ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.

Go down

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம். Empty தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.

Post by அன்பு தளபதி Fri Jul 15, 2011 8:57 pm

எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ள+ராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில் தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.

இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது.

கடந்த காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத உள்ள+ராட்சித் தேர்தலை எதிர்கொள்ள, இம்முறை சிறீலங்கா அரசின் அமைச்சுப்பரிவாரங்கள் வடக்கு நோக்கி படையெடுத்துள்ளன. சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவும் வடக்கு சென்று ஐந்து நாட்கள் தங்கிநின்று, தமிழர்களை கபடத்தனமாக வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை முடுக்கிவிடவுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்கள், அடிக்கல்நாட்டு விழாக்கள், நிவாரணங்கள், காசோலை வழங்கல், அன்பளிப்புக்கள், சலுகைகள், ஆசைவார்த்தைகள், உறுதிமொழிகள் என வடக்கே மக்களின் வாக்குகளைக் குறிவைத்து, வலைவீச்சுக்களும், பொறிவைப்புக்களும் இடம்பெறுகின்றன. கோடிகள் கோடிகளாக பணம் இறைக்கப்படுகின்றது.

அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், அடாவடித்தனங்கள், தடைகள், தொடர்ச்சியான வன்முறைகள் என்பன கட்டவிழ்த்துவிடப்பட்டு, சனநாயகத்தை முற்றாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஒரு பயங்கரமான சூழல் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது ராஜபக்ஸ்ச அரசு.

கடந்த பொதுத்தேர்தலின்போது, தமிழ்மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் நோக்கில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு, கூட்டமைப்பிற்கு எதிராக, ஆயிரக்கணக்கான தமிழ் வேட்பாளர்களை சுயேட்சைகளாகக் களம் இறக்கியது. இதில் தோல்விகண்ட சிங்கள அரசு, தற்போது, புதிய வழியை பரீட்சித்துப்பாக்க முனைந்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது என்பதிலும் பார்க்க, கூட்டமைப்பின் செல்வாக்கை தோல்வியுறச் செய்து, தமிழர்களின் திரள்வைச் சிதறடித்து, தமிழ்த் தேசியம் என்ற கருத்தைச் தோற்கடிப்பதே சிங்கள அரசினதும், அதன் அடிவருடிகளினதும் பிரதான நோக்கமாகும்.

தமிழ்த் தேசியத் தளத்தைப் பாதுகாத்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, இராஜீகத் தளங்களிலும், பேச்சுவார்த்தைத் தளங்களிலும் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது, தமிழ்தேசியக்கூட்டமைப்பு மட்டும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல, எனக்கூறிவரும் அரசிற்கு முக்கிய தேவையாகப்படுகின்றது.

இலங்கைத்தீவு ஒரே நாடு, நாம் எல்லோரும் ஒரே மக்கள்’ எனக் கூறிவரும் சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவிற்கு, தமிழ்த் தேசியத்தின் சிதைவு முக்கிய தேவையாகப்படுகின்றது.

அரசஅடிவருடிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதின் ஊடாக தான் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிடலாம் என ராஜபக்ஸ்ச அரசு கருதுகின்றது.

அனைத்துலக அரங்கில் தான் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடிகள், மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் போன்ற விடயத்தில், தனது இந்த திட்டம் தனக்கு உதவும் என, ராஜபக்ஸ்ச அரசு கருதுகின்றது.

தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, தமிழ்மக்களைப் பலவந்தமாகப் பிடித்து, ஐ.நா.அறிக்கைக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தவும், கையொப்பம் சேகரிக்கவும் முனைந்துள்ள ராஜபக்ஸ்ச அரசு, தனது விசுவாசிகளை, அடிவருடிகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக்குவதன் ஊடாக பல நன்மைகளை, சாதகமான நிலைமைகளை அனைத்துலக அரங்கில் பெறலாம் எனக் கணக்குப்போட்டுள்ளது.

நெஞ்சை உறையவைக்கும் உயிர்த்தியாகங்கள், அற்பணிப்புக்கள், மாவீரச் செல்வங்களின் தற்கொடைகள், வீரம்செறிந்த போராட்டம் என்பனவற்றிற்கூடாகக் கட்டிவளர்க்கப்பட்ட எமது தேசியவிடுதலைப் போராட்டம் இன்று அடுத்த கட்டத்தில் நிற்கின்றது. தமிழ் மக்களிற்குச் சாதகமான அறிகுறிகள், பொறிகளாகத் தெரிகின்றன.

இந்தக் காலம் எமக்கு அதிமுக்கிய காலமாக உள்ளது. தாயகத்து மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டிய காலம் இது. சிங்களத்தின் நயவஞ்சகத் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதனை முறியடித்து, தமிழ்த்தேசியத் தளத்தைப் பாதுகாத்து, எமது விடுதலைக்கான பாதையைப் பலப்படுத்த, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தின் அதிமுக்கியமான தேவை என்பதை உணர்வோம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கும் இதனை உணரவைப்போம்.

இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் உரிமையுடனான எங்களது, எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முன்வைப்போம்.
தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில், விடுதலைக்காகப் போராடிவரும் ஒரு இனத்தின், அரசியல் தளத்தில் நின்று செயற்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், சாதாரண அரசியல்வாதிகள் என்ற நிலையில் அன்றி, அரசியல் போராளிகள் என்ற தளத்தில் நின்று செயற்படுவீர்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமாகும்.

பிரபாகரன் என்ற பேரொளியின் மெய்யுணர்வின்பாற்பட்டு நிற்கின்ற எவரும் சரணாகதி அரசியலிற்கு ஆட்படவே மாட்டார்கள் என்று திடமாக நம்புகின்றோம்.
தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும், உறுதியாக ஒரே தளத்தில் ஒற்றுமையாக நின்று எமது தேசியவிடுதலையை வென்றெடுப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum