ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்

3 posters

Go down

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Empty கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்

Post by சிவா Sun Jul 17, 2011 8:45 am

அவமதிப்பு வழக்குகளை தவிர்ப்பதற்காக, கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.சதாசிவம் அறிவுறுத்தினார்.

மாற்றுமுறை தீர்வு மையம்

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு (பேச்சுவார்த்தை, சமரசம், மத்தியஸ்தம், சமாதான ஆலோசனை, மக்கள் மன்றம்) மைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான அல்டமாஸ் கபீர், அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பிரச்சினைகளை கோர்ட்டுக்கு வெளியே மக்கள் தீர்த்துக்கொள்வதற்கான உதவிகளை வழங்க வேண்டும். பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாக உள்ளது. பிரச்சினைகள் அதிகரிக்கும்போது, கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

ஒரே குடைக்குள்

இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை. அதிக வழக்கு தாக்கல் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு நாடும் பல்வேறு முறைகளை கையாள்கின்றன. கோர்ட்டுகளில் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, நாம் மத்தியஸ்தம், சமரசம், சுமுக பேச்சுவார்த்தை, லோக் அதாலத் (மக்கள் மன்றம்) ஆகிய மாற்று முறைகளை கையாள்கிறோம்.

இந்த மாற்றுமுறைகளின் மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் சிவில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு சமமானவை. எனவே தீர்வுக்கான இந்த மாற்றுமுறைகள் அனைத்தும் ஒரே குடைக்குள் கொண்டுவரப்படுவது அவசியம். இங்கு கட்டப்படும் கட்டிடத்தில் கொண்டுவரப்படும் மாற்று முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம், மக்கள் தங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொண்டு, கோர்ட்டுகளுக்கு வருவதை தவிர்க்கலாம்.

பெருந்தன்மை

இந்தியா மொத்தமுள்ள 650 நீதித்துறை மாவட்டங்களுக்கும், இதுபோன்ற கட்டிடங்களை அமைத்துக் கொள்வதற்காக தலா ரூ.1 கோடியை 13-வது நிதிக்குழு வழங்கியுள்ளது.

மாற்றுமுறை தீர்வு காண்பதற்காக புதிய உத்திகளை கையாள்வதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. அரவாணிகளுக்கும் சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பெருந்தன்மை உடைய மாநிலம் இது. இங்கு தோன்றும் உத்திகளைத்தான் மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

மேல்முறையீடுகள், பண விரையம், பொருளாதார பின்னடைவு, கால விரையம் போன்றவற்றை மாற்றுமுறை தீர்வுகளின் மூலம் தவிர்க்கலாம். மத்திய பிரதேசத்தில் நடந்த மெகா லோக் அதாலத்தில், ஒரே நாளில் 6 லட்சத்து 17 ஆயிரம் பிரச்சினைகளுக்கும், கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டன.

11 ஆண்டு பேசாத தம்பதிகள்

ராம்பூரில் விபத்தில் 14 வயது சிறுமியின் கால் துண்டிக்கப்பட்டது. அந்த மாணவி தனது தந்தையுடன் அங்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்துக்கு வந்திருந்தார். ஒரு ஆவணத்தில் குறையிருப்பதாகக் கூறி தனது வழக்கை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

ஆனால் உடனடியாக அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு சுமார் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு நடந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு உடனடி தீர்வு ஏற்பட்டிருக்காது.

கணவன், மனைவிக்கான மத்தியஸ்த மையத்திற்கு ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். 11 ஆண்டுகளாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை. அவர்களை ஒரு அறைக்குள் தனியாக அனுப்பிவிட்டு, ஒரு மணி நேரம் பேச செய்தோம். அதோடு பிரச்சினையை தீர்த்துக்கொண்டு இருவரும் இணைந்து வீட்டுக்குச் சென்றனர்.

வக்கீல்கள் ஒத்துழைப்பு


இந்த தீர்வுமுறைகளால், மேலும் பல பிரச்சினைகள் எழாமல் தவிர்க்க முடியும். கோர்ட்டுகளில் அதிக அளவில் வழக்குகள் தேங்குகின்றன. அவற்றை சமாளிக்க மனித முயற்சிகள் போதாது. எனவே மாற்றுமுறை தீர்வு மைய விசாரணைகளுக்கு வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:-

நம்பிக்கை அழிந்துவிடும்

நீதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதே, இன்றைக்கு நீதித்துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வழக்கு தேக்கமும், தாமதமாகும் நீதியும், நீதி பரிபாலனையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துவிடும்.

இந்தியாவில் தற்போது (பிப்ரவரி வரை) 121 கோடி ஜனத்தொகை உள்ளது. 10 லட்சம் மக்களுக்கு 11 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. வழக்குகள் தேங்குவதற்கும், அதிக வழக்குகள் தாக்கல் ஆவதற்கும் காரணங்கள் உள்ளன.

அபரிமிதமான விழிப்புணர்வு, உலக மயமான பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி, நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை, எளிதாக வழக்கு நடத்தும் முறை, தனிநபர் வருமான உயர்வு, புதிய சட்டங்களின் தாக்கம், வாழ்க்கைத்தர உயர்வு போன்றவை சில காரணங்களாகும். முன்பு எம்.பி.பி.எஸ். கல்வி இடம் கிடைக்காவிட்டால், கோர்ட்டுக்கு வருவார்கள். இன்று எல்.கே.ஜி.யில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் கோர்ட்டை அணுகுகிறார்கள்.

ஓரிரு நாட்களில்

சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் 4 லட்சம் சிவில் வழக்குகளும், 46 ஆயிரத்து 791 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கோர்ட்டுகளில் வழக்கு விசாரணையில் இருந்தாலும்கூட, மாற்றுமுறை தீர்வுக்காக வரலாம். விபத்து காப்பீடு, தொழிலாளர் நலன், நுகர்வோர், ஒப்பந்தங்கள், குடும்பங்கள் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை செலவு இல்லாமல், ஓரிரு நாட்களுக்குள் தீர்த்துவிடலாம்.

அரசுக்கு எதிராக மற்றவர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாற்று முறை தீர்வுகளை பின்பற்றுவதை அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப்பிரச்சினைகள் எழுந்தால் மட்டும் கோர்ட்டை நாடலாம். அரசு மீது வழக்கு தொடர்வதற்கு முன்பு நோட்டீசு கொடுக்கப்பட வேண்டும்.

அப்படி கொடுக்கப்படும் நோட்டீசுகள், உரிய உயர் அதிகாரிகளிடம் சேர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படலாம். இல்லாவிட்டால், தகுதியின்மையை அவரிடம் அரசு அதிகாரிகள் விளக்க வேண்டும்.

அவமதிப்பு வழக்குகள்

ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல், அரசுக்கு எதிரான வழக்குகள், மேல்முறையீடுகள் என்று அதிகளவில் கோர்ட்டுகளில் தேக்கநிலை ஏற்படுகிறது. அரசுக்கு நோட்டீஸ் தராமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கோர்ட்டுகள் தவிர்க்க வேண்டும்.

கோர்ட்டு உத்தரவுகளையும் மதிக்கவும், அவற்றை அமல்படுத்தவும் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றினால், அவமதிப்பு வழக்குகள் போன்ற இரண்டாம் கட்ட வழங்குகள் தாக்கல் ஆவதை தவிர்க்கலாம்.

வக்கீல்களுக்கு வீட்டுமனை

சண்டிகரில் வக்கீல்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு வக்கீல்கள் தங்கள் இஷ்டம்போல வீடுகளை கட்டுவதற்கு வசதி செய்துதரப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால், ஒவ்வொரு வக்கீலும், ஆண்டுக்கு ஒரு வழக்கை `மக்களுக்காக இலவசமாக நடத்துவேன்' என்ற உத்தரவாதத்தை அரசுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினதந்தி


கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Empty Re: கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்

Post by அப்துல்லாஹ் Sun Jul 17, 2011 12:18 pm

இப்படியெல்லாம் நீதிபதிகள் கெஞ்ச வேண்டிய நிலைக்கு அரசுகள் நீதிமன்றத்தை தள்ளிவிட்டன.
இன்னும் கொஞ்ச நாள் போனால் நிலைமை ரொம்ப கேவலமாகும்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Aகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Bகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Dகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Uகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Lகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Lகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Aகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Empty Re: கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்

Post by ரபீக் Sun Jul 17, 2011 12:20 pm

அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Empty Re: கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!
» சென்னை ஐகோர்ட்டில் தமிழை உடனடியாக வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கட்ஜூ பேட்டி
» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
» தமிழ்நாட்டை சேர்ந்த பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum