ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாம்..ஏவாளாவோம்..

+4
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty ஆதாம்..ஏவாளாவோம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 4:03 pm


ஆதாம்..ஏவாளாவோம்.. Adamandevev
திம்மென்ற மார்பினால் முட்டி என்
திமிர்தனை முற்றும் சாய்த்து விடு..!
ஆல்மரத்தின் வேர் போல பரவி என்
தோல்மரத்தின் ஆசையை ஒழித்து விடு..!


காமத்தின் நோய்தீர்க்க இதழின் ‘இச்’சப்தத்தினால்
தேகத்தை முழுவதும் மிச்சமின்றி எச்சமிடு.!
கண் விழியம்பில் காமக்கதிர்களைக்
கலந்தெய்து என் கயமையை கொன்று விடு..!

மூர்க்கத்தனம் தீய்ந்து நான் சாய்ந்து விழ
மோகத்தீயை என்மேல் பற்றி எரிய விடு..!
முன்கோபம் தொலைந்து மீளாமல் இருக்க
சல்லாபகவிதைகளை மேனியில் எழுதி விடு..!

போர்வையின் இருளுக்குள் புதுசரித்திரம் எழுத
கோர்வையாய் என்னுள் பிணைந்து விடு..!
இடைகளின் வழி வளி செல்ல இறுக்கியணைத்த
இரு கைகளை தளர்த்தி இடைவெளி விடு..!


உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!

போதை தரும் அங்கத்தின் ஊற்றிலே
பேதையின் மமதையை மூழ்கி சாக விடு..!
பேச்சுகள் அடங்கி மூர்ச்சையாகி மௌனமிட
இம்சைகளை இசையாய் என்னில் இசைத்து விடு...!

ஈரம் கசியும் பின்பனி இரவில் நம்தேகத்தின்
தூரம் குறைத்து தேகத்தின் குளிரைப் நிறுத்தி விடு..!
வியர்வை வழியும் தடங்களில் நடந்து
வேறுலகம் செல்ல வழி ஒன்று கண்டறிந்து விடு..!

ஆதாம்..ஏவாளாக..மாறி அவ்வுலகில் திரிய
ஆதாரமாய்..நிர்வாண ஆடை அணிந்து விடு..!
ஆட்களற்ற அவ்வுலகில் அன்பின் படைப்பிதனை
தொடங்கிடவே அல்லும் பகலும் என்னுள் அடங்கி விடு..!


இவைகள் இன்பமாய் நடந்திடவே எப்போது
அவை வந்து சேர்வாய்..? என் இராணுவக் கணவனே..?
இன்பத்தின் தொகுதிதனை எனக்குள்ளே
புதைத்துள்ளேன்..எப்போது நீராகி என்னை
விளைய வைப்பாய்..? என் இராணுவக் கணவனே..!

அன்பின் ஏக்கங்களுக்கு அலைவழியே நீ
ஆறுதல்கள் கூறித் தேற்றினாலும்,என்
அந்தரங்க துயரங்கள் உனக்கு தெரியாமல்
ஆழ்மனதுக்குள் அடியோடு புதைக்கிறேன்.


தேசம் காத்திட எல்லையில் உடலோடு போரிடுகிறாய்.!- உனக்கான
தேகம் காத்திட தொல்லை தரும் உணர்வோடு போராடுகிறேன்..!

தீவிரவாதத்தை நாட்டில் முழுவதும் தீர்த்து விட்டு, என்
தேகத்தின் வாதத்தினை நீ தீர்த்திட வா.
சரசதாபங்களின் உணர்ச்சியை ஊனமிட்டு
சராசரிப் பெண்ணாய் சிறைவாசம் வாழ்கிறேன்..
நானும் உனக்காய் காத்திருக்கிறேன்...!

சிந்தனைகள் உடைந்து சேராமல் கிடக்கிறது..நம்
பஞ்சணைகள் நித்தம் சத்தமிடாமல் தூங்குகிறது..
சீக்கிரம் வந்து சேர்ந்திடு..என்னவனே..!இந்த
சீர்கெட்ட உலகம் வார்த்தைகளால் என் தேக
சதைகளை சிதைத்திடும் முன்பு.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by செய்தாலி Mon Jul 11, 2011 4:56 pm

எல்லை காவலில் தலைவன்
உணர்வுத் தொல்லைகளில் தலைவி

பெண்மையின் ஆழ்மன ஆசைகள் கவிதையின் முதல் பகுதி
தலைவன் இல்லாத தனிமையும் துயரமும் இரண்டாம் பகுதி

அட்டகாசமான கவிதை என்பார்களே நண்பா அது இதுதான்
செதுக்கிய வரிகளில் பெண்மையில் மனச் சிற்பம்

அருமையான படைப்புக்கு கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 11, 2011 5:09 pm

என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 8:15 pm

செய்தாலி wrote:எல்லை காவலில் தலைவன்
உணர்வுத் தொல்லைகளில் தலைவி

பெண்மையின் ஆழ்மன ஆசைகள் கவிதையின் முதல் பகுதி
தலைவன் இல்லாத தனிமையும் துயரமும் இரண்டாம் பகுதி

அட்டகாசமான கவிதை என்பார்களே நண்பா அது இதுதான்
செதுக்கிய வரிகளில் பெண்மையில் மனச் சிற்பம்

அருமையான படைப்புக்கு கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நீண்டதொரு கவிதை எழுதி பதியும் போது எல்லோரும் படிப்பார்களா..? என்ற கவலை இருந்தது..அதை படித்துணர்ந்து வாழ்த்திய நண்பருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்... ஆதாம்..ஏவாளாவோம்.. 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. 154550 அன்பு மலர் நன்றி நன்றி ஆதாம்..ஏவாளாவோம்.. 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 8:22 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
உங்களின் வாழ்த்தே எனக்கு மகுடம் அய்யா.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 8:37 pm

தேசம் காக்கும் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து தன் துணையை பிரிந்து தாய் திருநாட்டை காக்க எத்தனையோ தியாகங்கள் செய்கின்றனர்... புது மனைவியின் அன்பை காண முடியாமல் மழலைகளின் மொழி கேட்க முடியாமல் பெற்றோரின் அன்பு முகத்தை பார்க்க முடியாமல் இப்படி எத்தனையோ...

மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..

அன்பு வாழ்த்துகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆதாம்..ஏவாளாவோம்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jul 20, 2011 12:05 am

மஞ்சுபாஷிணி wrote:தேசம் காக்கும் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து தன் துணையை பிரிந்து தாய் திருநாட்டை காக்க எத்தனையோ தியாகங்கள் செய்கின்றனர்... புது மனைவியின் அன்பை காண முடியாமல் மழலைகளின் மொழி கேட்க முடியாமல் பெற்றோரின் அன்பு முகத்தை பார்க்க முடியாமல் இப்படி எத்தனையோ...

மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..

அன்பு வாழ்த்துகள்....
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் அக்கா...இந்த கவிதை ராணுவ வீரனின் மனைவியின் அந்தரந்த துயரங்களை அவளுக்குள் சொல்லிகொண்டு தன்னை ஆசுவாசிப்படுத்துதல் போன்று எழுதியுள்ளேன்..இந்த கவிக்கு மறுமொழியிட்ட உங்களுக்கு என் நன்றிகள்..அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by இளமாறன் Wed Jul 20, 2011 12:10 am

அருமையான கவிதை .. வார்த்தைகளின் விளையாட்டு சூப்பருங்க

உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதாம்..ஏவாளாவோம்.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by கலைவேந்தன் Wed Jul 20, 2011 12:15 am

Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
சியர்ஸ்
நான் சொல்ல எண்ணிய வார்த்தைகள் இவை சூர்யா... வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by அப்துல்லாஹ் Wed Jul 20, 2011 12:42 am

காதலாலும் காமத்தாலும் கடுமையான தாக்குதலுக்குள்ளான தலைவி தன் உயிர் உருக உணர்வு நரம்புகளால் மீட்டிய ஒரு உன்னத ராகம். அவள் கண்ணில் படிந்த ஈரத்தைக் காட்டிலும் அவளின் இதயக் குருதி , அவள் சொல்லவும் முடியாமல் சுகப்படவும் முடியாமல் வேதனை சூட்டை விரகத்துடன் வெளிப்படுத்துகிறாள் என்பதை இக்கவிதையின் மூலம் உணர வைக்கிறது ...

தண்ணீரில் நிற்கையில் கூட வேர்க்கும் தாமரைக்கு ராணுவ வீரன் என்ன ராசா மகன் என்ன... அன்பனாய், நண்பனாய், கணவனாய், காதலனாய் ,கரும்பு வில் வீரனாய் கையருகில் இல்லாது போனால் ...

கவிதை இதயத்தில் நுழைந்து என்னவோ செய்கிறது... சூர்யா உங்களின் இக்கவிதைக்கு என் அன்பும் நன்றியும்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆதாம்..ஏவாளாவோம்.. Aஆதாம்..ஏவாளாவோம்.. Bஆதாம்..ஏவாளாவோம்.. Dஆதாம்..ஏவாளாவோம்.. Uஆதாம்..ஏவாளாவோம்.. Lஆதாம்..ஏவாளாவோம்.. Lஆதாம்..ஏவாளாவோம்.. Aஆதாம்..ஏவாளாவோம்.. H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆதாம்..ஏவாளாவோம்.. Empty Re: ஆதாம்..ஏவாளாவோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum