ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by சிவா Sun Jul 17, 2011 8:54 am

கத்தார் நாட்டில் 5 இந்திய மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை


பகரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மீனவர்கள் செல்வப்பிள்ளை ராஜரத்னம், அல்போன்ஸ் ராஜ், மரியா ராபின்ராஜ், ராபின் பயஸ், மோல்ஸ் பப்பியோஸ். இந்த 5 பேரும் கடலில் மீன்பிடிக்க சென்றார்கள். அவர்கள் கத்தார் நாட்டு கடல் பகுதியில் புகுந்து மீன்பிடித்தனர். அவர்கள் 8 பேர் கொண்ட மீன்பிடி குழுவில் இடம் பெற்று இருந்தனர். அவர்களை கத்தார் நாட்டு கடலோர காவல் படை கைது செய்தது.

அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களுக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.


வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty Re: வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by சிவா Sun Jul 17, 2011 8:54 am

தலாய்லாமாவை சந்தித்து பேசும் திட்டத்தை ரத்து செய்யுங்கள் - ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்கா சென்று இருக்கும் தலாய்லாமாவை வெள்ளை மாளிகைக்கு வரும்படி ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்து இருந்தார். அவரை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார். இதை அறிந்ததும், தலாய்லாமாவை சந்தித்து பேசும் திட்டத்தை ரத்து செய்யும்படி சீனா கேட்டுக்கொண்டது. மீறி சந்தித்தால் அது இருநாடுகளின் நட்புறவை பாதிக்கும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.

இந்தியாவில் அடைக்கலம்

சீனா அருகில் உள்ள திபெத் தனி நாடாக இருந்தது. அதை சீனா 1959-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதை தொடர்ந்து திபெத்தின் புத்தமதத் தலைவரும், தேசிய தலைவருமான தலாய்லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்டது.

தலாய்லாமாவை தன் எதிரியாகவும் விடுதலை போராட்ட வீரராகவும் சீனா பார்க்கிறது. அவரை வெளிநாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வெள்ளை மாளிகைக்கு அழைப்பு


தலாய்லாமா இப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அந்த நாட்டுக்கு சென்றதுமே அவரை அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் சந்திக்க கூடாது என்று சீனா எச்சரித்தது. இந்த நிலையில் ஜனாதிபதி ஒபாமா அவரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். அவரை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறார்.

இதை அறிந்ததும் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளிநாட்டு அமைச்சரக அதிகாரி ஹோங் லி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திரும்பப்பெற வேண்டும்

தலாய்லாமாவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்து பேசுவதை சீனா எதிர்க்கிறது. வெள்ளை மாளிகைக்கு வருமாறு விடுத்த அழைப்பை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும். அவரை சந்திப்பதை கைவிட வேண்டும்.

தலாய்லாமாவை வெளிநாட்டு அதிகாரிகள் எந்த நோக்கத்துக்காகவும் சந்திப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் எச்சரிக்கையையும் மீறி அவரை சந்தித்தால் அது இருநாடுகளின் உறவை பாதிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஹோங் லி கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹிலாரி வருகிற 25-ந் தேதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார். அவர் ஷென்ஜென் நகருக்கு செல்கிறார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடேன் விரைவில் சீனா செல்ல இருக்கிறார்.


வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty Re: வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by சிவா Sun Jul 17, 2011 8:55 am

ஒபாமாவை பின்லேடன் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருந்தான்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராஸ் ஆகியோரை கொலை செய்ய அல்கொய்தா தலைவரான பின்லேடன் சதித்திட்டம் தீட்டிஇருந்தான் என்பது இப்போது தெரியவந்து உள்ளது. பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பின்லேடன் தங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டான். அப்போது அங்கு இருந்த ஆவணங்களை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது. இந்த ஆவணங்களை எல்லாம் அமெரிக்க ராணுவம் பரிசோதித்தபோது அதில் சில ஆவணங்கள் அவன் ஒபாமாவையும், தளபதி பெட்ராசையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி இருந்ததை காட்டிக்கொடுத்தன.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதியில் விமானத்தில் ஒபாமாவும், பெட்ராசும் பயணம் செய்தபோது அந்த விமானத்தை தகர்த்து அழிக்க அவன் திட்டமிட்டு இருந்தான் என்பது தெரியவந்து உள்ளது. தாக்குதலை நடத்துவதற்கான குழுவில் யார் யார் இடம் பெறுவது என்பதில் அவருக்கும், அவரது உதவியாளர் அட்டியா அப்துல் ரகிமான் ஆகியோருக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty Re: வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by சிவா Sun Jul 17, 2011 9:00 am

அல்கொய்தா தலைவர் இலியாஸ் காஷ்மீரி உயிருடன் இருக்கிறார்

அல்கொய்தா தலைவர் இலியாஸ் காஷ்மீரி கடந்த மாதம் பாகிஸ்தானில் தெற்கு வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அமெரிக்க பாகிஸ்தான் அரசாங்கங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்த வில்லை.

இப்போது அவர் உயிருடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்த நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.


வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty Re: வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by சிவா Sun Jul 17, 2011 9:13 am


ஆப்கானிஸ்தான் போரில் கடந்த 6 மாதத்தில் 1462 அப்பாவிகள் பலியானார்கள்


ஆப்கானிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 1462 அப்பாவிகள் பலியானார்கள். இது கடந்த ஆண்டு முதல் 6 மாதகால கட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டால் 15 சதவீதம் அதிகம் ஆகும். அப்பாவிகளில் 80 சதவீதம் பேர் பலியானதற்கு தீவிரவாதிகள் தான் காரணம் ஆகும். இந்த தகவலை ஐ.நா. உதவி மையம் தெரிவித்து உள்ளது.

சாலையோர குண்டுகள் வெடித்ததும், தற்கொலை தாக்குதலும் இந்த ஆண்டு அதிகம் என்பதாலும், விமான தாக்குதலும் அதிகமான அளவுக்கு அப்பாவிகள் பலியானதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty Re: வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by சிவா Sun Jul 17, 2011 9:14 am

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்தது. மலை அடிவாரத்தில் வசித்த 2 ஆயிரம் பேர் பீதியில் ஓட்டம்

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 For

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் எரிமலை குழம்புகள் வெளியேறின. மலை அடிவாரத்தில் வசித்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பீதியில் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்.

3 முறை வெடித்தது

இந்தோனேஷியாவில் பூகம்பம் தான் அடிக்கடி ஏற்படும் என்பதில்லை. எரிமலையும் அடிக்கடி வெடிக்கும். இந்த நாட்டில் மட்டும் 129 எரிமலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மவுண்ட் லோகோன் எரிமலை. இது 5741 அடி உயரம் உள்ளது. இது சுலேவாசி மாநிலத்தில் உள்ளது.

இந்த எரிமலை கடந்த வியாழக்கிழமை இரவு 10.46 மணிக்கு முதல் முறையாக வெடித்தது. அதன் பிறகு நள்ளிரவு 2-வது முறையாக வெடித்தது. பிறகு 11/2 மணிநேரம் கழித்து 3-வது முறையாக வெடித்தது. அப்போது 500 மீட்டர் உயரத்துக்கு தீ பிழம்புகள் எழுந்தன.

மரங்கள் தீ பற்றி எரிந்தன

இதை தொடர்ந்து மலையின் வாயில் இருந்து அக்னிக்குழம்பு வெளியேறியது. அது மலைச்சரிவுகளில் ஓடி மரங்களின் மீது விழுந்தது. இதில் மரங்கள் தீப்பற்றி எரிந்தன.

மலை அடிவாரத்தில் வசித்தவர்கள் எரிமலை வெடித்த சத்தம் கேட்டு விழித்தனர். மரங்கள் பற்றி எரிவதையும் எரிமலை குழம்பு உருகி ஓடிவருவதையும் பார்த்து பீதி அடைந்தனர். அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினார்கள். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் ஓட்டம் பிடித்தனர். ராணுவமும் போலீசும் சேர்ந்து மலைச்சரிவுகளில் வசித்தவர்களை அங்கு இருந்து வெளியேற்றினார்கள். கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எச்சரிக்கை

கடந்த ஒரு வார காலமாகவே இந்த எரிமலையில் புகை கிளம்பியது. இதனால் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதி மக்களை அரசாங்கம் எச்சரித்து வந்தது. மலையில் இருந்து ஒதுங்கி இருக்கும்படியும் கேட்டுக்கொண்டது.

கடந்த முறை நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு 1991-ம் ஆண்டு நடந்தது. இதில் மலை ஏறும் குழுவை சேர்ந்த சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர் ஒருவர் பலியானார். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி ஊரை காலி செய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.


வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011 Empty Re: வெளிநாட்டுச் செய்திகள் 17-07-2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum