Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
+15
சதாசிவம்
கே. பாலா
ஜாஹீதாபானு
ayyamperumal
செய்தாலி
kitcha
பூஜிதா
SK
இளமாறன்
பாலாஜி
அருண்
உமா
ரஞ்சித்
அப்துல்லாஹ்
மகா பிரபு
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
First topic message reminder :
இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.
இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.
Last edited by மகா பிரபு on Sun Jul 17, 2011 7:03 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
கருகிய இதயங்களுக்கு
கவிதையால் உயிர் கொடுத்து
கண்ணான மணிகளுக்கு கண்ணீரால் உடல் கொடுத்து
கடவுளாக வணங்கிய
கருணை உறவுகளை
கை கூப்பி வணங்குகிறேன்.
கவிதையால் உயிர் கொடுத்து
கண்ணான மணிகளுக்கு கண்ணீரால் உடல் கொடுத்து
கடவுளாக வணங்கிய
கருணை உறவுகளை
கை கூப்பி வணங்குகிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
நண்பர்களே,
இது போல் மேலும் சில சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதம் செய்வோமே?
இன்று தீ விபத்து பல இடங்களில் நடக்கிறது, தீ விபத்தில் இருந்து தப்புவது எப்படி என்று சற்று யோசிப்போம். தீ ஆபத்து நாம் அன்றாடம் செல்லும் ரயில் நிலயம், சூப்பர் மார்க்கெட், திரை அரங்கம், பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் இருக்கிறது. இந்த விபத்தில் இருந்து நாமும், நாம் பிள்ளைகளும் தப்பிக்க சில விஷயங்களை கற்போம் .
1. முதலில் எங்கு சென்றாலும், emergency exit எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2. உங்கள் பிள்ளைகளுக்கு தீ விபத்து ஏற்படும் காலத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி வெளியேற வேண்டும் என்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
3. பள்ளியில் சேர்க்கும் போது அங்கு ஆசிரியர் எப்படி, நிர்வாகம் எப்படி என்று மற்று பார்க்காமல், அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்புகள் என்ன, ஆசியர்களுக்கு பாதுகாப்பு, தீ அணைப்பு பயிற்சி அளிக்க பட்டுள்ளதா, ஆபத்து காலத்தில் எப்படி வெளியேற வேண்டும் என்று குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க படுகிறதா என்று விசாரித்து பின்பு சேர்க்க வேண்டும்.
4. பார்க், கடற்கரை என்று மற்று சுற்றாமல் அருகில் உள்ள தீ அணைப்பு அலுவலகத்திர்க்கு உங்கள் பிள்ளைகளை கூட்டி சொல்லுங்கள். பக்குவமான மாணவர்களுக்கு (from 8th std) தமிழ்நாடு அரசு சிறப்பு தீ அணைப்பு பயிற்சிகளை அளிக்கிறது. உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடம் வாயிலாக இதை அணுகலாம்.
5. உங்கள் வீட்டில், காரில் சிறிய தீ அணைப்பு கருவி, முதல் உதவி பெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
6. St.John ஆம்புலன்ஸ் நிறுவனம் (egmore) Rs.200 இரண்டு நாள் முதல் உதவி பயிற்சி அளிக்கிறது. நீங்களும் இதை கற்றுக் கொள்ளலாம். அரசுப் பேருந்து நடத்துனர், ஆசிரியர்கள் இதை பழக வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால் நடை முறையில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதை கற்பதில்லை. உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கு இந்த பயிற்சி உள்ளதா என்று கேட்டு பள்ளியில் சேருங்கள்.
7. எளிதில் தீ பற்றும் பொருளான ஆடைகளை குழந்தைக்கு உடுத்தாதீர்.
இது போல் மேலும் சில சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதம் செய்வோமே?
இன்று தீ விபத்து பல இடங்களில் நடக்கிறது, தீ விபத்தில் இருந்து தப்புவது எப்படி என்று சற்று யோசிப்போம். தீ ஆபத்து நாம் அன்றாடம் செல்லும் ரயில் நிலயம், சூப்பர் மார்க்கெட், திரை அரங்கம், பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் இருக்கிறது. இந்த விபத்தில் இருந்து நாமும், நாம் பிள்ளைகளும் தப்பிக்க சில விஷயங்களை கற்போம் .
1. முதலில் எங்கு சென்றாலும், emergency exit எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2. உங்கள் பிள்ளைகளுக்கு தீ விபத்து ஏற்படும் காலத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி வெளியேற வேண்டும் என்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
3. பள்ளியில் சேர்க்கும் போது அங்கு ஆசிரியர் எப்படி, நிர்வாகம் எப்படி என்று மற்று பார்க்காமல், அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்புகள் என்ன, ஆசியர்களுக்கு பாதுகாப்பு, தீ அணைப்பு பயிற்சி அளிக்க பட்டுள்ளதா, ஆபத்து காலத்தில் எப்படி வெளியேற வேண்டும் என்று குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க படுகிறதா என்று விசாரித்து பின்பு சேர்க்க வேண்டும்.
4. பார்க், கடற்கரை என்று மற்று சுற்றாமல் அருகில் உள்ள தீ அணைப்பு அலுவலகத்திர்க்கு உங்கள் பிள்ளைகளை கூட்டி சொல்லுங்கள். பக்குவமான மாணவர்களுக்கு (from 8th std) தமிழ்நாடு அரசு சிறப்பு தீ அணைப்பு பயிற்சிகளை அளிக்கிறது. உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடம் வாயிலாக இதை அணுகலாம்.
5. உங்கள் வீட்டில், காரில் சிறிய தீ அணைப்பு கருவி, முதல் உதவி பெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
6. St.John ஆம்புலன்ஸ் நிறுவனம் (egmore) Rs.200 இரண்டு நாள் முதல் உதவி பயிற்சி அளிக்கிறது. நீங்களும் இதை கற்றுக் கொள்ளலாம். அரசுப் பேருந்து நடத்துனர், ஆசிரியர்கள் இதை பழக வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால் நடை முறையில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதை கற்பதில்லை. உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கு இந்த பயிற்சி உள்ளதா என்று கேட்டு பள்ளியில் சேருங்கள்.
7. எளிதில் தீ பற்றும் பொருளான ஆடைகளை குழந்தைக்கு உடுத்தாதீர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
சதாசிவம் wrote:நண்பர்களே,
இது போல் மேலும் சில சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதம் செய்வோமே?
இன்று தீ விபத்து பல இடங்களில் நடக்கிறது, தீ விபத்தில் இருந்து தப்புவது எப்படி என்று சற்று யோசிப்போம். தீ ஆபத்து நாம் அன்றாடம் செல்லும் ரயில் நிலயம், சூப்பர் மார்க்கெட், திரை அரங்கம், பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் இருக்கிறது. இந்த விபத்தில் இருந்து நாமும், நாம் பிள்ளைகளும் தப்பிக்க சில விஷயங்களை கற்போம் .
1. முதலில் எங்கு சென்றாலும், emergency exit எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2. உங்கள் பிள்ளைகளுக்கு தீ விபத்து ஏற்படும் காலத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி வெளியேற வேண்டும் என்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
3. பள்ளியில் சேர்க்கும் போது அங்கு ஆசிரியர் எப்படி, நிர்வாகம் எப்படி என்று மற்று பார்க்காமல், அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்புகள் என்ன, ஆசியர்களுக்கு பாதுகாப்பு, தீ அணைப்பு பயிற்சி அளிக்க பட்டுள்ளதா, ஆபத்து காலத்தில் எப்படி வெளியேற வேண்டும் என்று குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க படுகிறதா என்று விசாரித்து பின்பு சேர்க்க வேண்டும்.
4. பார்க், கடற்கரை என்று மற்று சுற்றாமல் அருகில் உள்ள தீ அணைப்பு அலுவலகத்திர்க்கு உங்கள் பிள்ளைகளை கூட்டி சொல்லுங்கள். பக்குவமான மாணவர்களுக்கு (from 8th std) தமிழ்நாடு அரசு சிறப்பு தீ அணைப்பு பயிற்சிகளை அளிக்கிறது. உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடம் வாயிலாக இதை அணுகலாம்.
5. உங்கள் வீட்டில், காரில் சிறிய தீ அணைப்பு கருவி, முதல் உதவி பெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
6. St.John ஆம்புலன்ஸ் நிறுவனம் (egmore) Rs.200 இரண்டு நாள் முதல் உதவி பயிற்சி அளிக்கிறது. நீங்களும் இதை கற்றுக் கொள்ளலாம். அரசுப் பேருந்து நடத்துனர், ஆசிரியர்கள் இதை பழக வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால் நடை முறையில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதை கற்பதில்லை. உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கு இந்த பயிற்சி உள்ளதா என்று கேட்டு பள்ளியில் சேருங்கள்.
7. எளிதில் தீ பற்றும் பொருளான ஆடைகளை குழந்தைக்கு உடுத்தாதீர்.
பயனுள்ள மற்றும் பின்பற்றவேண்டிய மிக நல்ல தகவல்கள்...மிக்க நன்றி சதா ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
"அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்"-
கற்கத்தான் உன்னை அனுப்பியது கல்விச் சாலைக்கு.
இப்படிக் கருகி நீ வருவாய் என்றால்...
எப்படி?
********
உன் அறிவின் சிறகுகளால் எனக்கான வானம்
தருவாய் என்றிருந்தேன்..
இப்படிப் பசித்த நெருப்புக்கு
இரையாவாய் என்றால்...
எப்படி?
**********
இன்றும்-
என் உணவுத் தட்டில் மிச்சமிருக்கிறது
உனக்கான "அடிக் குழம்பு! ஆனைக்குட்டி!-சோறு.
நீ
"போய் வருகிறேன்"-என வீசிச் சென்ற
கை நிழலின் பிம்பம் ...
இன்னமும் நிற்கிறது என் கண்களில்.
திரண்டெழுந்து திரும்பும்
என் ஒவ்வொரு மூச்சிலும்
திரும்பி ஒலிக்கிறது உனது பெயர்.
*********
ஆதியில்-
நீ சொன்ன "அம்மா"-வால் வளர்ந்தவள் நான்.
வெறும் விடலையாய் இருந்தவளை
"கடவுளை" நோக்கி நகர்த்தியவன் நீ.
இன்னமும் மிச்சமிருந்தது...
உன்னால் நான் வளர வேண்டிய காலங்கள்.
************
ஆயிரம் கடவுள்கள் கூடி வசிக்கும் ஊரில்..
ஒரு கடவுளின் கருணையும் எனக்கில்லை
உன்னையும், உன் தோழன்மார், தோழிமாரையும்..
ஒரு கருப்பு நெருப்பு பற்றித் தின்ற நாளில்.
**************
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியில்..
மாவில் கால் நனைத்து நீ நடந்த தடம்
இன்னமும் அப்படியே நம் வீட்டில் இருக்க..
நீயும் இருக்கிறாய்..
நமது வீட்டின் பூஜையறையில்
உனக்குப் பிடித்த குட்டிக் கிருஷ்ணனோடு..
***********
நீ என்னோடு இருந்த நாட்களில்..
வெள்ளிக் கொலுசு கட்டி வெறும் தரையில் நீ நடக்க..
நான்
அண்ணாந்து பார்த்த வானமெல்லாம்
என் தரைக்கடியில்..
இன்றோ..
எனக்கு வெறும் தரையே வானமாகிவிட..
வெற்றிடத்தை வெறித்து நோக்கி
என் நிழலோடு சாகிறேன் .. என்னை வெறுத்த படி.
*********
இன்று
எல்லா ஊர்களிலும்..எல்லாத் தெருக்களிலும்
கூவி விற்கப்படும் நுகர்வோர் பொருளாகி விட்டது
கடவுளும், கல்வியும்.
வாழும் நிர்பந்தத்தில் ..
செத்து வாழ்கிறது சமூகம்.
பிணம் திண்ணிக் கழுகுகளோடு..வாழ்ந்து விடலாம்.
ஆனால்-பணம் தின்னும் பேய்களோடு.
*********
ஓடியே போய் விடுகிறது காலம்.
நேற்று உன் ஏழாம் நினைவு நாள்.
இருந்தாலும்-இப்போதெல்லாம் நான்
நாட்களோடு..வாழ்வதே இல்லை.
இன்று-என் வழியில்..
கடவுளும் இல்லை..காலமும் இல்லை..
இருந்தாலும்..
"நான்"-இன்னமும் இருந்து கொண்டிருக்கிறேன்..
வெகு நிச்சயமாய்..
ஒரு "இறந்தவள்"இருந்து கொண்டிருக்கிறேன்....
நீ வந்துவிடுவாய்..
என்னிடம்.. என
என் உயிர் துளிர்க்கும் நம்பிக்கையோடு
உன்னை மட்டும் எதிர்பார்த்தபடி.
கற்கத்தான் உன்னை அனுப்பியது கல்விச் சாலைக்கு.
இப்படிக் கருகி நீ வருவாய் என்றால்...
எப்படி?
********
உன் அறிவின் சிறகுகளால் எனக்கான வானம்
தருவாய் என்றிருந்தேன்..
இப்படிப் பசித்த நெருப்புக்கு
இரையாவாய் என்றால்...
எப்படி?
**********
இன்றும்-
என் உணவுத் தட்டில் மிச்சமிருக்கிறது
உனக்கான "அடிக் குழம்பு! ஆனைக்குட்டி!-சோறு.
நீ
"போய் வருகிறேன்"-என வீசிச் சென்ற
கை நிழலின் பிம்பம் ...
இன்னமும் நிற்கிறது என் கண்களில்.
திரண்டெழுந்து திரும்பும்
என் ஒவ்வொரு மூச்சிலும்
திரும்பி ஒலிக்கிறது உனது பெயர்.
*********
ஆதியில்-
நீ சொன்ன "அம்மா"-வால் வளர்ந்தவள் நான்.
வெறும் விடலையாய் இருந்தவளை
"கடவுளை" நோக்கி நகர்த்தியவன் நீ.
இன்னமும் மிச்சமிருந்தது...
உன்னால் நான் வளர வேண்டிய காலங்கள்.
************
ஆயிரம் கடவுள்கள் கூடி வசிக்கும் ஊரில்..
ஒரு கடவுளின் கருணையும் எனக்கில்லை
உன்னையும், உன் தோழன்மார், தோழிமாரையும்..
ஒரு கருப்பு நெருப்பு பற்றித் தின்ற நாளில்.
**************
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியில்..
மாவில் கால் நனைத்து நீ நடந்த தடம்
இன்னமும் அப்படியே நம் வீட்டில் இருக்க..
நீயும் இருக்கிறாய்..
நமது வீட்டின் பூஜையறையில்
உனக்குப் பிடித்த குட்டிக் கிருஷ்ணனோடு..
***********
நீ என்னோடு இருந்த நாட்களில்..
வெள்ளிக் கொலுசு கட்டி வெறும் தரையில் நீ நடக்க..
நான்
அண்ணாந்து பார்த்த வானமெல்லாம்
என் தரைக்கடியில்..
இன்றோ..
எனக்கு வெறும் தரையே வானமாகிவிட..
வெற்றிடத்தை வெறித்து நோக்கி
என் நிழலோடு சாகிறேன் .. என்னை வெறுத்த படி.
*********
இன்று
எல்லா ஊர்களிலும்..எல்லாத் தெருக்களிலும்
கூவி விற்கப்படும் நுகர்வோர் பொருளாகி விட்டது
கடவுளும், கல்வியும்.
வாழும் நிர்பந்தத்தில் ..
செத்து வாழ்கிறது சமூகம்.
பிணம் திண்ணிக் கழுகுகளோடு..வாழ்ந்து விடலாம்.
ஆனால்-பணம் தின்னும் பேய்களோடு.
*********
ஓடியே போய் விடுகிறது காலம்.
நேற்று உன் ஏழாம் நினைவு நாள்.
இருந்தாலும்-இப்போதெல்லாம் நான்
நாட்களோடு..வாழ்வதே இல்லை.
இன்று-என் வழியில்..
கடவுளும் இல்லை..காலமும் இல்லை..
இருந்தாலும்..
"நான்"-இன்னமும் இருந்து கொண்டிருக்கிறேன்..
வெகு நிச்சயமாய்..
ஒரு "இறந்தவள்"இருந்து கொண்டிருக்கிறேன்....
நீ வந்துவிடுவாய்..
என்னிடம்.. என
என் உயிர் துளிர்க்கும் நம்பிக்கையோடு
உன்னை மட்டும் எதிர்பார்த்தபடி.
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
அனைத்து கவிதைகளும் உடம்பை புல்லரிக்க வைக்கிறது.
சதாசிவத்தின் தகவல்கள் அவசியமானவை.
சதாசிவத்தின் தகவல்கள் அவசியமானவை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
அங்கே கருகியவை பிஞ்சுகளல்ல..
சுயநலமிப் பூகம்பத்தில் கலங்கிய பல நெஞ்சுகள்..
எதிர்காலம் மறுக்கப்பட்ட
மொட்டுகளின் உதிர்காலம்..!
விடியுமுன்னே வீழ்ந்துவிட்ட
நம்பிக்கை நட்சத்திரங்கள்..
சிலரது பை நிறையவேண்டி
பின்னப்பட்ட சாதக சிலந்திவலையில்
சட்டென வீழ்ந்து உயிர்மரித்த
பொன்வன்டுகள்..!
சொந்தப்பாவத்தை
கோயில் நகரம் சென்று
தீர்த்துவிடலாம்...
இந்த பாவத்தை தீர்க்க
என்ன செயல் புரிந்தோம்..?
மலருமுன்னே கருகிய
மலர்ப்பிஞ்சுகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலிகள்..!
சுயநலமிப் பூகம்பத்தில் கலங்கிய பல நெஞ்சுகள்..
எதிர்காலம் மறுக்கப்பட்ட
மொட்டுகளின் உதிர்காலம்..!
விடியுமுன்னே வீழ்ந்துவிட்ட
நம்பிக்கை நட்சத்திரங்கள்..
சிலரது பை நிறையவேண்டி
பின்னப்பட்ட சாதக சிலந்திவலையில்
சட்டென வீழ்ந்து உயிர்மரித்த
பொன்வன்டுகள்..!
சொந்தப்பாவத்தை
கோயில் நகரம் சென்று
தீர்த்துவிடலாம்...
இந்த பாவத்தை தீர்க்க
என்ன செயல் புரிந்தோம்..?
மலருமுன்னே கருகிய
மலர்ப்பிஞ்சுகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலிகள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
எதிர்காலம் மறுக்கப்பட்ட
மொட்டுகளின் உதிர்காலம்..!
விடியுமுன்னே வீழ்ந்துவிட்ட
நம்பிக்கை நட்சத்திரங்கள்
உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,,,,,,,,,,,,
மொட்டுகளின் உதிர்காலம்..!
விடியுமுன்னே வீழ்ந்துவிட்ட
நம்பிக்கை நட்சத்திரங்கள்
உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
நன்றி ரஃபீக் தம்பி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
உண்மையே கலை எத்தனை கோயில்கள் ஏறி இறங்கினாலும் இத்தனை பிஞ்சுகளை கருகச்செய்த பாவம் விடாது பெற்றோரின் அழுகைக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது...
என் கண்ணீர் அஞ்சலிகள் உதிர்ந்த மொட்டுகளுக்கு....
என் கண்ணீர் அஞ்சலிகள் உதிர்ந்த மொட்டுகளுக்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உலக கவிதை நாள் இன்று.
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|