்பின் மன்னர் விஷயத்தை கூறியதும் பதறிய மகள்கள் ,”தாங்களும் கணவரோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்’ என கேட்டனர்.

மன்னர் உத்தரவுப்படி மருமகன் தண்டபாணி தலை துண்டிக்கப்பட்டு இரண்டு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இறுகிய மனதோடு கடமையை நிறைவேற்றிய மன்னர் மருமகன் சேர்த்து வைத்திருந்த சொந்த நிதியிலிருந்து தனது மகள்களின் நினைவாக பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம் மற்றும் அக்காள்மடத்தில் யாத்திரிகர்கள் தங்கி செல்லும் வகையில் மடங்களை உருவாக்கினார். தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. ஊழலே இருக்க கூடாது என நினைத்த மன்னர் வாழ்ந்த பூமியில் தற்போது ஊழலுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

http://www.thevarthalam.com


ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by மகா பிரபு Mon Jul 18, 2011 6:51 am

அட இப்படியெல்லாம் செய்வாங்களா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by muthu86 Mon Jul 18, 2011 11:06 am

இந்த நடைமுறைய இப்பொழுது நாம் தொடர்ந்தால் ,தமிழ் நாட்டில் ,எல்லா அரசியல் வாதிகளும் ,தலை இல்ல முண்டமாகவே இருப்பார்கள்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by kitcha Mon Jul 18, 2011 12:25 pm

தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது.

எத்தனையோ நீதி மான்கள் இந்த நாட்டில் வாழ்ந்து நமது (தமிழ்)இனத்திற்கு பெருமை சேர்த்துவிட்டு சென்றுள்ளனர்.அந்த வகையில் இந்த மன்னனும் நீதியை நிலை நாட்டி உள்ளார். அவர் கட்டிய அந்த மடத்தினை இடிப்பதினாலும், மற்றொரு மண்டபம் பொழுவில்லாமல் இருப்பதினாலும், அந்த மன்னரைப் பற்றி அவர் செய்த செயலைப் பற்றி வரும் தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடும். நீதியை நிலை நாட்டிய மன்னனுக்கு, இப்போது நீதி இல்லை.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by சோழன் Mon Jul 18, 2011 12:52 pm

நீதி என்பது இப்போது நம் நாட்டில் ஏதோ கடையில் வாங்கும் விளக்கெண்ணை போலயிற்று.... இப்படி ஊழல் செய்பவர்களை இதே சிரசேத தண்டனையை நம் நாட்டில் அமுல் படுத்தினாலும் தண்டனையை நிறைவேற்ற சுமார் 40 ஆண்டுகலாவது ஆகும்... இது தான் நம் ஜனநாயகம்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்றும் ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் 599303 அன்புடன்,
சோழவேந்தன் ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by SK Mon Jul 18, 2011 1:53 pm

சரியான தண்டனை கணிக்கு இதை போல தண்டனை கிடைக்குமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by ரபீக் Mon Jul 18, 2011 1:56 pm

SK wrote:சரியான தண்டனை கணிக்கு இதை போல தண்டனை கிடைக்குமா

கனி மட்டுமில்லை ,,,நிறைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலை இல்லாமல் இருக்க வேண்டிவரும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Empty Re: ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum