ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகுல் ராயும் பிரதமரும்

4 posters

Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty முகுல் ராயும் பிரதமரும்

Post by கோவை ராம் Tue Jul 12, 2011 6:24 pm

முன்பொரு காலத்தில், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ரயில்வே மந்திரியாக இருந்த போது, தமிழகத்தில் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பதவி விலகினார். பின்னாளில், நேருவிற்குப் பிறகு சாஸ்திரி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் சில சமரசங்கள் செய்து கொண்டதைத் தாளாமல், ரஷ்யாவின் தாஷ்கண்டிலேயே உயிர் நீத்தார்.

ஒரு முடி நீத்தாலும் உயிர் துறக்குமாம் கவரிமான். அது போன்ற கவரிமான்களைக் கண்ட அரசியல் பாரம்பரியம் நம் பாரதத்தினுடையது. ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைகீழ். மந்திரி சபை மாற்றம் என்பதை ஏதோ கல்யாணம் போல மீடியாக்கள் கொண்டாடுகிறது. இவருக்கு என்ன மார்க் அவருக்கு என்ன மார்க் யார் ரயில்வே மந்திரி, யார் தலை உருளும் என்பது தான் தற்போது செய்தி. யார் நமக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று - மூச்.

பெற்ற மக்கள், கட்டிய மனைவி என அனைவரும் ஊழலுக்காக சிறை செல்ல வேண்டியிருப்பினும், அவர்களுக்கு பதிலாக என்ன பதவி தருவீர்கள் என இழவு வீட்டில் இயன்றதைச் சுருட்டிய கதைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரணாப் முகர்ஜி சென்னையில் கலைஞரை சந்தித்த போது ராசா, மாறனுக்கு பதில் யாருடைய பெயர் என்று கேட்க அதற்கு கலைஞர் கனிமொழி ( அதாவது அவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு) என்று பதில் சொல்ல பிரணாப் முகர்ஜி பயந்துக்கொண்டு கால் நடையாகவே டெல்லிக்கு போகலாமா என்று யோசித்தாராம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது அத்யாயத்தில் ரயில்வே மந்திரியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செல்வி மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற வேளை என்ன முகூர்த்தமோ? தொடர்ந்து ரயில் விபத்துக்கள்; எண்ணற்ற உயிரிழப்புகள். ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில், ரயில்வே பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள் என பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் மற்றொருபுறம் ரயில் விபத்துக்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பாதுகாப்பிற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போகிறது? அல்லது முறையாகச் செலவிடப்பட்டும், நடைமுறைப்படுத்தப்படும் விதம் சரியில்லையா? உலகின் இரண்டாவது பெரிய ரயில்வேயைக் கொண்டுள்ள பாரதம், உலகில் அதிக ரயில் விபத்துக் காவுகளை வாங்கியதில் முதன்மையாக உள்ளது.

சமீபத்திய நிகழ்வாக, நேற்றைய தினம் இரு கோரமான ரயில் விபத்துக்கள். ஒன்று உத்திரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில், கல்கா எக்ஸ்பிரஸ்; மற்றொன்று அஸ்ஸாமில். ஒரே நாளில் நிகழ்ந்த இவ்விருவேறு விபத்துக்களில் சுமார் 80 உயிர்கள் போய்விட்டன. ஏற்கனவே மமதா தலைமையில் குறட்டையில் ஆழ்ந்திருந்த ரயில்வே அமைச்சகம், அவர் கையை விட்டு பிரதமர் கைக்குச் சென்றவுடன், ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது.
மமதா மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வே அமைச்சகம் பிரதமர் வசம் போய்விட்டது தற்காலிகமாக, ஆனாலும், மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் ஃபார் ரயில்வேஸ் என்று கூறப்படும் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தன்வசமே வைத்துள்ளது. அதன் பொறுப்பில் இருப்பவர் முகுல் ராய் என்ற மஹானுபாவர். இவ்விரு விபத்துக்களும் நடைபெற்று 48 மணி நேரமாகியும், இத்துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் இவர், இன்னும் விபத்து ஸ்தலத்தைச் சென்று பார்வையிடவில்லை. ஸ்தலத்தைப் பார்வையிட்டு, வார்த்தை ஜோடனைகளால் வருத்தப்படுவதென்பது காலம் காலமாக பின்பற்றப்படும் மரபாயினும், அதைச் செய்யத தவறியதோடு மட்டுமல்லாமல், நான் ஏன் போக வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார் முகுல் ராய். நான் என்ன ரயில்வே துறைக்கு கேபினட் மந்திரியா? பிரதமர்தானே அத்துறைக்குப் பொறுப்பு? அவர் என்னிடம் போகச் சொல்லவில்லை....இதுதான் இவர் கூறிய பதில். காலையில் **** வந்தால் கூட இவர் பிரதமரை கேட்டுவிட்டு தான் போவார் என்று நினைக்கிறேன்.

தவிர, நான் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன், தேவைப்பட்டால் போவேன் என்கிறார். இதுதான் ரயில்வே அமைச்சகத்தின் லட்சணம். இதே முகுல் ராய் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஆயிரமாயிரம் மைல்கள் ஆகாய மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் பயணப்பட்டார். இப்போது பதவி வந்ததும், நான் ஏன் போக வேண்டுமென்கிறார். இதற்கு திரிணாமூல் காங்கிரஸும் ஜால்ரா அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சீறுகின்றன. மீடியாக்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

இவ்வளவு கூத்தும் நடந்த பிறகு, ஸ்தலத்தைப் போய்ப் பாருங்கள் என்று பிரதமர் மென்மையாகக் கூறுகிறார். அவரைப் பாவம் என்ன சொல்வது? இது ஒன்றுதான் அவருக்குக் கவலையா? தெலங்கானா எம்பிக்கள் ராஜிநாமா செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இந்நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸைப் பகைத்துக் கொண்டால் என்னாவது? மமதாவுக்கு மத்தியில் அரசியல் செய்வது வெறும் பொழுது போக்கு. நான் போகிறேன் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாரானால் என்னவாகும் மத்திய அரசின் கதி? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எவ்வளவு செலவாகும்?? இதெல்லாம் எண்ணிப் பார்த்துதான், போய் பாருங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர். அவரால் தன்னிச்சையாக, யாரிடமும் அனுமதி வேண்டாமல் செய்ய முடிந்தது, அனுதாபம் தெரிவிப்பது ஒன்று மட்டுமே. அதைச் செவ்வனே செய்து விட்டார்.

உயிர் நீத்த 80 அப்பாவிகளின் சவங்கள் மீது திரிணாமூல் காங்கிரஸும், மத்திய காங்கிரஸ் சர்க்காரும் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. எதிர்கால விடிவெள்ளி, தியாகத் திருவிளக்கின் தவப் புதல்வர் இதையெல்லாம் கேட்பாரா என்றால் அதுவுமில்லை. கூட்டணிக் கட்சியாயிற்றே! மமதாவைக் கேட்பதை விட மாயாவதியை எதிர்ப்பது அவசியமல்லவா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலமாவது பதில் சொல்லுமோ இல்லை அதுவும் பிரதமர் போல் மெளனமாக இருக்குமோ??


பிரதமர் செய்ய வேண்டியது - அடுத்த பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பாராளுமன்றத்தில் இருக்கும் கேண்டீனில் இருக்கும் தின்பண்டத்தில் ஊக்க மருந்து கலந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். நம் எம்.பிக்கள் எங்கே போகிறார்களோ இல்லையோ நிச்சயம் கேண்டீன் பக்கம் போவார்கள். ஊக்க மருந்து உட்கொண்ட பிறகாவது ஓடி ஓடி உழைப்பார்களா என்று பார்க்கலாம்.

நன்றி இட்லி வடை

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty Re: முகுல் ராயும் பிரதமரும்

Post by சரவணன் Tue Jul 12, 2011 6:28 pm

நல்ல கட்டுரை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty Re: முகுல் ராயும் பிரதமரும்

Post by பாலாஜி Tue Jul 12, 2011 6:32 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty Re: முகுல் ராயும் பிரதமரும்

Post by சரவணன் Tue Jul 12, 2011 6:36 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
உங்கள் பின்னூட்டதிர்க்கு நன்றி.
நீங்கள் பார்ப்பதற்கு கமலஹாசன் போல இருக்குறீங்க. ஓரக்கண் பார்வை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty Re: முகுல் ராயும் பிரதமரும்

Post by பாலாஜி Tue Jul 12, 2011 6:41 pm

குபேரன் wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
உங்கள் பின்னூட்டதிர்க்கு நன்றி.
நீங்கள் பார்ப்பதற்கு கமலஹாசன் போல இருக்குறீங்க. ஓரக்கண் பார்வை


ஏன் இந்த கொலைவெறி ....? சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty Re: முகுல் ராயும் பிரதமரும்

Post by அருண் Tue Jul 12, 2011 7:20 pm

இந்த பொழப்புக்கு எங்காவது போயி... என்ன கொடுமை சார் இது

பகிர்வுக்கு நன்றி! அய்யா..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முகுல் ராயும் பிரதமரும்  Empty Re: முகுல் ராயும் பிரதமரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum