ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.

Go down

கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.  Empty கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.

Post by சிவா Mon Jul 11, 2011 9:12 am

கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.  Fort-300x175

சாலைத் தடுப்புக்கள், எதிர்மறையான தகவல்கள், அதிகாரிகள் இடைவிடாமல் விடுத்த எச்சரிக்கை ஆகிய எதுவும் கோலாலம்பூர் நகர மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் நியாயமான சுதந்திரமான தேர்தல்களைக் கோரி ஒன்று கூடுவதை தடுக்கவில்லை.

புடுராயா பஸ் நிலையத்துக்கு முன்பு உள்ள சுறுசுறுப்பான சாலைச் சந்திப்பு நேற்றைய ஆர்ப்பாட்டங்களுக்கு மய்யமாக திகழ்ந்தது.

பிற்பகல் மணி 12.40 வாக்கில் அதற்கு அருகில் இருந்த பெட்டாலிங் ஸ்டிரிட்டிலிருந்து 500 பேருடன் தொடங்கிய எதிர்ப்புப் பேரணி ஒரு மணி நேரத்தில் 10,000 ஆக அதிகரித்தது.

ஜாலான் புடுவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரை எதிர்நோக்கிய வேளையில் அதற்கு சில மீட்டர் தொலைவில் இருந்த ஏற்கனவே திட்டமிட்டபடி மெர்தேகா அரங்கில் ஆயிரம் பேர் ஒன்று கூட முடியாமல் தடுக்கப்பட்டனர். அந்த அரங்கத்தை சுற்றிலும் போலீசார் கம்பி முள் வேலிகளை அமைத்திருந்தனர்.

எத்தனையோ தடைகள் இருந்தும், சாலைத் தடுப்புக்களினாலும் எல்ஆர்டி நிலையங்கள் மூடப்பட்டதாலும் கிட்டத்தட்ட மாநகரம் முழுவதும் மூடப்பட்ட வேளையிலும் போலீசாரை ஆர்ப்பாட்டக்காரர்கள் எப்படி ஏமாற்றி ஒன்று கூடினர்?

அதற்கான பதில் பெர்சே 2.0க்குக் கூட இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், பாசார் செனி, ஜாமெய்க் பள்ளிவாசல், தேசியப் பள்ளிவாசல் ஆகிய முக்கியமான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடும் இடங்களில் போலீசார் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்குக் கூட அதற்கான விடை கொடுக்க முடியாது.

பெட்டாலிங் ஸ்டீரிட் தூண்டுகோல்

கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.  Fort1

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று கூடும் மையங்களில்- தேசியப் பள்ளிவாசல், பழைய ரயில் நிலையம், சோஹோ, ஜாமெய்க் பள்ளிவாசல் ஆகியவற்றில் பலரைப் பெரும் எண்ணிக்கையில் கைது செய்த போலீசார் பெட்டாலிங் ஸ்டீரிட்டை எப்படியோ மறந்து விட்டார்கள். அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக்கை பெருகியது.

காலை மணி 11 முதல் சைனா டவுன் சந்தையில் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். திடீரென கைதட்டும் சத்தம் எழுந்தது. அடுத்து அந்தக் குழு ஊர்வலமாக செல்லத் தொடங்கியது.

அந்தக் குழு ஜாலான் துன் தான் செங் லாக்கைக் கடந்து பெட்டாலிங் ஸ்டீரிட்டுக்கு சென்ற போது 500 ஆக இருந்த மக்கள் எண்ணிக்கை ஆயிரமாகக் கூடியது. தேசியப் பள்ளிவாசல், பாசார் செனி, டயாபூமி கட்டிடம் ஆகியவற்றிலிருந்து விரட்டப்பட்ட நூற்றுக் கணக்கான மக்கள் அதில் இணைந்து கொண்டதாக நம்பப்படுகிறது.

அவர்கள் ஜாலான் பெட்டாலிங் வழியாக சென்ற வேளையில் ஜாமெய்க் பள்ளிவாசலிலும் மஸ்ஜித் இந்தியாவிலும் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய பாஸ் ஆதரவாளர்கள் சேர்ந்து கொண்டனர்.

15 நிமிடங்களுக்குள் ஊர்வலத்தில் இருந்தவர் எண்ணிக்கை 4,000 ஆக உயர்ந்தது. அதனால் ஜாலான் சுல்தான் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறைந்திருந்தனர். அந்த இடம் மெர்தேகா அரங்கத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் இருந்தது.

அப்போது ஊர்வலம் விழாக் கோலம் பூணத் தொடங்கியது. நகர்ப்புற மக்கள் பூங்கொத்துக்களையும் மலேசியக் கொடிகளையும் ஏந்திக் கொண்டு பாடல்களை பாடினர்.”‘தேர்தலைத் தூய்மைப்படுத்துங்கள்” என்றும் முழங்கினர்.

இளம் வயதினர், பல இனங்கள்


கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.  Fort2

கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் 20களில் இருந்த இளம் வயதினர். அவர்கள் முதன் முறையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அவர்களை பேஸ் புக் தலைமுறை என மெர்தேகா மையம் என்னும் சுயேச்சை மதிப்பீட்டு நிறுவன இயக்குநர் இப்ராஹிம் சுபியான் கூறினார்.

“வழக்கமான எதிர்க்கட்சி ஆதரவாளர்களுடன் பல புதியவர்களையும் நான் அந்தப் பேரணியில் பார்த்தேன். பேஸ் புக் வழியாக அவர்களுடைய ஆதரவை ஒன்று திரட்டுவதில் பெர்சே 2.0 வெற்றி கண்டுள்ளதை அது குறித்தது”, என்று இப்ராஹிம் சொன்னார். அவரும் நேற்று நடந்தார்.

கூட்டத்தைப் பலர் வழி நடத்தினாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீராக நடந்து சென்றனர். அவர்கள் ஜாலான் துன் எச் எஸ் லீ-ஜாலான் சுல்தான் சாலைகளின் மூலையில் சிறிது நேரம் நின்றனர். அவர்கள் மெர்தேகா அரங்கத்திற்கு ஊர்வலமாகச் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அரங்கத்தை காவல் புரியும் கலகத் தடுப்புப் போலீசாரை எதிர்கொண்டிருக்க முடியும்.

ஆனால் ஆட்டு மந்தை உணர்வால் 4,000 பேர் கொண்ட அந்தக் கூட்டம் ஜாலான் துன் பேராக்கை நோக்கி நகர்ந்தது. ஜாமெய்க் பள்ளிவாசலிலிருந்து வந்த ஆயிரம் பேர் மே பாங்க் கட்டிடத்துக்கு முன்பு அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புடுராயா பஸ் நிலையத்துக்கு அருகில் ஏற்கனவே கூடியிருந்தனர்.

அப்போதுதான் அந்த ஆர்ப்பாட்டத்தின் உண்மையான முதல் தலைவர் தோன்றினார். பாஸ் தேர்தல் இயக்குநரும் முன்னாள் பெர்சே ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான டாக்டர் ஹட்டா ராம்லி, ஒலிபெருக்கியை எடுத்துக் கொண்டு பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்.

“உங்களிடம் மஞ்சள் சட்டை இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள்.”

பல வகையான மக்கள், ஒரே நோக்கம்

கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.  Fort3-225x300

அடுத்த சில நொடிகளில் கண்ணீர் புகைக் குண்டுகள் அடுக்கடுக்காக பாயத் தொடங்கின. குழப்பம் உருவானது.

ஆயிரக்கணக்கான மக்கள் புடுராயா பஸ் நிலையத்தை நோக்கி ஒடத் தொடங்கினர். மே பாங்க் கட்டிடத்தின் மலைச் சாரலில் நின்று கொண்டிருந்தவர்கள் எரிவாயு நாற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக நுழைவாயில்களில் ஏறினர். அங்கிருந்த செயற்கை நீர் ஊற்று ஒன்றில் முகத்தைக் கழுவிக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகள் இரண்டாகப் பிரித்தன. ஒரு குழு ஜாலான் புடுவில் மீண்டும் ஒன்று திரண்டது. அது போலீசாருடன் இழுபறிப் போராட்டத்தில் ஈடுபட்டது. இன்னொரு குழு கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசம்பிளி மண்டபத்திலிருந்து வந்த சிறிய குழு ஒன்றுடன் சேர்ந்து கொண்டது..

இறுதியில் தேசிய இலக்கியவாதி எ சமாட் சையட் தலைமையில் சென்ற பெர்சே 2.0 குழு இஸ்தானா நெகாராவுக்கு பல நூறு மீட்டர் தொலைவுக்குள் சென்று விட்டது. ஆனால் அந்தக் குழு தடுக்கப்பட்டு விட்டது. அந்த இயக்கத்தின் மனுவையும் அகோங்கிடம் கொடுக்க முடியவில்லை.

பெர்சே 2.0 தனது தொடக்க காலத் திட்டத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் எல்லா வாழ்க்கை நிலைகளையும் சார்ந்த சாதாரண மலேசியர்களை – நவீன ஆடைகளை அணிந்தவர்களையும் தொப்பி அணிந்த பழமைவாதிகளையும்- ஒரு பொதுவான நோக்கத்துக்காக ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

முந்திய ஆர்ப்பாட்டங்களைப் போல் அல்லாது நேற்றைய பேரணி பல இனங்களைக் கொண்டதாக இருந்தது. ஜாலான் சுல்தானுக்குள் அவர்கள் செல்வதற்கு போலீஸ் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்ட போது அனைவரும் நன்றி எனக் கூறியதுடன் தேசியக் கீதத்தையும் இசைக்கத் தொடங்கினர்.

போலீசாரின் அடக்குமுறை

இதனிடையே தாமான் தித்தி வாங்சா ஏரிக்கு அருகில் 20 பெர்க்காசா உறுப்பினர்கள் மட்டும் நடமாடிக் கொண்டிருந்ததாக மலேசியாகினி நிருபர் அகமட் பாட்சிலி எசா தகவல் அனுப்பினார். போட்டிப் பேரணிக்கு தான் 15,000 பேரை அனுப்பப் போவதாக ஏற்கனவே பெர்க்காசா அறிவித்திருந்தது. போலீஸ் அனுமதி கிடைக்காததால் அது அந்தப் பேரணியை ரத்துச் செய்து விட்டது.

புக்கிட் பிந்தாங்கில் அம்னோ இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டி பேரணியில் 500 “தேச விசுவாசிகள்” கலந்து கொண்டனர். நேற்றைய ஆர்ப்பாட்டங்களின் போது கைது செய்யப்பட்ட 1400 பேருடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு தான்.

அமைதியான ஊர்வலத்தைக் கலைப்பதற்கு போலீசார் பயன்படுத்திய தன்மூப்பான நடவடிக்கைகள் பற்றிய கவலை எழுந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் நீர் பாய்ச்சும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ்காரர்கள் தூக்கிச் சென்றனர். எலும்பு முறிவுடன் ஒருவர் தரையில் விழுந்து கிடந்தார். அவரது கைமுட்டியில் போலீஸ் போட்ட பிளாஸ்டிக் கைவிலங்கு காணப்பட்டது.

அவருடைய டிரவுசரில் சப்பாத்துக் குறிகள் தென்பட்டன. பல போலீஸ்காரர்கள் தம்மை உதைத்து கீழே தள்ளியதாக அவர் கூறிக் கொண்டார்.

நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் நிகழ்ந்த போலீஸ் கொடுமைகள் அடுத்து வரும் பல வாரங்களுக்கு பலருக்கு நினைவில் இருக்கும். படிப்படியாக அரசாங்கம் வெளியிட்டு வரும் உருமாற்றுக் கொள்கைகள் மீது அவை தாக்கத்தை ஏற்படுத்துவது திண்ணம்.

மலேசியாஇன்று


கோலாலம்பூர் கோட்டையை தகர்த்து பெர்சே 2.0 எவ்வாறு அதற்குள் ஊடுருவியது.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum