ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி

3 posters

Go down

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Empty உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி

Post by சிவா Mon Jul 11, 2011 10:47 am

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Rail


உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 37 பயணிகள் பலி ஆனார்கள். மேலும் 250-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர்.

ரெயில் கவிழ்ந்தது

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி வழியாக அரியானா மாநிலத்தில் உள்ள கல்கா செல்லும் கல்கா மெயில் ரெயில் நேற்று மதியம் 12.15 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த மால்வா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அந்த ரெயில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

என்ஜின் மற்றும் மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட 2 குளிர்சாதன வசதி பெட்டிகள், 2 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு குளிர்சாதன வசதி பெட்டி, 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் உள்பட 13 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி கவிழ்ந்தன. தடம் புரண்ட பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி தாறுமாறாக கவிழ்ந்து கிடந்தன.

மீட்புப் பணி

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகளும் மீட்புப்படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் மீட்புப்பணிக்கு உதவினார்கள். அலகாபாத்தில் இருந்து மருத்துவ குழுவினர், ராணுவத்தினர் மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்களுடன் ஒரு ரெயில் சம்பவ இடத்துக்கு சென்றது. இதேபோல் கான்பூரில் இருந்தும் ஒரு ரெயிலில் மீட்புக்குழுவினர் விரைந்தனர்.

உத்தரபிரதேச மாநில கூட்டுறவு மந்திரியும், மாநில பகுஜன் சமாஜ் தலைவருமான சுவாமி பிரசாத் மவுர்யா, தலைமைச் செயலாளர் அனூப் மிஸ்ரா ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டனர்.

37 பயணிகள் பலி

மீட்புக்குழுவினர், மிகவும் மோசமாக சேதம் அடைந்த பெட்டிகளை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் வெட்டி உள்ளே இருந்த பயணிகளை மீட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் 37 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளில் சிக்கி பலி ஆனார்கள். காயம் அடைந்த பயணிகள் பதேபூர் மற்றும் கான்பூரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் பலர் உயிர் இழந்தனர். இதனால் சாவு 37 ஆனது.

காயம் அடைந்த 250-க்கு அதிகமான பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பிரதமர் அனுதாபம்

இந்த விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சியும் துயரமும் தெரிவித்து உள்ளார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் அனுதாபம் தெரிவித்து இருக்கிறார். ரெயில்வே இலாகா ராஜாங்க மந்திரி முகுல்ராய், ரெயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய மன்மோகன் சிங், மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

உதவித்தொகை

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரெயில்வே இலாகா ராஜாங்க மந்திரி முகுல்ராய் அறிவித்து உள்ளார்.

இதேபோல் உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியும் உதவித்தொகை அறிவித்து உள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த விபத்தின் காரணமாக டெல்லி-ஹவுரா பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்துக்குள்ளான ரெயிலில் வந்த பயணிகள் தொடர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்காக அங்கு, கான்பூரில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து நடந்த போது ரெயில் மணிக்கு 108 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக தெரிய வந்து உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதுகுறித்து வடக்கு மத்திய ரெயில்வேயின் பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினதந்தி


உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Empty Re: உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி

Post by SK Mon Jul 11, 2011 10:51 am

அண்ணா ஜம்முவில் இருந்து டெல்லி வரும் ரையுலுக்கி இதனால் பாதிப்பு இருக்கிறதா என் அம்மா அமர்நாத் பயணம் முடித்துவிட்டு இன்று தான் ஜம்முவில் இருந்து புறப்படுகிறார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Empty Re: உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி

Post by ரேவதி Mon Jul 11, 2011 11:16 am

சோகம் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Empty Re: உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெலுங்கானா மாநிலத்தில் கோர விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 57 பேர் பலி
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்
»  காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» திருவாரூரில் தேர் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum