ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

+2
அருண்
கண்ணன்3536
6 posters

Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by கண்ணன்3536 Sat Jul 16, 2011 5:41 pm


Viruvirupu, Saturday 16 July 2011, 08:47 GMT

சென்னை, இந்தியா: முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலையடுத்தே தனிமையில் மாமல்லபுரம் சென்றார் என்று தெரியவருகின்றது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், முன்னாள் முதல்வரின் குடும்பம் இரண்டாகப் பிரியும் நிலைமையைத் தோற்றுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதல் சம்பவம், தி.மு.க. உள்வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மோதல் நடைபெற்ற விஷயத்தை மிகச் சிரமப்பட்டு மறைத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே ஸ்டாலின், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது. அப்போதே இருவருக்குமிடையே ஒருவித பிணக்கு இருந்திருக்கின்றது. இந்த நிலையில் ஸ்டாலின்மீது திட்டமிட்டபடி அடுத்தடுத்து புகார்கள் செல்லும் வகையில் சிலர் ஏற்பாடு செய்ததாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சிக்காரர்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக, கடந்த சில நாட்களாக தினமும் அறிவாலயம் சென்று கொண்டிருந்த கலைஞரிடம், இந்தப் புகார்கள் போய்ச் சேரும்படியாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைஞரைச் சந்திக்க அவரது அறைக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், ஸ்டாலினைப் பற்றிய புகார் சொல்லிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

வரிசையாக ஸ்டாலின்மீது புகார்கள் மாத்திரம் வருவதால், கலைஞர் கோபமுற்றதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ஸ்டாலினை அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

தகவல் கிடைத்து ஸ்டாலினும் அறிவாலயம் சென்று கலைஞரைச் சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தனிமையில் பேசாமல், தனது அறைக்குள் மற்றையவர்கள் இருந்த நிலையில் கலைஞர், கேள்விக் கணைகளைத் தொடுத்தது, ஸ்டாலினை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் அங்கிருந்த ஒருவர்.

இதையடுத்து ஸ்டாலினும் தன்பங்குக்கு கோப வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாராம்.


“சென்ற அத்தியாயத்தில்..”

திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழியின் ஏற்பாடுதான், வரிசையாகக் கலைஞரை வந்தடைந்த குற்றச்சாட்டு என்று வெடித்தாராம் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் ஆசீர்வாதம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அறிவாலயம்வரை வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டாராம்.

“அறிவாலயத்தில் உங்களைப் பார்க்க வெவ்வேறு விவகாரங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்? ஒவ்வொன்றும் வேறுபட்ட விஷயமாக இருக்கும். ஆனால், இங்கு நடந்தது என்ன? உங்களைச் சந்தித்த ஒவ்வொருவரும், ஒரு ஆள் பாக்கியில்லாமல், என்மீது புகார் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?” என்று குரலை உயர்த்தினாராம் ஸ்டாலின்.

அறிவாலயத்துக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கின்றது என்றும் கூறிய அவர், “உங்களைச் சந்திக்க வந்தவர்களை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுமினாராம்.

“இவ்வளவும் நடக்கையில், அந்த அறைக்குள் இருந்த மற்றையவர்கள் திக்பிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார்கள். வழமையாக தந்தைக்கு முன் குரலை உயர்த்திப் பேசாத ஸ்டாலின் அன்று ருத்ரம் கொண்டது, அவர்களைத் திகைக்க வைத்திருந்தது” என்று சொன்னார், எமது தி.மு.க. சோர்ஸ்.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலையடுத்து, கோபத்துடன் ஸ்டாலின் அறிவாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில், கோபமான முகத்துடன் கலைஞரும் புறப்பட்டு கோபாலபுரம் சென்றிருக்கிறார்.

அங்கே காட்சி, வேறுவிதமாக இருந்திருக்கின்றது.

செல்வி அங்கே இருந்திருக்கிறார். அவர் கனிமொழிக்கும் அழகிரிக்கும் எதிராக புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசிய செல்வி, குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சியில் கனிமொழிதான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.

இந்தக் கட்டத்தில் கலைஞர், “நான் இந்த வீட்டிலிருந்தும் போய் விடுகிறேன். கட்சியிலிருந்தும் போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கூறியிருக்கிறார்.

இதையடுத்தே கலைஞர், மறுநாள் காலை மாமல்லபுரம் செல்ல முடிவெடுத்தார். தன்னுடன் யாரும் வரவேண்டாம் என்று கூறி, தனது உதவியாளர் சண்முகநாதனை மாத்திரம் அழைத்துக்கொண்டு காலையிலேயே சென்றுவிட்டார். அன்று மாலைவரை போனில் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மாமல்லபுரத்தில் யார் என்ன சமாதானம் செய்தார்கள் என்பது தெரியவில்லை. அன்று மாலை வீடு திரும்பியிருக்கிறார்.

23ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது. அதில் தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அது எப்படியாவது நடந்துவிடக் கூடாது என அவரது எதிரணி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

“இந்தக் குடும்ப மோதல்தான் இவையெல்லாம்” என்று கூறிய தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர், “என்ன செய்வது… கட்சியின் தலைவிதி, இவர்களது குடும்பச் சண்டையில்தான் தங்கியிருக்கின்றது” என்றார் சோகமான குரலில்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் மாமல்லச் சக்கரவர்த்தி உருவாக்கிய அதிசயம்தான் மாமல்லபுரம் என்கிறது வரலாறு. இங்கே, மாமல்லனோடு மோதிக்கொண்டு, மகேந்திரவர்மர் சென்றிருக்கிறார் மாமல்லபுரத்துக்கு!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by அருண் Sat Jul 16, 2011 5:47 pm

இங்கயே ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போலிருக்கே...!
பகிர்விற்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by krishnaamma Sat Jul 16, 2011 7:13 pm

அடப்பாவமே?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by கலைவேந்தன் Sat Jul 16, 2011 7:18 pm

வருத்தமுறுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. தன் வினை தன்னைச்சுடும்.. வீட்டப்பம் ஓட்டைச்சுடும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by முரளிராஜா Sat Jul 16, 2011 7:38 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by அசுரன் Sat Jul 16, 2011 11:25 pm

ஸ்டாலின் தனிக்கட்சி துவங்கலாம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Empty Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. மோதல்
» ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!
» கனிமொழிக்கே தெரியாமல் கலைஞர் டிவி இயக்குனராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஆதரவாளர்!
» கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum